சுப கிரகங்களில் தலைமை கிரக மான குருபகவான் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உன்னதமான உணர்வுகளை உண்டாக்கக்கூடியவர். நவகிரகங்களில், எதிர்மறைப் பலன்கள் எதுவும் தன்னகத்தே கொண்டிராத முழு சுபகிரகம் குரு. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். இவர் தனம், புத்திரம், பொருளாதாரநிலை, கொடுக்கல்- வாங்கல், பொதுக் காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வ புண்ணியம் போன்றவற்றுக்குக் காரகன்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருந்தால் பொருளாதாரநிலை, பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். இவை தவிர்த்து பணம் சார்ந்த வங்கி, நிதி நிறுவனங்கள், சிட் ஃபண்டுகள், தங்க நகைக்கடை, நகை செய்யும் வேலை , மஞ்சள் வியாபாரம் போன்ற தொழில்களில் இருப்பார்கள்.
குரு என்றால் குழந்தை, பொருளா தாரம். அதனால்தான் அளவுக்கு அதிக மாகப் பணம் வைத்திருப்பவர்களுக்கு குழந்தைகள்மூலம் மன வேதனையைத் தருவார். நல்ல பண்பான பிள்ளைகளத் தரும் குருபகவான் அவர்களை நல்ல முறையில் வளர்க்கத் தேவையான பொருளாதாரத்தை வழங்குவதில்லை.
காலபுருஷ தத்துவப்படி குரு 9, 12-க்குடையவர். தனுசு ராசியில் மூலத்திரிகோணம், ஆட்சி. மீனத்தில் ஆட்சி. தனுசு ஒரு நெருப்பு ராசி, மீனம் நீர் ராசி. இரண்டுமே உபய ராசிகள்.
குரு நட்சத்திரத்திலும், குருவின் பார்வையில் அதிக கிரகம் இருந் தாலும் அது யோக ஜாதகம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தீய பலன்களைக் குறைத்து, நல்ல பலன்களைச் செய்யும்.
பாக்கிய ஸ்தானம் மற்றும் அயன, சயன, போக ஸ்தானத்திற்குப் பொறுப்பு வகிக்கும் குருபகவான் நல்லநிலையில் இருக்கும்போது தெளிந்த ஞானம், நல்ல கல்வி, பெற்றோர், குலதெய்வ அருள், புண்ணியம் மற்றும் தீர்த்த யாத்திரை, அரசியல் மற்றும் நிர்வாகத்தில் தலைமைப் பதவியில் அமரவைத்து பல மக்களை வழிநடத்தும் பொறுப்பு தருவார்.
சமூகத்தில் பெரிய மனிதத்தோரணை ஏற்படுத்தக்கூடியவர். திருமணம், இல்லற இன்பம், வெளிநாட்டு வாழ்க்கை மோட்சம், முக்திநிலை பெறுதல் போன்றவற்றை 12-ஆமிடத்தின்மூலம் தருவார். குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி. குரு எந்தவொரு ஜாதகத்திலும் கெட்டுப்போகக்கூடாது. அதேபோல் இரு ஆதிபத்தியம்கொண்ட கிரகங்கள் ஒரு ஆதிபத்தியத்திற்கு சுபப் பலனை வழங்கினால், மற்றொரு ஆதிபத்தியரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.
