காரணங்கள் நிகழ்த்தும் அற்புதமும் ஆளுமையும்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/reasons-perform-miracles-and-personalities-melmaruvathur-s-kalaivani-0

சதுஷ்பாதம் கரணம்!

ரணங்களின் வரிசையில் பத்தாவது கரணம் சதுஷ்பாதம்.

சதுர் என்றால் நான்கு.

சதுஷ்பாதம் என்றால் நான்கு பாதங்களை உடையது என பொருள்படும். இதில் நான்கு கால்களை உடைய, பைரவரின் வாகனமான நாய் கரணநாதனின் விலங்காக அமைந்துள் ளது.

ஒரு திதியின் அளவான 12 பாகையில் 6 பாகை ஒரு கரணமாக அமைந்து அவை நிகழ்த்தும் அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்.

பூமியில் பிறப்பெடுத்த அத்தனை ஜீவராசிகளும் பிராணன் என்கின்ற காற்றின் தன்மையினை விடுத்துப் பயணிப்பதென்பது சாத்தியமில்லாத ஒன்று.

அதேபோல் ஒன்பது கிரகங்களில் கர்மகாரகன் என்று சொல்லக்கூடிய சனி பகவானின் கணக்குப் பிடியிலிருந்து விலகுவதும் அசாத்தியமே. அதனால்தான் கரணத்திற்கு பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றையும், நவகிரகங்களில் சனிபகவானையும், சமர்ப்பித்துள்ளனர் நம் ஜோதிடப் பெருமக்கள்.

ஆண்மகாரகன் சூரியனும், மனோ காரகன் சந்திரனும் ஒரே பாகையில் நிற்கும் வேளையான அமாவாசை திதியில் இந்த சதுஷ்பாத கரணம் தோன்றுக

சதுஷ்பாதம் கரணம்!

ரணங்களின் வரிசையில் பத்தாவது கரணம் சதுஷ்பாதம்.

சதுர் என்றால் நான்கு.

சதுஷ்பாதம் என்றால் நான்கு பாதங்களை உடையது என பொருள்படும். இதில் நான்கு கால்களை உடைய, பைரவரின் வாகனமான நாய் கரணநாதனின் விலங்காக அமைந்துள் ளது.

ஒரு திதியின் அளவான 12 பாகையில் 6 பாகை ஒரு கரணமாக அமைந்து அவை நிகழ்த்தும் அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்.

பூமியில் பிறப்பெடுத்த அத்தனை ஜீவராசிகளும் பிராணன் என்கின்ற காற்றின் தன்மையினை விடுத்துப் பயணிப்பதென்பது சாத்தியமில்லாத ஒன்று.

அதேபோல் ஒன்பது கிரகங்களில் கர்மகாரகன் என்று சொல்லக்கூடிய சனி பகவானின் கணக்குப் பிடியிலிருந்து விலகுவதும் அசாத்தியமே. அதனால்தான் கரணத்திற்கு பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றையும், நவகிரகங்களில் சனிபகவானையும், சமர்ப்பித்துள்ளனர் நம் ஜோதிடப் பெருமக்கள்.

ஆண்மகாரகன் சூரியனும், மனோ காரகன் சந்திரனும் ஒரே பாகையில் நிற்கும் வேளையான அமாவாசை திதியில் இந்த சதுஷ்பாத கரணம் தோன்றுகின்றது.

இது முகூர்த்தத் திற்கு ஏற்ற கரணம் அல்ல. மேலும் இது அசுப கரணமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது.

dd

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் இறை மற்றும் குருமார்களைப் பூரணமாக நம்புவார்கள். ஏன் என்று சிந்திக்கும்பொழுது, இந்த கரணத்திற்கு உரித்தான கிரகமே குருபகவான் ஆதலால்தான். மேலும் இவர்களின் வம்சாவளியில் கடைப்பிடித்து வந்த சடங்குகள், சம்பிரதாயங்ளை இன்றுவரை மாறாமல் கடைப்பிடிக்கும் ஆற்றல் இவர்களிடையே இருக்கும். பெரும்பாலும் இந்த கரணத்தில் பிறந்தவர்களது பூர்வீகம் பெயர் சொல்லக்கூடியதாக இருக்கும்.

இவர்களின் வம்சத்தில் குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகள் நிச்சயமாக இருக்கும். மேலும் தாங்கள் பிறப்பெடுத்த மதம் மற்றும் கோட்பாடுகளின் வசம் தீவிரமான சிந்தனையில் பயணிப்பார்கள்.

வேதங்கள் மற்றும் போதனைகள் சார்ந்த அணுகுமுறை இவர்களிடம் சிறப்பானதாக இருக்கும். மேலும் மற்றவர்கள் போதிக்கும் தன்மைக்கும், இவர்கள் கற்றுத் தரும் தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். இவர்கள் கற்றுத்தருவது மற்றவர்களுக்குப் புரியும் வண்ணம் அமைந்திருக்கும்.

