சுக ஸ்தானத்தை சுபமாக்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remedies-make-place-comfortable-prasanna-astrologer-i-anandi

சுக ஸ்தானம் என்றவுடன் அனைவருக்கும் வீடு, வாகன யோகம் பற்றிய சிந்தனை மட்டுமே நினைவுக்கு வரும். ஒரு மனிதன் தன் வாழ்வில் உடல்ரீதியாக அனுபவிக்கும் அனைத்து சுக- துக்கங்களும் சுக ஸ்தானத்தில் அடங்கும். ஒருவரின் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அனைத்து சுகங்களையும் அனுபவிக்கமுடியும். உடல்நலமில்லாத மனிதனுக்கு எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பயனில்லை.

சராசரி மனிதனின் அதிகபட்ச கனவு, தனக் கென ஒரு சொந்தவீடு இருக்கவேண்டும் என்பதே. ஒருவருக்கு சொந்தவீடு, வாகனம் அமையவேண்டுமென்றால் ஜாதகத்தில் நான்காம் அதிபதியும், செவ்வாயும் பலமுடன் இருக்கவேண்டும். அத்துடன் அந்த ஜாதகத் தில் 9-ஆமதிபதியும் வலுவுடன் இருக்க வேண்டும். ஒருசிலருக்கு பூர்வபுண்ணிய பலத்தால் சொந்தவீடு அமைந்தாலும், அதில் வசிப்பதற்கான அமைப்பு இருப்பதில்லை.

ஒருவருக்கு வாழ்வில் கிடைக்கும் வீடு, வாகன யோகம், பூமி யோகம், கல்விநிலை, கால்நடை வளர்ப்பு யோகம், தாயின் நிலை ஆகியவற்றை நான்காம் பாவகம் எனும் சுகஸ்தானம்மூலமே அறியமுடியும். ஒரு ஜாதகத்தில் 4-ஆமதிபதி, 4-ல் நின்ற கிரகம் பலமாக இருந்தாலும், பாவகிரக சம்பந்தமிருந்தால் சொந்தவீட்டில் வாழமுடியாத நிலை ஏற்படுகிறது. அதற்கான காரணத்தையும், நான்காம் பாவகத்துடன் தொடர்பு ஏற்படுத்தும் பாவகங்கள்மூலம் உருவாகும் சுக யோகங் கள் மற்றும் பரிகாரங் கள் பற்றியும் இனி பார்க்கலாம்.

நான்காமதிபதி லக்னத்தில்

நிச்சயம் வீடு, மனை யோகம் சித்திக் கும். நல்ல ஆடம்பரமான- வசதியான குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து, கௌரவத்துடன் வாழ்வார்கள். இவர்களுடைய முன்னோர்கள் மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று யானைகட்டிப் போரடித்த பண்ணையாளர்களாக இருந்திப்பார்கள். தாய்வழி பூர்வீகசொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகையாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயும் தந்தையும் பாக்கியவான்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். தாய்வழியில் அதிக உறவினர் கள் இருப்பார்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவு, அனுசரணை உண்டு.

இதற்கு அசுப கிரகங்களின் சம்பந்த மிருந்தால் சொத்துகளால் பயனிருக்காது. பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் உடல்நல பாதிப்பிருக்கும். தாய் மற்றும் தாய்வழி உறவுகளின் அனுசரணை இருக்காது. தாய் அடிக்கடி நோய்வாய்ப்படுவார். செவ்வாய்க்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

நான்காமதிபதி இரண்டில்

சுக ஸ்தானத்துடன் தன ஸ்தானாதிபதி சம்பந்த மிருந்தால் அசையும்- அசையா சொத்துகளின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.

பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலைச் செய்பவர்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் வந்துகொண்டே இருக

சுக ஸ்தானம் என்றவுடன் அனைவருக்கும் வீடு, வாகன யோகம் பற்றிய சிந்தனை மட்டுமே நினைவுக்கு வரும். ஒரு மனிதன் தன் வாழ்வில் உடல்ரீதியாக அனுபவிக்கும் அனைத்து சுக- துக்கங்களும் சுக ஸ்தானத்தில் அடங்கும். ஒருவரின் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அனைத்து சுகங்களையும் அனுபவிக்கமுடியும். உடல்நலமில்லாத மனிதனுக்கு எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பயனில்லை.

சராசரி மனிதனின் அதிகபட்ச கனவு, தனக் கென ஒரு சொந்தவீடு இருக்கவேண்டும் என்பதே. ஒருவருக்கு சொந்தவீடு, வாகனம் அமையவேண்டுமென்றால் ஜாதகத்தில் நான்காம் அதிபதியும், செவ்வாயும் பலமுடன் இருக்கவேண்டும். அத்துடன் அந்த ஜாதகத் தில் 9-ஆமதிபதியும் வலுவுடன் இருக்க வேண்டும். ஒருசிலருக்கு பூர்வபுண்ணிய பலத்தால் சொந்தவீடு அமைந்தாலும், அதில் வசிப்பதற்கான அமைப்பு இருப்பதில்லை.

ஒருவருக்கு வாழ்வில் கிடைக்கும் வீடு, வாகன யோகம், பூமி யோகம், கல்விநிலை, கால்நடை வளர்ப்பு யோகம், தாயின் நிலை ஆகியவற்றை நான்காம் பாவகம் எனும் சுகஸ்தானம்மூலமே அறியமுடியும். ஒரு ஜாதகத்தில் 4-ஆமதிபதி, 4-ல் நின்ற கிரகம் பலமாக இருந்தாலும், பாவகிரக சம்பந்தமிருந்தால் சொந்தவீட்டில் வாழமுடியாத நிலை ஏற்படுகிறது. அதற்கான காரணத்தையும், நான்காம் பாவகத்துடன் தொடர்பு ஏற்படுத்தும் பாவகங்கள்மூலம் உருவாகும் சுக யோகங் கள் மற்றும் பரிகாரங் கள் பற்றியும் இனி பார்க்கலாம்.

நான்காமதிபதி லக்னத்தில்

நிச்சயம் வீடு, மனை யோகம் சித்திக் கும். நல்ல ஆடம்பரமான- வசதியான குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து, கௌரவத்துடன் வாழ்வார்கள். இவர்களுடைய முன்னோர்கள் மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று யானைகட்டிப் போரடித்த பண்ணையாளர்களாக இருந்திப்பார்கள். தாய்வழி பூர்வீகசொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகையாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயும் தந்தையும் பாக்கியவான்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். தாய்வழியில் அதிக உறவினர் கள் இருப்பார்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவு, அனுசரணை உண்டு.

இதற்கு அசுப கிரகங்களின் சம்பந்த மிருந்தால் சொத்துகளால் பயனிருக்காது. பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் உடல்நல பாதிப்பிருக்கும். தாய் மற்றும் தாய்வழி உறவுகளின் அனுசரணை இருக்காது. தாய் அடிக்கடி நோய்வாய்ப்படுவார். செவ்வாய்க்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

நான்காமதிபதி இரண்டில்

சுக ஸ்தானத்துடன் தன ஸ்தானாதிபதி சம்பந்த மிருந்தால் அசையும்- அசையா சொத்துகளின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.

பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலைச் செய்பவர்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். அதன் மூலம் புகழ், அந்தஸ்து, கௌரவம் கூடும். தாய் மூலம் வருமானமுண்டு. நிலம், கட்டடம் போன்றவற்றின்மூலம் வருமானம் ஏற்படும். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் வருமானம் உண்டு. சுகபோகம் மிகுதியான வீடு அமையும்.

ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக் கும். வீட்டினருகில் உற்றார்- உறவினர்கள் அதிகமாக இருப்பார்கள். நீர்வளம் மிகுந்த இடத்தில் வீடு, மனை அமையும். அற்புதமான உன்னதப் பலன்களை அனுபவிப் பார்கள்.

இந்த ஸ்தானத்தில் அசுப கிரக சம்பந்த மிருந்தால் எவ்வளவு சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தாலும் மனதை தாங்களாகவே குழப்பிக்கொள்வார்கள். போதிய கல்வியறிவு இன்மையால் சொத்து சுகத்தை இழப்பார்கள். செவ்வாய்க்கிழமை துர்க்கை, காளியை வழிபடவும்.

ff

நான்காமதிபதி மூன்றில்

சுக ஸ்தானத்திற்கு 3-ஆமதிபதி சம்பந்த மிருந்தால் அடிக்கடி வீடு மாற்றம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு இடத்தில் நிலையாக வாழமுடியாமல் அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும்.

இவர்கள் சகோதரர்களுக் காகவே வாழ்வார்கள். பெரும்பாலும் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வதால் இவர்களுடைய சொத்துகள் உடன்பிறந்தவர் களால் பராமரிக்கப்படுகிறது அல்லது அபகரிக்கப்படுகிறது. இளகிய மனம் படைத்தவர் களாகவும், அண்டை, அயலாரு டன் ஒட்டி உறவாடுபவர் களாகவும் இருப்பார்கள்.

இதற்கு அசுப கிரக சம்பந்த மிருந்தால் வீடு, மனை அமைவது சிரமம். பூர்வீக சொத்து இருப்பினும், உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடும் இருக்கும். அந்த சொத்து உடன்பிறந்தோரின் கடனை அடைப்பதிலேயே முடிந்துவிடும்; பறிபோகும் அல்லது ஜாதகரே விட்டுக் கொடுக்கும் நிலை உருவாகும். அல்லது அண்டை, அயலாருடன் எல்லைத் தகராறு இருக்கும். இவர்கள் செவ்வாய்க் கிழமை ஊரின் எல்லை அல்லது காவல் தெய்வத்தை வழிபடுவது சிறப்பு.

நான்காமதிபதி நான்கில்

சுக ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந் திருந்தால் தாய், தாய்வழி உறவினர்களின் அன்பும் அனுசரணையும் பெற்றவர்கள். தாய்வழி சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். நல்ல வீடு, மனை யோகம் தாய்வழியில் ஏற்படும். நிலச்சுவான்தார்கள். விவசாயம், கால்நடை வளர்ப்பதில் ஆர்வம் மிகுந்தவர்கள். ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு செல்வச் செழிப் பும் மிகும். மத்திம வயதிற்குப்பின்பே சுய உழைப்பில் சொத்து யோகமுண்டு. அடுக்குமாடிக் குடியிருப்பு, மாடிவீடு கட்டி வாழ்வார்கள். பெற்றோர்களுடன் சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வாழ்வார்கள். அக்கம் பக்கதில் இருப்பவர்கள் இவர் களிடம் ஆலோசனை கேட்பார்கள். பூர்வீக சொத்துகள் பெற்றோரின் காலத்திற்குப்பின் முறையாக இவர்களைச் சென்றடையும். இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆடம் பரப் பொருட்கள் வீட்டில் அதிகமிருக்கும்.

இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் தாயின் ஆரோக்கியம் கெடும். வறுமை, வாஸ்து குறைவான வீட்டில் வாழுதல் போன்ற நிலை நீடிக்கும். செவ்வாய்க்கிழமை மாலை 6.00-7.00 மணிவரையிலான சனி ஓரையில், சாலையோரம் வசிப்பவர்களுக்குத் தேவையறிந்து உதவவும்.

