முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

சர்ப கிரகங்களான ராகு- கேது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சோபகிருது வருடம் ஜப்பசி மாதம் 13-ஆம் தேதி 30-10-2023 திங்கட்கிழமை மாலை 4.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியி-ருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலா ராசியி-ருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். 18-5-2025 இரவு 7.33 மணிவரை ராகு மேஷத்திலும், கேது- துலாத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர். (வாக்கியப் பஞ்சாங்கப் படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21-ஆம் தேதி 8-10-2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.35 மணிமுதல் 26-4-2025 மாலை 4.08 மணிவரை). இதனால் 12 ராசி நேயர்களுக்கும் உண்டாகக்கூடிய பலா பலன்களை இங்கு பார்ப்போம்.

இப்படிக்கு

முனைவர் முருகு பாலமுருகன்

Advertisment

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 12-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். உங்களுக்கு இருந்துவந்த அலைசல், டென்ஷன், பிரச்சினைகள் குறைந்து மன நிம்மதியுடன் எதிலும் செயல்படமுடியும். எதிலும் நிதானமாக செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். கூட்டாளிகளால் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். வெளியூர் தொடர்புகளால் ஏற்றங்களை பெறுவீர்கள். சனி 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறி மிகவும் வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த வம்பு, வாக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து மிகச்சிறப்பான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு விரும்பி இடமாற்றம் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். தற்போது ஜென்ம ராசியிலும், 2024 மே மாதத்திற்குப்பிறகு குரு 2-லும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்தது உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்கள் குறையக்கூடிய ஒரு யோகமும் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. மனைவி, பிள்ளைகள் விரும்பிய நவீன பொருட்களை வாங்கி தருவீர்கள். ஒருசிலருக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பங்காளியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறைந்து சுமூகநிலை உண்டாகும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன்களை பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மேலும் வளமான பலன்களை பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சாஸ்தா வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 5-ல் கேது, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகி அனுகூலங்களை பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் ஆதரவு மிகமிக சிறப்பாக இருக்கும். சனி 10-ல் இருந்தாலும், ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு தொழில், வியாபாரத்தில் அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களை வேலையாட்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், இயற்கை உணவுகளை உட்கொள்வதும் நல்லது. சிறு உடம்பு பாதிப்பு என்றாலும் அதற்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்வது மிகமிக நல்லது. உடன்பிறந்தவரிடம் விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் உண்டாகும். குரு விரைய ஸ்தானத்திலும், 1-5-2024 முதல் ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால் குரு மாற்றத்திற்குப்பிறகு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் தேவையற்ற மன கவலைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொள்வது நல்லது. ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்பட்டால்தான் அடைய வேண்டிய அணுகூலங்களை அடையமுடியும். பயணங்கள் மேற்கொள்கின்றபொழுது எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றுவது, சித்திரகுப்தர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தாயின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டிய நேரமாகும். உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி 9-ல் வலுவாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும் தொழில் அபிவிருத்தியை செய்து உங்கள் எண்ணங்கள் நிறைவேற கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. 10-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எதை செய்தாலும் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் செய்து சமுதாயத்தில் ஒரு உயர்வான நிலையை அடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருப்பதால் தொழிலை சிறப்பாக நடத்தமுடியும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் கிடைக்கும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம்கூட தற்போது குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நல்லவாய்ப்புகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல இடத்தில் தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைவதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடக்கூடிய வாய்ப்புகள், கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய நிலை உண்டு. நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பாகப்பிரிவினை ஏற்பட்டு உங்களுக்கு கிடைக்கவேண்டிய பங்கு கிடைக்கும். 1-5-2024 முதல் குரு 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். சனியின் சாதக சஞ்சாரத்தால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மேலும் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.

