ஜோதிடரீதியாக ஒரு பாவகத் தின்மூலம் ஏற்படும் பிரச்சினையை அதற்குப் பன்னிரண்டாம் இடமே தீர்த்துவைக்கும். லக்ன பாவத்தின் பன்னிரண்டாம் இடமான அயன, சயன, விரய, மோட்ச ஸ்தானத்தின்மூலம் ஒருவர் இந்த பிறவியில் அனுபவிக்கும் துயரங்களுக்குத் தீர்வு வழங்கமுடியும்.

இதன்மூலம் முக்தி அல்லது மோட்சம் என்ற பிறவிப்பயனை அடைவாரா? மறுபிறவி உண்டா? படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? வெளிநாட்டு வேலை, தொழில் அமையுமா போன்றவற்றை அறியமுடியும்.

அத்துடன் செலவினங்கள், நஷ்டங்கள், இல்லற இன்பம், இடது கண், தியாக சிந்தனை, தற்கொலை, ராஜ துரோகம், தாய்மாமனால் பெறும் சுக- துக்கங்கள், தந்தையின் தாய்- தாயின் தந்தை, பிரிவினை, தலைமறைவாகுதல் போன்றவற்றையும் அறியமுடியும்.

12-ஆமதிபதி பன்னிரு பாவகங்களில் அமரும்போது ஏற்படும் விளைவுகளை இங்கு காணலாம்.

Advertisment

பன்னிரண்டாம் அதிபதி ஒன்றில்

ஜாதகர் மன விரக்தி, தாழ்வு மனப்பான்மை நிறைந்தவர். என்ன வாழ்க்கை என்று அடிக்கடி புலம்புவார்கள். முன்னேற்றத்திற்கு கடுமையாகப் போராட நேரும். வரவுக்குமீறி செலவு செய்வார். கடன் பெற்றும் வீண் செலவுசெய்ய தயங்கமாட்டார். சோம்பேறி யாக இருப்பதுடன், சொந்த ஊரைவிட்டு அடிக்கடி நீண்டதூரம் பயணம் செய்யும் தொழிலில் இருப்பார். வீண் வம்பு, வழக்கு, விரோதங்களைத் தானே உருவாக்குவார். அடிக்கடி மருத்துவச் செலவு உண்டாகும். குறிப்பாக மூட்டு, கை, கால் வலி, கண் சிகிச்சை இருக்கும். சிலர் குழந்தை யாக இருக்கும்போது காணாமல் போவார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பான பலன் தரும். சிலருக்குத் திருமணம் நடப்பதில்லை. பலர் திருமணம் நடந்தும் இல்லற சந்நியாசியாகவே வாழ்கிறார்கள். பிரதோஷத்தன்று சிவனுக்குப் பன்னீர் அபிஷேகம் செய்வதால் மேன்மை பெறமுடியும்.

பன்னிரண்டாம் அதிபதி இரண்டில்

Advertisment

ஜாதகரால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாது. அதனால் இவருடைய பேச்சுக்கு மதிப்பிருக்காது. பொய், பித்தலாட்டத்தால் குடும்பத்தில் கலகம் ஏற்படுத்துவார்கள். குடும்ப வாழ்க்கை சிறப் பாக அமையாது. சிலருக்கு மாறுகண் கோளாறு இருக்கும். சோறு கிடைத்த இடம் சொர்க்கம் என்றும், பிறவியின் நோக்கமே நல்ல உணவு சாப்பிடுவதுதான் என்றும் வாழ்வார்கள். குறிக்கோள், லட்சியமில்லாமல் இருப்பார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமை, வருமானமே இல்லாத நிலை அல்லது வரும் சொற்ப வருமானமும் விரயமாகும். கொடுத்த பணம் திரும்ப வராது. குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமில்லாமல் வீணாக ஊர் சுற்றித் திரிவார்கள். சிலர் குடும்பத்தைப் பிரிந்து வாழ்வார்கள். ஆரம்பக் கல்வியில் தடுமாற்றம் ஏற்படும். சிலருக்கு உழைக்காத- அதிர்ஷ்ட வெளிநாட்டு வருமானம் கிடைக்கும். பிரதோஷத்தன்று அன்னதானம் செய்யவும்.