நான்காமதிபதி ஐந்தில்

முன்னோர்களால், குலதெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். பரம்பரை பூர்வீக சொத்து நிச்சயமுண்டு. பூர்வீக சொத்தால் ஆதாயமுண்டு. அதிர்ஷ்டம், குன்றாத செல்வம், புகழ், கீர்த்தி, குலப்பெருமை, கௌரவம் உண்டு. பிள்ளைகளால் நிம்மதி, சந்தோஷமடைவார்கள். பிள்ளைகள் பிறந்த பின்பு வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். சொத்துகள் குவிந்துகொண்டே இருக்கும். சொத்துகள்மூலம் நிரந்தர வருமானமுண்டு. பல அடுக்குமாடி வீடு கட்டுவார்கள். வாழ்நாள் முழுவதும் பூர்வீகச் சொத்தில் வசிப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்களுக்கு இந்த அமைப் பிருக்கும். இவர்களின் செயல்பாடுகள் மிகுந்த நிதானத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கும்.

இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் பிள்ளைகள் பிறந்தபிறகு பூர்வீகத்தைவிட்டு வெளியேறுவார்கள் அல்லது வாழ்வாதாரத் திற்காக பூர்வீக சொத்தை இழக்கும் சூழ்நிலை வரும். பௌர்ணமி திதியில் குலதெய்வத்தை வழிபடவும்.

நான்காமதிபதி ஆறில்

கடன் பெற்று சொத்தை உருவாக்குபவர். மேலும் சொத்தின் மதிப்பைவிட கடன் தொகை அதிகமாகும். வருமானம் முழுவதும் சொத்தைக் காப்பாற்றவே செலவு செய்வார்கள். பல வருடங்களாக சொத்து அடமானத்தில் இருக்கும். 4, 6-ஆமதிபதிக்கு குரு சம்பந்தம் இருந்தால் கடன் எளிதில் அடைபடும்.

இதற்கு அசுப கிரகத் தொடர்பு பெறும் போது கட்டிய வீடு பாதியில் நின்றுவிடும். சிலருக்கே பெரும் முயற்சிக்குப்பின் கட்டி முடிக்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு சொத்து வாங்குவதும், விற்பதும் நடந்துகொண்டே இருக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குப் போவார்கள். சொந்த வீடிருந்தும் வாடகை வீட்டிற்குப் போவார்கள். சிலர் உத்தியோகத்திற்காக சொந்த வீட்டில் குடியிருக்க முடியாமை, உடல்நலக் குறைவு, குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. சிலர் காலம் முழுவதும் தீராத நோய்க்கு வைத்தியம் செய்துகொண்டே இருப்பார்கள். செவ்வாய்க்கிழமை மாலை 5.00-6.00 மணிக்குள் ருண விமோசன ஈஸ்வரரை வழிபடவும்.

நான்காமதிபதி ஏழில்

தாய்வழி உறவில் திருமணம் நடைபெறும். மனைவிவழி உறவுகளால் நன்மையுண்டு. தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். இயல்பாகவே திருமணத்திற்குப்பிறகு களத்திரத்தின் மூலம் நல்ல வீடு, வாசல் அமையும். 7-ஆமதிபதி யோடு எத்தனை கிரகம் சம்பந்தம் பெறுகிறதோ அத்தனை சொத்து கிடைக்கும். லக்ன சுபர் மற்றும் குரு பார்வை இருந்தால் திருமணத்திற்குப்பிறகு சொத்து கூடிக்கொண்டே இருக்கும். நல்ல ஆடம்பரமான அழகான வீட்டில் வாழும் பாக்கியமுண்டு. வீட்டில் நல்ல பழம்தரும் மரங்கள் இருக்கும். வாஸ்து தோஷம் இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

அசுப கிரக சம்பந்தம் பெற்றால் சொத்து இழப்பு ஏற்படும். மாமியார், மருமகள் சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள். செவ்வாய்க்கிழமையன்று சிவன் கோவில் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ளவும்.

