சென்ற வாரம் சேஷம தாரை பற்றி பார்த்தோம். இந்த வாரம் பிரத்யக்தாரை பற்றி பார்க்கலாம்.
ஒருவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஐந்தாவது நட்சத்திரம் பிரத்யக் தாரையாகும். அதாவது 5, 14, 23-ஆவது நட்சத்திரமாகும். ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நாட்கள் பிரத்யக் தாரை. இந்த நட்சத்திர நாட்களில் எந்த காரியம் செய்தாலும் அதில் தடை உண்டாகும். சந்திராஷ்டமத்தைவிட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நாள் இந்த பிரத்யக் தாரை நாளாகும்.
வீண் அலைச்சல், மன குழப்பம், திட்டமிட முடியாத நிலை இருந்தால் அது பிரத்யக் தாரையின் நாளாகும்.
இதில் திருமணம் செய்தால் கணவன்- மனைவியிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். தொழில் தொடங்கினால் தொழில் முடக்கம் உண்டாகும். நிலம் வாங்கினால் வில்லங்கம் உண்டாகும். பணம் கொடுத்தால் திரும்பி வராது.
அதிர்ஷ்டம் தொடர்பான செயலுக்கான பங்குச் சந்தை, லாட்டரி போன்றவை இழப்பை ஏற்படுத்தும். காதல் தோல்வியைத் தரும். பிள்ளை களல் மன உளைச்சல் கூடும்.
ஒரு ஜாதகத்தில் பிரத்யக் தாரை எனும் 5-ஆவது தாரை நட்சத்திரத்திலிருந்து நின்று
சென்ற வாரம் சேஷம தாரை பற்றி பார்த்தோம். இந்த வாரம் பிரத்யக்தாரை பற்றி பார்க்கலாம்.
ஒருவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஐந்தாவது நட்சத்திரம் பிரத்யக் தாரையாகும். அதாவது 5, 14, 23-ஆவது நட்சத்திரமாகும். ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நாட்கள் பிரத்யக் தாரை. இந்த நட்சத்திர நாட்களில் எந்த காரியம் செய்தாலும் அதில் தடை உண்டாகும். சந்திராஷ்டமத்தைவிட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நாள் இந்த பிரத்யக் தாரை நாளாகும்.
வீண் அலைச்சல், மன குழப்பம், திட்டமிட முடியாத நிலை இருந்தால் அது பிரத்யக் தாரையின் நாளாகும்.
இதில் திருமணம் செய்தால் கணவன்- மனைவியிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். தொழில் தொடங்கினால் தொழில் முடக்கம் உண்டாகும். நிலம் வாங்கினால் வில்லங்கம் உண்டாகும். பணம் கொடுத்தால் திரும்பி வராது.
அதிர்ஷ்டம் தொடர்பான செயலுக்கான பங்குச் சந்தை, லாட்டரி போன்றவை இழப்பை ஏற்படுத்தும். காதல் தோல்வியைத் தரும். பிள்ளை களல் மன உளைச்சல் கூடும்.
ஒரு ஜாதகத்தில் பிரத்யக் தாரை எனும் 5-ஆவது தாரை நட்சத்திரத்திலிருந்து நின்று ஒரு கிரகம் நின்று தசை நடத்தினால் ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். குல தெய்வமே குழந்தையாக பிறக்கும். பிள்ளைகள் குலகௌரவத்தை காப்பாற்றுவார்கள். வாழ்நாள் முழுவதும் புகழ், அந்தஸ்துடன் வரும்.
தாத்தாவின் தொழிலை செய்து சுய உழைப்பில் சொத்து யோகம் உண்டு. அடுக்கு மாடி குடியிருப்பு, மாடி வீடு கட்டி வாழ்வார்கள். முன்னோர்களின். பூர்வீகச் சொத்துகள் பெற்றோரின் காலத்திற்கு பின் முறையாக இவர்களை சென்றடையும்.
பூர்வீகத்தில் பிழைப்பு நடத்து வார்கள். அறிவாளியாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள். சிலர் அதிர்ஷ்டவசத்தால் தீடீர் பணக்காரர்களாக மாறுவார்கள். சிறிய உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள். குலதெய்வ அருள் உண்டு. குலதெய்வக் கோவில் நிர்வாகிகள் அல்லது கௌரவப் பதவியில் இருப்பார்கள்.
அரசாங்கப் பதவி, அரச உத்தியோகம் உண்டு. சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன்படுத்துவார்கள். இதை சுயநலமின்றி பொதுநலத்திற்கு பயன்படுத்தினால் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் பலம் கூடும்.
இவற்றை ஜாதகர் சுயநலத்தோடு ஜாதகர் பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் குறைவு படும். புத்திக்கூர்மை இருக்காது. புத்திர தோஷம் உண்டாகும். சிலருக்கு வம்சம் தழைக்காது. சிலருக்கு வாரிசுகளால் குடும்ப கௌரவம் கெடும். புகழ், அந்தஸ்து கௌரவம் மட்டுப்படும். குலதெய்வ அருள் கிடைக்காது.
