இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்வு செழுமையாக, விருத்தியாக, நான்கு பேர் வணங்கத்தக்க அளவில் இருக்கவேண்டும் என்பது மிகுந்த ஆவலாக உள்ளது.
எனினும், வாழ்வில் எல்லாரும் பல்லக்கில் ஏறமுடியாதல்லவா! அனேகர் பல்லக்கு சுமக்கும் பணியில் உள்ளனர். இவர்கள், மிகுந்த விரக்தியுடன், "எல்லாம் நான் பிறந்த நேரம்' என புலம்புகின்றனர்.
உண்மைதான். ஒரு குழந்தை பிறக்கும்போது, கீழ்வானில் உதயமாகும் ராசியே லக்னம் எனப்படும். இந்த லக்னமே மற்ற வீடுகளுக்கு அதிபதியாகும். இந்த லக்னத்துக்கு சுபர் பார்வை, லக்னாதிபதி சொந்த வீட்டைப் பார்ப்பது, 5, 9-ஆம் அதிபதிகளின் பார்வை, 5, 9-ன் அதிபதி பாவ கிரகமே ஆனாலும், பார்வை விசேஷம் பெறுவது என இவ்வித சுபத்தன்மை இருப்பின், அம்மனிதரின் வாழ்வு செழிக்கும்.
ஒரு ஜாதகத்தின், லக்ன பாவமே முதன்மையானது; முக்கியமானது. ஒரு லக்னமே, ஜாதகர் எதனை அனுபவிக்க இயலும் என்பதைக் கூறும்.
இனி 12 லக்னங்களையும், அவை செழுமியடையச் செய்யும் பரிகாரங்களையும் காணலாம்.
மேஷ லக்னம்
இதன் லக்னாதிபதி செவ்வாய். இவர் 10-ஆமிடத்தில் உச்சம்பெற்று, லக்னத் தைப் பார்த்தால், ஜாதகர் முதல்தரமான யோகம் பெறுவார். 7-ஆம் வீட்டிலிருந்து, லக்னத்தை நேர்பார்வையாகப் பார்ப்பது, திருமண விஷய யோகம் பெறுவார். ஆனால் 6-ஆம் வீட்டிலிருந்து, 8-ஆம் பார்வையாக லக்னத்தைப் பார்ப்பது, மிகமிக சுமாரான பலன் தரும். அடுத்து, மேஷ 5-ஆம் அதிபதி சூரியன். யோகம் தரும் கிரகம், இவர் லக்னத்தில் உச்சம் பெற்றால் ஜாதகர் அரசியல், அரசுத் துறை, காவல் துறை இவற்றில் முதன்மை யாகத் திகழ்வார். 7-ஆமிடத்தில் நீசபங்கம் பெற்றிருந்தாலும், சூரியன் தரும் யோகம் நன்மையே தரும். மேஷ லக்னத்துக்கு அடுத்த யோகம் தரும் கிரகம் குரு ஆவார். இவர் 5, 7, 9 என எதில் இருப்பினும் நன்மையே தருவார். இந்த இடங்களிலிருந்து லக்னத்தைப் பார்ப்பதால் லக்னத்தை செழிக்கச் செய்வார். இதில் குரு 9-ஆமிடம் எனும் (தனுசு) சொந்த வீட்டிலிருந்து லக்னத்தைப் பார்ப்பது மிகப் பெரிய மேன்மையாகும். இவர்கள் தலைமை நீதிபதி. அரசு அதிகாரி என செழிப்படைவர்.
பரிகாரம்: மேஷ லக்னத்தார் எப்போதும் திருச்செந்தூர் முருகனை வழிபடவேண்டும். செவ்வாய்க்கிழமை முருகனை நினைத்து விரதமிருந்து வணங்கினால் வாழ்வு மிக செழிப்படையும்.
