கேது ஒரு நிழல் கிரகம். பாம்பின் தலையும் மனித உடலும் கொண்ட வர் கேது. உருவமில்லாமல் நிழலாக நின்று செயல்படுவதால், உடலில் சூட்சுமமாக நின்று செயல்படும் குண்டலினி சக்தியாகும்.

குண்டலினி சக்தியைப் பாம்பாக உருவகப் படுத்தலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது ஓடும்போதுதான் அது இருப்பதை அறிய முடியும். குண்டலினியும் பாம்பைப்போன்று மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது மௌனமாக இருந்தால் அதன் சக்தி நமக்குத் தெரியாது. யோகம் மற்றும் தியானம்மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிடமுடியாத பேராற்றலும் மகத்துவமும் புரியும்.

kethu

Advertisment

அதேபோல் லௌகீகம் எனும் மாயையில் சிக்கி அலைபாயும் ஆன்மாவை ஆழ்நிலை தியானம், ஆன்மிக நாட்டத்தின்மூலம் பக்குவப் படுத்தி அடக்கி முக்தியடையச் செய்பவர் கேது.

உறவுகளில் தாய்வழிப் பாட்டன்- பாட்டி களைக் குறிக்கும் கேதுவுக்கு சொந்த வீடு கிடையாததால் தான் நிற்கும் வீட்டையே சொந்தவீடாக எடுத்துக்கொண்டு, தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுக்கும். ஒருவரின் ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கிறாரோ.

அந்த கிரககாரக உறவுகளுக்கு ஜாதகர் சென்ற ஜென்மத்தில் நிறைவேற்றத் தவறிய கடமைகள் இருக்கும். அந்த பாவக கிரக காரகத் துவங்கள்மூலம் நிறைவேற்றத் தவறிய கடமை களை, நிறைவேற்றமுடியாத கடமைகளை முடிக்க கேது உதவுவார். இவர் நின்ற பாவக காரக உறவுகளுக்கு உழைத்தால், உதவி செய்தால் பலனை எதிர்பார்க்ககூடாது. மனிதன் தன் வாழ்நாள் கடமைகளை நிறைவேற்றும் மனப்பக்குவத்தை தந்து முக்தியை ஆன்மா நாடும் வரை அனுபவப் பாடத்தைக் கற்றுக்கொடுத்து ஆன்மா வின் முக்திக்கு உதவுபவர் கேது.

ஜனன ஜாதகத்தில் கேது பலமாக இருந்தால் ஒல்லி யான, குள்ளமான தோற்றத்துடன், மூளை பலம் மிக்கவர்களாக இருப்பார்கள். எப்போதும் உஷாராக இருப்பதுடன் எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றுவார்கள். கேது சுபத்தன்மை பெற்றால் ஞானம், மோட்சம், புண்ணிய தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம் கிட்டும்.

ஜனன ஜாதகத்தில் கேது பலமிழந்தால் எதிர்மறை எண்ணங்கள், கெட்ட சகவாசம், கீழ்த்தரமான சேர்க்கை, கடுமையான தடங்கல், மாந்திரீக நாட்டம், பைத்தியம் பிடித்தல், கொலை, ஆணவம், அகங்காரம், சிறைப்படல் ஆகிய பலன்கள் மிகும்.

கேது செம்பாம்பு, பௌர்ணமியன்று கேதுவின் கதிர்வீச்சு பூமிக்கு அதிகமாக வந்து விழும். இவர் யாகத்திற்கு, ஆன்மிகத்திற்கு காரணமான கிரகமென்பதால் பௌர்ணமி யன்று சிறப்புப் பிரார்த்தனைகளும், யாகங்க ளும் நடத்துகிறார்கள். மூலிகை செடிகளைப் பறிக்கிறார்கள். தான தர்மங்கள் நடத்தப் படுகிறது.

கேதுதான் முக்திக்கு அதிபதி. உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் ஒருவருக்கு முக்தியா அல்லது மறுபிறவியா என்பதை நிர்ணயிப்பவர் இவர்.

