12 லக்னங்களுக்கும் ராகு தோஷம் போக்கும் பரிகாரங்கள்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/rahu-tosham-remedies-12-lakhs-s-vijayanarasimhan

("லால்கிதாப்' என்னும் நூலில் ராகுவுக்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை இங்கு காணலாம்.)

லக்னத்தில் ராகு இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

400 கிராம் அல்லது நான்கு கிலோகிராம் எடையுள்ள நாணயங்களை நதியில் அல்லது ஓடும் நீரில் விடுங்கள். பொருளாதாரச் சிக்கல்கள், பணமுடை அல்லது உடல் ஆரோக்கியக் குறைவு ஏற்படும் போது பூனையின் நச்சுக் கொடியை காவிநிறத் துணியில் கட்டி உங்களுடன் வைத்திருங்கள்.

கருப்பு அல்லது நீலநிற ஆடைகளை உடுத்தாதீர்கள். கழுத்தில் வெள்ளியிலான அணிகலனை அணியுங்கள். ஓடும் தண்ணீரில் அல்லது நதியில் தேங்காயை விடுங்கள்.

சந்திரனுக்கான பரிகாரங்கள் நன்மை பயக்கும். நான்கு லிட்டர் பாலில், ஒரு கிலோகிராம் பார்லி அரிசியைக் கழுவி ஓடும் தண்ணீரில் அல்லது நதியில் விடுங்கள். கோதுமை, வெல்லம் மற்றும் செம்புப் பொருளை தானம் கொடுப்பது உசிதமாகும்.

பாலில் குளியுங் கள். வீட்டு வராண்டாவில் தீ மூட்டாதீர்கள். முள்ளங்கியை தானம் தருவது நல்லது. கல் அல்லது நிலக்கரியை நீரில் விடுங்கள். சூரிய உதயத்திற்குப்பிறகு பறவைகளுக்கு தானியங்களை உணவாக அளியுங்கள். உங்கள் வீட்டிலோ, வராண்டாவிலோ புகையை உருவாக்காதீர்கள்.

ராகு 2-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

யானையின் காலடி மண்ணெடுத்து கிணற்றில் போடவும். தங்கம் அல்லது வெள்ளியினாலான சிறு உருண்டை அல்லது குங்குமப்பூவை வெள்ளிப் பெட்டியில் வைத்திருக்கவும். எலெக்ட்ரானிக் சம்பந்தமான பொருட்களை வரதட்சணையாகப் பெறாதீர்கள். தாயுடன் நல்லுறவைப் பேணி சீரும் சிறப்புமாக கவனித்துக்கொள்ளவும். உங்கள் மகனுக்கு வலி, உபாதைகள் எதுவும் ஏற்பட்டால் அவனது எடைக்கு எடை கடுகை ஓடும் தண்ணீரில் விடவும். குங்குமப்பூ வண்ணம் அல்லது மஞ்சள்நிறத் திலகத்தை நெற்றியில் இடுவது நன்மயளிக்கும்.

தங்க நகைகள் அணிவது நன்று. வீட்டின் வடமேற்குப் பகுதியில் வெள்ளி அல்லது தண்ணீரை வைக்கவும். ஏழைகளுக்கு ஆதரவளியுங்கள்.

ராகு 3-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

யானைத் தந்தத்தாலான பொருட்களை வைத்திருக்காதீர்கள். வெள்ளி ஆபரணங்களை அணியுங்கள் அல்லது உடன் வைத்திருங்கள்.

பெண்களுக்குத் திருமணம் செய்துவையுங்கள். கடுகு, புகையிலை ஆகியவற

("லால்கிதாப்' என்னும் நூலில் ராகுவுக்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை இங்கு காணலாம்.)

லக்னத்தில் ராகு இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

400 கிராம் அல்லது நான்கு கிலோகிராம் எடையுள்ள நாணயங்களை நதியில் அல்லது ஓடும் நீரில் விடுங்கள். பொருளாதாரச் சிக்கல்கள், பணமுடை அல்லது உடல் ஆரோக்கியக் குறைவு ஏற்படும் போது பூனையின் நச்சுக் கொடியை காவிநிறத் துணியில் கட்டி உங்களுடன் வைத்திருங்கள்.