ரிஷப லக்னம்
இவரின் லக்னாதிபதி சுக்கிரன் 11-ல் உச்சம்பெற்றால், ஜாதகர் தனது லட்சியம் பூர்த்தியாவதால் செழிப்பு பெறுவார். கலைத்துறையிலும், அரசியலிலும் கால்பதித்து மேன்மை காண்பர். அடுத்து 5-ஆம் அதிபதி புதன் உச்சம், ஆட்சி பெற்றால், அறிவுத் தொடர்பான செயல்களால் பணச் செழிப்பு பெறுவார். அடுத்து 9-ஆம் அதிபதியான சனி இவர்களின் 6-ஆம் வீட்டில் உச்சம்பெறும்போது நிறைய பணியாட்களை வைத்துத் தொழில் நடத்தும் யோகச் செழிப்பு பெறுவார். 11-ஆமிடத்தில், சனி அமர்ந்து லக்னத் தைப் பார்ப்பது நல்ல விஷயம்தான். ஆனால் 4-ஆமிடமான சிம்மத்தில் அமர்ந்து லக்னத் தைப் பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல. இதனால் தொழில் மேம்பாடு அடையுமே யொழிய வீட்டில் சற்று நிம்மதியற்ற நிலை யைக் கொடுத்துவிடுவார். மேற்கண்டவை சுப நிலையில் அமையும் போது, ரிஷப லக்னத்தார் செழிப்படைவர்.
பரிகாரம்: திருப்பதி அலர்மேலுமங்கைத் தாயாரை வணங்குவது மிகவும் சிறப்பாகும். அருகிலுள்ள பெருமாளையும் தாயாரையும் வணங்கி, பின் வருடத்துக்கு ஒருமுறையாவது இளம்பெண்ணிற்கு பாவடை, சட்டை, தாவணி, தாம்பூலம் கொடுக்கவும்.
மிதுன லக்னம்
மிதுன லக்னாதிபதி புதன் 7-ஆமிடத்தில் நின்று லக்னத்தைப் பார்ப்பதால் உங்கள் 5-ஆம் அதிபதி சுக்கிரன் 10-ஆமிடத்தில் உச்சமடைந்தாலும், கூடவே புதன் சாரத்தில்- அதாவது ரேவதி நட்சத்திரத்தில் நின்றாலும் கலையுலகம், வெளிநாடு, பூர்வீகத்தொழில் இவற்றின்மூலம் அளப் பரிய செழிப்பு பெறுவீர்கள். உங்களின் 9-ஆம் அதிபதி சனி 11-ல் நின்றால் உங்கள் லக்னத்தைப் பார்க்க இயலும். ஆனால் அங்கு அவர் நீசமடைந்து விடுவார். மேலும் யோகாதிபதி சனி. 8-ன் அதிபதியும் ஆவார். அதனால் சனியால் முழுமையான யோகம் தர இயலாது. சனி, உங்களின் 5-ஆமிடமான துலாத்தில் உச்ச மடைவார். இது உங்களுக்கு முழுமையான செழிப்பு தரும். ஒரு 5-ஆமிடத்தில், 9-ஆம் அதிபதி சனி உச்சடைவது, மிதுன லக்னத் திற்கு பெரும்பேறாகும். மேலும் யோகா திபதி சனி 4 மற்றும் 7-ஆமிடத்தில் இருந்தாலும், லக்னத்தைப் பார்க்க இயலும். இது சுமாரான செழிப்பைத் தரும்.
பரிகாரம்: ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளுக்கு வெள்ளை மலர்மாலை அணிவித்து வணங்கவும். லட்சுமி நாராய ணரை வணங்கவும். சரஸ்வதி பூஜையன்று, அம்பாள் சந்நிதியில் நடக்கும் சுவாஸினி பூஜையின்போது. சிறு பெண் குழந்தைக்கு கல்வி சமபந்தமான பொருட்களை தாம்பூலத்துடன் வழங்கி சேவிக்கவும்.