raghu

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள், பொருளாதார ஏற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற முடியும். வெளியூர், வெளிநாடுமூலமாக வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு அஷ்டமச்சனி நடப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதும், மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவதும் நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்ற போது பொறுமையைக் கடைப்பிடிப்பது, சட்ட விதிக்கு உட்பட்டு நடப்பது தற்போதைக்கு நல்லது. தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் செலவுகளை எதிர்கொள்ள மருத்துவக் காப்பீட்டுகள் எடுத்துக்கொள்வதுகூட நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வேலையாட்கள் சிறுசிறு இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்கள் தனி திறனால் சிறப்பாக செயல்பட்டு வளமான பலன்களை பெறுவீர்கள். தற்போது நீங்கள் தொழில், வியாபாரத்தில் சற்று நிதானத்தோடு இருந்தால் குறிப்பாக மே மாதத்துக்குப் பிறகு மிகப்பெரிய வளர்ச்சியினை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பனிச்சுமை இருந்தாலும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்துமுடித்து அடையவேண்டிய அனுகூலங்களை அடைவீர்கள். அதிகாரிகளுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும், விரும்பிய இடமாற்றம் கிடைக்கும், சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தற்போது சிறிது நெருக்கடி இருந்தாலும் 1-5-2024 முதல் குரு 11-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து ஒரு உயர்வான நிலையினை எட்டமுடியும். குரு மாற்றத்துக்குப்பிறகு மங்களகரமான சுப காரியங்கள் கைகூட கூடிய யோகம், மனைவி, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்கள், அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். மேலும் வளமான பலன்களை நீங்கள் பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

