வாழ்க்கையில் வெற்றிபெற எதிர்நீச்சல் போட வேண்டும் என்பது உலக நியதி. ஜோதிட ரீதியாக ஒருவரின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் ராகுவின் பங்கு அளப்பரியது. ஒருவர் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ராகு தான் காரணம் என்ற கருத்து பரவலாக நம்பப் பட்டு வருகிறது.
ஏனெனில் ஊழ்வினையை அனுபவிக்கச் செய்வதில் பெரும்பங்கை ராகு தன் கையில் வைத்திருக்கிறார். வினை ஊக்கி என்று ஒரு பிரிவினர்கள் கூறினாலும், யோகிகள் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆக ஜோதிட உலகில் பலருக்குப் புரியாத புதிராக இருப்பது ராகுவின் செயல்பாடுகள். பூமிக்கு வரும் மற்ற கிரகங்களின் கதிர்வீச்சுகளைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்ற இவர் சுபரா- அசுபரா?
ராகுவின் செயல்பாடுகள்
நவகிரகங்களில் வ-மையானவரான ராகு, உலக இயக்கத்தைத் தன் பிடியில் வைத்திருப்பதுடன், ஒளி கிரகங்களான சூரிய- சந்திரர்களைத் தன் நிழலால் தோஷமடையச் செய்பவர். ராகு மனிதத் தலையும் பாம்பின் உடலும் கொண்டவர். பாதி மனிதன் பாதி மிருகம். மெய், வாய், கண், மூக்கு, காது என்ற ஐம்புலன்களே ஒருவரின் சிந்தனை உறுப்புகள். இந்த உறுப்புகள் அனைத்தும் மனித உட-ன் தலைப் பகுதியில் உள்ளன. ஐம்புலன்களை இயக்கி புறச் சிந்தனைகளை உருவாக்கி லௌகீக உலகோடு இணையவைப்பார். சிற்றின்ப நாட்டம் மிகுதியாகும். மனிதனே தவறு செய்வான். ஒருவனை நிலையிழக்கச் செய்ய, அழிக்க அல்லது தவறு செய்யத் தூண்ட ஆசைகளை அதிகரிக்கவேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு நின்ற இடம், சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசை அல்லது அளவே இல்லாத ஆசை. ராகு வுக்கு சொந்தவீடு இல்லாததால் தான் இருக்கும் வீட்டையே சொந்த வீடாகக் கொண்டு தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பார்.
ஒரு ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் இருக் கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந் திருக்கிறாரோ, அந்த கிரக காரகத்துவங்களும், பாவக கிரக காரகத்துவ உறவுகள்மூலமும் தீராத நிறைவேறாத, நிறைவேற்ற முடியாத ஆசைகளை ஏற்படுத்துகிறார். இந்த ஜென்மத்தில் எவ்வளவு கொடுத்தாலும் தீராத ஆசையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்.
ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை அடக்கினால் மட்டுமே துன்பம் தீரும். ஐம்புலன்களையும் அடக்கினால் மட்டுமே ஆசை குறைந்து அகச் சிந்தனைகள் தோன்றி பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனைகள் உருவாகும். புலன்களை அடக்கும் பாடத்தைக் கற்பிப்பதே ராகு பகவான்தான்.
உறவுகளில் தந்தைவழிப் பாட்டன்- பாட்டிகளைக் குறிக்கும் ராகு ஜனன ஜாதகத்தில் அசுபத் தன்மையோடு இருந்தால் நயவஞ்சகர்களுடன் பழகும் நிலை, மதம் மாறுவது, சூதாட்டம், அந்நிய நாட்டிற்குச் சென்று பிழைக்கவேண்டிய சூழ்நிலை, சிறை தண்டனை, விஷமருந்தச் செய்தல், கூட்டுமரணம், திடீர் ஏற்றம்- திடீர் சரிவு, விதவையுடன் தொடர்பு , மாந்திரீகம், பிறறைக் கெடுத்தல், அந்நிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம் , விஷக்கடி போன்ற பிரச்சினைகளால் பாதிப்படையச் செய்வார்.
மேலும் ராகு கருநாகப் பாம்பு, அமாவாசையன்று ராகுவின் கதிர்வீச்சு பூமிக்கு அதிகமாகக் கிடைப்பதால், ராகுவின் காரகத்துவங்களான ஏவல், பில்-, சூனியம், மாந்திரீகம், செய்வினை போன்ற விஷயங்களை அமாவாசை யில் செய்கிறார்கள். முன்னோர்களைப் பற்றிக் கூறும் நிழல் கிரகம் என்பதால் அமாவாசையில் திதி கொடுக்கப்படுகிறது.
