குழந்தை பாக்கியத்தை ஒருவருடைய ஜாத கத்தில் லக்னத்திற்கு ஐந்தாம் பாவத்தைக் கொண்டு அறியலாம். சில தோஷங்களால் இந்த ஸ்தானம் பாதிக்கப்பட்டு குழந்தை பாக்கியத்தைத் தடைசெய்கிறது. அதுகுறித்த பொதுவான விவரங்களையும், ஜாதகரின் குணாதிசயங்களையும், பரிகாரங்களையும் 12 லக்னத்திற்கும் காண்போம்.

மேஷ லக்னம்

இந்த லக்னத்திற்கு ஐந்தாவது பாவம் சிம்மம். இதன் அதிபதி சூரியன். எனவே இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளும் இருக்கும் என்பது ஜோதிட விதி. நன்னடத்தை இருக்கும். ஆண் குழந்தையால் நன்மை ஏற்படும். தயாள குணமிருக்கும். ஐந்தில் சூரியன் இருந்தால் வருமானம் குறைவாக இருந்தாலும் தன்னிறைவோடு வாழலாம்.

ரிஷப லக்னம்

Advertisment

இதன் ஐந்தாம் பாவம் கன்னி. ராசியின் அதிபதி புதன். இவர் களுக்கு முதலில் பெண் குழந்தை யும், பிறகு ஆண் குழந்தையும் பிறக் கும். மூன்று அல்லது நான்கு குழந்தைகளுக்கு மேல் வாய்ப் பில்லை. இவர்களுக்கு பெண் குழந்தையிடமே அதிக பற்றும் பாசமும் இருக்கும். கல்வி, கலை யார்வம், ஆடம்பர ஆடைகள் ஆகியவற்றுடன் சுகமான வாழ்வு கிடைக்கப்பெறும். குழந்தைகளால் பேராதரவுண்டு. ஐந்தில் ராகு இருந்தால் கல்வியில் தடை ஏற்படும். குழந்தை பிறப்பதில் தாமதம் உண்டாகும்.

மிதுன லக்னம்

இதன் ஐந்தாம் பாவம் துலா ராசியாகும். இதன் அதிபதி சுக்கிரன். ஜாதகருக்கு குறைவற்ற செல்வமுண்டு. குழந்தைகளும் பெற்றோருக்கு அடங்கி நடப்பர். அவர் களைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்று வார்கள். ஜாதகர் தெய்வபக்தி நிரம்பிய வராகவும், ஆடை, ஆபரணம், ஆடம்பரம் ஆகியவற்றில் மிகுந்த விருப்பம் உடைய வராகவும் இருப்பார். வாசனை திரவியங்கள் மீது பிரியமுண்டு. மனைவியிடம் அதிக பாசமுள்ளவர். ஐந்தில் ராகு இருந்தால் குழந்தைகளால் கவலை உண்டாகும். ஐந்தில் சுக்கிரன் இருந்தால் குழந்தைகள் சார்ந்த செலவுகள் அதிகமாகும்.

Advertisment

122

கடக லக்னம்

இதன் ஐந்தாம் பாவம் விருச்சிகம். அதிபதி செவ்வாய். இவர்களுக்கு அளவோடு குழந்தைகள் பிறக்கும். குழந்தைகளால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. குழந்தைகள் கல்வியிலும் விளையாட்டிலும் சாகசங்களிலும் சிறந்து விளங்குவர். திருமண மாகும்வரை பெற்றோருக்கு அடங்கியவர் கள்போல நடிப்பார்கள். பிறகு தனியே பிரிந்துசெல்வார்கள். பொருள் சம்பாதிப் பதில் திறமை மிக்கவராக இருப்பர். சொந்தத் தில் வீடு, தோட்டம் என அசையா சொத்தை வாங்கி துன்பமின்றி வாழ்வார்கள். ஐந்தில் செவ்வாய் இருந்தால் அரசு வேலை பெருமை சேர்க்கும்.

