கண் திருஷ்டி தோஷம் நீக்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remedies-remove-evil-eye-prasanna-astrologer-i-anandhi

ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான தோஷங்களும் கூறப்பட்டுள்ளன. அதில் கண் திருஷ்டி மிக முக்கியமான தோஷ மாகும். செவ்வாய் தோஷத்திற்கும், ராகு- கேது தோஷத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பலர் கண் திருஷ்டியை பொருட்படுத்து வதில்லை. மனிதர்களுடைய வளர்ச்சியை வாழ்வாதாரத்தைத் தடுக்கும் சக்தி கண் திருஷ்டிக்கு உண்டு. மனிதர்களுக்கு மட்டுமல்ல; அவர்களின் உடைமைகளுக்கும் கண் திருஷ்டி தோஷமுண்டு. ஒருவரின் முன்னேற்றம் பாதிப் படைந்தால் அங்கு கண் திருஷ்டி பிரதான காரணியாக இருக்கும். அதனால் நமது முன்னோர்கள் "கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது' என்று கூறிவைத்தார்கள்.

திருஷ்டி என்பது சம்ஸ் கிருத சொல். திருஷ்டி என்றால் பார்வை என்று பொருள். பார்வையை சுபப் பார்வை அசுபப் பார்வை என வகைப்படுத்தலாம். சித்தர் கள், ஞானிகள், ஆன்மிக வாதிகளின் பார்வைகள் சுபப் பலம் நிறைந்தது. அவர்களின் பார்வை யார்மீது படுகிறதோ அவர்களுக்கு புத்துணர்வு கிடைக்கப்பெற்று சுபப்பலன் மிகும். தீய எண்ணம் கொண்ட வர்களின் பார்வையில் பொறாமை, கெட்ட எண்ணங் களின் தொடர்ச்சியான தாக்குதல் இருப்பதால் தீய சக்தி அதிகமாகும். விஞ்ஞான ரீதியாக அசுப உணர்வு, எண்ணம் உள்ளவர் பார்வை அசுப அதிர்வாக மாறி ஜாதகரை தாக்கும். அதனால் எற்படும் பாதிப்பு சிலருக்கு சிறியதாகவும் பலருக்கு தொடர்ச்சி யான பின்விளைவுகளையும் தரும். கண் திருஷ்டி என்பது உண்மையா? என்பது பலருடைய கேள்வி. இதன் தாக்குதலை அனுபவிக்காதவர்களுக்கு இது விளையாட் டாகவும், அனுபவித்தவர்களுக்கு வேதனையாகவும் இருக்கும். தென் தமிழ்நாட்டில் இதை கண்ணேறு என்றும் கூறுவதுடன்.

ss

பேச்சுவழக்கில் "கண்ணு வைக்காதே' என்று கூறுவார்கள். "உன்மேல் என் கண்ணை வைத்துவிட்டு நான் கண்ணில்லாமல் அலையவா?''

ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான தோஷங்களும் கூறப்பட்டுள்ளன. அதில் கண் திருஷ்டி மிக முக்கியமான தோஷ மாகும். செவ்வாய் தோஷத்திற்கும், ராகு- கேது தோஷத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பலர் கண் திருஷ்டியை பொருட்படுத்து வதில்லை. மனிதர்களுடைய வளர்ச்சியை வாழ்வாதாரத்தைத் தடுக்கும் சக்தி கண் திருஷ்டிக்கு உண்டு. மனிதர்களுக்கு மட்டுமல்ல; அவர்களின் உடைமைகளுக்கும் கண் திருஷ்டி தோஷமுண்டு. ஒருவரின் முன்னேற்றம் பாதிப் படைந்தால் அங்கு கண் திருஷ்டி பிரதான காரணியாக இருக்கும். அதனால் நமது முன்னோர்கள் "கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது' என்று கூறிவைத்தார்கள்.