கடக லக்னம்
கடக லக்னாதிபதி சந்திரன் ஆவார். உங்களின் 5-ஆம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் அமர்ந்தால் ஒரு பயனும் கிடைக்காது. ஏனெனில் அங்கு அவர் நீசமடைந்துவிடுவார். 5-ஆம் அதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சமாகி உங்கள் லக்னத்தைப் பார்த்தால் வெகு தைரியம், நல்ல செழிப்பைத் தரும். 10-ஆமிடத்தில் இருந்தாலும் ஆட்சிபெற்று லக்னத்தைப் பார்ப்பதால், சீருடைப் பணியுடன் செழுமை பெறலாம். அடுத்து யோக அதிர்ஷ்ட அதிபதி 9-ஆம் அதிபதியான குரு ஆவார். இவர் உங்கள் லக்னத்தில் உச்சம்பெறுவார். எனில் உங்களுக்கு கல்வியறிவு சார்ந்த செழுமை உண்டு. மேலும் 9-ல் ஆட்சிபெற்று அமர்ந்து லக்னத்தைப் பார்த்தாலும் பழுதில்லாத செழுமை பெறுவர். 9-ஆம் அதிபதி குரு 5-ஆமிடத்தில் நின்று, லக்னத்தைப் பார்த்தால், பரம்பரைப் பெருமை, மந்திரி பதவி தரும் செழுமையும் கைகூடிவரும். 7-ஆமிடத்தில் நின்று லக்னத் தைப் பார்த்தால் குரு நீசமாகிவிடுவார். அதனால் பலன் இராது. ஆக, கடக லக்னத் துக்கு 5-ஆம் அதிபதி செவ்வாய் அல்லது 9-ஆம் அதிபதி நேர்பார்வை பார்த்தாலும் லக்னத்தில் அமர்ந்தாலும் கால் காசுக்குப் பயனில்லை.
பரிகாரம்: திருக்கடையூர் அபிராமியம் மனை தரிசனம் செய்வது நல்லது. அருகிலுள்ள அம்பாளுக்கு, நெய்தீபமேற்றவும். நவராத்திரியின்போது, வயதான சுமங்கலிக்கு வஸ்திரமும், தாம்பூலமும் கொடுத்து வணங்கவும்.
சிம்ம லக்னம்
சிம்ம லக்னாதிபதி சூரியன் ஆவார். உங்கள் 5-ஆம் அதிபதி குரு 5-ஆமிடத்தில் ஆட்சிபெற்று அமர்ந்து லக்னத்தைப் பார்த்தால், வாழ்வு சிறந்து செழிப்பாகும். 9-ஆமிடத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்த் தால், திருவருளும் குருவருளும் கூடிநின்று ஜாதகர் வாழ்வு ஜெகஜ்ஜோதியாகப் பிரகாசித்து செழிக்கும். 5-ஆம் அதிபதி, லக்னத் திற்கு 12-ல் உச்சமாவார். இது பயனில்லை. 9-ஆம் அதிபதி செவ்வாய் 6-ஆமிடமான மகரத்தில் உச்சமடைந்து, தனது 8-ஆம் பார்வையால் லக்னத்தை வருடுவார். இதனால் வழக்கு வியாஜ்ஜியங்களால் வாழ்வு மிகச் செழுமையடையும். 9-ஆம் அதிபதி செவ்வாய் 7-ஆமிடத்தில் அமர்ந்து லக்னத்தை நேர்பார்வையாகப் பார்த்தால், திருமண யோக செழிப்பையும், செவ்வாய் தோஷமும் தருவார். 9-ஆம் அதிபதி செவ்வாய் 10-ல் அமர்ந்து லக்னத்தைப் பார்த்தால், தர்மகர்மாதிபதி யோகமும், சீருடைப் பணியில் முதன்மையும் பெற்று செழிப்படைவார். சிம்ம லக்னத்துக்கு 5-ஆம் அதிபதி 12-ல் உச்சமும், 9-ஆம் அதிபதி 6-ல் உச்சமும் அடைவர். இதனால்தான் சிம்ம லக்ன, ராசியார் தாமே முயன்று போராடி வெற்றிபெறுவர் போலும்.