இனி பன்னிரண்டு லக்னத்திற்கும் குரு தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ லக்னத்திற்கு குரு 9, 12-ஆமதிபதி, பாக்கியாதிபதி மற்றும் விரயாதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம்பெற்றால் சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து பெற்று கௌரவத்துடன் வாழ்வார்கள். தந்தைவழிப் பூர்வீக சொத்து கிடைக்கும். கல்வி நிறுவனங் கள் நடத்துவார்கள். தர்ம காரியங்கள் செய்து மகிழும் பாக்கியம் பெற்றவர்கள். தாயும் தந்தையும் பாக்கியவான்கள். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். தாய்- தந்தைவழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவு, அனுசரணை உண்டு. சுய ஜாதகத்தில் குரு பலம்குறைந்து, பன்னிரண்டாமிடம் வலுத்தால் இவர்கள் பெரும்பாலும் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். இவர்களுடைய சொத்துகள் உறவு களுக்கே பயன்படுகிறது. அல்லது குடும்ப சொத்துகளைத் தந்தைக்காக அல்லது தந்தையால் இழக்க நேரும். அல்லது பாக்கியமும் தன யோகமும் குறைவுபடும். பணக்கஷ்டம், மனக்கஷ்டம், தாங்கமுடியாத வைத்தியச் செலவும் இருக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை திருச் செந்தூர் முருகனை வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப லக்னத்திற்கு குரு 8, 11-ஆமதிபதி. அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதி. அஷ்ட மாதிபதியாக குரு சுப வலுப்பெற்றால் சிலருக்கு அதிர்ஷ்டப் பணம், லாட்டரி, உயில் சொத்து கிடைக்கும். அஷ்டமாதிபதியாக குரு அசுப வலுப்பெற்றால் விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், தீராத கடன் ஏற்படும். பெண்களுக்கு கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாக்கும். சிலருக்கு காலதாமதத் திருமணத்தைத் தரலாம் அல்லது திருமணத்திற்குப்பிறகு வம்பு வழக்கை சந்திக்க நேரும். லாபாதியாக குரு சுப வலுப்பெற்றால் எந்த தவறு செய்தா லும் தண்டணையிலிருந்து தப்பிவிடுவார் கள். தொட்டது துலங்கும். வழக்குகளில் வெற்றியுண்டாகும். பங்கு வர்த்தகம், அதிர்ஷ்ட வருமானம் இருக்கும். ஒரு ரூபாய் பாக்கியில்லாமல் எல்லா கடனையும் பைசல்செய்து நாணயத்தைக் காப்பாற்று வார்கள். மத்திம வயதில் குரு தசை, புக்தி வந்தால் ரகசிய இரண்டாம் திருமணம் நடக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
மிதுனம்
மிதுன லக்னத்திற்கு குரு 7, 10-ஆமதிபதி. களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானம் என்ற இரு கேந்திரங்களுக்கு அதிபதி என்பதால் கேந்திராதிபத்திய தோஷமுண்டு. உபய லக்னம் என்பதால் பாதகாதிபத்திய தோஷமும் ஏற்படும். 7-ஆமதிபதியாகி குரு சுப பலம் பெற்றால் வாழ்க்கைத் துணை யால், நண்பர்களால், தொழில் கூட்டாளி யால், வாடிக்கையாளர்களால் சகாயமான பலனுண்டு. 10-ஆமதிபதியாக குரு பலம் பெற்றால் தொழில்மூலம் உயர்வுண்டு. வருமானம் அதிகமாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். அசுப பலம்பெற்ற குரு தசை, புக்திக் காலங்களில் மாரகம், பாதகம் மிகைப் படுத்தலாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பிரிவினை, கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் விவாகாரத்து பெறுவது, நண்பர்கள்மூலம் வம்பு, வழக்கு உருவாவது போன்றவற்றால் நிம்மதி குறையும்.
பரிகாரம்: வியாழக்கிழமை ஸ்ரீ ராமானு ஜரை வழிபட நன்மைகள் நடக்கும்.
கடகம்
கடக லக்னத்திற்கு குரு 6, 9-ஆமதிபதி. ருண, ரோக, சத்ரு ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானாதிபதி. லக்னத்தில் குரு உச்சம்பெற்றா லும் தனுசில் ஆட்சிபெற்றாலும் கடன் கதவைத் தட்டும். குருவுக்கு சனி, கேது சம்பந்தமிருந்தால் கடன் தீராது. தனித்த குருவாக இருந்தல் கடனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏதாவதொரு வழியில் ரொட்டேஷன் செய்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வார்கள். குருவுக்கு சனி, கேது சம்பந்தம் இருப்பவர்களின் கடன் ஜாதகரை உருத்தெரியாமல் ஆக்கி விடும். குரு மற்றும் கேது தசைக் காலங்களில் மிகுந்த கவனம் தேவை. குருவே பாக்கியாதிபதி என்பதால் முன்னோர் களின் நல்லாசியும் இவர்களுக்குண்டு. இவர்களுக்கு பிறவிக் கடனும், பொருள் கடனும் தொடர்கதையாக இருக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை சந்திர ஓரையில் திருப்பதி வேங்கடாசலபதியை வணங்கவேண்டும்.