சிம்ம லக்னம்

இதன் ஐந்தாம் பாவம் தனுசு ராசி. அதிபதி குரு பகவான். குருவை புத்திர காரகன் என்பர். இவர்களுக்கு அழகு, ஆற்றல், செயல்திறன் நிறைந்த பிள்ளைகள் பிறப்பார் கள். அவர்கள் பெற்றோரை தெய்வமாகப் போற்றிக் காப்பார்கள். ஜாதகர்கள் இன்பமோ துன்பமோ- அதை வெளிக் காட்ட மாட்டார்கள். மனைவி, மக்கள்மீது பாசம், நேசம் காட்டுபவர்கள். மூதாதையரின் அசையா சொத்துகளைப் பாதுகாப்பார்கள். ஆனால் ஐந்தில் ராகு, சனி, கேது இருந்தால், பிள்ளைகள் பின்னாளில் அரசியல் தொடர்பு, கூடாநட்பு, கல்வியில் நாட்டமின்மை, கூலிவேலை செய்வதில் திருப்தியடைதல் போன்ற செயல்களை நாடுவார்கள்.

கன்னி லக்னம்

இதன் ஐந்தாம் பாவம் மகர ராசியாகும். இதன் அதிபதி சனி பகவான். ஜாதகருக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்- பெண் குழந்தைகள் பிறக்கும். அல்லது இரண்டும் பெண்குழந்தைகளாகப் பிறக்கும். பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்கிநடப்பார்கள் என எதிர்பார்க்க இயலாது. சுயநலம் மிகுதியாகக் காணப்படும். பெற்றோருக்கு சொத்து இருந்தால், பணிவாக நடப்பதுபோல் நடித்து அதை அபகரித்துவிடுவார்கள். அண்ணன்- தம்பி, அக்கா- தங்கையிடம் ஒற்றுமையிருக் காது. பாகப்பிரிவினையில் பகையுணர்வு காணப்படும். இந்த ஜாதகர்களுக்குத் திருமணம் ஈடேறி குழந்தைகள் பிறந்தபின்பே யோகம் வரும். வீடு, நிலம், வாகனம், கால்நடை போன்றவை கிடைக்கப்பெறும். இவர்கள் அரசியல், பொதுவாழ்வில் ஈடுபட்டுப் புகழ் சேர்த்துக்கொள்வார்கள்.

துலா லக்னம்

இதன் ஐந்தாம் பாவம் கும்ப ராசியாகும். இதன் அதிபதி சனி பகவான். ஜாதகருக்கு ஆண் சந்ததிகளைவிட பெண் குழந்தைகளே அதிகமாக இருப்பர். பெண் சந்ததியாலேயே பெருமைபட வாழலாம். கல்வியறிவு, வேலைவாய்ப்பு, புகழ், பெருமை சுலபமாகும். சிறுவயதில் வறுமையில் வாடினாலும், 25 வயதிற்குமேல் உயர்வான நிலை வரும். திருமணம்தான் வாழ்வின் திருப்புமுனையாக அமையும். ஜாதகத்தில் சூரியன் ஐந்தில் இருந்தால் குழந்தை பிறந்தபிறகு பதவி உயர்வு, பட்டம், புகழ் என வாழ்வின் தரம் சுபிட்சமாக உயரும். ஐந்தில் செவ்வாய் இருந்தால் பணிபுரியும் மனைவியும் அமைவார். சுக்கிரன் ஐந்தில் இருந்தால் பெண் குழந்தையால் சில பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரும்.