d

பன்னிரண்டாம் அதிபதி மூன்றில்

உடன்பிறந்த இளைய சகோதரர்வழியில் விரயச்செலவு, கருத்து வேறுபாடு நிலவும். அவர்களின் வாழ்க்கைக்காக சொத்து சுகத்தை, தன் சுகத்தை இழப்பார்கள். பலர் தனது தங்கை களைக் கரைசேர்க்க, உரிய வயதில் திருமண வாழ்க்கையைத் தவறவிடுகிறார்கள். ஜாமின் பிரச்சினை உண்டு. பாகப்பிரிவினை சுமுகமாக இருக்காது. சொத்திற்கு முறையான ஆவணங்கள் இருக்காது. சிறிய செயலுக்கு அதிக முயற்சி செய்தபிறகே வெற்றி கிடைக்கும். செயல்திறன் குறைவு படும். சிறு ஆயுள்கண்டம் இருக்கும். ஞாபக மறதி நிறைந்தவர். அண்டை, அயலாருடன் ஒத்துப்போக முடியாது. ஈகோவால் நல்ல அரிய சந்தர்ப்பங்களைத் தவறவிடுவார்கள். ஆத்திரத்தால் புத்தி செயலிழக்கும். திறமையை வெளிக்காட்ட போதிய சந்தர்ப்பம் அமையாது. சில ஆண்களுக்கு வீரியம் குறைவுபடும். அதனால் திருமண வாழ்வில் பிளவுண்டாகும். பிரதோஷத்தன்று சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும்.

பன்னிரண்டாம் அதிபதி நான்கில்

தாய்வழி உறவுகளால் நெருக்கடி அதிகரிக் கும். தாயார், வீடு, வாகன வழியில் விரயம் இருக்கும். சிலர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாகனத்தை மாற்றிக்கொண்டே இருப்பர். இவர்களுக்கு வாஸ்து குறையுள்ள மனையே அமையும். வீட்டை இடித்துக் கட்டியே பாதி ஆயுளையும், மன நிம்மதியையும் குறைத்துக் கொள்வார்கள். ஒருசிலருக்கு சொந்தவீடு பாக்கி யமே இல்லாமல் வாடகை வீட்டைக்கூட மாற்றிக்கொண்டே இருப்பர். தவறான நிலத்தை வாங்குவது, நிலத்தினால் நட்டம் இருக்கும். கடனுக்காக வீட்டை விற்கும் நிலைகூட வரும். அழகு, ஆடம்பரப் பொருள்மீது ஆர்வம் கொண்டு விரயம் செய்வார்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடு இருந்து கொண்டே இருக்கும். சிறுவயது குழந்தை கள் கல்விக்காக பெற்றோரைப் பிரிந்து விடுதியில் தங்கும் நிலை ஏற்படும். இந்த அமைப் பைப்பெற்ற விவசாயிகள், பண்ணையாளர்கள் பெரிய லாபம் பார்க்கமுடியாது. கால்நடை, வீட்டு விலங்கு வளர்ப்பவர்களுக்கு அடிக்கடி விலங்குகள் உயிரிழப்பால் சேதம் மிகுதியாகும். பிரதோஷத்தன்று நந்திக்கு அரிசி மாவினால் அபிஷேகம் செய்யவேண்டும்.

பன்னிரண்டாம் அதிபதி ஐந்தில்

உயர்கல்வி வாய்ப்பு குறையும். பூர்வீக சொத்தை இழக்கநேரும் அல்லது பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். ஒருசிலர் அந்திமக் காலத்தில் பூர்வீகம் திரும்புவார்கள். சிலர் முதல் குழந்தை பிறந்தபிறகு பூர்வீகச் சொத்தை இழப்பார்கள். அல்லது பிள்ளைகள் நலனுக்காக பூர்வீகச் சொத்தை அழிப்பார்கள். குலதெய்வக் குற்றம் தீர்க்கமுடியாமல் இருக்கும். ஆன்மிக நாட்ட மிகுதியால் தன் தகுதிக்குமீறி ஆன்மிக செலவு செய்வார்கள். பலருக்கு புத்திர பாக்கியமின்மை ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படுவதில் சிரமம், காலதாமதம் ஏற்படும். ஒருசிலருக்கு 9-ஆம் பாவக வலிமையால் புத்திர பாக்கியம் கிடைத்தாலும்கூட அற்ப புத்திரர் அல்லது புத்திரர்களால் வீண் விரயம் அல்லது தேவை யற்ற மன உளைச்சல், அவமானம் போன்றவற்றால் புத்திர தோஷம், புத்திர சோகம் இருந்தே தீரும். பௌர்ணமி திதியில் குலதெய்வத்தை வழிபடவேண்டும்.