மரபியலும் ராகு- கேதுவும்
ஒருவரின் தந்தை மற்றும் தாய்வழி முன்னோர்களின் பாவம் மற்றும் புண்ணியத்தின் அடிப்படையிலேயே ஜாதகத் தில் ராகு- கேதுக்களின் நிலைப்பாடு இருக்கும். மனிதர்களின் மரபியல் தன்மையான பாவ- புண்ணியங்களை அடுத்தடுத்த தலைமுறைக் குக் கொண்டுசெல்பவர்கள். ஒரு ஆன்மா பல்வேறு பிறப்புகளில் செய்த வினைப் பதிவுகள் அனைத்தையும் சேமித்து வைக்கும் பெட்டகமாக விளங்குவதும், ஒவ்வொரு பிறப்பிலும் வெவ்வேறு உட--ருக்கும் ஆன்மாவுக்கு அதன் அலைவரிசைக்கேற்ப வினைகளின் நன்மை- தீமைகளை அனுப்பி அவ்வுடலை அனுபவிக்கச் செய்பவர்களும் இவர்களே. ஒரு ஜாதகர் பெறும் மரபுவழி செய்திகளை (முன்னோர்களின் உடலமைப்பு, குணாதிசயங்கள், நோய்) செல்களின்மூலம் கொண்டுசெல்கிறது. பன்னிரு ராசிகளையும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என நான்காகப் பிரிக்கலாம்.
நெருப்பு
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று நெருப்பு ராசியிலுள்ள ராகுவினால் ஏற்படும் சுப- அசுபப் பலன்கள் ஜாதகரை வேகமாகச் சென்றடையும். அதனால் ஏற்படும் பாதிப்பு வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழிநடத்தும். சுப- அசுபத்தின் சுவடை ஜாதகர் உணரும்முன்பே நீங்கிவிடும். வருவதும் தெரியாது; போவதும் தெரியாது.
பரிகாரம்: நெருப்பு ராசியிலுள்ள ராகுவின் பாதிப்பைக் குறைக்க மலை, மலை சார்ந்த இடங்கள், நெருப்பு தத்துவத்தை உணர்த்தும் கோவில்களுக்குச் செல்லவேண்டும். திருவண்ணாமலை செல்லலாம். அல்லது குல, இஷ்ட தெய்வத்திற்கு தீபமேற்றுதல், விளக்கேற்றுதல், ஹோமங்கள் நடத்துதல், தீச்சட்டி எடுத்தல், அக்னி குண்டம் இறங்குதல் போன்றவைமூலம் பாதிப்பைக் குறைக்கமுடியும்.
நிலம்
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று நில ராசிகளிலுள்ள ராகுவினால் ஏற்படும் அனைத்து இன்ப- துன்பங்களும் நிதானமாக ஜாதகரை வழிநடத்தும். நீண்டகாலத் திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும்கூட வழிநடத்தும்.
பரிகாரம்: காடு, காடு சார்ந்த இடங் களிலுள்ள கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லலாம். சபரிமலை அய்யப்பன் வழிபாடு சிறப்பு. நிலத் தத்துவக் கோவிலான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சென்று வழிபடலாம். அல்லது கோவில் உழவாரப்பணி, பொதுப் பணிகள், மரம் வளர்த்தல், முளைப்பாரி கட்டி வழிபடுதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
காற்று
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசிகளிலுள்ள ராகுவினால் ஏற்படும் அனைத்து நேர்மறை, எதிர்மறைப் பலன்களும் விருந்தினர்போல் வரும்; போகும். மீண்டும் வரும்; மீண்டும் போகும். இந்த ராசிகளில் நிற்கும் ராகுவினால் உருவாகும் பலன்களை எப்பொழுது வரும்- எப்படி வருமென்று யூகிக்கமுடியாது.
பரிகாரம்: காற்று ராசி தத்துவத்தை உணர்த்தும் வாயு ஸ்தலமான ஸ்ரீ காளஹஸ்தி சென்று வரலாம். அல்லது காரியசித்தி ஸ்தோத்திரப் பாராயணம் செய்தல், ராமநாம பாராயணம் அல்லது எழுதுதல், வாசனை திரவியங்கள், சாம்பிராணி, ஊதுபத்தியை வழிபாட்டிற்குப் பயன்படுத்துதல் போன்றவற்றால் பயன்பெறலாம்.
நீர்
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளிலுள்ள ராகுவினால் ஏற்படும் அனைத்து நன்மை- தீமைகளும் எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் ஜாதகரை நன்கு உயர்த்தும் அல்லது பாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.
பரிகாரம்: நீர் ஸ்தலமான திருவானைக் காவல் கோவில் சென்று வழிபடலாம். அல்லது நீர் நிலைகள், கடல், ஆறு, குளங் களுக்குச்சென்று நீராடலாம். அல்லது இஷ்ட, குலதெய்வத்திற்கு பால், பன்னீர், மஞ்சள் நீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யலாம்.
மிகச் சுருக்கமாக, ஆசைமூலம் துன்பத்தைக் கொடுத்து ஆசையை ஒழித்து வாழவேண்டு மென்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்து பவர் ராகு. உரிய பரிகார முறைகளைக் கடைப் பிடித்தால் ராகுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
செல்: 98652 20406