ஒருவரின் பிறப்புமுதல் வாழ்நாள் முழுவதும் அனைத்து சம்பவங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுக்திக் காலங் களில்தான் தூண்டப்படுகின்றன. அதன் அடிப்படையில் ஜாதகரின் வயதிற்கேற்ப இல்வாழ்க்கை சக்கரம் சுழன்று செயல்பட 7-ஆம் பாவகம் மிக முக்கியம். 7-ஆமிடம் என்பது நண்பர்கள், வாழ்க்கைத் துணை, சம்பந்தி, தொழில் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பற்றிக் கூறுமிடமா கும். அதன்படி இளம்வயதில் நண்பர்களைத் தரும் 7-ஆமிடம் வாலிபப் பருவத்தில் வாழ்க்கைத் துணையையும், மத்திம வயதில் சம்பந்தம் செய்வதைப் பற்றியும் கூறும். அதாவது சமுதாய அங்கீகாரம், சமுதாயத் தொடர்பை உருவாக்கிக் கொடுக்குமிடம் ஏழாமிடம்.
உறவுகளின் உன்னதத்தை உணர்த்துவது 7-ஆம் பாவகம். ஒரு மனிதனின் ஜாதக அமைப்புப்படி 7-ஆம் பாவகமும், அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் ஜாதகரை சிறப்புபெற்ற மனிதனாக உயர்த்து கிறது. அதே நேரத்தில் உறவுகளால் மன உளைச்சலைத் தருவதிலும் 7-ஆமிடமே முன்னிலை வகிக்கிறது.
சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம், இன்ப ஸ்தானம் என்றழைக்கப்படுவது 7-ஆம் பாவகம். இதன்மூலம் ஆண் ஜாதக மாயின் மனைவியைப் பற்றி யும், பெண் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும், திருமண காலம், இல்லற வாழ் வின் ஏற்றத்தாழ்வு, சம்பந்தி கள், சிற்றின்பம், வழக்கு விவகாரங்கள், சுற்றம், நட்பு, வெகுமதிகள், போகசக்தி, யாத்திரை, கூட்டுத்தொழில், நண்பர்கள், பொது ஜன ஆதரவு, அடிவயிறு, சிறுநீரகம், ஜாதகரின் மாரகம் முதலியவற்றை அறியலாம்.
பன்னிரு பாவகங்களும் ஏழாமிடத்துடன் சம்பந்தம் பெறும்போது ஏற்படும் சுப- அசுபப் பலன்களையும் அதற்கான பரிகாரத்தையும் இங்கு பார்க்கலாம்.
ஏழாமதிபதி லக்னத்தில்
இளம்வயதில் திருமணம் நடக்கும். தம்பதிகள் நெருங்கிய குடும்பத்து உறவாக இருப்பார்கள். தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோஷமாக ஓருயிர் ஈருடலாக வாழ்வார்கள். இல்லற இன்பத்தில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். எளிய நிலையில் இருந்தாலும் திருமணத்திற்குப்பிறகு முன்னேற்றமான வாழ்க்கையுண்டு. வாழ்க்கைத் துணையின்மேல் அன்பும் அதிக அக்கறையும் இருக்கும். கணவன்- மனைவி இருவருமே தீர்க்காயுளுடன் வாழும் பாக்கியம் பெறுவார்கள். திருமணம் முடிந்த வுடன் தனித் குடித்தனம் செல்வார்கள். நண்பர் கள், கூட்டுத்தொழில் ஆதாயமுண்டு. சமுதாய மதிப்பு நிறைந்த இடத்தில் சம்பந்தம் அமையும். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந் தால் தம்பதிகளுக்குள் ஈகோ மிகுதியாகும். பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள். நண்பர் கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர் களால் வஞ்சிக்கப்படுவ
ஒருவரின் பிறப்புமுதல் வாழ்நாள் முழுவதும் அனைத்து சம்பவங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுக்திக் காலங் களில்தான் தூண்டப்படுகின்றன. அதன் அடிப்படையில் ஜாதகரின் வயதிற்கேற்ப இல்வாழ்க்கை சக்கரம் சுழன்று செயல்பட 7-ஆம் பாவகம் மிக முக்கியம். 7-ஆமிடம் என்பது நண்பர்கள், வாழ்க்கைத் துணை, சம்பந்தி, தொழில் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பற்றிக் கூறுமிடமா கும். அதன்படி இளம்வயதில் நண்பர்களைத் தரும் 7-ஆமிடம் வாலிபப் பருவத்தில் வாழ்க்கைத் துணையையும், மத்திம வயதில் சம்பந்தம் செய்வதைப் பற்றியும் கூறும். அதாவது சமுதாய அங்கீகாரம், சமுதாயத் தொடர்பை உருவாக்கிக் கொடுக்குமிடம் ஏழாமிடம்.