இனி பன்னிரண்டு பாவகங்களில் கேது நிற்பதால் ஏற்படும் பலன்களையும் பரிகாரங் களையும் காணலாம்.

லக்னத்தில் கேது

கேது பலம்பெற்றால் தெய்வீகக்களை முகத்தில் இருக்கும். நல்ல நடத்தையுண்டு. அனைத்து விஷயங்களையும் தெரிந்துவைத்தி ருப்பார். காரிய சாதனை, வெற்றி உடையவர். பொருளாதார வசதி நிலையானதாக இருக் கும். தாய்வழி உறவுகளிடம், பாட்டியிடம் நெருக்கம் அதிகம் உள்ளவர். கேது பலம் குறைந்தால் முரட்டுத்தனமான தோற்றமிருக்கும். அல்லது அசட்டுத்தனம் நிரம்பியது போன்ற தோற்றமளிப்பார். தனித்து வாழ்வதை ஜாதகர் விரும்புவார். ஜாதகரிடம் யாரும் அன்புகாட்ட மாட்டார்கள். முறையற்ற வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்வார். கஞ்சத்தனம் நிறைந்தவர்.

பரிகாரம்: சனிக்கிழமை விநாயகர் வழி பாடு சிறப்பைத் தரும்.

இரண்டில் கேது

கேது சுபத்துவம் பெற்றால் பேச்சில் தெய்வீகம் நிறைந் திருக்கும். வாக்குப் பலிதமுண்டு. அருள்வாக்கு கூறுபவர்கள். பஞ்சாயத்து பேசி சமரசம் செய்வதில் வல்லவர்கள். குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்துவார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியமுண்டு. சூடான, சுவையான உணவை, சுத்தமான சைவ உணவை விரும்புவார்கள். கேது பலம்குறைந்தால் பேசும்போது வஞ்சனை கலந்து பேசுவார். முன்கோபம் நிறைந்தவர். திக்குவாய் கோளாறு உள்ளவர். போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுவார்கள். வருமானக் குறைபாடு இருந்து கொண்டே இருக்கும். திறமை இருந்தாலும் முன்னேற முடியாது. தவறான வாக்கு கொடுத்து மாட்டுவார்கள். குடும்பத்து டன் ஒட்டாத வாழ்க்கை ஏற்படும். குடும்பப் பிரச்சினைக்கு பஞ்சாயத்து, கேஸ் வரை செல்லும்.

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி விரத மிருந்து விநாயகரை வழிபடவேண்டும்.

மூன்றில் கேது

Advertisment

கேது சுப பலம்பெற்றால் சாஸ்திர ஞானம் நிறைந்தவர். முயற்சிகளில் வெற்றியுண்டு. எடுத்த காரியம் ஜெயமாகும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். ஜாதகர் முரட்டுத்தனம், பிடிவாத குணம் உள்ளவர். கேது அசுப பலம்பெற்றால் முயற்சி யில் தோல்வியடைவார்கள். எடுத்த காரியங் கள் தடை, தாமதம் தரும். உடன்பிறப்பு களுடன் தீராத, தீர்க்கமுடியாத வம்பு வழக்கு இருக்கும். அல்லது இளைய சகோதரம் இல்லை. சகோதர தோஷமுண்டு. ஆபரணங் கள் தொலையும். அதீத கவலையுண்டு. சொத்தில் வில்லங்கம், எல்லைத் தகராறு, பட்டா, பத்திரத்தில் குழப்பம் இருக்கும். பாகப்பிரிவினை சுமூகமாகாது. காது, மூக்கு. தொண்டை சார்ந்த உபாதைகள் உண்டு.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை சனி ஓரையில் விநாயகர் வழிபாடு செய்யவேண்டும்.

