நாம் பின்பற்றும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின் வழியில் நம்மை வழிநடத்தும் அரும்பெரும் கடமை ஜோதிடவியலுக்கு உண்டு.
அதன் அடிப்படையில், கரணங்களின் வரிசையில் 11-ஆவது இறுதிக் கரணமாக இடம்பெற்றுள்ளது கிம்ஸ்துக்கினம்.
இந்தக் கரணம் அமாவாசையை ஒட்டிவருகின்றது. இதுவொரு அசுப கரணமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே இதில் எந்தவிதமான முகூர்த்தங்களும் குறிப்பதில்லை.
அதோடு இந்தக் கரணம் மண்ணைத் தோண்டி வேலைகள் செய்கின்ற நிகழ்வுகளுக்கு மட்டும் சாத்தியக்கூறாக அமைந்துள்ளது.
இதன் விலங்கு புழுவாகும். மற்றவர்களைக் கருத்தில் கொள்ளும்பொழுது, இவர்கள் சக மனிதர்களுக்குத் தீங்கிழைக்கும் குணம் பெற்றவர்களாக இயல்பிலேயே அமைந்து விடுகின்றார்கள் என்கின்றது ஜோதிட நிகண்டுகள்.
நமது உடலில் நிலைபெற்றுள்ள ஐம்பொறிகளில் நெற்றி கிழமையாகவும், கண் திதிகளாகவும், மூக்கு நட்சத்திரங்களாகவும், வாய் யோகங்களாகவும், செவி கரணமாகவும் அடைவு செய்யப்பட்டுள்ளது.
ஐம்
நாம் பின்பற்றும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின் வழியில் நம்மை வழிநடத்தும் அரும்பெரும் கடமை ஜோதிடவியலுக்கு உண்டு.
அதன் அடிப்படையில், கரணங்களின் வரிசையில் 11-ஆவது இறுதிக் கரணமாக இடம்பெற்றுள்ளது கிம்ஸ்துக்கினம்.
இந்தக் கரணம் அமாவாசையை ஒட்டிவருகின்றது. இதுவொரு அசுப கரணமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே இதில் எந்தவிதமான முகூர்த்தங்களும் குறிப்பதில்லை.
அதோடு இந்தக் கரணம் மண்ணைத் தோண்டி வேலைகள் செய்கின்ற நிகழ்வுகளுக்கு மட்டும் சாத்தியக்கூறாக அமைந்துள்ளது.
இதன் விலங்கு புழுவாகும். மற்றவர்களைக் கருத்தில் கொள்ளும்பொழுது, இவர்கள் சக மனிதர்களுக்குத் தீங்கிழைக்கும் குணம் பெற்றவர்களாக இயல்பிலேயே அமைந்து விடுகின்றார்கள் என்கின்றது ஜோதிட நிகண்டுகள்.
நமது உடலில் நிலைபெற்றுள்ள ஐம்பொறிகளில் நெற்றி கிழமையாகவும், கண் திதிகளாகவும், மூக்கு நட்சத்திரங்களாகவும், வாய் யோகங்களாகவும், செவி கரணமாகவும் அடைவு செய்யப்பட்டுள்ளது.
ஐம்பொறிகளில் செவி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று வள்ளுவமே நமக்குக் கூறியுள்ளது. அற்புதம் நிகழ்த்தும் உறுப்பாக கண்களைப் போற்றினாலும், கண் சென்று மட்டுமே ஒரு விஷயத்தைப் பற்றும். ஆனால் காதுகளிடம் வந்து விழும் தன்மை அடங்கியுள்ளது. எனவேதான் செவிக்கு இந்த சிறப்பு. அதேபோல்தான் கரணத்தின் நிலையும் அமைந்துள்ளது.
இக்கரணத்தார் தங்களின் முழு வீரத்தையும் நேருக்கு நேர் காண்பிக்க மாட்டார்கள். மாறாக விவேகத்தின்மூலமே பிறரை வெற்றிகொள்ளும் தன்மை வாய்ந்தவர்கள்.
அதிநுட்பமான அறிவுத்திறன் படைத்தவர்கள். இந்த கரணத்தின் அதிபதி புதனாக வருவதால் எதிலும் ஆழ்ந்து சிந்திக்கும் அறிவாற்றல் மிக்கவர்கள்.
வீட்டில் ஒரு கிம்ஸ்துக்கினம் கரணத்தில் பிறந்தவர் இருந்தால் நிச்சயமாக அவர்கள் குடும்பத்தில் ஆவணங்கள் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். மேலும் ஏமாற்றி கையெழுத்து வாங்குவது, பொய் கையெழுத்து போடுவது போன்ற பிரச்சினைகள் இவர்களின் வம்சாவளியில் இருக்கும்.
