27 நட்சத்திரங்களில் 25-ஆவது நட்சத்திரம் பூரட்டாதி. இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியிலும், நான்காம் பாதம் மீன ராசியிலும் அமைந்துள்ளது. இதன் அதிபதி குருவாகும். பத்ரா என்ற நட்சத்திரக்கூட்டத்தின் முற்பகுதி பூரட்டாதி. இதன் சமஸ்கிருதப் பெயர் பூர்வ பத்ரா என்பதாகும். இதன் உருவம் கட்டில் கால் என்றும், கத்தி என்றும், நெல்மணிகளை அளக் கும் படி என்றும் கூறப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் தெருவாகும். இந்த நட்சத்திரத்திற்கு இசை நாள், முரசு, காமதேனு என பல பெயர்கள் உண்டு.
இதன் அதிபதி குரு என்பதால் பெரியவர்களை அணுகி மந்திர உபதேசம் பெறவும், கோவில்களில் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யவும், தெய்வ வழி பாட்டிற்கும் உகந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் சாலை பணிகளைத் துவங்க, இசைப் பயிற்சி துவங்க, இசை அரங்கேற்றம் செய்ய சிறப்பாகும். பூரட்டாதி நட்சத்திரத்திற்கு காமதேனு என்றொரு பெயர் உள்ளதால், வறுமை நீங்க பரிகாரங்கள் செய்ய உகந்த நட்சத்திரம் ஆகும். காமதேனு பெண்பசு என்பதால் பசுமாடு வாங்கவும் பாலுக்காக எருமை களை வாங்கவும் உகந்த நட்சத்திரமாகும். ராசி சக்கரத்தில் குரு வினுடைய வீட்டை யும் சனியினுடைய வீட்டையும் இணைக் கும் நட்சத்திரம் பூரட்டாதி.
குரு சனி சம்பந்தம் தர்மகர்மாதிபதி யோகம். பொருளாதார முன்னேற்றம் அடைய பூரட்டாதி நட்சத்திரம் வரும்நாளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட, விரும்பியபடி நல்ல தொழில், உத்தியோகம் அமையும். இந்த நட்சத்திரநாளில் சதுரகிரி மலைக்கு சென்றுவந்தால் தொழில் முன்னேற் றம் ஏற்படும்.
குபேரனின் ஜென்ம நட்சத்திரம் பூரட்டாதி என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை குபேரர் வழிபாடு செய்து வழிபட, கடன் தொல்லை நிவர்த்தியாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.
உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனிபகவான். பத்ரா என்ற நட்சத்திரக் கூட்டத்தின் பிற்பகுதி உத்திரட்டாதி. இதன் சமஸ்கிருதப் பெயர் உத்திர பத்ரா பாதம் என்பதாகும். இதன் வடிவம் வானில் பார்ப் பதற்கு முரசு போல் காட்சி யளிக்கும். எனவே இதன் தமிழ்ப் பெயர் முரசு. இதன் வேறு பெயர்கள் யூனிகான், ஒற்றை மீன், காமதேனு.
பூரட்டாதி
குருவின் வீட்டிலுள்ள சனியின் நட்சத்திரம் உத்திரட்டாதி என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தர்மகர்மாதிபதி யோகம் உண்டு. உத்திரட்டாதியில் நீசமடையும் கிரகம் புதன். இதன் வசிப்பிடம் வீடு. இதன் அதிதேவதை காமதேனு. இந்த நட்சத்திரநாளில் கிரக ஆரம்பம் செய்ய, கிரகப்பிரவேசம் செய்ய, வீடு வாங்க உகந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் அமைந்துள்ளது. பன்னிரண்டாம் வீடு அயன சயன ஸ்தானம் என்பதால் கட்டில், படுக்கை, மெத்தை, தலையணை போன்ற பொருட்கள் வாங்க உகந்த நட்சத்திரமாகும். குருவினுடைய வீட்டில் அமைந்த சனியின் நட்சத்திரம் என்பதாலும் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை காமதேனு என்பதாலும் இந்த நட்சத் திரநாளில் விரதமிருந்து காமதேனுவை வழிபட உத்தியோகம் இல்லாதவர் களுக்கு நல்ல உத்தியோகம் அமையும்.