பரிகாரம்: பழனி முருகரை வணங்கவும். முடிந்தால் சஷ்டி விரதம் இருக்கவும். மாதந்தோறும் கார்த்திகை விரதமெடுத்து, முருக தரிசனம் செய்வது நன்று.
கன்னி லக்னம்
கன்னி லக்ன அதிபர் புதன் ஆவார். இவருடைய 5-ஆம் அதிபதி சனியே 6-ஆம் அதிபதியுமாவார். இவர் லக்னத்துக்கு 11-ஆம் வீட்டிலிருந்து, உங்கள் லக்னத்தைப் பார்த்தால் அரசியல், அதன் சார்ந்த வேலைகள் மூலம் செழிக்கலாம். 4-ஆமிடத்திலிருந்து, லக்னத்தைப் பார்த்தால் கல்வி, புத்தி, வீடுமூலம் வாழ்வு செழிப்பாகும். 7-ஆமிடத்தில் நின்று லக்னத்தைப் பார்த்தால், சற்று விருப்பத் திருமணமும், வேலை பார்க்கும் வாழ்க்கைத் துணையும் அல்லது வியாபாரச் செழிப்பும் உண்டு. உங்கள் 9-ஆம் அதிபதி சுக்கிரன் 7-ஆமிடத்தில் உச்சமானால் உங்கள் லக்னத் தைப் பார்க்கலாம். எனவே திருமண வாழ்வு, பண யோகம் என செழிப்பை வாரி வழங்கும். 9-ஆம் அதிபதி சுக்கிரன், ரேவதி நட்சத்திரத்தில் நின்றாலும், திருமணம் நல்ல தொழிலைக் கொடுத்து செழிப்பாக்கும். கன்னி லக்னத்துக்கு 5-ஆம் அதிபதி 2-ஆம் வீட்டிலும், 9-ஆம் அதிபதி 7-ஆம் வீட்டிலும் உச்சம். எனவே இவர்களின் வாழ்வு குடும்பம், திருமணம் ஆகியவற்றின் வழியே செழிப்படையும்.
பரிகாரம்: இவர்கள் சென்னை திருவல்லிக் கேணி பார்த்த சாரதி கோவிலில், பெருமாள், தாயார் மற்றும் குடும்ப சகோதரராக அருள் பாலிப்பார். சனிக்கிழமை, இவ்விதமுள்ள பெருமாளை வணங்கி, ஏகாதசி விரதம் மேற்கொள்ள, செழிப்போ செழிப்புதான்.
துலா லக்னம்
துலா லக்னாதிபதி சுக்கிரன் ஆவார். உங்களின் கேந்திர கோண, அதிர்ஷ்ட 5-ஆம் அதிபதி சனி ஆவார். இவர் உச்சமடைந்தால், உங்கள் லக்னத்தில் உச்சமடைவார். இது மிகப்பெரிய அதிர்ஷ்ட செழிப்பைத் தரும். இவர் 11-ஆமிடம் எனும் சிம்ம ராசியில் நின்று. உங்கள் லக்னத்தைப் பார்த்தால், இருவித அதிர்ஷ்டக் குறைவு ஏற்படும். ஒன்று பாதகாதி பதி; இன்னொன்று சிம்ம சூரியனுக்கும் சனிக்கும் ஆகாது. 7-ல் சனி நின்று லக்னத்தைப் பார்க்கும்போது, அங்கு அவர் நீசமாகிவிடு வார். நீசபங்கம் உண்டானால் நல்லதிர்ஷ்டம் கிடைக்கும். 4-ஆமிடத்தில் தனது ஆட்சி வீட்டில் நின்றால், இது கல்வி, கட்டடம், வாரிசு, பூர்வீகம், கலை, பங்கு வர்த்தகம், விளையாட்டு, வேளாண்மை என ஏதோவொன்றின்மூலம் செழிப்படைவீர்கள். 9-ஆம் அதிபதி புதன் உச்சமானால் விரயத்தில் உச்சமாவார். இவர் 7-ஆமிடத்தில் நின்று லக்னத்தைப் பார்த்தால், வெளி நாட்டில் வேலை செய்யும் வரன் கிடைத்து, அதில் மிகச் செழிப்படைவார்கள். சனி, புதன் பரிவர்த்தனை ஆகியிருந்தால், அது நல்ல செழிப்பை, கடுமையான உழைப்பு, புத்திசாலித்தனம் சேர்ந்து கொணரும்.
பரிகாரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியை வணங்கவும். அருகிலுள்ள பெருமாள், தாயாருக்கு வெள்ளிக்கிழமை களில் துளசியும், பிச்சிப்பூவும் சேர்ந்த சரம், மாலை காணிக்கையாக்கவும். வெள்ளிக்கிழமை விரதம் செழிப்பை செழிப்பாக்கும்.
விருச்சிக லக்னம்
விருச்சிக லக்னாதிபதி செவ்வாய். 5-ஆம் அதிபதி குரு. இவர், 9-ஆம் வீட்டில் உச்சமடைவது மிக விசேஷம். அங்கு அமர்ந்த குரு லக்னத்தைப் பார்த்தால் செழிப்பு செழித்து வளரும். அதுபோல் 7-ஆம் வீட்டிலிருந்தால், லக்னத்தை நேர்பார்வையாகப் பார்த்து ஜாதகரை ஒழுக்கம் மிக்க கண்ணியவானகவும், நிலச் சுவான்தாரகவும் மாற்றி செழிப்படையச் செய்வார். தனது ஆட்சி வீடான 5-ஆம் வீடான மீனத்தில் நின்றா லும், லக்னத்தைப் பார்த்து, குலப்பெருமை, அரசியல் மேன்மை, புத்தி சார்ந்த வேலை, வங்கித் தொழில், கலையுலக எழுத்துத் துறை என ஜாதகரைப் பரிமளிக்கச் செய்வார். சந்திரன் 9-ஆம் அதிபதியாகி 7-ஆம் வீட்டில் உச்சமடைந்து லக்னத்தைப் பார்த்தால், திருமணம் நடந்தபிறகு இவர்கள் வாழ்வுநிலையும், இவர்கள் பெற்றோர் வாழ்வும் மிகச் செழிப்படையும். இதே 9-ஆம் அதிபதி, இவர்கள் லக்னத்திலேயே நீசமடைந்துவிடுவார். அதனால் வாழ்க்கை தேங்கிவிடும். 9-ஆம் அதிபதி சந்திரனுக்கு நேர்பார்வை மட்டுமே உண்டு.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வணங்குவது விசேஷம். அதுவும் பௌர்ணமி யன்று கடல் நீராடி முருகனை வணங்கவும். செவ்வாய்க்கிழமை விரதம் செவ்வனே செழிப்பாக்கும்.
தனுசு லக்னம்
தனுசு லக்னாதிபதி குரு ஆவார். 5-ஆம் அதிபதி செவ்வாய் உச்சமானால், லக்ன 2-ஆமிடத்தில் உச்சமாவார். இதனால் வாக்கு விருத்தி உண்டாகி, பணச்செழிப்பு கைகூடும். இவர் 10-ஆமிடம் எனும் கன்னியில் பகைபெற்று அமர்ந்து லக்னத் தைப் பார்த்தாலும், 7-ஆமிடம் எனும் மிதுனத் தில் நின்று லக்னத்தைப் பார்த்தாலும் செழிப்பென்பது கொஞ்சம் தகராறு, மனஸ்தாபம் இவற்றைச் சேர்த்து, தொழில், வணிகம்மூலம் சேரும். 6-ஆம் வீடான ரிஷபத்தில் இருந்தாலும் 8-ஆம் பார்வையாகத்தான் பார்ப்பார். ஆக தனுசு லக்னத் துக்கு 5-ஆம் அதிபதி பார்வை விசேஷமாக இல்லை. இவர்களின் 9-ஆம் அதிபதி சூரியன் உச்சம்பெற்றால், 5-ஆம் வீடான மேஷத்தில் உச்சம்பெறுவார். எனவே குருவருளும் திருவருளும் கூடிநிற்பதால், அரசியலில் மிகப்பெரிய மந்திரி, அரசு வகையில் பெரிய பதவி என ஆளுமையும், மேதகுவும் சேர்ந்து செழிப்புப் பெறுவார். 7-ஆமிடத்தில் நின்று நேர் பார்வையும் பழுதில்லை; நன்றாகவே இருக் கும். சூரியன், குரு வீட்டைப் பார்ப்பது மிக நல்லது.
