தன் அதிபதி சனி. ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தின் ஏழாவது நட்சத்திரம். அதாவது 7, 16, 25-ஆவது நட்சத்திரம். ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் ஏழாவது நட்சத்திரமான பூனர் பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் கோட்சார சந்திரன் சஞ்சாரம் செய்யும்போது வதை தாரை வேலை செய்யும்.

வதை தாரையின்போது கடுமையான கெடுபலன்கள் மற்றும் தீய பலன்கள் நடைபெறும். இதில் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தி னால் தடைப்பட்டு தள்ளிப்போகும். பணக் கஷ்டம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். வியாதிகள் உண்டாகும். துக்க சம்பவங்கள் நடக்கும். ஆகவே வதை தாரையில் சுபகாரியங்கள், புதிய முயற்சிகள் செய்வதைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: இதுபோன்ற நாட்களில் அசுப பலன்கள் மிகுதியாக இருந்தால் எள் மற்றும் நல்லெண்ணெய் தானம் செய்யவேண்டும்.

வதை நட்சத்திர தசை பலன்கள் ஒரு ஜாதகத்தில் ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கை துணை மற்றும் சமுதாய அங்கீகாரம், சமுதாய அந்தஸ்து பற்றிக் கூறுமிடம்.

வதை தாரை நட்சத்திரத்தில் சாரத்தில் ஏதாவது ஒரு கிரகமாவது இருக்கவேண்டும். வதை தாரை நட்சத்திரத்தில் நின்று ஒரு கிரகம் மத்திம வயதில் தசை நடத்தினால் சமுதாய அங்கீகாரம், அந்தஸ்து நிறைந்த மண வாழ்க்கையாக இருக்கும். மணவாழ்க்கை சிறப் பாக அமையும். வாழ்க்கைத் துணையின் கை ஓங்கும். வாழ்க்கைத் துணை ஜாதகருக்கு கட்டுப்படுவார். கூட்டுத் தொழிலில் கொடி கட்டி பறப்பார். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு கூட்டாளிகள் கருத்து வேறுபாட்டால் தொழிலில் பிரிவினை உண்டாகும்.

சிறிய வயதில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வார்கள். கவுரவமான சம்பந்திகள் கிடைப்பார்கள். அரசியலில் தனித்தன்மை யுடன் ஜொலிப்பார்கள். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதிக வாடிக்கை யாளர்கள் இருப்பார்கள். இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு வாழ்வாதாரம் உயரும்.

வயோதிக வதை தாரை தசை பலன்கள்

பொதுவாக ஜென்ம நட்சத்திரத்திலிருந்து ஏழாவதாக வரக்கூடிய வதை தாரை தசை வயோதிக காலத்தில்தான் நடக்கும். சிலருக்கு ஏழாவது தசை வராது. ஏழாவதாக வரக்கூடிய தசை மார்க்கத்தை வழங்கும். பிறப்பில் குறுகிய கால தசைகளை அதிகம் சந்திப்பவருக்கு வதை தாரை தசை வரலாம். வயோதிகம் காரணமாக சிற்பான பலன்களை அனுபவிக்க முடியாது. நண்பர்களால் தொழில் கூட்டாளிகளால், வாழ்க்கைத் துணையால் அதீத பிரச்சினைகள் இருக்கும். அதை சமாளிக்க முடியாத வகையில் ஜாதகருக்கு ஆரோக்கியம் சார்ந்த இனைல்கள் உண்டாகும் பரம்பரை கர்மவினைத் தாக்கநோய் இருக்கும். இவர்களது உழைப்பினை எளிதான மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் நல்ல பெயர் பெறுவார்கள். தன்னம்பிக்கை குறையும். இதனால் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, முன்னேற வகை யறியாது உதவிக்கு ஆள் இல்லாமல் பலர் முடங்கிக் கிடப்பார்கள்.

பரிகாரம்: தினமும் திருக்கோளாறு பதிகம் படிக்கலாம் அல்லது சிவபுராணம் படிக்கலாம். படிக்க முடியாமல் படுக்கையில் இருப்பவர்களுக்கு பிறர் படிக்கலாம்.

dsd

வாழ்க்கைத் துணையும் வதை தாரையும்

வதை தாரை நட்சத்திரத்தில் வாழ்க்கைத் துணை அமைந்தால் கணவன்- மனைவி ஒற்றுமைக் குறையும். பெண்ணாக இருந்தால் சுய சம்பாத்தியத்தில் சொந்தக்காலில் நிற்பவள். சில தம்பதிகள் மிகுதியான ஈகோவால் பிரிந்து வாழ்வார்கள். பல திருமணங்கள் முறிகின்றன. உபய லக்னமாக இருந்தால் திருமண வாழ்க்கை சுமாராகவே இருக்கும். சிலர் மனதிற்குள் அழுது புழுங்கி நரகமான வாழ்க்கையை அனுபவிக்கிறார் கள். சிலர் துணிந்து இல்லற பந்தத்தில் இருந்து விடுபடுகிறார்கள். பலர் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு பிரிகிறார்கள்.