விருச்சிக லக்னம்

இதன் ஐந்தாம் பாவம் மீனம். அதிபதி குரு பகவான். விருச்சிக லக்னத்தாருக்கு அறிவு, செயல்திறன், தெய்வபக்தி, ஆன்மிகத்தில் ஈடுபாடு, எழுத்தாற்றல் போன்றவை இருக்கும். அழகிய குழந்தைகள் பிறப்பார்கள். பிள்ளைகளால் புகழ்பட வாழ்வார்கள். ஜாதகர் துணிச்சலானவர். அதிக கல்விற்றவராகவும் இருப்பார். ஐந்தில் சுக்கிரன் இருந்தால் பெண் குழந்தைகளின் கல்வி சார்ந்து செலவுகள் அதிகமாகும். ஐந்தில் சனி இருந்தால் குழந்தைகளின் யோகத்தால் அசையா சொத்து, வீடு, வாகனம், தோட்டம் என சுய சம்பாத்தியத்தில் மனநிறைவோடு வாழ்வார்கள். ஐந்தில் சந்திரன் இருந்தால் வாய்ச்சொல்லில் வீரரான வாரிசுகள் தோன்றுவர். அயல்நாடு சென்று பொருளீட்டும் யோகமும் ஏற்படும்.

தனுசு லக்னம்

இதன் ஐந்தாம் பாவம் மேஷ ராசி. அதிபதி செவ்வாய். ஜாதகருக்கு அழகான மனைவி அமையும் வாய்ப்புண்டு. பிள்ளைச் செல்வத்திற் குக் குறையெதுவும் வராது. குழந்தைகள் அறிவாற்றல் நிரம்பியவர்களாக இருப்பார்கள். தாய்- தந்தையரைப் பேணிக் காப்பதோடு வேலைவாய்ப்பு, வருமானம் என எந்தத் துறையைத் தேர்வுசெய்தாலும் வல்லவராக இருப்பர். மனைவியின்மூலம் வீடு, நிலம், அசையா சொத்துகள் என சிறப்பான வாழ்வை எதிர்பார்க்கலாம். ஆனால் ஜாதகர் தற்பெருமை பேசுபவராகவும், பிறரைக் குறைகூறும் குணம் மிகுந்த வராகவும் இருப்பார். ஐந்தில் சந்திரன் இருந்தால் பெண் குழந்தைகளின் கல்வியில் தடை ஏற்பட்டு பிறகு முன் னேற்றம் உண்டாகும். ஐந்தில் புதன் இருந்தால் பிள்ளைகள் அதிக ஈடுபாட்டுடன் வியாபா ரம் செய்து பணம் சம்பாதிப் பார்கள். பூர்வீக வியா பாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வர்.

மகர லக்னம்

இதன் ஐந்தாம் பாவம் ரிஷப ராசி. அதிபதி சுக்கிரன். எனவே ஜாதகர் அதிக பெண் குழந்தைகளை எதிர்பார்க்கலாம். ஒன்று அல்லது இரண்டு ஆண் குழந்தைகள் பிறக் கலாம். ஐந்தில் செவ்வாய் இருந்தால் அறிவாளியான குழந்தைகள் பிறந்து நல்வழியில் செல்வர். ஐந்தில் புதன் இருந்தால் எதிரிகளைப் போராடி வெல்லவேண்டும். ஐந்தில் குரு இருந்தால் பிள்ளைகளின் கல்விக்காக அரும்பாடுபட நேரிடும். சுக்கிரன் ஐந்தில் இருந்தால் பிள்ளைகளால் குடும்ப கௌரவம் மேலோங்கும். ஐந்தில் சனி இருந்தால் பெண்கள் விஷயங்களில் உங்கள் அபிலாஷைகள் திருப்திகரமாக இருக்காது. ராகு இருந்தால் குழந்தைமேல் நம்பிக்கை குறையும். கேது இருந்தால் பிள்ளைகள் கல்வியில் திறம்பட வாழ்ந்து காட்டுவர். மேலும் மனைவிமூலமும் மற்றும் பிற பெண்களாலும் பொன், பொருள், வீடு, வாகனச் சேர்க்கை எதிர்பார்க்கலாம். திடீர் பணவரவுண்டு. தர்ம ஸ்தாபனம் நடத்தினால் நிலையான புகழை சம்பாதிக்கலாம்.