பரிகாரம்: திருவண்ணாமலை அருணா சலேஸ்வரரை வணங்கவும். பௌர்ணமி தோறும் விரதமிருந்து, மலை ரூபமுள்ள சிவனை வணங்க, வாழ்வு செழிப்பதில் சந்தேகமுண்டோ!
மகர லக்னம்
மகர லக்னாதிபதி சனி ஆவார். 5-ஆம் அதிபதி சுக்கிரன் 3-ஆமிடத்தில் மீனத்தில் உச்சமடைவார். நீங்கள் தகவல் தொடர்பு சார்ந்து மிகச் செழிப்புக் பெறுவீர்கள். இந்த 5-ஆம் அதிபதி சுக்கிரன். 7-ஆமிடத்தில் அமர்ந்து, லக்னத்தை நேர்பார்வை பார்த்தால், இஷ்ட திருமணத்தால் செழிப்பும், தொழில், வணிகப் பெருக்கத்தால் வாழ்வு செழுமையும் ஏற்படும். உங்களின் 9-ஆம் அதிபதி புதன் 9-ஆமிடத்தில் உச்சமடைவார். எனவே புத்தி சார்ந்த வணிக வேலையில் மிகச் செழிப்புக் கிடைக்கும். இதே புதன் 7-ஆமிடத்தில் அமர்ந்து, லக்னத்தைப் பார்த்தால், வசதியான, அதிர்ஷ்டமான, சண்டைக்காரியான மனைவி கிடைப்பாள். இந்த மகர லக்னத்துக்கு, 5-ஆம் அதிபதி உச்சமாகும் ராசியில் 9-ஆம் அதிபதி புதன் நீசமாவார். 9-ஆம் அதிபதி புதன் உச்சமாகும் ராசியில் 5-ஆம் அதிபதி சுக்கிரன் நீசமாவார். எனவே மகர லக்னத்தார் எல்லாவித செழுமைகளையும் ஒரேநேரத்தில் அடைய இயலாது. எவ்வளவு பெரிய மனிதராக இருப்பினும், வாழ்வில் ஒரு குறை இருக்கும்.
பரிகாரம்: திருக்கோஷ்டியூரிலுள்ள நின்ற, அமர்ந்த, சயனித்த நாராயணரை வணங்கவது நல்லது. அருகிலுள்ள பெருமாள், மகாலட்சுமி சந்நிதிக்கு பிரசாதம் தயாரிக்க, சுத்தமான நல்லெண்ணெய் வாங்கிக் கொடுக்கவும். பேரன்- பேத்தி எடுத்த, கஷ்டப் படும் முதியவரின் தேவையைக் கேட்டு ஆவன செய்யவும்.