சிலர் திருமண பொருத்தத்தில் தாராபலன் நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப் பதில்லை. சுய ஜாதகத்தில் எவ்வளவு கடுமையான தோஷ அமைப்பு இருந்தாலும் 2, 4, 6, 8, 9-ஆவது தாரையாக வாழ்க்கைத்துணை அமைந்தால் கணவன்- மனைவி ஈருடல் ஒருயிராக வாழ்கிறார்கள். 1, 3, 5, 7-ஆவது தாரையாக வாழ்க்கைத் துணை அமைந்தால் சுய ஜாதகத்தில் எவ்வளவு சாதகமான அமைப்பு இருந்தால் தம்பதிகளுக்குள் மனப் பொருத்தம் இருப்பது இல்லை.

வாழ்க்கைத் துணைக்கு தவறான நட்பு உருவாக வதை தாரை அதிக காரணமாக அமைகிறது.

பரிகாரம்: அர்த்தநாதீஸ்வரர் வழிபாடு மேன்மை தரும். மைத்ர தாரை இதன் அதிபதி சுக்கிரன். ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தின் எட்டாவது நட்சத்திரம். ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு பூசம், அனுஷம், உத்திரட்டாதி மைத்ர தாரையாகும். இந்த நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் போது எல்லாவிதமான சுப காரியங்களும் செய்யலாம். தனவரவு உண்டாகும். பணம் பொருள் சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் கூடிவரும். ஆகவே திருமணம் சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம். சொத்து வாங்கலாம். ஆடை, ஆபரணங்கள் சொகுசு பொருட்கள் வாங்கலாம். இசை, நடனம் அரங்கேற்றம் செய்யலாம் . பங்குச் சந்தையில் ஈடுபடலாம். போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

பரிகாரம்: மைத்ர தாரை நாட்களில் கல்கண்டு சாப்பிட பலன்களை அதிகரிக்கும்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் மைத்ர தாரை நட்சத்திரத்தில் அதிக கிரகம் நின்றால் நிறைந்த ஆயுள் உண்டு. பெரிய தீவினைகள் ஜாதகரை அண்டாது. கடன், நோய் பெரிய விபத்து, கண்டம் அவமானம் நேராது. சிறு சிறு பாதிப்பு நிகழ்ந்தாலும் மீண்டு வரக்கூடிய சந்தர்ப்பம் தானே உருவாகும்.

மைத்ர தாரை நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லை எனில் அதிர்ஷ்டம் குறையும். வாழ்வுநாள் முழுவதும் ஏதாவது பிரச்சினையில் சிக்கி தவிப்பார். நோய்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை தாங்க முடியாத அளவில் இருக்கும். வம்பு, வழக்கு, விபத்து ஏற்படும். இந்த ஜென்மத்தில் மற்றவர்களுக்கும் தங்களுடைய உறவு களுக்கும் என்னதான் உதவி செய்தாலும் என்னதான் உழைத்து கொட்டினாலும் அதற்கான அங்கீகாரமும் மரியாதையையும் இவர்களுக்கு திரும்ப வரவே வராது. நீ எனக்கு என்ன செய்தாய் என்றுதான் இவர்களை பார்த்து கேட்பார்கள். இவர்கள் வெறும் கடமைக்காகவும் கடனுக் காகவும்தான் உயிர் வாழ்வார்கள். யாருடன் பழகுவதற்கும் ஒற்றுமையாக இருப்பதற்கு எனக்கு பிடிக்கவில்லை. நான் தனிமையை விரும்புகின்றேன் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். ஆறுதலாய் இருக்க முன்வருபவரையும் நோகடித்து விலக்குவர்.

பரிகாரம்: சென்னையில் உள்ளவர்கள் பாடிகார்டு முனீஸ்வரரை வழிபடலாம். பிறர் தாங்கள் வாழும் பகுதியிலுள்ள எல்லை மற்றும் காவல் தெய்வங்களை சாந்தமான ரூபத்தில் வழிபடுவது நல்லது.

