ராமர் தன் வாழ்வில் தனது பெற்றோர் களால், தன்னைப்போன்ற சத்திரியகுல மன்னர் களால், தன் நாட்டு மக்களால் எந்தவொரு நன்மை யையும் அடையவில்லை. தந்தையின் கட்டளையை ஏற்று தன் மனைவியுடன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றபோது, ஒரு பாமர படகோட்டியான குகனின் நட்பு கிடைத்தது. அதனால் சில நன்மைகளும் உதவியும் கிடைத்தது. ஏழை மூதாட்டி சபரியின் அன்பு கிடைத்தது.

மனிதர்களைவிட கீழான வானர இனத்தைச் சேர்ந்த சுக்ரீவன், அனுமன், அங்கதன், நீலன் மற்றும் ஜாம்பவான் போன்றோரின் உதவி கிடைத்தது. இராவணன் சீதையை சிறையெடுத்துச் சென்றபின்னர் அந்த வானரங்களின் உதவியாலேயே இராவணனுடன் போர்புரிந்து அவனைக்கொன்று சீதையை சிறைமீட்டார்.

இராமர் தன் வாழ்வில் ஜாதி, மதம் போன்ற பேதங்களைப் பார்க்கவில்லை. தன்னைவிட கீழான குலத்தில் பிறந்த குகனைத்தான் சகோதரனாக ஏற்றார். வானர இனத்தில் பிறந்த அனுமனை இராமரும் சீதையும் தங்கள் மகனாக அங்கீகரித் தார்கள். இராவணனால் வெட்டப்பட்டு உயிரிழந்த ஜடாயு என்னும் பறவையைத் தனது தந்தையாக ஏற்றுக்கொண்டு, ஒரு மகனாக இருந்து தந்தைக்குச் செய்யும் இறுதிச் சடங்கை அந்த பறவைக்குச் செய்தார். இவர்களே இராமாவதாரத்தில் இராமரின் உறவுகள்.

Advertisment

rr

எல்லா உயிரினங்களும் சமம். மனிதர் களிடையே ஜாதி, இனம் போன்ற பேதங்கள் இல்லை என்னும் இராமரின் கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர்களுக்கு இராமரின் அருளும் ஆசியும் கடாட்சமும் கிட்டும். இராமரின் கொள்கையைக் கடைப்பிடிக்காமல், அவரை வணங்கிக்கொண்டும் ராமநாமத்தை ஜெபித்துக்கொண்டும் வாழ்பவர்களுக்கு இராமரது அனுக்கிரகம் கிடைக்காது. இராமாயணத்தைப் புரிந்து படிக்கவேண்டும். இராமரின் குணத்தைத் தெரிந்து வாழ நினைப்பவர்களே இராமரின் அன்புக் குரியவர்கள்; இராம பக்தர்கள்.

இராமரது ஜாதகத்திலுள்ள சனி, கேது சேர்க்கை, இராமரின் வாழ்க்கையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து அமைத்திருக்கிறது. இளம் வயதில் ரிஷிகளின் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுடன் வாழவைத்தது. விசுவாமித்திர முனிவரால் சீதையை இராமர் திருமணம் புரிந்தார். ரிஷிகள் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார்கள். இது இராமரின் முதல் வாழ்க்கை.

இராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தில் பாமரர் களுடன், வானரங்களுடன் வாழ்ந்தார். இது இரண்டாவது வாழ்க்கை. பின்னர் சீதையை சிறைமீட்டபின் அமைந்தது மூன்றாவது வாழ்க்கை நிலை.

இராமருக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் இராமர் வெற்றியடைய முக்கிய காரணமாக இருந்தவர் அனுமன் ஆவார். இராவணனின் மகன் இந்திரஜித் எய்த நாக பாணத்தால் இராமரின் படைவீரர்கள், லட்சுமணன் என அனைவரும் மூர்ச்சையடைந்து கிடந்தபோது, அனுமன்தான் சஞ்சீவி மூலிகைகளைக் கொண்டுவந்து அனைவரையும் காப்பாற்றினார்.

அசோகவனத்தில் தன்னை மாய்த்துக்கொள்ள சீதை முற்பட்டபோது அவளிடம் கணையாழியைக் கொடுத்து சீதையைக் காப்பாற்றினார் அனுமன்.