கும்ப லக்னம்

ஐந்தாம் பாவம் மிதுன ராசி. அதிபதி புதன். இந்த ஜாதகர்களுக்கு மக்கள் செல்வத்தில் குறையொன்றும் இருக்காது. ஆனால் ஆணோ பெண்ணோ- எந்த குழந்தைகளானாலும் அவர்களால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. பெரும்பாலும் சுயநலக்காரர்களாக இருப்பார்கள். லக்னத்திற்கு ஐந்தில் செவ்வாய் இருந்தால் பிள்ளைகளால் அதிக நன்மைகளை எதிர்பார்க்கலாம். அண்ணன்- தம்பிகளுக்கு ஆதரவாக நன்மைகள் பெறலாம். சுக்கிரன் ஐந்தில் இருந்தால் பிள்ளைகள் சுயமாக சம்பாதித்து வீடு, வாகனம் என பல நன்மைகளைச் சேர்ப்பர். இந்த ஜாதகர் களுக்கு கலையுலக வாழ்வு பொருளைப் பெற்றுத்தரும். அழகுள்ள மனைவி அமைவார். கடைசிக் காலம் வரை மனைவியின் பேராதரவு நிரந்தரமாக இருக்கும்.

மீன லக்னம்

இதன் ஐந்தாம் பாவம் கடக ராசி. அதிபதி சந்திரன். ஜாதகருக்கு ஓரிரண்டு பிள்ளைகளே பிறப்பர். பிள்ளைகள் பின்னாளில் உயர்கல்வி பெற்று புகழ், பொருள் ஈட்டுவார்கள். தந்தையிடம் அதிக பற்றும் பாசமும் நிலைத்திருக்கும். தாய்- தந்தையரை இறுதிவரை கைவிடமாட்டார்கள். ஐந்தில் செவ்வாய் இருந்தால் குழந்தைகள் கல்வியின்மீது அதிக நாட்டமின்றி இருப்பார்கள். விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பார்கள். ஐந்தில் புதன் இருந்தால் பிள்ளைகள் பருவ வயதில் கூடாநட்பால் திசைமாறி நடக்கக்கூடும். ஐந்தில் சுக்கிரன் இருந்தால் பிள்ளைகள் கூட்டுக்குடும்ப வாழ்வுக்கு ஏற்றவர்களாக இருப்பர். ஐந்தில் சனி இருந்தால் பிள்ளைகளின் கல்விக்கு அதிக பணம் செலவிட்டாலும் போதிய பலனை எதிர்பார்க்க இயலாது. மீனலக்னத் தினர் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பவர்கள். ஆசிரியர், பேராசிரியர் என கல்வித்துறையில் சாதனை படைப்பார்கள். வாக்குவண்மை உடையவர்கள்.

புத்திர தோஷம்- நாகதோஷம்

குழந்தையின்மைக்கு ஆண்- பெண் இருவரது ஜாதகங்களும் காரணமாகும். ஒரு ஆண் ஜாதகத்தில் இருக்கும் குறைகள் பெண் ஜாதகத்திலும் இருக்கத்தான் செய்யும். புத்திர ஸ்தானமான 5-ஆம் பாவத்தில் புத்திரகாரகன் குருவுடன் சந்திரன், செவ்வாய் இணைந்து காணப்படுவது கடுமையான தோஷமாகும். ஜாதகருக்கு குழந்தை பிறந்து இல்லாமல் போகலாம். லக்னத்தில் ராகு இருக்க, 5-ஆம் பாவாதிபதி 6, 8, 12 ஆகிய பாவங்களில் குரு, செவ்வாயுடன் சேர்க்கை பெற்று காணப்பட்டாலும் நாகதோஷம்- புத்திரதோஷம். லக்னத்தில் ராகு இருக்க, புதன் 5-ஆம் பாவாதிபதியாகி நவாம்சத்தில் செவ்வாயுடன் சேர்க்கை பெற்றால் கடுமையான நாக தோஷமாகும். 5-ஆம் பாவாதிபதி வக்ரம், நீசம், பகை பெற்று, பகைவர்கள் சம்பந்தமும் பெற்று லக்னத்திற்கு 6, 8, 12 ஆகியவற்றில் ஒன்றில் அமர்ந்திருந்தாலும் தோஷம்.