சிம்ம ராசி உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். ராசியாதிபதி சூரியனுக்கு பகை கிரகமான சனி 7-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு கண்டச்சனி நடக்கிறது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும், ஒண்ணுமே இல்லாத விஷயத்திற்குகூட கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை க்கடைபிடிக்கவேண்டும். உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒருசில உடல் உபாதைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்திற்கு அக்கறை எடுத்துக்கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. குருபகவான் 9-ல் சஞ்சரிப்பதால் சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள், போட்ட முதலை எடுக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் ஏதாவது ஒரு முக்கிய செயல் செய்யவேண்டும் என்று நினைத்து இருந்தால் அதனை உடனடியாக செய்வது மிகமிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது ஒரு நல்ல வாய்ப்புகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கக்கூடிய நேரமென்பதால் கிடைப்பதை பயன்படுத்திக்கொள்வது நல்லது. முதல் ஆறுமாத காலங்கள் பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்பதால் வரும் வரவுகளை சேமித்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. 1-5-2024 முதல் குரு பகவான் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத்திற்குப்பிறகு பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது தொழில், வியாபாரத்தில் மிகவும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவதும், முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பதும் தற்போதைக்கு சிறப்பு. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு வளமான பலனை ஏற்படுத்தும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது, எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டாளியிடம் வீண்வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு சூழலுக்கு ஏற்றவாறு பொறுமையோடு செயல்படுவது மிகமிக உத்தமம். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சனி 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் கடந்தகால பொருள் தேக்கங்கள் எல்லாம் தற்போது விலகி அதிகப்படியான லாபங்களை ஈட்டுவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள், வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். தகுதிவாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது குரு 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று பொறுமையோடு நீங்கள் சிறிது காலம் இருந்துவிட்டால் 1-5-2024-க்குப்பிறகு குரு 9-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் உங்களின் பொருளாதாரநிலை மிகமிக நன்றாக இருக்கும். நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யமுடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்களை பெறமுடியும், உடன்பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் ஏற்படும். நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கெல்லாம் விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். பெற்றோர் வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வீடு, மனை வாங்கவேண்டும் என்ற உங்களுடைய ஆசைகள் வரும் நாட்களில் பூர்த்தியாகும். மேலும் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, பாம்பு புற்றுக்கு பால்விடுவது நன்மையை தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 12-ல் கேது சஞ்சாரம் செய்ய உள்ளதால் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும், எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். பண வரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் மனைவி, பிள்ளைகள் விரும்பியதை வாங்கி தரக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்துவந்த மனக் கசப்புகள் எல்லாம் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள்காரகன் சனி பஞ்சம ஸ்தானமான 5-ல் வலுவாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்களுக்கும் முழுமையான ஆதரவு கிடைத்து, தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். கூட்டாளியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி தொழில் முன்னேற்றத் திற்கு கூட்டாளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் அன்புடன் பழகுவார்கள். ஒரு பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைத்து நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள்மீது இருந்த அவப்பெயர்கள் எல்லாம் விலகி நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு 7-ல் சஞ்சரிப்பதால் வரும் நாட்களில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு தற்போது அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சனி, ராகு சஞ்சாரம் சிறப்பாக இருப்ப தால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களை அடைவீர்கள் என்றாலும் 1-5-2024-க்குப்பிறகு குரு 8-க்கு செல்கின்றபொழுது பண விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. மேலும் வளமான பலன்களை பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது சித்திரகுப்தரை தரிசிப்பது, 2024 மே மாதத்திற்குப் பிறகு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 5-ல் ராகு, 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். சனி 4-ல் அமையப் பெற்று அர்த்தாஷ்டச்சனி நடப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். அசையா சொத்துவகையிலும், வண்டி, வாகனங்கள் மூலமாகவும் வீண்செலவுகள் ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சாப்பாட்டில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. பிள்ளைகள்வழியிலும், பங்காளிகள் வழியிலும் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முடிந்தவரை மற்றவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தற்போது சில நெருக்கடிகளை நீங்கள் சந்தித்தாலும் கேது 11-ல் இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். தற்போது 6-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு பண விஷயத்தில் சில நெருக்கடிகளை தற்சமயம் தந்தாலும் 1-5-2024 முதல் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் வரும் ஆறு மாதகாலம் கடந்துவிட்டால் உங்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். குரு மாற்றத்திற்குப் பிறகு பணவரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, பிறருக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய பலம், மங்கள நிகழ்வுகள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தற்போது நிதானத்தோடு செயல்பட்டால் விரைவில் ஒரு உயர்வான நிலையினை அடைவீர்கள். நீங்கள் தற்போது மேற்கொள்ளக்கூடிய செயல்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு முதலீடாக அமைந்து அதனுடைய பலன்களை வரும் மே மாதத்துக்குப்பிறகு அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடு இருந்தால் விரைவில் ஒரு பெரிய வாய்ப்பினை அடையக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மே மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு பதவி உயர்வு, மதிப்பு, மரியாதைகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மேலும் வளமான பலன்களை பெறுவதற்கு ஆஞ்சனேயர் வழிபாடு, பைரவர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். கூடுதல் பணிச்சுமை காரணமாக உங்கள் ஓய்வு நேரம் குறையும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படலாம். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வண்டி, வாகனங் களில் செல்கின்றபொழுது பொறுமையோடு செல்வது உத்தமம். சனி 3-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உங்கள் எண்ணங்களை நிறைவேற்றமுடியும். நீண்டநாளைய கனவுகள் தற்போது நிறைவேறி மன மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உங்களுக்கு இருந்துவந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் விலகி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும். பதவி உயர்வுகள் தேடிவரும். விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்பத்தோடு இணையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். ராசியாதிபதி குருபகவான் பஞ்சமஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் வரும் நாட்களில் எளிதில் கைகூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீக சொத்துவகையில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். 1-5-2024-க்குப்பிறகு குரு 6-க்கு செல்ல உள்ளதால் பணவிஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. சனி சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் சகலவிதத்திலும் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. மேலும் வளமான பலன்களை பெறுவதற்கு அம்மான் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, சர்பேஸ்வர வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு அர்ச்சனைச் செய்வது, சதுர்த்தி விரதம் இருப்பது நன்மை தரும்

