ஜோதிடவிய-ல் நம் அறிவுக்கு தெரிந்தவரை 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் என்ற அணிவகுப்பு அமைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இவைகளுள் பருப்பொருள் அற்ற நிலையில் அமைந்திருப்பது எவை என ஆராயும் பொழுது, அவைகள் ராகு மற்றும் கேதுவாக விடையளித்து, வியப்பையும் அளிக்கின்றது.
ராகு- கேதுக்கள் என்றால் என்ன? இதற்கு புராணங்கள் கூறும் கதை என்ன? அறிவியல்ரீதியான விளக்கங்கள் யாவை? என்பதை பற்றியும், இந்த ராகு- கேதுவின் சுழற்சி மனிதனின் வாழ்வில் நிகழ்த்தும் அதி அற்புதங்கள் எவை எவை? என்பதை பற்றியும், இவைகள் ஒரு ஜாதகத்தில் எங்கு அமர்ந்தால் தோஷம் என்றும் பின்வருமாறு காணலாம்.
நம் புராணத்தில் அமிர்தத்தை அடைய தேவர்களும், அசுரர்களும் எடுத்த முயற்சியில் பெற்ற வெற்றியினை அசுரர்களை புறக்கணித்து, தேவர்கள் பெற்ற அமிர்தத்தை, தேவ வேடமிட்ட அரக்கன் ஆகிய சுவர் பானு அருந்தி னான். இதைக்கண்ட சூரியனும், சந்திரனும், மகாவிஷ்ணுவிடம் முறையிட மோகினி வேடமிட்ட மகாவிஷ்ணு தன் கையிலுள்ள அகப்பையினால் சுவர் பானுவின் தலையினை வெட்டினார்.
அமிர்தம் உண்ட காரணத்தால் மரணம் சம்பவிக்காமல் வெட்டுப்பட்ட தலையுடன் பாம்பு உடலும், வெட்டுப்பட்ட உடலுக்கு ஐந்து பாம்புகளின் தலையும், முளைத்தது.
இதனால் வருத்தம் அடைந்த சுவர் பானு பிரம்மா தேவனிடம் தஞ்ச மடைந்து தனது பழைய உருவத்தினை வேண்டினார். பிரம்மதேவரோ நாராயண னால் தண்டிக்கப்பட்ட உன்னை பழைய உருவத்திற்கு மாற்ற இயலாது என்றும், இரு வேறு உடலைப்பெற்ற நீ பாம்பு தலையாக அமைந்த பகுதி ராகுவ
ஜோதிடவிய-ல் நம் அறிவுக்கு தெரிந்தவரை 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் என்ற அணிவகுப்பு அமைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இவைகளுள் பருப்பொருள் அற்ற நிலையில் அமைந்திருப்பது எவை என ஆராயும் பொழுது, அவைகள் ராகு மற்றும் கேதுவாக விடையளித்து, வியப்பையும் அளிக்கின்றது.
ராகு- கேதுக்கள் என்றால் என்ன? இதற்கு புராணங்கள் கூறும் கதை என்ன? அறிவியல்ரீதியான விளக்கங்கள் யாவை? என்பதை பற்றியும், இந்த ராகு- கேதுவின் சுழற்சி மனிதனின் வாழ்வில் நிகழ்த்தும் அதி அற்புதங்கள் எவை எவை? என்பதை பற்றியும், இவைகள் ஒரு ஜாதகத்தில் எங்கு அமர்ந்தால் தோஷம் என்றும் பின்வருமாறு காணலாம்.
நம் புராணத்தில் அமிர்தத்தை அடைய தேவர்களும், அசுரர்களும் எடுத்த முயற்சியில் பெற்ற வெற்றியினை அசுரர்களை புறக்கணித்து, தேவர்கள் பெற்ற அமிர்தத்தை, தேவ வேடமிட்ட அரக்கன் ஆகிய சுவர் பானு அருந்தி னான். இதைக்கண்ட சூரியனும், சந்திரனும், மகாவிஷ்ணுவிடம் முறையிட மோகினி வேடமிட்ட மகாவிஷ்ணு தன் கையிலுள்ள அகப்பையினால் சுவர் பானுவின் தலையினை வெட்டினார்.
அமிர்தம் உண்ட காரணத்தால் மரணம் சம்பவிக்காமல் வெட்டுப்பட்ட தலையுடன் பாம்பு உடலும், வெட்டுப்பட்ட உடலுக்கு ஐந்து பாம்புகளின் தலையும், முளைத்தது.