பன்னிரண்டாம் அதிபதி ஆறில்

பிறந்தது முதல் சிறுசிறு நோய்த் தாக்கம், வைத்தியச் செலவு இருக்கும். உறவினர்களே பகையாவர்கள். குறிப்பாக தாய்மாமன்வழி விரயம் அல்லது கருத்து வேறுபாடிருக்கும். எப்பொழுதும் கோப உணர்வு, பழிதீர்க்கும் எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். விரோதிகளிடம் பொருள் இழக்கும் நிலை ஏற்படலாம் அல்லது எதிரிகளை சமாளிக்க வீண் செலவு செய்துகொண்டே இருப்பர். சிலருக்கு காலம் முழுவதும் கடன், நோய்த் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். கடனுக்காக குறுகிய காலமாவது தலைமறைவாக வாழ்வார்கள். இதற்கு சுபகிரக சம்பந்தமிருந்தால் விபரீத ராஜ யோக அடிப்படையில் கடன் தொகை தள்ளுபடி யாகும். சிலர் வெளியூரில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலை இருக்கும். பிரதோஷத்தன்று சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்யவும்.

பன்னிரண்டாம் அதிபதி ஏழில்

சிலருக்குத் திருமணமே நடக்காது. திருமணம் நடந்தாலும் குடும்ப வாழ்வு சிறக் காது. சுமாரான திருமண வாழ்வே அமையும். சில தம்பதிகள் தொழில், உத்தியோகம் நிமித்தமாகப் பிரிந்து வாழ்வார்கள். களத்திரத்தின்மூலம் வீண்செலவு, விரயம் இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கு கூட்டுத் தொழில் சிறக்காது. நண்பர்கள்மூலம் பொருள் விரயம் இருக்கும். சிலருக்கு அவ்வப் போது கடும் விபத்து, கண்டங்களை சந்திக்க நேரும். கௌரவக் குறைவும், வெளியே சொல்லமுடியாத பிரச்சினையும் ஏற்படும். பிரதோஷத்தன்று சிவனுக்கு கரும்புச் சாறால் அபிஷேகம் செய்யவும்.

பன்னிரண்டாம் அதிபதி எட்டில்

ஒரு மறைவு ஸ்தானாதிபதி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் வெகு சிலருக்கு விபரீத ராஜயோகத்தால் உயில் சொத்து, லாட்டரியோகம், வழக்குகளில் வெற்றி கிட்டும். சிலர் மீளமுடியாத குற்றத் திற்கு சிறை தண்டனை அனுபவிக்கிறார்கள். சிலர் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று அங்கேயே தங்கும் நிலை ஏற்படும். நிறைய அனுபவ முதிர்ச்சியுடையவர்கள். இவர்களுக்கு நித்திய கண்டம், பூரண ஆயுள். பலமுறை ஆயுள் கண்டம் இருக்கும். ஆனால் தீர்க்காயுள். தீராத நோய், கடன், வைத்தியச் செலவால் மன உளைச்சல் இருக்கும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியக் குறைவிருக்கும். சிலர் தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். வம்பு, வழக்கால் வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிலருக்குத் தற்கொலை எண்ணம் மிகுதியாக இருக்கும். பிரதோஷத்தன்று சிவனுக்கு சுத்தமான பசும்பால் அபிஷேகம் செய்யவும்.