கருப்பு அல்லது நீலநிற ஆடைகளை உடுத்தாதீர்கள். கழுத்தில் வெள்ளியிலான அணிகலனை அணியுங்கள். ஓடும் தண்ணீரில் அல்லது நதியில் தேங்காயை விடுங்கள்.

சந்திரனுக்கான பரிகாரங்கள் நன்மை பயக்கும். நான்கு லிட்டர் பாலில், ஒரு கிலோகிராம் பார்லி அரிசியைக் கழுவி ஓடும் தண்ணீரில் அல்லது நதியில் விடுங்கள். கோதுமை, வெல்லம் மற்றும் செம்புப் பொருளை தானம் கொடுப்பது உசிதமாகும்.

பாலில் குளியுங் கள். வீட்டு வராண்டாவில் தீ மூட்டாதீர்கள். முள்ளங்கியை தானம் தருவது நல்லது. கல் அல்லது நிலக்கரியை நீரில் விடுங்கள். சூரிய உதயத்திற்குப்பிறகு பறவைகளுக்கு தானியங்களை உணவாக அளியுங்கள். உங்கள் வீட்டிலோ, வராண்டாவிலோ புகையை உருவாக்காதீர்கள்.

ராகு 2-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

யானையின் காலடி மண்ணெடுத்து கிணற்றில் போடவும். தங்கம் அல்லது வெள்ளியினாலான சிறு உருண்டை அல்லது குங்குமப்பூவை வெள்ளிப் பெட்டியில் வைத்திருக்கவும். எலெக்ட்ரானிக் சம்பந்தமான பொருட்களை வரதட்சணையாகப் பெறாதீர்கள். தாயுடன் நல்லுறவைப் பேணி சீரும் சிறப்புமாக கவனித்துக்கொள்ளவும். உங்கள் மகனுக்கு வலி, உபாதைகள் எதுவும் ஏற்பட்டால் அவனது எடைக்கு எடை கடுகை ஓடும் தண்ணீரில் விடவும். குங்குமப்பூ வண்ணம் அல்லது மஞ்சள்நிறத் திலகத்தை நெற்றியில் இடுவது நன்மயளிக்கும்.

தங்க நகைகள் அணிவது நன்று. வீட்டின் வடமேற்குப் பகுதியில் வெள்ளி அல்லது தண்ணீரை வைக்கவும். ஏழைகளுக்கு ஆதரவளியுங்கள்.

ராகு 3-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

யானைத் தந்தத்தாலான பொருட்களை வைத்திருக்காதீர்கள். வெள்ளி ஆபரணங்களை அணியுங்கள் அல்லது உடன் வைத்திருங்கள்.

பெண்களுக்குத் திருமணம் செய்துவையுங்கள். கடுகு, புகையிலை ஆகியவற்றை தானமாகக் கொடுங்கள். குடும்பத்தைப் பிரிந்து தனியாக வாழாதீர்கள். சூரிய உதயத்திற்குப்பிறகு பறவை களுக்கு தானியங்களை உணவாக அளியுங்கள். பொய்சாட்சி சொல்லாதீர்கள். அரச மரத்தை வளருங்கள்.

ராகு 4-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

வெள்ளி ஆபரணம் அணியவும். 400 கிராம் அல்லது நான்கு கிலோகிராம் எடையுள்ள கொத்தமல்லி விதைகளை தொடர்ந்து ஏழு புதன் கிழமைகளில் நதியில் அல்லது ஓடும் நீரில் விடுங்கள். ஹரித்துவார் சென்று கங்கையில் புனித நீராடுங்கள்.

உங்கள் வீட்டருகில் அழுக்கு நீர் அல்லது சாக்கடை நீர் இல்லாது பார்த்துக்கொள்ளுங்கள். மாடிப் படிகளுக்கு அருகில் சமையலறை அமையா வண்ணம் பார்த்துக்கொள் ளுங்கள். வீடு கட்டும்போது, ஒவ்வொரு பாகமாக விட்டுவிட்டுக் கட்டாமல் ஒரேநேரத்தில் முழுமை யாகக் கட்டமுயலுங்கள். கரி, மண்ணெண்ணெய் போன்ற எரி பொருட்களை பரண்மீதோ, மாடி யிலோ வைக்காதீர்கள். கலைமகளை மனப்பூர்வமாக பூஜியுங்கள். பச்சைக் கல் மோதிரம் அணியுங்கள். (ஆஞ்ஹற்ங்).