நான்காமதிபதி எட்டில்

தாய் வாழாதவர். தாயாருக்கு நித்திய கண்டம்- பூரண ஆயுள் என தீராத நோய்த் தொல்லை இருக்கும். குடும்பத்தினர் நிம்மதியில்லாமல் துன்பத்தை அதிகம் அனுபவிப்பார்கள். அடிக்கடி வீடு, வாகனம், மின் சாதனங்கள் பழுதாகி செலவு வைக்கும். கல்வியில் தடை உண்டாகும். சிலர் சுகத்திற்காக சொத்தை இழப்பார்கள். இயற்கை சீற்ற அபாயம், விபத்து கண்டம் உண்டு. அசுப கிரக இணைவு ஏற்பட்டால் வீடு சேதமாகும். வாழ்க்கையில் தோல்வி, அவமானத்தை அதிகம் சந்திக்கநேரும். இவர்கள் கட்டிய வீட்டை வாங்குவது சிறப்பு.

சிலருக்கு விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, உயில் சொத்து உண்டு. சனிக்கிழமை காலை 8.00-9.00 மணிக்குள் பைரவரை வழிபடுவது சிறப்பு.

நான்காமதிபதி ஒன்பதில்

பூர்வீக சொத்து, தந்தை, தந்தைவழி முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சொத்துகள் கிடைக்கும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு, மனை யோகமுண்டு. பள்ளி, கல்லூரி நடத்தும் பாக்கியவான்கள். தாய்- தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிநடத்துபவர்கள். பலருக்கு வேலை வாய்ப்பு வழங்குபவர்கள். வீட்டினருகில் மதப்பற்று மிகுந்தவர்கள், ஆச்சாரங்களைக் கடைப்பிடிப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள். வீடு தெய்வ கடாட்சம் நிறைந்து கோவில்போல் இருக்கும். வீட்டில் பூஞ்செடிகள், மூலிகைச் செடிகள் வளர்ப்பார்கள். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். எத்தகைய அமைப்புடைய வீடாக இருந்தாலும் குலம் தழைக்கும். வாழ்வின் இறுதிக்காலம் சுகமாகவும் அமைதியாகவும் இருக்கும். பதவி, புகழ், அந்தஸ்துடன் கோடீஸ்வரராக வாழ்வார்கள். உயர்கல்வி யோகமுண்டு.

இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் தந்தை, தந்தைவழி முன்னோர்கள் முறையாக பித்ருக் கடன் தீர்க்காதவர்கள். வில்லங்க சொத்து, பங்காளிப் பகையுண்டு. தாய்- தந்தைக்கு நோய் பாதிப்புண்டு. கற்ற கல்வியால் பயனிருக்காது. அமாவாசை நாட்களில் விரதமிருந்து பித்ருக்களை வழிபடவும்.

நான்காமதிபதி பத்தில்

நல்ல தொழில், உற்றார்- உறவினர் உதவி, அனுசரணை உண்டு. சுய உழைப்பில் நிச்சயம் வீடு யோகமுண்டு. வீடு, கடை வாடகைமூலம் வருவாய் ஏற்படும். ரியல் எஸ்டேட், கட்டுமானப்பணி, ஒப்பந்தத் தொழில், டிரேடிங், கமிஷன், விற்பனை, விவசாயத்தால் லாபமுண்டு. மாமியார்வழிச் சொத்தால் ஆதாயமுண்டு. அசையும்- அசையா சொத்தை வாடகைக்குவிட்டு வருமானம் திரட்டுவார்கள். சிந்தித்து செயல்படும் நல்லறிவு மிகுந்தவர்களாக இருப்பார்கள். சிறந்த கல்வியாளர்கள். அடிக்கடி வீட்டைப் பழுதுபார்த்து புதுப் பொலிவுடன் வைத்திருப்பார்கள். எத்தகைய அமைப்புடைய வீட்டில் வாழ்ந்தாலும் தங்களது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி மகிழ்சியாக வாழ்வார்கள்.

இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் தொழிலுக்காக சொத்து, வீடு, வாசலை இழப்பார்கள். ஏகாதசி திதியில் மகா விஷ்ணுவை வழிபடவும்.

நான்காமதிபதி பதினொன்றில்

தாயார் உயர் குடும்பத்தில் பிறந்தவர். நல்ல கல்வியாளர். ஜாதகர் தொட்டது துலங்கும். சுமாரான குடும்பத்தில் பிறந்தாலும் எளிய உழைப்பில் கோடீஸ்வர யோகத்தை அடைவார்கள். பள்ளிப் படிப்புமுதல் உயர் ஆராய்ச்சிக் கல்விவரை முதன்மை பெறுவார்கள். கல்வியறிவைப் பயன்படுத்தி சுய உழைப்பில் முன்னேறுவார்கள். வாழ்வில் மிகப்பெரிய வெற்றியாளர்களாக- சாதனையாளர்களாக வலம்வருவார்கள். தன் சொத்துக் கணக்கு ஜாதகருக்கே தெரியாது. முதல் திருமணத்தைவிட இரண்டாம் திருமண வாழ்க்கையே சிறப்பாக அமையும்.

இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் கற்ற கல்வியால் பயனிருக்காது. உற்றார்- உறவினர் களுக்கே சொத்துகள் பயன்படும். துவாதசி திதியில் அந்தணர்களுக்கு உதவவேண்டும்.

நான்காமதிபதி பன்னிரண்டில்

முன்னேற்றத்திற்காக அதிக பொருள் விரயத்தை சந்திக்க நேரும். சுயதொழிலில் பெரும் நட்டத்தை சந்திப்பார்கள். அடிமைத் தொழிலில் இருப்பவர்களும், முதலீடில்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும்போதும் பெரும் வாழ்வியல் மாற்றமும் சுப யோகமும் உண்டாகிறது. அதிக முதலீட்டில் சொந்தத் தொழில் செய்தால் கடனாளியாகிறார்கள். வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த அமைப்பு விபரீத ராஜயோகத்தைத் தருகிறது.

இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் தம்பதிகள் தொழில், உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி பிரிந்துவாழ்வார்கள். தசை, புக்தி அசுபமாக செயல்பட்டால் தம்பதிகள் நிரந்தரமாகப் பிரிந்து வாழ்கிறார் கள். குடும்ப உறவுகளுடன் ஒற்றுமை இருக்காது. குடும்ப சொத்து எதிரியின் பிடியில் இருக்கும். அதிகமாக உழைத்து குறைவாக வருமானம் பெறுவார்கள். இந்த அமைப்புள்ள பெண்கள் ஓய்வின்றி குடும்பத்திற்காக இறுதி மூச்சுவரை உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். குடும்பத்திற்காக அதீத கடனை சுமக்கிறார் கள். அமாவாசை திதியில் புண்ணிய தீர்த்தங் களில் உடலும் உள்ளமும் குளிர புனித நீராட வேண்டும்.

பொதுவாக சுக ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம்பெற்ற கிரகங்கள், லக்ன சுபர் ஆகியவை இருப்பது சிறப்பு. 4-ல் வக்ர, நீச, அஸ்தமன கிரக அமர்வு, தொடர்பு, 4-க்கு ராகு, கேது, மாந்தி தொடர்பு ஆகியவை இருந்தால் முறையாக சுகபோகம், யோகத்தை அனுபவிக்க முடியாது.

மனிதராய்ப் பிறந்தவர்கள் சம்பாதிக்கவும், சாப்பிடவும், தூங்கவும் மட்டுமே பிறவி யெடுக்கவில்லை. சம்பாதித்த பணத்தில் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நிறைவுசெய்து மகிழ்வுடன் வாழவேண்டும்.

செல்: 98652 20406

bala010722
இதையும் படியுங்கள்
Subscribe