உறவுகளின் உன்னதத்தை உணர்த்துவது 7-ஆம் பாவகம். ஒரு மனிதனின் ஜாதக அமைப்புப்படி 7-ஆம் பாவகமும், அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் ஜாதகரை சிறப்புபெற்ற மனிதனாக உயர்த்து கிறது. அதே நேரத்தில் உறவுகளால் மன உளைச்சலைத் தருவதிலும் 7-ஆமிடமே முன்னிலை வகிக்கிறது.
சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம், இன்ப ஸ்தானம் என்றழைக்கப்படுவது 7-ஆம் பாவகம். இதன்மூலம் ஆண் ஜாதக மாயின் மனைவியைப் பற்றி யும், பெண் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும், திருமண காலம், இல்லற வாழ் வின் ஏற்றத்தாழ்வு, சம்பந்தி கள், சிற்றின்பம், வழக்கு விவகாரங்கள், சுற்றம், நட்பு, வெகுமதிகள், போகசக்தி, யாத்திரை, கூட்டுத்தொழில், நண்பர்கள், பொது ஜன ஆதரவு, அடிவயிறு, சிறுநீரகம், ஜாதகரின் மாரகம் முதலியவற்றை அறியலாம்.
பன்னிரு பாவகங்களும் ஏழாமிடத்துடன் சம்பந்தம் பெறும்போது ஏற்படும் சுப- அசுபப் பலன்களையும் அதற்கான பரிகாரத்தையும் இங்கு பார்க்கலாம்.
ஏழாமதிபதி லக்னத்தில்
இளம்வயதில் திருமணம் நடக்கும். தம்பதிகள் நெருங்கிய குடும்பத்து உறவாக இருப்பார்கள். தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோஷமாக ஓருயிர் ஈருடலாக வாழ்வார்கள். இல்லற இன்பத்தில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். எளிய நிலையில் இருந்தாலும் திருமணத்திற்குப்பிறகு முன்னேற்றமான வாழ்க்கையுண்டு. வாழ்க்கைத் துணையின்மேல் அன்பும் அதிக அக்கறையும் இருக்கும். கணவன்- மனைவி இருவருமே தீர்க்காயுளுடன் வாழும் பாக்கியம் பெறுவார்கள். திருமணம் முடிந்த வுடன் தனித் குடித்தனம் செல்வார்கள். நண்பர் கள், கூட்டுத்தொழில் ஆதாயமுண்டு. சமுதாய மதிப்பு நிறைந்த இடத்தில் சம்பந்தம் அமையும். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந் தால் தம்பதிகளுக்குள் ஈகோ மிகுதியாகும். பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள். நண்பர் கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர் களால் வஞ்சிக்கப்படுவார்கள். வெள்ளிக் கிழமை காலை 11.00-12.00 மணிவரையிலான செவ்வாய் ஓரையில் துர்க்கையை வழிபடவும்.
ஏழாமதிபதி இரண்டில்
குடும்பஸ்தானமான இரண்டாமிடத்தில் இருந்தால் வாழ்க்கைத்துணை வசதியானவராக இருப்பார். அல்லது நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமையும். திருமணத்திற்குப்பிறகு பொரு ளாதாரம் உயரும். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேச்சுக்கு மற்றொருவர் கட்டுப்படுவார். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளுடன் இணைந்து கூட்டுத் தொழிலில் லாபம் ஈட்டுவார்கள். சம்பந்தி நல்ல பொருளாதார வசதி மிகுந்தவராக இருப்பார். பாவகிரகங்கள் சம்பந்தமிருந்தால் போராட் டமான வாழ்க்கை, அவமானம், பிரிவு அல்லது இழப்பு ஏற்படும். சம்பந்தியால், நண்பர் களால், தொழில் கூட்டாளியால், வாடிக்கை யாளர்களால் மிகுதியான பொருள் விரய முண்டு. வெள்ளிக்கிழமை காலை 10.00-11.00 மணி வரையிலான குரு ஓரையில் மகாலட்சுமியை வழிபட குடும்பத்தில் பொருள் குற்றம் அகலும். ஒற்றுமை பெருகும்.