பெண்ணின் ஜாதகத்தில் 5-ஆம் பாவத்தைப் பார்ப்பதோடு, 5-ஆம் பாவத்திற்கு 5-ஆம் பாவமான 9-ஆம் பாவத்தையும் பார்த்து புத்திர பாக்கியப் பலனை அறியவேண்டும். 5-ஆம் பாவத்தில் அமர்ந்த கிரகம், 5-ஆம் பாவாதிபதி அமர்ந்திருக்கும் இடம், 5-ஆம் பாவத்தைப் பார்க்கும் கிரகங்கள், 5-ஆம் பாவாதிபதி அம்சத்தில் அமர்ந்துள்ள இடம் ஆகிய அனைத்தையும் பார்க்கவேண்டும். ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5-ஆம் பாவத்தில் ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால் சந்தான பாக்கியம் சந்தேகத்தைத் தரும். அல்லது மனைவி கருத்தரித்திருக்கும் காலங்களில் ஏற்பட்ட கவனச்சிதறலால் பிரசவத்தின்போது கெடுதல் நிகழலாம். லக்னத்தில் சனி, 5-ஆம் பாவத்தில் ராகு, 8-ல் சூரியன், 12-ல் செவ்வாயுடன் காணப்பட்டால் கடுமையான நாக தோஷமாகும். லக்னத்தில் ராகு, 5-ஆம் பாவாதிபதி, சனி 8-ஆம் பாவத்தில் குருவுடன் இருப்பது கடுமையான நாக தோஷமாகும். 5-ஆமதிபதி நீசமடைந்து அல்லது நீச கிரகத்துடன் சேர்ந்து, மகரத்தில் குரு அமர்ந்திருப்பதும் புத்திர தோஷத்தை உணர்த்துவதுதான்.

லக்னத்தில் செவ்வாய், 5-ஆம் பாவாதிபதி சனியாகி அவர் 8-ல் குருவுடன் சேர்ந்திருந்தால் இதுவும் கடுமையான நாக தோஷத்தை ஏற்படுத்தும். ஜாதகத்தில் லக்னாதிபதியுடன் ராகு சேர்க்கைபெற்றுக் காணப்படுவதும் தோஷமே.

சில நாகதோஷப் பரிகாரங்கள்

* தொடர்ந்து 14 ஏகாதசிகள் விரதமிருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கப்பெறும்.

* கந்தசஷ்டி விரதம் கடைப்பிடித்து கணேச ஹோமம் செய்தாலும் புத்திர தோஷம் விலகும்.

* வசதியுள்ளவர்கள் நிலமில்லாத ஒரு ஏழைக்கு நிலம் தானமளித்தால் நாகதோஷம் விலகும்.

* மாதம் ஒரு சிவாலயம் சென்று ஈசனை வழிபட்டு, நவகிரக சந்நிதியை வலம்வருவது நன்மை தரும்.

* ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க் கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஒரு தம்பதிக்கு அன்னதானமளித்து, தாம்பூலம் தட்சணை கொடுத்து, அவர்களை வலம்வந்து வணங்கினால் தோஷங்கள் அகலும்.

* மூன்று கிலோ சூரியகாந்தி விதை வாங்கி பூமியில் விதைத்தல் நன்று.

* ராகுவால் தோஷம் ஏற்பட்டால், செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தின்போது ராகுவின் அதிதேவதையான பத்ரகாளிக்கு எலுமிச்சைபழத் தோ-ல் எண்ணெய் விட்டு விளக்கேற்றி வைக்கவேண்டும். தோஷம் நீங்கும்.

* கேதுவால் புத்திரதோஷம் என்றால் சித்திரகுப்தர் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகம், ஆராதனை செய்தல் நன்று.

* ராகுவுக்குப் பிரீதிசெய்ய கருப்புநிற வேட்டி தானம் நன்று.

* நாகதேவதையின் இடமான நாகர்கோவில் சென்று நாகரம்மனை வேண்டிவந்தால் தோஷங்கள் அகலும்.