மானுட வளர்ச்சியின் பாதையில் பொருளாதாரம் என்கின்ற பண வளர்ச்சி மிக முக்கிய பங்குவகிக்கின்றது.

வீடு, கல்வி, சிகிச்சை, எதிர்பார்ப்பு, உறவு, சமூக கௌரவம் போன்ற அனைத் திலும் இந்த பணம் சார் உளவியல் பெரும் பங்காற்றுகின்றது.

பங்காற்றுதலுடன் நிற்காமல் வாழ்வின் தரத்தையும், தீர்மானித்து மனநிலையிலும், ஒரு ஆளுமையை பறைசாற்றுகின்றது.

பெரும் வல்லமை பொதிந்த இந்த பணத்தின் வரவை ஒவ்வொருவரும் தனக்கு ஏற்றார்போல் எவ்வாறு அடையமுடியும் என்றும் அதற்கான சூழலையும், சுற்றுப்புறத் தையும், எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பதையும் காணலாம்.

dd

பணம் சார் உளவியல்

முதலில் பொருளாதார வளர்ச்சியில் மனம்தான் பணத்தை ஈர்க்கும் மாபெரும் கருவியாகும். எவ்வாறு என்றால் ஒரு வியாபாரமோ, தொழிலோ, பணியோ ஒன்றில் பயணிக்கும்பொழுது அதற்கான லாபத்தை முதலிலேயே கணக்கிடுவதையும், அதை சார்ந்த ஆசையின்பால் ஈர்க்கப்பட்டு இருப்பதுதான் நஷ்டத்தை தழுவுவதற்கான முதல் வித்தாக அமைந்துவிடுகின்றது.

Advertisment

சரி- தொழில் தொடங்குவதே லாபத்திற் காகத்தானே. ஏன் லாபத்தை நோக்கிய எண்ணத்தின் வசம் பயணிக்கக்கூடாது. மேலும் ஈர்ப்பு விதியின் விதிகளில் எதைச் சார்ந்த எண்ணங்கள் விதைக்கப்படுகின்றதோ, அதுவே விளையும் என்றல்லவா கூறப் பட்டிருக்கின்றது என்று தோணலாம். ஆனால் உழைப்பையும், கவனத்தையும், நேர்த்தியிணையும், கையாளும்பொழுதே அங்கு லாபம் என்பது மறுக்கப்படாமலும், நினைத்ததைவிட அதிகமாகவும் கிடைத்துக் கொண்டிருப்பது உண்மையிலும் உண்மையாகும்.

அதோடு எல்லாவற்றிலும் சில சூட்சுமங்கள் புகுத்தப்பட்டுதான் வாழ்வியல் வலை பின்னப்பட்டுள்ளது. இதனை சில தாந்த்ரீக பரிகாரங்கள் மூலமாகவும், அவரவர் ஜாதகரீதியான பரிகாரங்கள் மூலமாகவும், செவ்வனே கையாண்டு சிறப்புறலாம்.

சரியோ, தவறோ தாவரங்கள் என்னும் விருட்சங்கள் தன் பணியினை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் செயல்படும் தன்மையுடையது என்பது நமக்குத் தெரியும்.

Advertisment

அப்படி இருக்கும்பட்சத்தில் சில தாவரங் கள் இயல்பிலேயே வசிய தன்மையுடையதாக பிரபஞ்சம் படைத்துள்ளது. அவற்றை சரிவரக் கையாண்டால் சில அற்புதமான பலன்களை அடைய முடியும். இவற்றில் முதன்மையானது மஞ்சள் செடி மஞ்சள் பெரும் பணத்தைக் குறிக்கும் குருவின் தாவரமாகும். இந்தச் செடியினை தொட்டியில் வைத்தும் வளர்க்கமுடியும்.

ஒரு வியாழக்கிழமை யன்று காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் வீட்டின் வடகிழக்கு திசையில் மூன்று ஒரு ரூபாய் நாணயங்களை சேர்த்து மஞ்சள் நீர் ஊற்றி இந்த செடியினை நட்டு வளர்க்க சுபிட்சம் பெருகும்.

இரண்டாவதாக சிலோன் கோல்ட் என்று சொல்லக்கூடிய தாவரம். இது சற்று விலை அதிகமாக இருந்தாலும் இவை நிகழ்த்தும் அற்புதங்கள் அளப்பரியதாகும்.