திருஷ்டி என்பது சம்ஸ் கிருத சொல். திருஷ்டி என்றால் பார்வை என்று பொருள். பார்வையை சுபப் பார்வை அசுபப் பார்வை என வகைப்படுத்தலாம். சித்தர் கள், ஞானிகள், ஆன்மிக வாதிகளின் பார்வைகள் சுபப் பலம் நிறைந்தது. அவர்களின் பார்வை யார்மீது படுகிறதோ அவர்களுக்கு புத்துணர்வு கிடைக்கப்பெற்று சுபப்பலன் மிகும். தீய எண்ணம் கொண்ட வர்களின் பார்வையில் பொறாமை, கெட்ட எண்ணங் களின் தொடர்ச்சியான தாக்குதல் இருப்பதால் தீய சக்தி அதிகமாகும். விஞ்ஞான ரீதியாக அசுப உணர்வு, எண்ணம் உள்ளவர் பார்வை அசுப அதிர்வாக மாறி ஜாதகரை தாக்கும். அதனால் எற்படும் பாதிப்பு சிலருக்கு சிறியதாகவும் பலருக்கு தொடர்ச்சி யான பின்விளைவுகளையும் தரும். கண் திருஷ்டி என்பது உண்மையா? என்பது பலருடைய கேள்வி. இதன் தாக்குதலை அனுபவிக்காதவர்களுக்கு இது விளையாட் டாகவும், அனுபவித்தவர்களுக்கு வேதனையாகவும் இருக்கும். தென் தமிழ்நாட்டில் இதை கண்ணேறு என்றும் கூறுவதுடன்.

ss

பேச்சுவழக்கில் "கண்ணு வைக்காதே' என்று கூறுவார்கள். "உன்மேல் என் கண்ணை வைத்துவிட்டு நான் கண்ணில்லாமல் அலையவா?'' என்று பதில் சொல்வார்கள். அந்த அளவிற்கு கண் திருஷ்டிக்கு வலிமை அதிகம். அத்துடன் கண் திருஷ்டி மனிதருக்கு மட்டுமல்லாது நமது வீடு, வாகனம், அழகு, ஆடம்பரப் பொருட்கள், விலங்குகள், மரம் , செடி, கொடி என நம் உடமைகள் எல்லா வற்றின் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். கண் திருஷ்டி யாரை எளிதில் தாக்கும், யாரைத் தாக்காது போன்றவற்றை ஜோதிடரீதியாக பார்க்கலாம்.

1. லக்னம், லக்னாதிபதி வலிமை உள்ளவர்களை கண் திருஷ்டி எளிதில் பாதிக்காது.

2 . லக்னம், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் மாந்தி உள்ளவர்களை எளிதாக கண் திருஷ்டி அடிக்கடி பாதிக்கும்.

3. லக்னாதிபதி 6, 8, 12-ல் மறைந்தவர் களுக்கு கண் திருஷ்டியால் பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். சிலருக்கு செய்வினையாகவும் மாறும் வாய்ப்புள்ளது.

4. லக்னாதிபதி 8-ல் மறைந்தவர்களுக்கு கண் திருஷ்டியால் விபத்து , கைகால் அடிபடு வது அல்லது உயிர் பயம் இருந்துகொண்டே இருக்கும்.

5. லக்னத்திற்கு 2, 12-ல் மாந்தி, சனி, ராகு- கேதுகள் உடையவர்களின் கண் பார்வைக்கு கெட்ட சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம்.

திருஷ்டி தோஷத்தால் ஏற்படும் விளைவுகள்

திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு போன்றவை இருந்துகொண்டே இருக்கும். ஒரு பிரச்சினை தீருவதற்குள் அடுத்த பிரச்சினை காத்துக்கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச் சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன், மனைவியிடையே காரணம் இல்லாத பிரச்சினைகள், சந்தேகங் கள், உறவினர்களுடன் பகை, வெளியே சொல்லமுடியாத கஷ்டம், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கண்டறிய முடியாத கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும்.

சுபநிகழ்வுகளில் தடை, மருத்துவச் செலவு, உணவைப் பார்த்தால் வெறுப்பு, சாப்பிடப் பிடிக்காமல் போவது, எல்லாரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும் திருஷ்டி தோஷத்தைத் தீர்க்க எளிய வலிய பரிகாரங்கள்.

மிகச் சாதாரண பாதிப்பு உள்ளவர்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் கற்பூரங்களை தலை யைச் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றலாம்.

தேங்காயில் கற்பூரம் ஏற்றி தோஷம் இருப்பவர்களின் தலையைச் சுற்றி ஊர் எல்லையில் இருக் கும் பிள்ளையார் கோவிலில் விடலை போடவேண்டும்.

இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளான திருமணம், கிரகப்பிரவேசம், தாயையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்தல் போன்ற வைபவங்களில் கண் திருஷ்டியைக் குறைக்க ஆரத்தி எடுத்து திலகம் இடவேண்டும். ஆரத்தியில் பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலைமீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு. அத்துடன் விசேஷங்களின் போது குலை தள்ளிய வாழை மரத்தை வாசலில் கட்டும்போது திருஷ்டி தோஷம் வாழை மரத்தால் ஈர்த்துக் கொள்ளப்படும். வீட்டில் விஷேசங்கள் நடந்து முடிந்தவுடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நிற்கவைத்து பூசணிக்காயால் சுற்றி யாருக்கும் பாதிப்பு ஏற்படாத இடத்தில் உடைக்கவேண்டும்.

திருஷ்டி தோஷம் மிகுதியாக இருந்தால் மகாகணபதி, மகா சுதர்சன ஹோமம் செய்ய நல்ல பலன் தெரியும்.

வீடு, அலுவலகத்தில் இருக்கும் பொருட்களுக்கு வீடு, அலுவலகத்துக்கு வருபவர்களின் தீய எண்ணம், பார்வை பலத்தை குறைக்க பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி, கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிவப்பு மீன்களை வளர்க்கலாம்.

காலை- மாலை நேரங்களில் வீடு, அலுவலகத்தில் விஷ்ணு சகஸ்ஹர நாமம், காயத்ரி மந்திரம், சாந்தி மந்திரம், திருக்கோளறு பதிகப் பாராயணம் ஒலிக்க செய்யவேண்டும்.

வீட்டு வாசலில் கற்றாழை, சப்பாத்திக் கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.

ஆகாச கருடன் என்று ஒருவகை கிழங்கு உள்ளது. அதைவாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்புக் கம்பளிக் கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்கவிடலாம்.

வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்துவர, திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

வீட்டின் வடகிழக்கு மூலையில் கண்ணாடிப் பாத்திரத்தில் கல் உப்பு இட்டு வைக்கலாம்.

போட்டி, பொறாமையால் வியாபாரத்தில் தொய்வு, கடன் தொல்லை இருந்தால் செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு அறுகம்புல் அர்ச்சனை செய்வதுடன், குலதெய்வத் திற்கு நெய்தீபம் ஏற்றி மல்லிகைப் பூவினால் அர்ச்சனை செய்ய வியாபாரம் விருத்தி யாகும்.

வியாபாரம், தொழில் நிறுவனங்களில் திருஷ்டி நீங்க வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தைத் தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கவேண்டும்.

வளர்பிறை செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்துவந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை- மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டைப் பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து வீடு, கடை, அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

முடக்கற்றான், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஜவ்வாது ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி நீங்கி செல்வச் செழிப்பு பெறலாம்.

பிறந்த குழந்தைக்கு இரண்டு வயது ஆகும்வரை திருஷ்டி தோஷத்தால் உடல்நலக்குறை இருந்துகொண்டே இருக்கும். கண்ணத்தில் திருஷ்டி பொட்டு வைப்பதுடன், கருப்பு கயிற்றில் நவகிரக ஸ்லோகம் ஜெபித்து ஒன்பது முடிச்சு போட்டு வலது காலில் கட்டிவிட்டு கணபதி ஹோம மையை நெற்றியில் வைக்க நோய்த் தாக்கமே இருக்காது.

பருவ வயது ஆண்- பெண் குழந்தைகளின் அழகு தோற்றத்தால் ஏற்படும் திருஷ்டி யைக் குறைக்க குழந்தைகளை கிழக்குநோக்கி நிற்க வைத்து ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து இடமிருந்து வலமாக மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அந்த உப்பை தண்ணீரில் போட்டால் கண் திருஷ்டி கரைந்து போகும்.

கண் திருஷ்டியால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகளை அகற்றும் சக்தி உக்ர தெய்வங்களுக்கு உண்டு. மிகக் குறிப்பாக மடப்புரம் அருள்மிகு பத்திர காளியம்மனுக்கு உண்டு. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம் காளி கோவில். இங்கு இயற்கை எழில் சூழ்ந்த வைகைக்கரை அருகே அருள் பாலிப்பவள்தான் மடப்புரம் காளி. மதுரையை சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் இக்கோவிலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிவகங்கை மாவட்டம் என்றாலும் மதுரைக்கு மிக அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருஷ்டி தோஷம், செய்வினை. பில்லி, சூனிய, ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குவந்து எலுமிச்சம் பழங்களாலான மாலை அணிவித்து வழிபட, பாதிப்பின் சுவடு அகலும்.

செல்: 98652 20406

bala131224
இதையும் படியுங்கள்
Subscribe