பரம மைத்ர தாரை

இதன் அதிபதி செவ்வாய். ஜென்ம நட்சத்திரத்தின் ஒன்பதாம் நட்சத்திரம். மிகமிக ஏற்ற தாரை. ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் கோட்சார சந்திரன் பயணிக்கும் காலம் பரம மைத்ர தாரை. உயில் எழுத ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேர, பரிகார பூஜைகள் செய்ய, பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற, பணியில் சேர மிகவும் ஏற்ற தாரை. இதில் உற்றார்- உறவினர்கள் எல்லோரும் அனுகூலமாக நடந்துகொள்வார்கள். பூமி வாங்கலாம். எந்திரங்கள் வாங்கலாம். அது சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். வாக்குவாதங்களில் ஈடுபட்டு வெற்றிபெறலாம். போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

பரிகாரம்: மேலும் நற்பலன்களை அதிகரிக்க துவரையை தானம் செய்யலாம்.

ஒரு ஜாதகத்தில் பரம மைத்ர தாரை நட்சத்திர சாரத்தில் அதிக கிரகங்கள் இருப்பது மிக மிக நன்மை தரும் அமைப்பாகும். அந்த நட்சத்திர சாரத்தில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தினால் பாக்கிய பலன்கள் மிகுதியாக நடக்கும். நல்ல ஒழுக்கமும், சமயோசித புத்தியும் உள்ளவராக இருப்பார். நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உள்ளவராக இருப்பார். தந்தைவழி யோகத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். தான் வசிக்கும் ஊரில் மதிப்பும், மரியாதையும் மிக்கவராகவும் குலத்தொழில் புரிபவர்களாக இருப்பார்கள். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் உண்டு. குரு தீட்சை பெற்றவர்கள். தந்தை, தந்தைவழி முன்னோர்கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தவர்கள், செய்பவர்கள். கோவில் சார்ந்த திருப்பணி வேலைகளுக்கு தானதர்மம் வழங்கி முன்னின்று செயல்படுவார்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். உயர்கல்வி வெளியூர் அல்லது வெளிநாட்டில் படிப்பார்கள். லௌகீக உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும்.

பரம மைத்ர நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் ஜாதகருக்கு தானதர்ம குணங்கள் இருக்காது. ஜாதகர் தந்தை மற்றும் தந்தைவழி தந்தை சம்பாதித்த சொத்துகளை விரையம் செய்வார். சேமிப்பும் சிக்கனமும் இருக்காது. ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருப்பார். கடினமாக உழைத்தாலும் வாழ்வில் பெரிய வெற்றி, முன்னேற்றம் இருக்காது. வாழ்க்கையில் விரக்தியும், வெறுப்பும் உள்ளவராக இருப்பார். பூர்வீகத்தில் வசித்தால் மேன்மை இருக்காது.

வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை நன்மை தரும். ஜாதகருக்கு தந்தையின் அன்பு கிடைக்காது. நிம்மதியான உறக் கம் இருக்காது. பெற்றோர்களுக்கு அவப் பெயரை தேடிவைப்பவர். குல கௌரவத் திற்கு பங்கம் ஏற்படுத்துவர். ஜாதகரின் பெற்றோர்கள் தங்கள் இறுதிக் காலம் வரை பெற்ற பாவத்திற்காக படியளப்பார்கள். பெற்றவர்களுக்கு அவரால் எந்த பயனும் இருக்காது.

பரிகாரம்: திலஹோமம் மற்றும் பித்ருக்கள் வழிபாடு சிறப்பு தரும்.பெரும்பான்மையாக 8-ஆவது மற்றும் 9-ஆவது தசையை சந்திப்பவர்கள் மிகமிக குறைவு.

தாரா பலம் பார்க்க இயலாத நாட்கள் அனுகூலமற்ற தாரையாக அமைந்தால் பரிகாரம் செய்துவிட்டு காரியம் செய்தால் தாரா பலம் இல்லாததால் ஏற்படும் தடை விலகும். ஜனன ஜாதகத்தில் ஜென்ம நட்சத்திரம் வலுவாக, அசுபர் தொடர்பில்லாமல் இருந்தால் சாதகமற்ற தாரைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் அனுகூல தாரை என்றாலும் அந்த கிரகம் ஜாதகத்தில் நின்ற நிலையை கருத்தில்கொண்டே அந்த குறிபிட்ட தாரை ஜாதகருக்கு சாதக பலன் தருமா என்று முடிவு செய்யவேண்டும்.

செல்: 98652 20406