சிம்மம்
சிம்ம லக்னத்திற்கு குரு 5, 8-ஆமதிபதி. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் அஷ்ட மாதிபதி. குருவும் 5, 8-ஆமிடமும் பலம்பெற்றால் பிள்ளைகளால் பெருமை, பாராட்டுண்டு. மந்திர உபதேசம், குருவின் நல்லாசிகள் கிடைக்கும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். பங்குச் சந்தை, உயில் சொத்து, லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வருமானமுண்டு. குருவும் 5, 8-ஆமிடமும் பலம்குறைந்தால் கற்ற வித்தை பலன் தராது. பங்குச்சந்தை வணிகத்தில் அதிக இழப்பை சந்திப்பார்கள். சிலருக்கு வம்பும் வழக்கு நிறைந்த காதல் திருமணம் நடக்கும். பெண்கள் கணவருடன் தீராத வம்பு வழக்கு, கடன் தொல்லை தாங்கமுடியாமல் தாலியைக் கழற்றி வீசுகிறார்கள் அல்லது தாலியை அடமானம் வைக்கிறார்கள். சிலர் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பார்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.
கன்னி
கன்னி லக்னத்திற்கு குரு 4, 7-ஆமதிபதி. சுக ஸ்தானம், களத்திர ஸ்தானாதிபதி. பாதகாதிபதி, மாரகாதிபதி. சுய ஜாதகத்தில் குருவும் 4, 7-ஆமிடமும் பலம்பெறும்போது அசையும்- அசையாச் சொத்துகளின் சேர்க்கை நல்ல நிலையிலிருக்கும். பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். தாய், தாய்வழி உறவுகளின் அன்பும், ஆதரவும் நிறைந்திருக்கும். சகல வசதிகளும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். கணவன்- மனைவிக்குள் அன் யோன்யமும், நல்லுறவும் நிறைந்திருக்கும். குருவும் 4, 7-ஆமிடமும் அசுப வலுப்பெற்றால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கை யைத் தருகிறது. திருமண வாழ்க்கையில் பாதகத்தையும் மாரகத்தையும் செய்யத் தவறுவதில்லை. பாதகாதிபதி மற்றும் மார காதிபதியாக வரும் கிரகங்கள் தசாபுக்திக் காலங்களில் எதிர்பாராத தண்டனையைக் கொடுத்துவிடும். உபய லக்னம் என்பதால் பிரச்சினையின் தீவீரத்தை உணரும்முன்பு தண்டனையே கிடைத்துவிடும்.
பரிகாரம்: வியாழக்கிழமை புதன் ஓரை யில் சக்கரத்தாழ்வாரை வழிபடவேண்டும்.
துலாம்
துலா லக்னத்திற்கு குரு 3, 6-ஆமதிபதி. சகாய ஸ்தானம் மற்றும் ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி. சுய ஜாதகத்தில் 3-ஆமிடமும் குருவும் பலம்பெற்றால் ஆன்லைன் வர்த்தகம் நல்ல பொருளாதார முன்னேற்றத் தைத் தரும். அதேபோல் ஊடகம், தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் அனுசரணை உண்டு. திட்டமிடுதலில் கைதேர்ந்தவர்கள். 6-ஆமிடமும் குருவும் பலம்பெற்றால் அடிமைத் தொழிலில் இருப்பவர்களும், முதலீடில்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும்போது பெரும் வாழ்வியல் மாற்றமும் சுப யோகமும் உண்டாகிறது. அதிக முதலீட்டில் சொந்தத் தொழில் செய்யும் துலா லக்னத்தினர் தொழிலால் கடனாளியாகிறார்கள். உடன்பிறந்த இளைய சகோதரத்தால், தாய்மாமாவால் வஞ்சிக்கப்படுகிறார்கள். சிலர் ஜாமின் பிரச்சினையில் மாட்டுகிறார்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிகத்திற்கு குரு 2, 5-ஆமதிபதி. தனாதிபதி, பஞ்சமாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம்பெற்றால். மாபெரும் புண்ணியமும், அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் ஒருங்கே இணையப்பெற்றவர்கள். குலதெய்வ அனுக்கிரகம் உண்டு. பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் பயனுண்டு. உயர் கல்வி யோகமுண்டு. வக்கீல்கள், ஜோதிடர்கள், நிதித்துறை, நீதித்துறை, ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப் பாகும். தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். குரு பலம்குறைந்தால் நிலையான வருமானம் இருக்காது. தங்க நகைச் சேர்க்கை குறையும். பிள்ளைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். அதிர்ஷ்டம் குறைவுபடும்.
பரிகாரம்: வியாழக்கிழமை நவகிரக குருபகவானை வழிபடவேண்டும்.