இந்த நட்சத்திர தாரை நாட்களில் தெய்வ பிரார்த்தனைகளை தவிர்க்கவேண்டும். இந்த நாட்களில் பல நிறைவேற்ற முடியாத பிரார்த்தனையை வேண்டுதலாக வைப்பார்கள். மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் ஒருவர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறேன் என்று வேண்டி காசு முடிந்து வைப்பார்கள். அல்லது மிகுந்த எதிர் பார்ப்போடு பெரிய பலனை எதிர்பார்த்து தர்ம காரியம் செய்வார்கள். அல்லது அதீத பக்தியால் கடன் பெற்று கோவில், ஆன்மிக காரியத்திற்கு செலவுசெய்து கடனாளியாவார்கள். ஒரு ஜாதகத்தில் அதிக கிரகம் பிரத்யக் தாரை நட்சத்திரத் தில் இருந்தால் குலதெய்வ கோவில் வரவு- செலவில் குளறுபடி செய்தவர்கள். அல்லது குலதெய்வச் சொத்தை கொள்ளை அடித்தவர்கள் அல்லது செய்ய வேண்டியவைகளை நிவர்த்தி செய்யாதவர்கள். இந்த அமைப்பு வாரிசுகளை வாழ, வளர விடாது அல்லது வாரிசுகளே உருவாகாது அல்லது நன்றி இல்லாத பெற்றவர்களின் நிம்மதியைக் குலைக்கும் குழந்தைகளே பிறக்கும். தாய்மாமன் உறவில் விரிசல் உண்டு ஒருவர் செய்யும் செயலை பிரதி பலன் எதிர்பார்த்துச் செய்யும் செயல். பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல் செய்யும் செயல் என இரண்டாக வகைப்படுத்தலாம். இதை ஜோதிட பாஷையில் பரிகாரம் என்றும் கூறலாம். ஒருவர் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும் வழிபாட்டால் சரி செய்ய முடியாத பிரச்சினைகளே கிடையாது. மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் மனதை நெறிப்படுத்த வேண்டும்.
மனிதர்களுக்கு பொருள் தேடும் விஷயத்தில் உதவுகின்ற கருவியாகவும், ஆபத்தாகிற வாழ்க்கைக் கடலைத் தாண்டும் விஷயத்தில் கப்பலாகவும், சத்ரு ஜெயத்தை விரும்பும் சமயங்களில் நல்ல மதிநுட்பம் நிறைந்த மந்திரியாகவும், சுருக்கமாகச் சொன்னால் ஜீவாத்மாவின் பயணத்தை எளிமையாக்கி தனது மார்க்கத்தை உணரச் செய்து, தமது இலக்கை அடைய பேருதவி புரிவது தியானம், யோகா. இது உலகமறிந்த, மிகப் பழமையான மன, உடல் பயிற்சியாகும். ஆன்மாவின் முக்கிய சக்திகளாகிய மனம், புத்தியை பிரபஞ்சத்திடம் சரணடைய செய்யும்போது உன்னத சக்தியான இறைசக்தி வசப்பட்டு நிரந்தரமான சுபபலன்கள் அடையமுடியும். இதை மனிதனுக்கு கற்றுக் கொடுப்பதுதான் பிரத்யக் தாரை நட்சத்திரமாகும்.
அதேபோல் ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் மூலமே உயர்வானதை அடையமுடியும். மனிதர்களாய் வாழும் காலத்தில் தனது விருப்பங்களை, ஆசைகளை அடைய உதவும் ஸ்தானமாகும். அந்த ஒன்பதாம் இடத்தில் சுய ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார். எண்ணியதை அடைந்து விடுகிறார். ஒன்பதில் அசுப கிரகங்களின் சம்பந்தம் இருக்கப் பிறந்தவர் தடுமாறுகி றார்; போராடுகிறார். அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார்.
இதை செயல்படுத்தி தருவதுதான் பிரத்யக் தாரை.
பரிகாரம்
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவேண்டும். பிரதிபலன் எதிர்பார்க்காமல் தான, தர்மம், புண்ணிய காரியங்களில் ஈடுபடவேண்டும். இந்த தாரைநாளில் அம்மன் கோவில் பலி பீடத்தில் உப்பு இடவேண்டும். சுப தாரை நாட்களில் குலதெய்வத்தை ஆத்மார்த்தமாக சரணடைந்து வழிபட வேண்டும். நிறைவேற்ற மறந்த, முடியாத பிரார்த்தனை உள்ளவர்கள் ஊரின் எல்லை, காவல் தெய்வக் கோவிலின் கொடி மரத்தின்முன்பு நின்று மன்னிப்பு கேட்கவேண்டும்.
தொடரும்
செல்: 98652 20406