புகையிலை சம்பந்தமான வஸ்துகளைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் வீட்டிலோ, வராண்டாவிலோ புகையை உருவாக்காதீர்கள். பொய்சாட்சி சொல்லாதீர்கள்.

ராகு 5-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

வெள்ளியிலான யானை சிலையை வீட்டில் வைத்திருங்கள். மது மற்றும் அசைவ உணவுகளை விலக்குங்கள். இரவில் மனைவியின் அருகில் ஐந்து முள்ளங்கிகளை வைத்திருந்து, காலையில் கோவிலுக்கு தானமாக அளியுங்கள்.

குழந்தைகள் சந்தோஷத்திற்காக வீட்டுப் படிகளுக்கடியில் வெள்ளி யிலான செங்கல் அமைப்பைப் புதைத்து வைப்பது நல்லது. எப்போதும் தீய குணங்களைவிட்டு நல்லவராகவே இருங்கள். எந்தக் காரணம் கொண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயலாதீர்கள். மனையாளுக்கு மறுதாலி கட்டுங்கள். திருமணத்திற்கு வரதட்சிணையாக மின்சாதனங்க ளையோ, நீலநிற ஆடைகளையோ அல்லது ஸ்டீல் பாத்திரங்களையோ பெற்றுக்கொள் ளாதீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு உங்கள் செலவில் திருமணம் செய்துவைத்தல் நல்லது. புகையிலை சம்பந்தமான வஸ்து களைப் பயன்படுத்தாதீர்கள். குடும்பத்தைப் பிரிந்து தனியாக வேறிடத்தில் வாழாதீர்கள்.

122

ராகு 6-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

வீட்டில் அரக்கு அல்லது கரிய வண்ண நாயை வளர்ப்பது அனுகூலமானது. சிறு வெள்ளி உருண்டையை உங்களுடன் வைத்திருப்பது நல்லது. கருப்புக் கண்ணாடி அணிவதும் நல்லது. தொடர்ந்து ஆறு நாட்களுக்கு கலைமகளின் மலர்ப்பாதத்தில் நீலவண்ண மலர்களை சமர்பிப்பது சிறப்பு.

சகோதர- சகோதரிகளிடம் வாக்குவாதம் அல்லது சண்டையிடக்கூடாது. கலைமகளின் கால்பிடித்து பணிந்து பூஜிப்பது நல்லது. எந்த சூழ்நிலையிலும் பொய்சாட்சி சொல்லுதல் கூடாது. மனைவி- கணவனுடன், உடன் பிறந் தவர்களிடம் சுமுகமான உறவைப் பேணுங்கள்.

ராகு 7-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

உங்கள் மனைவிக்குத் தொல்லைகள், கஷடங்கள் ஏதேனும் இருந்தால் வெள்ளியி னாலான செங்கற்கல் போன்ற அமைப்பை வீட்டில் வைத்திருங்கள். தேங்காய் அல்லது பாதாம் பருப்பை சனிக்கிழமையன்று ஓடும் நீரில் அல்லது நதியில் விடுங்கள். உங்கள் திருமணத்தின்போது மாமனாரிடமிருந்து தூய வெள்ளிக் கட்டிகளை வாங்கி, உங்கள் மனைவியிடம் கொடுத்து வாழ்நாள் முழுவ தும் பத்திரமாக வைத்திருங்கள். கங்கை நீருள்ள செம்பை வைத்திருங்கள். அதில் தண்ணீர் வற்றி விட்டால் மீண்டும் கங்கை நீரூற்றி சீல் வைத்து பத்திரமாக பூஜையறையில் வையுங்கள்.