ஏழாமதிபதி மூன்றில்
சகாய ஸ்தானமான மூன்றாமிடத்துடன் ஏழாமதிபதி சம்பந்தம் பெற்றால் வாழ்க்கைத் துணை வீட்டினருகில் இருப்பார். சிலருக்கு தரகர் அல்லது திருமணத் தகவல் தொடர்பு நிலையங்கள்மூலம் திருமணம் நிச்சயமாகும். தெய்வ பக்தியுண்டு. ஆச்சார அனுஷ்டானங் களைக் கடைப்பிடிப்பார். வாலிப வயதில் சீக்கிரமே திருமணம் நடக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியேறி பெற்றவர்களை எதிர்த்து சுயவிருப்பத் திருமணம் புரிகின்றனர். நண்பர்கள், கூட்டாளிகள் சுய ஆதாயத்திற்காக ஒருவரையொருவர் ஏமாற்றுவார்கள். சம்பந்திகளுக்குள் ஒற்றுமை இருக்காது. தங்கள் குலப்பெருமை, பொருளாதாரத்தைப் பற்றி புகழ்ந்துபேசி பிறரை இழிவுபடுத்துவார்கள். இதற்கு வலுப்பெற்ற அசுபகிரக சம்பந்த மிருந்தால் மாரகம், நிம்மதியில்லாத வாழ்க்கை, தாரதோஷம், மறுவிவாகம் உண்டாகும். வெள்ளிக்கிழமை விநாயகரை அறுகம்புல் சாற்றி வழிபடவும்.
ஏழாமதிபதி நான்கில்
சுக ஸ்தானமான நான்காமிடத்திற்கு ஏழாமதிபதி தொடர்பிருந்தால் தாய்வழி உறவில் திருமண வாய்ப்பு அதிகம். மனைவி சொல்லே மந்திரம்; மற்றவையெல்லாம் தந்திரம் என்று, வாழ்க்கைத் துணைக்குக் கட்டுப்பட்டு வாழ்வார்கள். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் ஆதாயமுண்டு. குறிப்பாக குடும்ப சொத்து வெளியில் சென்று விடக்கூடாது என்பதற்காக நடக்கும் திருமண மாகும். மனைவியும், தாயாரும் ஒற்றுமையாக நட்புடன் வாழ்வார்கள். திருமணத்திற்குப்பிறகு வசதி வாய்ப்பு பெருகும். நண்பர்கள், கூட்டாளி களுடன் அருகருகே வீடுகட்டி வாழ்வார்கள். அக்கம்பக்தினருடன் ஒற்றுமையாக இருப் பார்கள். சம்பந்திகள், மாமன், மைத்துனர் என ஒற்றுமையாக உறவு பாராட்டுவார்கள். உபய லக்னமாக இருந்தால் கேந்திராதிபத்திய தோஷ பாதிப்புண்டு. இதற்கு அசுபகிரக பாதிப்பிருந்தால் திருமணத்திற்குப்பிறகு வீடு வாசலை இழக்க நேரும். சொத்து சுகத்தால் நண்பர்களுடன் பகை உருவாகும். வெள்ளிக்கிழமை முருகனுக் குப் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும்.
ஏழாமதிபதி ஐந்தில்
எந்த லக்னமாக இருந்தாலும் ஏழுக் குடையவன் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்றால் காதல் திருமணம் நடக்கும் அல்லது நெருங்கிய ரத்தபந்த உறவில் திருமணம் நடக்கும். திருமணத்திற்குப்பிறகு அதிர்ஷ்டம் பலமடங்கு அதிகரிக்கும். 5, 7-ஆமதிபதிக்கு அசுபகிரக சம்பந்தம் இல்லாதவரை எந்த தொந்தரவும் இருக்காது. பால்ய வயதுமுதல் முதுமைக் காலம்வரை நண்பர்களுக்குள் பரஸ்பர அன்பு நீடிக்கும். நல்ல வசதியான சமுதாய அந்தஸ்து நிறைந்த சம்பந்தம் கிடைக்கும். இதற்கு அசுபகிரக சம்பந்தமிருந்தால் எளிதாகப் பிரிவினை உண்டாகும். சனி, செவ்வாய் தொடர்பிருந்தால் இரண்டாம் திருமணம் நடக்கும். நண்பர்கள், கூட்டாளிகள் குறுகிய காலத்தில் பயனற்றுப் போவார்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த சம்பந்தியாக வெளித்தோற்றம் மட்டுமே இருக்கும். சம்பந்தம் என்ற பெயரில் ஏமாற்றிப் பணம் பறிப்பார்கள். வெள்ளிக்கிழமை காலை 11.00-12.00 மணிவரையிலான செவ்வாய் ஓரையில் சரபேஸ்வரரை வழிபடவும்.