"வனவாசம் முடிந்த மறுநாள் இராமர் அயோத்திக்கு வரவில்லையென்றால் தீக்குளித்து உயிரிழப்பேன்' என பரதன் சபதம் செய்திருந்தான். அந்த குறிப்பிட்ட நேரத்தில் இராமர் அங்கு செல்லாத தால் பரதன் தீக்குளிக்க முயன்றபோது, விரைந்து சென்ற அனுமன், இராமர் வந்துகொண்டிருப்பதை அறிவித்து பரதனைக் காப்பாற்றினார்.

அனுமனைப் பற்றிய ஒரு ரகசியத்தை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அனுமன் சித்தர் அவதார மாகும். இராமாயண கதாபாத்திரங்கள் அனைவரும் சாதாரண மனித நிலையில் வாழ்ந்தார்கள். ஆனால் அனுமன் மட்டுமே அஷ்டமா சக்திகளைப் பயன் படுத்தினார். ரிஷிகள், முனிவர்கள் மந்திர சக்திகள் பெற்றவர்களேயன்றி அஷ்டமா சக்திகள் பெற்றவர்கள் அல்லர். சித்தர்களுக்கு மட்டுமே அவை உண்டு.

இராமாயணத்தில் அனுமனும் மகாபாரதத்தில் கிருஷ்ணரும் அஷ்டமா சக்திகளைப் பெற்ற சித்தர்கள் ஆவார்கள். ரிஷிகளால் மணம் செய்விக்கப் பட்ட இராமனும் சீதையும் பிரிந்தபோது, அவர்களை ஒன்றுசேர்த்து வைத்தது அனுமன்தான்.

பொதுவாக ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2 ஆகிய ராசிகளில் கேது இருந்தால் இது சனி, கேது சேர்க்கை நிலையாகும். இத்தகையவர்களுக்கு இராமரைப் போன்று வாழ்க்கை அமையும். இவர்களுக்கு பூர்வீக சொத்து, பணம் என எவ்வளவு இருந்தாலும் அதனை அனுபவிக்க முடியாது. விரத்தி மனப்பான்மையுடன் வாழ்வார்கள். உறவுகளால் பெரிய நன்மைகள் கிட்டாது. ஆன்மிக ஈடுபாடு கொள்வார்கள். ஆனால் இவர்களது பிரார்த்தனை பலிக்காது. கடவுளால் காப்பாற்றப்படாதவர்கள் இவர்கள்தான். எல்லாருக்கும் உதவிசெய்வார்கள். இவர்கள் அனுபவிக்கப் பிறந்த வர்கள் அல்ல. முற்பிறவி பாவ- சாபப் பதிவுகளை அனுபவித்துத் தீர்க்கப் பிறந்தவர்கள் என்று கூறலாம். இவர்கள் கடவுள் பக்தியுடன் வாழ்வதைவிட புத்தியுடன் வாழ்ந்தால் வாழ்வில் உயர்வடைய முடியும்.

அரசியலில், செய்யும் தொழிலில் தலைமைப் பதவியை நிர்ணயித்துத் தருவது சனி கிரகம்தான். ஒருவரின் ஜாதகத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிகளில் சனி இருந்து, அந்த ஜாதகர் அரசியலில் ஈடுபட்டிருந்தால் படிப்படியாக உயர்ந்து நாட்டையாளும் பதவியை அடைவார். பதவியில் இருக்கும்போதே மரணமடைவார். இந்த மூன்று ராசிகளில் குரு இருந்தால் ஆட்சியில் நிலையாக இருக்கமுடியாது. வெற்றி- தோல்வி, உயர்வு- தாழ்வென்று மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இவர்கள் இரண்டாம்நிலை தலைவராக இருந்தால் நிரந்தரமாகப் பதவியில் இருக்கலாம்.

ஒருவரது ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2 ஆகிய ராசிகளில் கேது இருந்தால் திரைப்படத் தொழிலில் புகழ்பெற்ற நடிகராவார். இதேபோன்று சனி, கேது சம்பந்தம் பெற்றவர்கள் மடாதிபதிகள், பீடாதிபதி கள் என ஆன்மிகம் சம்பந்தமான துறைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வாழ்வார்கள். ஆன்மிகம் சம்பந்த மான பூஜைப் பொருட்கள் வியாபாரம் செய்யலாம். சனி, கேது சம்பந்தம் பெற்றவர்கள் மருத்துவம் சார்ந்த தொழில்களையும் செய்யலாம்.

(தொடரும்)

செல்: 99441 13267