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் கேது சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஏற்றங் களை பெறுவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த அலைசல், டென்ஷன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு சனி 2-ல் அமையப்பெற்று ஏழரைச்சனி நடப்பதால் குடும்ப உறுப்பினர்களை சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. பேச்சில் பொறுமையோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி யிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறப்பு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் நிதானத்தை கடைபிடிக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் முனைப் புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்களிடம் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. ஒவ்வொரு செய-லும் நீங்கள் கவனமாக செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக அனுகூலமான செய்தி கிடைக்கும். குருபகவான் தற்போது 4-ல் சஞ்சரிப்பது சற்று சுமாரான அமைப்பு என்றாலும் 1-5-2024 முதல் உங்கள் ராசிக்கு பஞ்சமஸ்தானமான 5-ல் குரு வலுவாக சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத் திற்குப்பிறகு உங்களின் பொருளாதாரநிலை மிகமிக நன்றாக இருக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கடன் பிரச்சினைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் வழியிலும் உறவினர்கள்மூலமாகவும் அனுகூலமான பலன்களை பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மே மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு மிகப்பெரிய ஒரு வளர்ச்சியினை நீங்கள் அடையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மேலும் வளமான பலன்களை பெறுவதற்கு உடல் ஊனமுற்றவர் களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது, சனிபகவானுக்கு சனிக்கிழமையன்று எள் தீபம் ஏற்றுவது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்க வேண்டும். ஜென்ம ராசியில் சனி அமையப் பெற்று ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. தேவையற்ற மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள மருத்துவக் காப்பீட்டுகள் எடுத்துக்கொள்வதும் தற்போதைக்கு சிறப்பு. பணவரவில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருக்க வேண்டும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்க்கவேண்டும். நம்பியவர்களே நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் முடிந்தவரை ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபார ரீதியாக நீங்கள் நினைப்பது நடக்க இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற வகையில் சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் பொறுப்புடன் செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இயந்திரங்கள் பழுதாவதால் வீண்செலவுகளை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத் தோடு இருந்துவிட்டு பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. அதிகாரிகள் ஆதரவு சற்று சாதகமாக இருப்பதால் எவ்வித நெருக்கடியும் சமாளிக்கமுடியும். வண்டி, வாகனங்களில் வெளியே செல்கின்ற பொழுது சட்ட விதிக்கு உட்பட்டு நடப்பது நல்லது. இக்காலத்தில் குரு 3, 4-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் கவனத் தோடு செயல்படவேண்டிய நேரம் ஆகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவேண்டும். ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது, முடிந்தால் ஒருமுறை குலதெய்வ ஸ்தலங்களுக்கு சென்று வருவது கெடுதியைக் குறைக்கும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். சில நேரங்களில் தன்னிலை மறந்து செயல்படக்கூடிய நிலை உண்டாகலாம். சூழலுக்கு தக்கவாறு கவனமாக செயல்பட்டால்தான் வீண் பிரச்சினை களைத் தவிர்க்கமுடியும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய நேரமாகும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு 12-ல் சனி சஞ்சரிப்ப தால் ஏழரைச்சனியில் விரைவுச்சனி நடக்கிறது. இதன்காரணமாக வீண்செலவுகள் ஏற்படலாம். அசையா சொத்து வகையில் வீண்செலவுகள், வண்டி, வாகனங்கள்மூலமாக தேவையற்ற விரயங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் 1-5-2024 முடிய குருபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, பணவரவுகள் தாராளமாக இருக்கக்கூடிய யோகம், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றக்கூடிய பலம் ஏற்படும். 2024 மே மாதத்திற்குப்பிறகு பண விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறரை நம்பாமல் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கவனத்தோடு இருந்தால் அனுகூலங்களை அடைய முடியும். வேலை ஆட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒருசில சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பிறர் சொல்லக்கூடிய ஆசைவார்த்தைகள் நம்பி தற்போது இருக்கக்கூடிய நிலையில் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கி கொள்ள வேண்டாம். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் பொறுப்போடு செயல்பட்டால் மனநிம்மதி யுடன் இருக்கமுடியும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் வரும் நாட்களில் பொறுமையோடு செயல்படுவது நல்லது. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய ஒருநிலை, உடன்பிறந்தவர்களால் ஒருசில ஆதாயங்கள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மேலும் வளமான பலன்களை பெறுவதற்கு அம்மான் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.