இவர்கள் ஒரு விஷயத்தை அலசி ஆராயும் முறை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவர்களிடம் தர்க்கம் செய்து வெல்வது கடினம்.

ஒரு தன்மையை உருவாக்கி அதன் வல்லமையை உலகமறிய செய்வது இவர்களுக்குக் கைவந்த கலையாகும்.

இந்த கரணம் நடப்பிலுள்ள நேரத்தில் எந்த சுபகாரியமும் நிகழ்த்தக்கூடாது.

அமாவாசையின் முற்பகுதியில் சதுஷ் பாத கரணம் நடப்பில் இருப்பதே இதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.

வடமாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இந்த அமாவாசை திதியை அவ்வளவு சிறப் பானதாக எடுத்துக்கொள்வது கிடையாது.

சரி- அப்பொழுது இந்த கரணத்தில் என்ன செய்யலாம் என்று பார்க்கும்பொழுது தவம், தானம், தர்மம், தர்ப்பணம் போன்றவை செய்வது அதியற்புத பலனைக் கொடுக்கும். மேலும் உழைப்பு, ஆன்மிகம் சார்ந்த பணியில் ஈடுபடுவது வெற்றியை கைசேர்க்கும்.

அஷ்டமா சித்தி, அஷ்ட கர்மங்கள் போன்றவற்றை பிரயோகப்படுத்துவதற்கு சிறந்த நேரமாக இது அமைந்திருக்கும்.

அதேபோன்று செய்வினை, மாரகம், ஸ்தம்பனம் போன்ற எதிர்மறை செயல் பாடுகளுக்கும், அசாத்தியமான நிகழ்வுகளை செய்வதற்கும் ஏற்ற காலமாக இந்த சதுஷ்பாதம் கரணம் அமைந்துள்ளது.

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், கட்டுமானப் பணி, கால்நடை வளர்ப்பு, பண்ணை அமைத்தல் போன்ற துறையில் தன்னை மிளிரச் செய்துகொள்கின்றனர்.

இவர்களுக்கு வேலைக்குத் தகுந்த ஊதியம் கிடைப்பது அரிது, அதேபோன்று ஒரு காரியம் நிகழ்வதற்கு மற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைவிட இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்.

இவர்களில் பல பேர் முன்பு பேசிய வார்த்தையை மாற்றிப் பேசும் தன்மை படைத்தவர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாத சூழல் இவர் களுக்கு அடிக்கடி உருவாகிவிடும். இதற்கு வறுமையும் ஒரு காரணம்.

அதிதேவதை- குபேரனின் சேனாதிபதி ருத்ரன்

மிருகம்- நாய்

மலர்- கொன்றை மலர்

நைவேத்தியம்- தேன்

தூபம்- சந்தனப் பொடி

தெய்வம்- பைரவர்

இவர்களின் இஷ்ட மற்றும் வீட்டில் வழிபடக்கூடிய தெய்வங்களுக்கு மரத்தினாலான பாத்திரத்தில் தேன் வைத்து, சந்தனப் பொடி தூபமிட்டு, கொன்றை மலர் சாற்றி, விபூதி பூசி வழிபடுவது இவர்களில் வாழ்வில் அமைந்துள்ள அத்தனை இடர்ப்பாடுகளையும் தீர்க்க வழிவகுக்கும்.

இவர்கள் மயிலாடுதுறை- குத்தாலம் சேத்ர பாலபுரம் ஊரில் அமைந்துள்ள பைரவர் கோவிலுக்குச் சென்று 11 கமலா ஆரஞ்சுப் பழம் மற்றும் 11 வெற்றிலைப் பாக்குகள் கூடிய பாக்குமட்டைத் தட்டை அர்ச்சகரிடம் சமர்ப்பித்து தங்களது சங்கல்பத்தை அங்கே வைத்துவர எல்லாம் வல்ல இறை எப்பொழு தும் துணையிருக்கும்.

இந்த ஆலயத்திற்கு செவ்வாய்க்கிழமை அல்லது பரணி நட்சத்திரம் நடப்பிலுள்ள நாளில் செல்வது பெரும் சிறப்பைத் தரும்.

மேலும் இவர்கள் அனுதினமும் விபூதி பூசிக்கொள்வது சில பிரச்சினைகளிலிருந்து காக்கும் அரணாக செயல்படும். நாள்தோறும் நாய்களுக்கு உணவிடுவது பெரும் உயர்வினை அளிக்கும்.

செல்: 80563 79988

bala090824
இதையும் படியுங்கள்
Subscribe