ஒரு மனிதனை முழுமையடையச் செய்வது திருமண பந்தம். வாழ்நாளில் பெரும்பகுதியை மனிதன் வாழ்க்கைத் துணையுடன்தான் கழிக்கிறான். நல்ல வாழ்க்கைத் துணையே ஒருவருக்கு வரப்பிரசாதம். ஆணோ- பெண்ணோ- வாழ்க்கைத் துணையே வாழ்நாளில் அச்சாணி. இத்தகைய திருமண பந்தம் சிலருக்கு பல்வேறுவிதமான காரணங்களால் தடைப்படுகிறது.
மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் சுப-அசுப நிகழ்வுகளை மூன்று விதமான காரணிகளே தீர்மானம் செய்கின்றன. அவை:
1. லக்னரீதியான காரணி
2. தசாரீதியான காரணி
3. கோட்சாரரீதியான காரணி
இந்த மூன்றுவிதமான நிலைகளிலும் பெரிய பாதிப்பில்லாதபோது வாழ்க்கைச் சக்கரம் இயல்பாக சுழலும். இதில் சில குறைபாடுகள் இருந்தால் அவற்றைக் களைய பரிகாரம் அவசியமாகிறது...
இனி 12 லக்னங்களுக்கும் திருமணத் தடை நீங்கும் பரிகாரங்களைப் பார்ப்போம்.
மேஷ லக்னம்
மேஷ லக்னத்திற்
ஒரு மனிதனை முழுமையடையச் செய்வது திருமண பந்தம். வாழ்நாளில் பெரும்பகுதியை மனிதன் வாழ்க்கைத் துணையுடன்தான் கழிக்கிறான். நல்ல வாழ்க்கைத் துணையே ஒருவருக்கு வரப்பிரசாதம். ஆணோ- பெண்ணோ- வாழ்க்கைத் துணையே வாழ்நாளில் அச்சாணி. இத்தகைய திருமண பந்தம் சிலருக்கு பல்வேறுவிதமான காரணங்களால் தடைப்படுகிறது.
மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் சுப-அசுப நிகழ்வுகளை மூன்று விதமான காரணிகளே தீர்மானம் செய்கின்றன. அவை:
1. லக்னரீதியான காரணி
2. தசாரீதியான காரணி
3. கோட்சாரரீதியான காரணி
இந்த மூன்றுவிதமான நிலைகளிலும் பெரிய பாதிப்பில்லாதபோது வாழ்க்கைச் சக்கரம் இயல்பாக சுழலும். இதில் சில குறைபாடுகள் இருந்தால் அவற்றைக் களைய பரிகாரம் அவசியமாகிறது...
இனி 12 லக்னங்களுக்கும் திருமணத் தடை நீங்கும் பரிகாரங்களைப் பார்ப்போம்.
மேஷ லக்னம்
மேஷ லக்னத்திற்கு 2 மற்றும் 7-ஆம் அதிபதி சுக்கிரன் என்பதால், ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் வழிபாடு செய்வது சிறப்பு. தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமைகள் பசுவுக்கு உணவு தந்து பூஜிக்கவேண்டும்.
ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி புதன், ஏழாம் அதிபதி செவ்வாய் என்பதால், ஒரு செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் பழனி மலை சென்று முருகனை வழிபடவேண்டும். தொடர்ந்து 27 புதன்கிழமைகள் பறவைகளுக்கு உணவிடவேண்டும்.
மிதுன லக்னம்
மிதுன லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி சந்திரன், ஏழாம் அதிபதி குரு என்பதால் ஒரு வியாழக்கிழமை குரு ஓரையில் சீரடி சாய்பாபா அல்லது ஸ்ரீ ராகவேந்திரரை வழிபடவேண்டும். 27 திங்கட்கிழமைகள் சிவபுராணம் படிக்கவேண்டும்.
கடக லக்னம்
கடக லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி சூரியன், ஏழாம் அதிபதி சனி என்பதால், 9 சனிக்கிழமையில் சனி ஓரையில் முன்னோர் வழிபாடு தவறாமல் செய்ய வேண்டும். 27 வாரம் பசுவுக்கு கோதுமை மற்றும் நாட்டு சர்க்கரையைக் கலந்து உணவு கொடுப்பது நல்லது.
சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி புதன், ஏழாம் அதிபதி சனி என்பதால், காரிய சித்தி உண்டாகும்வரை சனிக்கிழமைகளில் திருநள்ளாறு பச்சைப் பதிகம் படிக்கவேண்டும். பிரதோஷ நாட்களில் பச்சைப்பயறு சுண்டல் படைத்து சிவனையும் நந்திகேஸ்வரரையும் வழிபடவேண்டும்.
கன்னி லக்னம்
கன்னி லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி சுக்கிரன், ஏழாம் அதிபதி குரு. எனவே வியாழக்கிழமை குரு ஓரையில் விரும்பிய சித்தர்கள் ஜீவசமாதியில் 16 நெய் தீபமேற்றி வழிபடவேண்டும். ஒன்பது வெள்ளிக் கிழமை மூன்று சுமங்கலிப் பெண்களுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்கி ஆசிபெறவேண்டும்.
துலாம் லக்னம்
துலா லக்னத்திற்கு 2 மற்றும் ஏழாம் அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் செவ்வரளி சாற்றி 27 வாரம் முருகனை வழிபட வேண்டும். 9 செவ்வாய்க்கிழமைகள் துவரம் பருப்பு சாம்பார் சாதம் செய்து அன்னதானம் வழங்க வேண்டும்.
விருச்சிக லக்னம்
விருச்சிக லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி குரு, ஏழாம் அதிபதி சுக்கிரன். வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பிரதோஷ நாட்களில் கொண்டைக்கடலை சுண்டல் படைத்து சிவனையும் நந்தியையும் வழிபடவேண்டும்.
தனுசு லக்னம்
தனுசு லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி சனி, ஏழாம் அதிபதி புதன். 27 புதன்கிழமைகள் மகாவிஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட வேண்டும். சனிக்கிழமைகளில் வயது முதிர்ந்தவர்களுக்கு தண்ணீருடன் உணவு தானம் வழங்கவேண்டும். தலா இரண்டு நபருக்கு 27 வாரங்கள் கொடுக்க வேண்டும்.
மகர லக்னம்
மகர லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி சனி, ஏழாம் அதிபதி சந்திரன் என்பதால், ஒரு திங்கட் கிழமை திருப்பதி சென்று வேங்கடாசலபதியை வழிபட வேண்டும். பிரதோஷ காலத்தில் கரும்புச்சாறு அபிஷேகம் செய்து ஈஸ்வரனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.
கும்ப லக்னம்
கும்ப லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி குரு, ஏழாம் அதிபதி சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஒருமுறையேனும் சூரியனார்கோவில் சென்று வழிபட வேண்டும். வியாழக்கிழமையில் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடவேண்டும்.
மீன லக்னம்
மீன லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி செவ்வாய், ஏழாம் அதிபதி புதன் 27 புதன்கிழமைகள் சக்கரத்தாழ்வாரை துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும். காரிய சித்தி உண்டாகும்வரை செவ்வாய்க்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்கவேண்டும்.
செல்: 98425 50844