இதனால் வருத்தம் அடைந்த சுவர் பானு பிரம்மா தேவனிடம் தஞ்ச மடைந்து தனது பழைய உருவத்தினை வேண்டினார். பிரம்மதேவரோ நாராயண னால் தண்டிக்கப்பட்ட உன்னை பழைய உருவத்திற்கு மாற்ற இயலாது என்றும், இரு வேறு உடலைப்பெற்ற நீ பாம்பு தலையாக அமைந்த பகுதி ராகுவாகவும், மனித தலையாக அமைந்த பகுதி கேதுவாகவும், நவகிரக சஞ்சாரத்தில் இடம்பெறுவதாக கூறினார். சமாதானம் ஆகாத சுவர் பானு தன்னை காட்டி கொடுத்த சூரிய, சந்திரனை பழிவாங்கியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்த, சூரியனுக்கும், சந்திரனுக்கும், கிரகண தோஷம் உன்னால் உருவாகட்டும். அவர்களின் ஒளியினை ஒருசில நாழிகை நீ ஆக்கிரமிக்கலாம் என்றும், மற்ற கிரகங்களினைப்போல் நேர் கதியில் சுற்றாமல் வக்ரகதியில் சுற்றுவாய் என்றும் அருள் அறிவித்தார்.
அங்கு தோன்றிய மகாவிஷ்ணு பிரம்மனை தடுத்து இராவணனான ஒரு அசுரன் ஆட்சிசெய்யும் நேரத்தில் மற்றொரு அசுரனாகிய சுவர் பானுவிற்கு கிரக அந்தஸ்து அளித்தால் அது அசுர குலத்திற்கு பலம் ஆகிவிடும், எனவே இராவணன் மறைவுக்குப் பிறகு இவர்களுக்கு இந்த நிலையை அளிக்கவேண்டும். அதுவரை கேது கடக ராசியில் அமர்ந்து ரிக், யஜுர், சாம, வேதங்களையும், ராகு மகர ராசியில் அமர்ந்து அதர்வண, வேதத்தையும் கற்பிப்போர்மூலம் கற்க வேண்டும், என்று கூறினார்.
பின்பு இராவணனின் மறைவுக்குப்பிறகு இந்த ராகு- கேதுக்கள் போகக்காரனாகவும், ஞானகாரகனாகவும், நவகிரக சஞ்சாரத்தில் இடம் பெற்றதாக நமது தமிழ் புராணங்களில் கூறப் பட்டுள்ளது.
அறிவியல் ரீதியாக ராகு- கேது நாம் வாழும் பூமியானது சூரியனை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றது.
அதுபோல சந்திரன் பூமியை ஒரு வட்டப்பாதையில் சுற்றிவருகின்றது. இரு வட்டப்பாதைகளும் பூமியை சுற்றிவரும் வடப்புலத்திலும் மற்றும் தென் புலத்திலும், ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும். இந்த வடபுல வெட்டுப்புள்ளி ராகு எனவும், தென்புல வெட்டுப்புள்ளி கேது எனவும் அறியப்படுகின்றது. இந்த புள்ளிகளுக்கு இணையாக பூமி, சூரியன், சந்திரன் சம்பந்தப்படும் தருணம் சூரிய சந்திர கிரகங்கள் ஏற்படுகின்றன. தென் புலத்தைவிடவும் வடபுலம் அதீத ஈர்ப்புத்தன்மை உடையது என்கின்றது மின்காந்தவியல்.
அறிவியல் நோக்கில் ஆராய்ந்தால் வடபுலம் ராகு என கூறப்படுகின்றது. எனவேதான் நமது ஜோதிடத்தில் ராகுவின் பண்புகளாக ஈர்த்தல் வேகமாக பரவுதல், ஆக்கிரமித்தல், இணைதல், விழுங்கி துப்புதல் என்பன கூறப் பட்டுள்ளன. தெண்புல புள்ளியை கேது என்கின்றது ஜோதிடம். கேது என்பது ஜோதிடத்தில் புகை மற்றும் புதை குழியாக எடுத்துரைக்கப்படுகின்றது.ஒருவரை இயக்கவிடாமல் செய்வது கேது என்கின்றது ஜோதிடம்.
மேலும் ராகுவை கரும்பாம்பு என்றும் கேதுவினை செம்பாம்பு என்றும் கூறுகின் றனர்.
ஜோதிடத்தில் ராகு அமர்ந்த இடம் பெரும் வ-மையினை பெற்றிருக்கும். உதாரணமாக இரண்டாம் இடத்தில் ராகு அமர்ந்தால் அதீத பேச்சாற்றல் அதாவது- நாக்கில் வலு ஏற்படுகின்றது, அதேபோன்று சத்ரு ஸ்தானமான ஆறாம் பாவகத்தில் ராகு அமரும்போது சத்ரு ஜெயம் உண்டாகிறது.
மேலும் ராகு அமர்ந்த இடத்தில் கடமையினை ஜாதகர் சரிவர செய்திருக்க மாட்டார். உதாரணமாக ஒன்பதில் அமர்ந்த ராகு தந்தை தந்தைவழியினருக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய தவறியவர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
கேது அமர்ந்த பாவகம் ஒரு பெரிய நெருட-னை தந்துவிடும். கேது அமர்ந்த பாவகம் பெரும்பாலும் சிறப்பினை தராது, அந்த பாவகம் சார்ந்த தரவேண்டிய உரிமையோ, நல்லதையோ, பெரும்பாலும் கொடுப்பதில்லை. தான் அமர்ந்த இடத்தில் வளர்ச்சியினை தடைக்கு உள்ளாக்கி அடக்கி விடுவதே கேதுவின் வேலையாகும்.