பன்னிரண்டாம் அதிபதி ஒன்பதில்

பாக்கிய ஸ்தானம் வலிமை குறையும். முன்னேற்றம் குறைவுபடும். முறையாக பித்ருக் கடன் தீர்க்காதவர்கள். கடுமையான- தீர்க்கமுடியாத பித்ருதோஷம் உள்ளவர்கள். முன்னோர்களில் சொத்துகளால் நஷ்டம், வில்லங்கம் ஏற்படும். சிலர் ஆன்மிகம் என்ற பெயரால் மக்களை ஏமாற்றுவார்கள். பெரியோர்களை அவமதித்து சாபம் வாங்குவர். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். தந்தையைப் பிரிந்து வாழ்வர் அல்லது தந்தையால் வீண் விரயம் ஏற்படும். குலத்தொழிலைச் செய்து நஷ்டமடைவார்கள். அமாவாசையன்று பித்ருக்களை வழிபடவும்.

பன்னிரண்டாம் அதிபதி பத்தில்

எந்தத் தொழிலைச் செய்தாலும் நஷ்டம், விரயம் மிகுதியாக இருக்கும். தொழிலுக்காகப் பயணம் செய்ய நேரும் அல்லது அலைச்சல் மிகுந்த தொழில் செய்வார். உத்தியோகமே சிறந்தது என்றாலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. தொழில் தொடர்பான மன உளைச்சல் இருந்துகொண்டே இருக்கும். சிலர் வேலை செய்யும் கம்பெனிமூலம் வெளிநாடு செல்வார்கள். இரவு வேலை, இரவுநேரத் தொழில் சிறப்பானது. பிரதோஷத்தன்று சிவனுக்கு விபூதி அபிஷேகம் செய்யவும்.

பன்னிரண்டாம் அதிபதி பதினொன்றில்

உல்லாச வாழ்க்கையை விரும்பி ஆடம்பர செலவு செய்வார்கள். சித்தப்பா, மூத்த சகோதரவழியிலும், இளைய மனைவிமூலமும் விரயம் மிகுதியாக இருக்கும். இந்த அமைப்பினர் பழைய பொருள் அல்லது நலிந்த தொழிலை எடுத்து நடத்தினால் லாபம் கிடைக்கும். வெற்றிக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதால் வெற்றிக்கனி இவரைத் தேடிவரும். பிரதோஷத்தன்று சிவனுக்குப் பச்சைக் கற்பூரம் கலந்த நீரால் அபிஷேகம் செய்யவும்.

பன்னிரண்டாம் அதிபதி பன்னிரண்டில்

ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் அமையும். வெளிநாட்டில் தங்கி வேலை, தொழில் செய்யும் நிலை உருவாகும். சொந்த பூமியில் வாழ்ந்தால் தொட்டது துலங்காது. கட்டுக்கடங்காத விரயம் இருந்துகொண்டே இருக்கும். சிலர் கடனுக்காக, குற்றத்திற்காக தலைமறைவாக வாழ்வார்கள். இரவுநேர வேலை, இரவுநேரத் தொழில் சிறப்பாகும். இரவில் உறக்கம் கெடுவதால் உண்டாகும் நோய்களும் ஏற்படும். சிலர் வாழ்வின் பெரும்பகுதியை மருத்துவமனையில் கழிப்பார்கள். எந்த நோய்க்கு எந்த மருந்தை உண்பதென்று தெரியாமல் குழம்புவார்கள். பன்னிரண்டாம் அதிபதியின் தசை நடக்கக்கூடாது. 12-ஆம் பாவத்தில் நின்ற கிரகத்தின் தசையும், 12-ஆமதிபதியுடன் சேர்ந்த கிரகங்களின் தசையும் நடந்தால், அந்த கிரகங்களுக்குரிய நோய்கள் தாக்கும். மரணம் அல்லது அதற்கு ஒப்பான கண்டத்தை அடைவார்கள். பிரதோஷத்தன்று சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யவும். மறைவு ஸ்தானங்களில் இருக்கும் கிரகங்கள், ஒருவர் சென்ற ஜென்மத்தில் பெற்ற கோப சாபங்களே தோஷமாக மாறி, இந்த ஜென்மத்தில் வாழ்வை வெறுக்கும் வகையில் பிரச்சினையைத் தருகிறது. 12-ஆமிடம் என்பது ஒருவரின் சாபத்தால் உருவாகும் தோஷம். 12-ஆம் பாவகப் பிரச்சினை வாரிசுகள் மேல் கைவைக்கும் என்பதால் பிரதோஷ வழி பாட்டைச் செய்து வர சிறிது சிறிதாக பிரச்சினை கள் குறையும்.

செல்: 98652 20406