ஏழாமதிபதி ஆறில்
ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத் தில் நின்றால் வாழ்க்கைத் துணைக்கு நோய் பாதிப்புண்டு அல்லது கடனால் அவஸ்தை உண்டாகும். வாழ்த்துணை ஊதாரியாக வாழ்வார். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. மிகுதியான கருத்து வேறுபாடுண்டு. விவாகரத்தில் முடியும் வாய்ப்பு அதிகம். சிலர் அடிதடி சண்டையிட்டு எதிர்மறையான மனநிலையில் தானும் வாழமாட்டார்; தன்னைச் சார்ந்தவரையும் வாழவிடமாட்டார். இவர்கள் சொந்தத் தொழில் நடத்தும் வரனைத் தேர்வுசெய்வதைத் தவிர்க்கவேண்டும். வேலை பார்த்தாலும் இவர்களுக்கு சொற்ப்ப வருமானமே உண்டு. கூட்டுத் தொழிலில் நட்டம் ஏற்படும். கடன் உருவாகும். சம்பந்திகள் சண்டை வீதிக்கு வரும். வெள்ளிக்கிழமை காலை 6.00-7.00 மணிவரையிலான சுக்கிர ஓரையில் வைஷ்ணவியை வழிபடவும்.
ஏழாமதிபதி ஏழில்
ஏழாமிடமான களத்திர ஸ்தானத்திற்கு ஏழாமதிபதி சம்பந்தமிருந்தால் மணவாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதுதான் பலருடைய கணிப்பு. ஆனால் ஏழுக்குடையவன் ஏழில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையின் கை ஓங்கும். பெண்ணாக இருந்தால் சுய சம்பாத்தியத்தில் சொந்தக்காலில் நிற்பவள். அதனால் மிகுதியான "ஈகோ'வால் தம்பதிகள் பிரிந்துவாழ்வார்கள். பல திருமணங்கள் முறிகின்றன. உபய லக்னமாக இருந்தால் திருமண வாழ்க்கை சுமாராகவே இருக்கும். வெகுசிலர் மனைவி சொல்லே மந்திரம்; மற்றவை தந்திரம் என வாழ்க்கைத் துணைக்கு அடிமையாக- கைப்பாவையாக கூஜா தூக்குவார்கள். நண்பர்கள், கூட்டாளிகள், சம்பந்திகள் வெளியில் நட்பானவர்களாகக் காட்டிக்கொண்டு உள்ளுக்குள் வெறுப்பை உமிழ்வார்கள். இந்த ஸ்தானம் அசுப வலிமைபெற்றால் திருமண வாழ்க்கை மாரகம் நிறைந்ததாக இருக்கும். சிலர் மனதிற்குள் அழுது புழுங்கி நரகமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். சிலர் துணிந்து இல்லற பந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள். வெள்ளிக்கிழமை காலை 6.00-7.00 மணிவரையிலான சுக்கிர ஓரையில் புவனேஸ்வரியை வழிபடவும்.
ஏழாமதிபதி எட்டில்
ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையால் திருமணத்துக்குப்பின் பொருளாதாரநிலை உயரும். பலர் முதல் திருமண பந்தத்தில் விவாகரத்து, கோர்ட், கேஸ் என அலைந்து மன நோயாளியாவார்கள். இது வலுவான இரண்டு தார யோக அமைப்பாகும். நிலையான நண்பர்கள் அமையமட்டார்கள். கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. சம்பந்திகள் சண்டை நீதிமன்றம்வரை சென்று அவமானத்தை அதிகப்படுத்தும். வெள்ளிக்கிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் லட்சுமி நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.
ஏழாமதிபதி ஒன்பதில்
ஏழாமதிபதி பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் பூர்வஜென்ம பாக்கிய பலத்தால் ஆதர்ஷ தம்பதியாக வாழ்வார்கள். தொழில், உத்தியோகம் நிமித்தமாக குறுகிய காலம் பிரிந்துவாழ்வார்கள். முன்னோர்களின் நல்லாசி நிரம்பியவர்கள். வாழ்க்கைத்துணை தைரியமானவர். அவரின் சகோதர- சகோதரிகளால் நன்மையுண்டு. பல தலைமுறையாகக் கூட்டுத்தொழில் புரிபவர்கள். நண்பர்களின் குடும்பத்துடன் இரண்டறக் கலந்து பழகுவார்கள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து, கௌரவம் நிறைந்த சம்பந்தம் கிடைக்கும். இதற்கு அசுபகிரக சம்பந்தமிருந்தா லும் குலகௌரவத்தைக் கட்டிக் காப்பார்கள். பிரிவினை ஏற்படும் வாய்ப்பு குறைவு. வெள்ளிக்கிழமை காலை 10.00-11.00 மணிவரையிலான குரு ஓரையில் அந்தணர் களுக்கு ஆடை தானம் செய்யவும்.