கும்ப லக்னம்
கும்ப லக்னாதிபதி சனி ஆவார். 5-ஆம் அதிபதி புதன் ஆவார். இவர் உச்சம்பெற்றால், லக்னத்திற்கு 8-ஆம் வீட்டில் உச்சமாவார். பெரிய பிரயோஜனம் இருக்காது. 5-ஆம் அதிபதி புதன் 7-ல் அமர்ந்தால், பெரிய பரம்பரையைச் சேர்ந்த பொல்லாத பெண் மனைவியாக அமைவார். 9-ஆம் அதிபதி சுக்கிரன் லக்னத்திற்கு 2-ல் உச்சமடைவார். இவர் மீனத்தில் சனி சாரமான, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்றால், லக்ன சேர்க்கைப் பெறுவதால், வெளியூர், வெளிநாட்டில் செழுமைத்தன்மை காண்பர். இவர் 7-ல் நின்று லக்னத்தைப் பார்த்தால் அழகான, உயர்கல்வி பயின்ற, கல்வி சார்ந்த வேலை, தொழிலுடைய வரன் அமைந்து, வாழ்க்கை செழிப்படையும். கும்ப லக்னத்துக்கும் 5, 9-ஆம் அதிபதிகள் ஒரே இடத்தில் உச்சடைய இயலாது. சுக்கிரன் 9-ஆம் அதிபதியாகி உச்சமானால், 5-ஆம் அதிபதி புதன் நீசமாவார்.
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், தாயாரையும் ரங்க நாச்சியாரையும் வணங்கி, கருடனுக்கு நெய்விளக்கேற்றி வணங்கவும். சனிக்கிழமை விரதமிருந்து, பெருமாளை சேவிப்பது செழிப்பு கொணரும். உங்கள் பெற்றோர் வயதுடைய தம்பதிகளின், குடும்பத் தேவையறிந்து அதற்கான வழிகாட்டவும்.
மீன லக்னம்
மீன லக்னாதிபதி குரு ஆவார். 5-ஆம் அதிபதி சந்திரன் 3-ஆமிடமான ரிஷபத்தில் உச்சம்பெறுவார். இதனால் உங்கள் மாமனாரின் சொத்து விள்ளாமல் கொள்ளா மல், முழுமையாக அப்படியே வந்து சேர்ந்து விடும். சிலருக்கு இவ்வதிர்ஷ்டம் இளைய சகோதரிமூலமும் கிடைத்து செழிப்புப் பெறுவர். இவர் 7-ஆமிடத்திலிருந்து லக்னத் தைப் பார்த்தால் வியாபார நுணுக்கமுள்ள வாழ்க்கைத்துணை கிடைப்பார். மீன லக்னத்துக்கு 5-ஆம் அதிபதி சந்திரன் 9-ஆமிடத்திலும், 9-ஆம் அதிபதி செவ்வாய் 5-ஆமிட கடகத்திலும் நீசமடைவர். இவர்கள் பரிவர்த்தனையாக இருந்தால் மிக மேன்மை யான செழிப்புப் பெறுவர். மீன லக்ன 9-ஆம் அதிபதி செவ்வாய், மீன லக்ன 11-ஆமிடத்தில் உச்சமடைவார். இதனால் இவர்கள் அரசியல்மூலம் கொடிகட்டிப் பறப் பர். இதே செவ்வாய் 7-ஆமிடத்தில் பகை வீட்டிலிருந்து லக்னத்தைப் பார்த்தால் சிடுசிடுவென்ற செழுமை கிடைக்கும். 6-ஆமிடத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்த் தால், அரசு வேலை பாரத்துடன் செழுமை கிடைக்கும். 10-ஆமிடத்தில் இருந்து லக்னத் தைப் பார்த்தால், தர்மகர்மாதிபதி யோகம் பெற்று தொழில் வளம் செழிக்கும். சொந்தத் தொழில் செழிப்பு தரும்.
பரிகாரம்: இராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மனை வழிபடலாம். உங்களுக்கு அருகில், நீர்நிலை அருகேயுள்ள அம்மனை மஞ்சள் கொண்டு வழிபட வாழ்வு செழிக்கும். வயதான பெண்களுக்குப் புடவையை தாம்பூலத்துடன் கொடுங்கள்.
செல்: 94449 61845