உங்களுக்கு 21 வயதுக்குமுன் திருமணம் நடந்திருந்தால், வெள்ளி செம்பு நிறைய கங்கை நீர் நிரப்பி, அதனுள் வெள்ளி சதுரத் தகட்டை வைக்கவும். இதேபோன்று இன்னும் ஒரு செம்பையும் தயாரித்து தங்கள் மனைவி கையில் கொடுத்து, இரண்டையும் பத்திரமாகப் பூஜயறையில் வைக்கவும். வீட்டில் நாய்களை வளர்க்காதீர்கள். நீலநிற ஆடைகளை அணியாதீர்கள்.

திருமணத்தின்போது மாமனாரிடமிருந்து வரதட்சணையாக எலக்ட்ரிகல் சாதனங்கள், நீலநிற ஆடைகள் மற்றும் ஸ்டீல் பாத்திரங்கள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். முள்ளங்கிகளை தானமாகக் கொடுங்கள். நிலக்கரியை நீரோடு விடுங்கள். சூரிய உதயத்திற்குப்பிறகு பறவைகளுக்கு தானியங்களை உணவாகக் கொடுங்கள். உங்கள் வீட்டிலோ, வராண்டாவிலோ புகையை உருவாக்காதீர்கள்.

ராகு 8-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளில் உங்கள் எடைக்கு எடை நிலக்கரியை ஓடும் நீரிலோ, நதியிலோ விடுங்கள். தொடர்ந்து 43 நாட்களுக்கு எட்டு பாதாம் பருப்பை கோவிலுக்குப் படைத்து, அதில் நான்கை வாங்கி ஓடும் நீரில் அல்லது ஆற்றில் விட்டுவிடவும். நான்கு கிலோகிராம் நாணயங்களையும், எட்டு தேங்காய்களையும் ஆற்றில், ஓடும் நீரில் சமர்ப்பியுங்கள்.

வீட்டின் மேற்கூரையை மாற்றாதீர்கள். அப்படி மாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டால் பழைய பொருட்களோடு புதிய பொருட்களையும் கலந்து உபயோகித்து மாற்றுங்கள். வீட்டுக்கு வெளியில் அடுப்பிருந்தால் அதனுள் செப்புக் காசைப் போட்டுவையுங்கள். சதுரமான வெள்ளித் தகட்டை எப்போதும் கையில் வைத்திருங்கள். தூங்கும்போது தலைமாட்டில் சோம்பை வைத்துக் கொள்ளுங்கள். எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வேலைகளைப் பார்க்காதீர்கள். 42 வயதுவரை எட்டு காசுகளை நதி நீரில் விடுங்கள். திருமணத்தின்போது மாமனாரிட மிருந்து வரதட்சணையாக எலக்ட்ரிக்கல் சாதனங்கள், நீலநிற ஆடைகள் மற்றும் ஸ்டீல் பாத்திரங்கள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

ராகு 9-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

நாய் வளருங்கள். வீட்டுத் தலைவனாக நீங்கள் இருக்காதீர்கள். குதிரைவால்போல் கூந்தலை வைத்துக் கொள்ளாதீர்கள். குங்குமப்பூ வண்ணத் திலகத்தை நெற்றியில் வையுங்கள். தங்க ஆபரணம் அணியுங்கள். மனைவியின் சகோதர- சகோதரிகளிடம் சுமுகமான உறவைக் கடைப்பிடியுங்கள்.

கூட்டுக் குடும்பத்திலேயே வாழுங்கள். புனித யாத்திரைகளை மேற்கொள்ளுங்கள். வீட்டின் படியை ஒட்டிய பகுதியில் அசுத்த நீர், சாக்கடை நீர் ஓடாது சுத்தமாக வையுங்கள். வீட்டைச் சுற்றியும் இந்நிலை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏழ்மையில் உழல்பவர்களுக்கு ஆதரவளியுங்கள். கடுகு மற்றும் புகையிலை வஸ்துகளை தானமாகக் கொடுங்கள். ஆனால் புகையிலை வஸ்துகளைப் பயன்படுத்தாதீர்கள்.

ராகு 10-ல் இருந்தால் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்:

தலையை மறைக்க தொப்பி அல்லது முண்டாசு கட்டுங்கள். வெறுந்தலையை வெளிக்காட்டாதீர்கள். நீலநிறம் அல்லது கறுப்புநிறத் தொப்பியைத் தவிர வேறு வண்ண தொப்பிகளைத் தலையில் அணியாதீர்கள்.