நமது பரு உட-ல் ராகு தசைநார் பகுதிகளை இணைக்கும் ஜவ்வாகவும், கேது ரோமங்களாகவும், அமையப்பெற்றுள்ளது. வெளியில் தெரியும் அனைத்து வித நோய்களும் ராகு எனவும், வெளியில் தெரியாத நோய்கள் கேது எனவும் ஜோதிடம் எடுத்துரைக் கின்றது.
ராகு மற்றும் கேதுவின் இடையில் தனித்து நிறுத்தப்படும் கிரகம் எதுவானாலும் அந்த கிரகத்தின் காரகம் பெரும் துன்பத்திற்கு உட்படுத்தப் படுகின்றது.
ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவுடன் இணைந்த கிரகங்களின் இயக்கத்தை இவர்களை கையில் எடுத்துக்கொள்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் பார்க்கும் இடம், ஏறிய நட்சத்திரம், அமர்ந்த வீடு, என்று எல்லாவற்றையும் தன்வசமாகிக்கொள்கின்றனர்.
சூரிய சந்திரர்களோடு ராகு- கேது இணைவது கிரகண தோஷமாகவும், பித்ரு மற்றும் மாத்ரு தோஷமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
மேலும் ஒரு ஜாதகத்தில் லக்னம் மற்றும் இரண்டாம் இடத்திலும் ஏழு மற்றும் எட்டாமிடத்திலும் இந்த நிழல் கிரகங்கள் அமரும்பொழுது இது சர்பதோஷமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
மேலும் ராகு- கேது ஆகிய கிரகங்களுக்கு இடையில் அமர்ந்துள்ள 180 டிகிரியில் அனைத்து கிரகங்களும் அடங்கும்பொழுது இது காலசர்ப்ப தோஷமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது அதோடு மட்டுமல்லாமல் ராகு தசா புக்தியில் 18 வருடங்கள் பயணிக்கும்பொழுதுதான் ஏற்றுள்ள பாவகத்திற்கு ஏற்ப முதல் 9 வருடங்கள் சுபிக்சமான சூழ்நிலையை தந்தால் அடுத்து 9 வருடங்கள் சற்று நெருடலான சூழ்நிலையையும், முத-ல் சற்று நெருடலை தந்தால் இறுதியில் சுபிக்சத்தையும் தருகின்றது. பெரும்பாலும் ராகுவின் தசையில் பேராசை, சில தீய பழக்கங்களுக்கு அடிமை ஆகுதல் போன்றவற்றினை தரும். ராகு தசை இளமையில் வரும்பொழுது அது எடுத்துக்கொள்ளும் முதல் வேலையே கல்வியினை ஒரு வழி செய்வதுதான்.
கேது ஏழு வருடங்கள் தசை நடத்தும்பொழுது பெரும்பாலும் தடை, தாமதங்கள் மன உறுதியினை குறைப்பது, ஆன்மிகம் சார்ந்த பயணங்கள், ஆன்மிக வழியில் தேடுதல், போன்றவற்றினை தந்து ஒரு பெரும் நாணத்தை உணர்த்தும்.
ராகு- கேது உள்ள ஜாதகங்களுக்கு அதே ராகு- கேது அமைப்பிலுள்ள ஜாதகங்களை இணைப்பது சிறப்பு என்று ஜோதிடவியலில் கூறப்பட்டுள்ளது. இருந்தபொழுதிலும் இதில் நிறைய விதிவிலக்குகளும் பொருந்தியுள்ளது இரண்டில் கேது அமர்ந்த ஜாதகத்திற்கு அதே இரண்டில் கேது அமைந்த ஜாதகத்தை இணைக்கும்பொழுது இவர்களின் வாழ்வில் பல சங்கடங்களை கை கொள்கின்றனர்.
ராகு- கேது தோஷம் இருப்பவர்கள் காலகஸ்தி ஒரு சிறந்த பரிகார தலமாக விளங்குகின்றது.
மேலும் ராகு- கேது காரகங்களாக அமையப்பெற்ற மனிதர்களுக்கு உதவுவதும் இந்த ராகு- கேது தோஷத்தின் வீரியத்தை குறைக்கின்றது என்பதனை நிதர்சனத்தில் காணமுடிகின்றது.
ராகு தசை நடப்பவர்கள் காலபைரவரின் வழிபாட்டின்மூலம் வரும் இன்னலை துடை தெரிய முடியும் கேது தசை நடப்பவர்கள் அருகம்புல் சாறு அருந்துவது மற்றும் விநாயகர் வழிபாடு தடையை தகர்த்தெறியும்.
செல்: 80563 79988