ஏழாமதிபதிபத்தில்
பத்தாமிடமான தொழில் ஸ்தானத் தில் ஏழாமதிபதி சம்பந்தமிருந்தால் வாழ்க்கைத்துணை சுயதொழில் செய்பவராக இருப்பார் அல்லது கௌரவப் பதவியில் இருப்பார். திருமணத்திற்குப்பிறகு பொருளா தாரத்தில் வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். சுய கௌரவம் உள்ளவராக இருப்பார்கள். நல்ல கல்வியறிவுண்டு. படித்த படிப்பிற்கு சம்பந்தமான தொழில், உத்தியோகம் உண்டு. சொத்து ககம் என சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த திருமண வாழ்க்கை அமையும். கூட்டுத் தொழிலில் வெற்றியுண்டு. புதிய தொழில் நண்பர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள். தொழில், நட்புமூலம் சம்பந்திகள் அமைவார்கள். இதற்கு அசுபகிரக சம்பந்தமிருந்தால் சிறுசிறு சலசலப்பு இருந்தாலும் கலகலப்பு குறையாது. வெள்ளிக்கிழமை வாராகி அம்மனை வழிபடவும்.
ஏழாமதிபதி பதினொன்றில்
ஏழாமதிபதிக்கு லாப ஸ்தான சம்பந்த மிருந்தால் தம்பதிகள் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர- சகோதரிகளால் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கைத்துணை உண்டு. ஏழாமதிபதி பலம் குறைந்திருந்தால் இருதார தோஷத்தை ஏற்படுத்திவிடும். கூட்டுத் தொழிலுக்கு உகந்த கிரக அமைப்பு. சம்பந்திகள் பொருளாதார அந்தஸ்து மிகுந்தவர்கள். இதற்கு அசுபகிரக சம்பந்தமிருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஏழாமதிபதி வலுவிழந்தால் மறுமணத்தை யாராலும் தடுக்கமுடியாது. வெள்ளிக்கிழமை அஷ்டலட்சுமியை வழிபடவும்.
ஏழாமதிபதி பன்னிரண்டில்
பன்னிரண்டாம் இடமான அயன, சயன, விரய ஸ்தானத்தில் நின்றால் ஜாதகர் வாழ்க்கைத் துணையால் நிறைய விரயங்களை சந்திப்பார். வரவுக்குமீறி செலவு செய்வார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள். கடுமையான திருமணத் தடையைத் தருகிறது. பலருக்குத் திருமணம் நடப்பதில்லை. திருமணம் நடந்தால் தொழில், உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். சிலர் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனமாக, வாழ்க்கைத் துணையை நம்பியே பிழைக்கிறார்கள். நண்பர்கள், கூட்டுத் தொழிலால் ஆதாயம், அனுகூலம் கிடையாது. சம்பந்திகள் ஒருவரை யொருவர் புரிந்துகொள்ள மாட்டார்கள். பல இடங்களில் சம்பந்திகள் சண்டை தம்பதி களைப் பிரித்துவிடுகிறது. இதற்கு அசுபகிரக சம்பந்தமிருந்தால் இல்லற இன்பம் குறையும். வெள்ளிக்கிழமை சப்த கன்னிகளை வழிபடவும். நடைமுறை வாழ்வில் திருமண வாழ்க்கை தோல்வியை ஏற்படுத்துவதற்கு முன்ஜென்ம வினைப்பயன்தான் முழுமுதற் காரணமாக அமைகிறது. வரதட்சணைக் கொடுமை, மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமை, குழந்தை பாக்கியமின்மை, வாழ்க்கைத் துணையின் இறப்பு, புரிதல் இல்லாத காதல் திருமணம் போன்ற பல்வேறு காரணங்களால் இரண்டாவது வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கவேண்டிய சூழ்நிலையைப் பலருக்கு உருவாகிவிடுகிறது. பொதுவாக ஏழாமிடம் மறைவு ஸ்தானங் களுடன் சம்பந்தம்பெறாமல், நீசம். அஸ்தனம், அசுப கிரக சம்பந்தமில்லாமல் இருப்பது சிறப்பு. ஏழாம் பாவகத்தால் ஏற்படும் அனைத் துப் பிரச்சினைகளுக்கும் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தலே நல்ல தீர்வாகும்.
செல்: 98652 20406