நான்கில் கேது

கேது சுப பலம்பெற்றால் கல்விக்கு மீறிய திறமையும், அனுபவமும் உண்டு. தாயின் ஆதரவுண்டு. தாயார்வழி உறவுகளின் ஆதரவு, சொத்து கிடைக்கும். வசதியான குடும்பத்தில் பிறந்தவர். சுய சம்பாத்தியத் திலும் சொத்துகனகள் சேரும். சொத்துகள் மூலம் வருமானம் உண்டாகும். ஜாதகர் ஆரோக்கியமானவர். கேது பலம் குறைந்தால் ஆரம்பக் கல்வியில் தடையிருக்கும். தாய் வாழாதவர். தாய்வழிச் சொத்தில் வம்பு, வழக்கிருக்கும். எளிதில் சொத்து அமையாது. பழைய, சிதிலமடைந்த வீட்டில் வாழ்வார்கள். அரசியல் தோல்வி உண்டு. விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஆதாயம். குறையும். நல்ல ஒழுக்கமிருக்காது. வாழ்க்கையில் சலிப்பு, சங்கடங்களே மிஞ்சும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை வராகர் மற்றும் வராகியம்மனை வழிபடவேண்டும்.

ஐந்தில் கேது

கேது பலம்பெற்றால் ஜாதகர் பல கலைகளும் கற்றுத் தேர்ந்தவர். திடமான மனம், தன்னம்பிக்கை உடையவர். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். பதவி, புகழ், அந்தஸ்து எளிதாகத் தேடிவரும். பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். வம்சா வளியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். தலைமைப் பதவி தேடிவரும். நிர்வாகத் திறமையுண்டு. அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமை யுடன் பிரகாசிப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும். குலதெய்வ கடாட்சம் உண்டு. கேது பலம்குறைந்தால் பரிகாரம், வைத்தியத் தியத்தின்மூலம் புத்திரப்பேறு கிடைக்கும். பிள்ளைகளால் மன வேதனை மிகும். பூர்வீகச் சொத்து கிடைக்காது. பூர்வீகச் சொத்தில் சர்ச்சையுண்டு. குலதெய்வ அருள் கிடைக்காது. அதிர்ஷ்டம் குறைவுபடும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை ஊரின் எல்லை, காவல் தெய்வங்களை வழிபட வேண்டும்.

ஆறில் கேது

அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் நிற்பது, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். எதிரிகளை வெல்லும் ஆற்றலுண்டு. துணிவு, வீரம், விவேகமுண்டு. விஷத் தீண்டுதல் பயமுண்டு. ஆறில் கேது இருப்பவர் களுக்கு கடன் தொல்லை இருக்காது என்ற கருத்து ஒருசாரரிடம் நிலவிவந்தாலும், ஆறில் கேது உள்ளவர்கள் கடனால் அனுபவிக்கும் இன்னல்கள் சொல்லி மாளாது. கடனுக்கு பயந்து நோய் வருகிறது. வெகுசிலர் கடனுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் கள் - தாய்மாமன் ஆதரவு குறைவு. ரகசிய நோய்த் தாக்கம் இருக்கும். ஆறில் கேது ராஜயோகமல்ல. சாபக்கேடு.

பரிகாரம்: சனிக்கிழமை எமகண்டத்தில் விநாயகரை வழிபடவேண்டும்.

ஏழில் கேது

திருமணம் பலமுறை தள்ளிப் போகும். அன்னிய உறவில் தாரம் அமையும். இருதார யோகமுண்டு. திருமண வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். இல்லறத் துறவிபோல் வாழ நேரும். சிலருக்கு நோயாளி வாழ்க்கைத் துணை கிடைக்கும். எப்படி பொருத்தம் பார்த்தாலும் மண வாழ்க்கை மன வருத்தத்தைத் தராமல் போகாது. அனைவரையும் பகைத்துக்கொள் ளும் குணமுள்ளவர்கள்.நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால், வாழ்க்கைத் துணையால் வம்பு, வழக்கு அவமானம் உண்டு.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை ராகு வேளை யில் துர்க்கை, காளியை வழிபடவேண்டும்