தனுசு
தனுசு லக்னத்தினருக்கு குரு 1, 4-ஆமதிபதி. லக்னாதிபதி, கேந்திராதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம்பெற்றால் நிச்சயம் வீடு, மனை யோகம் சித்திக்கும். நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். பொன்னும் பொருளும் சேரும். 16 வகைச் செல்வங்களும் நிறைந்திருக்கும். இவர்கள் பண்ணையாளர்களாக, விவசாயிகளாக இருப்பார்கள். தாய்வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். தாய்வழியில் அதிக உறவினர் கள் இருப்பார்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவு, அனுசரணை உண்டு. குரு பலம் குறைந்தால் சொத்துகளால் பயனிருக் காது. பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் உடல்நல பாதிப்பிருக்கும். தாய் மற்றும் தாய்வழி உறவுகளின் அனுசரணை இருக்காது. தாய் அடிக்கடி நோய்வாய்ப்படுவார். குரு கேந்திராதிபதி என்பதால் தசை, புக்திக் காலங்களில் தாய்வழி உறவுகளுடன் தேவையற்ற மனக் கசப்புண்டாகும். சுகபோகங்களையும், யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் குறைவுபடும்.
பரிகாரம்: வியாழக்கிழமை குரு ஓரையில் பஞ்சமுக கணபதியை வழிபடவேண்டும்.
மகரம்
மகர லக்னத்தினருக்கு குரு 3, 12-ஆமதிபதி. சகாய ஸ்தானதிபதி, விரயாதிபதி. மூன்றாம் அதிபதியாகி குரு பலம்பெறும்போது லட்சியங்கள் நிறைந்தவர்கள். திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்கள். உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். 12-ஆமிடம் வலுப்பெற்றால் வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்த வர்களுக்காக சொத்து, சுகத்தை விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். செவித்திறன் குறையும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை இருக்கும். அண்டை, அயலாரு டன் எல்லைத் தகராறு இருக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஏமாற்றத்தை சந்திப்பார் கள். வேலையாட்களால் இழப்பிருக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு 2, 11-ஆமதிபதி. குரு தன, லாபாதிபதி. இவர்களுக்கு குரு அதிகப் படியான யோகத்தை வழங்குவார். சுய ஜாதகத்தில் குரு பலம்பெற்றால் செல்வாக்கு, சொல்வாக்கு நிறைந்தவர்கள். தனது வாக்குத் திறமையை வைத்தே குடும்பத்தை காப்பாற்றுவதில் வல்லவர் கள். லாபமில்லாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. இரண்டு குடும்பமுண்டு. இரண்டாவது திருமணத் திற்குப்பிறகு உயர்வுண்டு. வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மூத்த சகோதர ஆதாயமுண்டு. குரு பலம்குறைந்தால் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை குறையும். புகழ், அந்தஸ்து, கௌரவம் மட்டுப்படும். தனக்குக் கிடைக்கவேண்டிய அனைத்தும் தவறிப்போகும். பரிகாரம்: வியாழக்கிழமை கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள், இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வுண்டு.
மீனம்
மீன லக்னத்திற்கு குரு 1, 10-ஆமதிபதி. லக்னாதிபதி, பத்தாமதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம்பெற்றால் அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள் இவர்கள் ஆசிரியராகவோ, கல்லூரி ப்ரொபசராகவோ அல்லது யாரேனும் ஒருவருக்கு ஆலோசனை வழங்குபவராகவோ இருப்பார்கள். நிலை யான நிரந்தரமான தொழில், அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயமுண்டு. புகழ், அந்தஸ்து, கௌரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுபப் பலன்களும் தேடிவரும். குரு பலம்குறைந்தால், லக்னாதிபதி என்பதால் எளிதில் கண் திருஷ்டி தோஷம், அவமானம் போன்றவை தொடர்கதையாக இருக்கும். குரு கேந்திராதிபதி என்பதால் வருமானவரித் துறையிடம் சிக்குவது, கொடுக்கல்- வாங்கலில் நட்டம், தொழில் இழப்பு போன்ற அசௌகரியங்கள் உண்டாகும்.
பரிகாரம்: வியாழக்கிழமை குபேர லட்சுமி பூஜை செய்யவேண்டும். ஒரு ஜாதகத்தின் பலமே குரு பலம்தான். எனவே குரு பலத்தை அதிகரிக்க உரிய பரிகாரத்தைப் பயன்படுத்தவும்.
செல்: 98652 20406