மசூர் தால் எனும் மைசூர் பருப்பை நதியில்- ஓடும் நீரில் விடுங்கள். நான்கு கிலோ வெல்லத்தை நீரில் விடுங்கள் அல்லது தானமாகக் கொடுங்கள். பார்வை யற்றவர்களுக்கு உதவுங்கள். உணவளியுங் கள். செவ்வாய்க்குரிய பரிகாரங்களைச் செய்யுங்கள். இனிப்புகளையும், சிவப்பாடை களையும் தானமாகக் கொடுங்கள். கடுகு மற்றும் புகையிலை வஸ்துகளை தானமாகக் கொடுங்கள். பொய்சாட்சி சொல்லாதீர்கள். மனைவியின் சகோதர, சகோதரிகளிடம் சுமுகமான உறவைக் கடைப்பிடியுங்கள். உங்கள் வீட்டிலோ, வராண்டாவிலோ புகையை உருவாக்காதீர்கள்.

ராகு 11-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

தங்க ஆபரணங்களை அணியுங் கள். குங்குமப்பூ வண்ணத்தில் திலகமிட்டுக் கொள்ளுங்கள். வெள்ளி டம்ளரில் தண்ணீரைப் பருகுங்கள். வியாழக்கிழமை களில் மஞ்சள் துணியில் கடலைப் பருப்பை வைத்து தானம் கொடுங்கள். வியாழக்கிழமைகளில் வெங்காயம், வெள்ளைப் பூண்டை பதார்த்தங்களில் சேர்க்காதீர்கள். எலக்ட்ரானிக் சாதனங் களைத் தானமாக (பரிசாக) கொடுங்கள். யானை உருவம் கொண்ட பொம்மைகளை விலைக்கு வாங்காதீர்கள்.

புகைப் பழக்கம் உள்ளவர்கள், வெள்ளி பைப்பில் புகைபிடியுங்கள். வீட்டில் அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங் களும் ஒழுங்காக வேலை செய்வதை உறுதிப்படுத்துங்கள். நீலக்கல் மோதிரம் அணியாதீர்கள். நீலநிற ஆடைகளை அணியாதீர்கள். வீட்டில் எந்தவொரு ஆயுதத்தையும் வைத்துக்கொள்ளாதீர்கள். நான்கு கிலோகிராம் எடையுள்ள காசு களை நதியில் விடுங்கள். திருமணத்தின் போது எலெக்ட்ரானிக் பொருட்களை வரதட்சணையாகப் பெற்றுக்கொள்ளாதீர்கள். உபயோகத்திலில்லாத பாத்திரங்களை மூடிவைக்காதீர்கள்.

ராகு 12-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்:

பொருளாதார நிலையில் முன்னேற்றமடைய உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சகோதரிக்கோ, மகளுக்கோ அல்லது அத்தைக்கோ கொடுக்கவேண்டும்.

சிறிய சிவப்பு வண்ண பையில் சோம்பைப் போட்டு உங்களுடன் வைத்துக்கொள்ளவும். எப்போதும் சமையலறையில் அமர்ந்து உணவருந்தவும். நிலக்கரியை ஓடும் நீரில் விடவும். முள்ளங்கியை யானைக்கு உணவாகக் கொடுக்கவும். சதுரமான வெள்ளித் தகடை உங்கள் கழுத்தில் அணியவும். வெள்ளியிலான யானை பிரதமையை வீட்டில் வைத்திருக்கவும். உங்கள் வீட்டு வராண்டாவில் புகையை உருவாக்காதீர்கள். இல்லத்தின் கடைசியில் ஒரு இருட்டு அறையை நிர்மாணிக்கவும். தேவி சரஸ்வதியைப் பூஜித்து வணங்கவும். எலக்ட்ரிகல் உபகரணங்களை மாமனாரிட மிருந்து வரதட்சணையாகப் பெறவும்.

செல்: 63836 25384

bala060522
இதையும் படியுங்கள்
Subscribe