எட்டில் கேது

மொத்த வம்பு வழக்கின் குத்தகை எட்டாமிட கேது. சூழ்நிலைக்கு ஏற்ப பேசி காரியம் சாதிப்பார்கள். அதிர்ஷ்டத்தை நம்பி காலத்தை ஓட்டுவார்கள். கடினமாக உழைக்க விரும்பமாட்டார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி அதன்மூலம் ஆதாயம் தேடுவார்கள். சிறிய வேலை செய்து கடுமை யாக உழைத்தவர்கள்போல் பாவனை காட்டுவார்கள். தொடர்ச்சியான வருமானம் இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் பேச்சை உதாசீனம் செய்வார்கள். குடும்ப உறவுகளின் அன்பு, ஆதரவு குறையும். எதனையும் மிகைப்படுத்தலாக கூறுவார்கள் கள். யாராவது எதிர்த்தால் அமைதியாவார்கள். கெஞ்சினால் மிஞ்சுவார்கள். மிஞ்சினால் கெஞ்சுவார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.

பரிகாரம்: திங்கட்கிழமை எம கண்டத் தில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.

ஒன்பதில் கேது

கேது பலம்பெற்றால் தெய்வாதீனம் நிரம்பி யவர்கள். அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். இவர் களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப் பட்டு நடக்கக் பலர் விரும்புவார்ள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வழிப் படுத்துவதில் வல்லவர்கள். உற்றார்- உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். துறவு மனப்பான்மை உண்டு. குலதெய்வ கோவில் நிர்வாகிகள். பித்ருக்களின் நல்லாசி உண்டு. தந்தையின் அன்பும் ஆசிர்வாதமும் நிரம்ப பெற்றவர்கள். கேது பலம்குறைந் தால் தந்தையின் ஆதரவிருக்காது. பித்ரு தோஷம் நிரம்பியவர்கள். மதமாற்ற சிந்தனை இருக்கும் அல்லது மத நம்பிக்கை குறையும். பூர்வீகத்தில் வாழமுடியாது.

பரிகாரம்: அமாவாசை நாட்களில் முன்ளோர்களை வழிபடவேண்டும்

பத்தில் கேது

பத்தில் ஒரு பாவியாவது இருக்கவேண்டும் என்பது ஜோதிடப் பழமொழி. கேது சுபவலுப் பெற்றால் பார்ப்பது கேட்பதுமூலம் எந்தத் தொழிலையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள். யாருக்கும் பணியமாட்டார். யாரையும் மதிக்க மாட்டார்கள். பிறர் உதவியை விரும்ப மாட்டார்கள். குறுக்குவழி பிடிக்காது. ஞான முதிர்ச்சி உடையவர். பணத்தாசை கிடையாது கேது பலம்குறைந்தால் பல தொழில் ஞானமுண்டு. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பதுபோல் இவர்களின் ஞானம் இவர்களுக்குப் பயன்படாது. இவரைச் சார்ந்தவர்கள் இவரைப் பயன்படுத்துவார்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபடவேண்டும்

பதினொன்றில் கேது

பதினொன்றில் நிற்கும் எந்த கிரகமும் பெரிய தொந்தரவைத் தராது. ஆனால் பதினொன்றில் கேது இருப்பவர்களில் பலர் சித்தப்பா, மூத்த சகோதரத்தையும் நம்பி, வைப்பாட்டியாலும் வீணாப்போனவர்கள்.

பரிகாரம்: ஏகாதசி திதியில் மகா விஷ்ணுவை வழிபடவேண்டும்.

பன்னிரண்டில் கேது

பன்னிரண்டில் கேது இருந்தால் மோட்ச முண்டு என்பார்கள். இதற்கான விளக்கம் நமது பாலஜோதிட இதழில் கட்டுரையாக வந்துள்ளது. 12-ல் கேது இருப்பவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை வரமாக அமையும்.

பரிகாரம்: சனி பிரதோஷக் காலத்தில் கொள்ளு தானம் வழங்கவேண்டும்.பொதுவாக கேதுவின் சுப அதிர்வலைகள் கிடைக்க கணபதி உபாசனை செய்வது நல்லது.

செல்: 98652 20406