தாய் மற்றும் தந்தையின்மீது அதீத பாசம் உடையவர்கள். புதன் ஆளுமை இருப்பதனால் சிந்தித்து செயல்படுவார்கள். வாயு அதிதேவதையாக இருப்பதால், இவர்களின் எண்ண ஓட்டம் காற்றைக் கடந்த நிலையில் இருக்கும்.
முரண்பட்ட நண்பர்களின் சகவாசம் இவர்களுக்கு எளிதில் பற்றிக்கொள்ளும். அதேசமயம் தீயவர்களுடன் இணையாதவரை இவர்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள்.
ஒருவரைப் பழிவாங்கும் மனோநிலை இவர்களிடம் எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கும்.
மருத்துவம் என்பது இவர்களுக்கு கைவந்த கலையாகும். இவர்களில் பலர் எழுத்து, பண்ணைத் தொழிலான பட்டுப்பூச்சி வளர்ப்பு, மருத்துவ உபகரணங்கள் விற்பனை போன்றவற்றில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.
இவர்களின் ஜாதகத்தில் புதன் ஒன்று, ஐந்து, ஒன்பதாம், இடங்களில் அமர்ந்தால், ரியல் எஸ்டேட்டின்மூலம் உன்னதமான நிலையை அடைந்தவர்களைக் கண்கூடாகக் காணமுடிகின்றது.
இக்கரணத்தாருக்கு அதிகபட்சமாக தோல் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சினைகள் வருவதனைக் காணமுடிகிறது. மேலும் இவர்கள் நிச்சயமாக தோல் சிகிச்சைக்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை விரயம் செய்யும் சூழல் உருவாகிவிடும்.
இந்த கரணத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் புதன் நெருப்பு ராசியில் அமர்ந்திருந்தால், தொண்டி- தேவகோட்டை ஸ்ரீ வரதராஜப் பெருமாளை வழிபடுவது சிறப்பு.
நில ராசியில் அமர்ந்திருந்தால் ஓசூர் சந்திரகுலேஸ்வரரை வழிபடலாம். காற்று ராசியில் அமையும்பட்சத்தில் காங்கேயம் முக்தீஸ்வரரை வழிபடுவது அனுகூலத்தைத் தரும். நீர் ராசியில் அமர்ந்திருக்கும்பொழுது அறந்தாங்கி அருகில் ஆவுடை ஈஸ்வரரை வழிபடலாம். இவர்களின் வாழ்வியல் பயணத்தில் ஏற்பட்டிருக்கும் தடை மற்றும் தாமதங்கள் நீங்கி பூரணங்கள் நிறைவேற எடைக்கு எடை சர்க்கரை தானம் செய்வது சிறப்பு.
அதிதேவதை- லட்சுமி தேவி
மிருகம்- புழு
மலர்- கொங்கு மலர்
நைவேத்தியம்- சர்க்கரை
தூபம்- குங்கிலியம்
தெய்வம்- வைத்தீஸ்வரன் கோவிலில் இருக்கின்ற தன்வந்திரி
இவர்களின் வாழ்வியல் பயணம் சிறப் பாக இருப்பதற்கு கடல் உணவான இறால் உணவைத் தவிர்ப்பது சிறப்பினைத் தரும். மேலும் நூடுல்ஸ் போன்ற உணவையும் தவிர்ப்பது சிறப்பு.
இவர்கள் தங்கள் வீட்டில் அமைந்துள்ள தெய்வங்களுக்கும், இஷ்ட தெய்வங்களுக்கும் முத்து மாலையை அணிவித்து வழிபடுவது வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டுவரும். மேலும் வீட்டில் தெய்வங்களுக்கு மஞ்சள், குங்குமம் இடும்பொழுது ஜவ்வாதையும் கலந்துவைப்பது அதிர்ஷ்டத்தைத் தரும்.
தூபமாக குங்கிலியத்தைப் போட்டு மூங்கிலினால் செய்யப்பட்ட ஏதாவதொரு பாத்திரத்தில் சர்க்கரையை நைவேத்தியமாக வைத்து வழிபட எல்லா சிறப்பையும் இறை இவர்கள்வசம் சேர்க்கும்.
முந்தைய கரணங்களுக்குக் கூறியது போலவே பாக்கு மட்டை தட்டில் 11 ஆரஞ்சுப்பழம், 11 வெற்றிலை, 11 பாக்குகளுடன் தட்சணை வைத்து வைத்தீஸ்வரன் கோவிலில் அமைந்துள்ள தன்வந்திரி ஜீவசமாதிக்குச் சென்று வழிபட்டுவர வாழ்வில் அனைத்து விதமான சௌபாக்கியங்களையும் அடைய முடியும்.
செல்: 80563 79988