இந்தச் செடியின் இலையில் அமைந் துள்ள வெளிர் பச்சை நிறம் மனதிற்கு இனிய சிந்தனைகளை தந்து வாழ்வினை சுபிட்சமாக்கும். இதன் வளர்ச்சி எவ்வாறு அமைந்துள்ளதோ, அவ்வாறே அந்தக் குடும்பத்தின் பொருளாதாரரீதியான வளர்ச்சியும் கூடும் என்பது எனது சொந்த அனுபவம் ஆகும்.

இந்தச் செடியினை புதன்கிழமையன்று ஒரு ஐந்து ரூபாய் மஞ்சள் நிற நாணயம் சேர்த்து, அதனுடன் ஒரு வெற்றிலை சேர்த்து, வடகிழக்கு மூலையில் வளர்ப்பது சிறப்பு.

ஜோதிடரீதியாக எந்த ஒரு பாவகம் வளர்ச்சி பெறவேண்டும் என்றாலும், அந்த பாவகத்திற்கு மூன்றாம் பாவகத்தை இயக்குவதன் மூலமாக அந்த பாவகம் வளர்ச்சி பெறும்.

வருமானம் மற்றும் சொத்து சேர்க்கை யைக் குறிப்பிடும் இரண்டு மற்றும் பதினோராம் பாவகங்களுக்கு வளர்ச்சி பாவகமான லக்ன பாவகமும், நான்காம் பாவகமும், தொடர்புடைய சின்னங் களையும், பொருட்களையும், உபயோகம் செய்யும்பொழுது இயல்பாகவே பணவரவு தங்கு தடையின்றி வந்தடையும்.

குறிப்பாக நட்சத்திரரீதியாக 18-ஆவது நட்சத்திரம் பண பகை நட்சத்திரம் என்பது நாம் அறிந்ததே.

அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு 18-ஆவது நட்சத்திரம் கூறும் மரத்தை வீட்டில் வளர்க்காமல் இருப்பதும், பண இழப்பைத் தடுக்கும்.

மேலும் அந்த 18-ஆவது நட்சத்திரத்தின் தொடர்பி-ருந்து விலகி இருப்பது சிறப்பு.

ss

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 18-ஆவது நட்சத்திரங்கள் மற்றும் அந்த நட்சத்திரத்தின் விருட்சங்கள் கீழ் வருமாறு:

அஸ்வினி

கேட்டை- பிராயி மரம்

பரணி

மூலம்- மாமரம்

கிருத்திகை

பூராடம்- அத்திமரம்

ரோகிணி

உத்திராடம்- நாவல் மரம்

மிருகசீரிடம்

திருவோணம்- கருங்கா- மரம்

திருவாதிரை

அவிட்டம்- செங்கருங்கா-

புனர்பூசம்

சதயம்- கொய்யா மரம்

பூசம்

பூரட்டாதி- அரசமரம்

ஆயில்யம்

உத்திரட்டாதி- புன்னைமரம்

மகம்

ரேவதி- ஆலமரம்

பூரம்

அஸ்வினி- பலா மரம்

உத்திரம்

பரணி- அலரி ஹஸ்தம்

கிருத்திகை- வேல மரம்

சித்திரை

ரோகிணி- வில்வமரம்

சுவாதி

மிருகசீரிடம்- மருதமரம்

விசாகம்

திருவாதிரை- விளாமரம்

அனுஷம்

புனர்பூசம்- மகிழ மரம்

கேட்டை

பூசம்- பிராய் மரம்

மூலம்

ஆயில்யம்- மாமரம்

பூராடம்

மகம்- வஞ்சிமரம்

உத்திராடம்

பூரம்- பலாமரம்

திருவோணம்

உத்திரம்- எருக்கஞ்செடி

அவிட்டம்

அஸ்தம்- வன்னி மரம்

சதயம்

சித்திரை- கடம்பு மரம், பூரட்டாதி

சுவாதி- மாமரம்

உத்திரட்டாதி

விசாகம்- வேம்பு மரம்

ரேவதி

அனுஷம்- இலுப்பை மரம்.

மேற்காணும் நட்சத்திரங்களின் தொடர்பி-ருந்து சற்று விலகி இருப்பது, பணப் பகையைத் தடுத்து பணவரவை அளிக்கும்.

செல்: 80563 79988