இதில் நீசமடையும் கிரகம் புதன் என்பதால் கல்வி சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. தஸ்தாவேஜ் பத்திரங்கள், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை, தவிர்க்கவேண்டும். இந்த நட்சத்திரநாளில் விரதமிருந்து மதுரையில் உள்ள கள்ளழகரை வழிபட, நலிந்த வியாபாரம் விருத்தி அடையும். தடைப்பட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்புகள் உருவாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் காமதேனுவை வழிபட வாழ்க்கை வளமாகும்.
ரேவதி
ரேவதி நட்சத்திரம் மீன ராசியில் அமைந்துள் ளது. இதற்கு கடை நட்சத்திரம் என்ற பெயர் உண்டு.
இதன் அதிபதி புதன். இந்த நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் சுக்கிரன். ரேவதி என்றால் மிகுதியான செல்வம் உடையது என்று பொருள். காலபுருஷ சக்கரத்தின் கடைசி நட்சத்திரம் ரேவதி. வானில் இது தோணி மற்றும் மீனைப் போல் காணப்படுவதால் இதன் தமிழ்ப்பெயர் தோணி என்பதாகும். பாதுகைகள், பாதச்சுவடுகள் என்பது ரேவதி நட்சத்திரத்தின் வடிவமாகும். இதன் வசிப்பிடம் பூங்காவனம், தோட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது.
மீன்கள் வசிக்கும் நீர்நிலையைக் குறிப்பது மீன ராசி என்பதால், கிணறு, குளம் வெட்ட, சமுத்திர யாத்திரை செல்ல உகந்த நட்சத்திரமாகும். இதில் உச்சம் பெறும் கிரகம் சுக்கிரன் என்பதால் முதலீடுகள் செய்ய, வங்கிக் கணக்குகள் துவங்க, லாக்கரில் பணம், நகைகள் வைக்க, ரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ள உகந்த நட்சத்திரமாகும். ரேவதி நட்சத்திரம் வரும்நாளில் மகாலட்சுமியை பூஜித்து வழிபட, கையில் பணம் இருப்பு, சேமிப்பு போன்றவை அதிகமாகும்.
இந்த நட்சத்திரம் வரும்நாளில் மதுரைக் குச் சென்று மீனாட்சியை தரிசிக்க செல்வம் பெருகும். மேலும் சத்தியநாராயண பூஜை செய்ய மிக உகந்த நட்சத்திரம். இதன் அதிபதி புதன் என்பதால் வித்யா ஆரம்பம் செய்யலாம்; பூந்தோட்டம் அமைக்கலாம்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் குருமார்களின் பாதுகைகள் அல்லது தெய்வ உருவங்களின் பாதுகைகளை வழிபட, காலணிகளை தானம் வழங்க வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்லமுடியும்.
லக்னம் என்பது உயிர். ராசி என்பது உடல்.
அப்படியென்றால் நட்சத்திரம்? அதுதான் நம் மூளை, செயல்பாடு.
ஒருவர் வாழ்வில், நடக்கின்ற விஷயங்கள் அனைத்தும் ராசியால் நடக்கிறது என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், ஒருவர் எந்த நட்சத்திரமோ அந்த நட்சத்திரம்தான் வாழ்வின் செயல்கள் அனைத்திற்கும் காரணம்.
ஒரே ராசியில் பிறந்த இரண்டுபேர். ஆனால் அவர்களுக்கு மாறுபட்ட பலன்களும், நன்மைகளும் தீமைகளும் செல்வங்களும் இருப்பது ஏன்?
ஒரு ராசிக்குள் மூன்று நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தனித்தனியேயான குணங்கள் உண்டு. ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் இருக்கின் றன. ஒரு நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதமும் ஏகப்பட்ட வித்தியாச குணங்களைக் கொண்டவை. இந்த நட்சத்திரமானது, தன் குணங்களுடன் ராசியின் குணத்தை யும் சேர்த்து உள்வாங்கிக் கொண்டு, பலன் களையும் செயல்களையும் வெளிப்படுத்து கின்றன. ஆக, நட்சத்திரங்களே மிகமிக முக்கியம் என்பதை வாசகர்கள் இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள்.
(முற்றும்)
செல்: 98652 20406