லக்ன கேந்திரத்தில், விருச்சிக ராசியில் ராகு பகவான் இருந்தால் மனக்கஷ்டம் இருக்கும்.
மனதில் பயம் தோன் றும். ஜாதகர் ஆவேசமாகப் பேசுவார். வெற்றிபெறு வதற்காக கடுமையான போட்டிகளை சந்திப்பார். ரகசியமாக செயல்பட்டு வெற்றிகாண்பார்.
2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் ராகு நீசமடைகிறார். அதனால், ஜாதகருக்கு குடும்பத்தில் உள்ளவர்களுடன் சுமாரான உறவே இருக்கும். அதன்காரணமாக மனக் கஷ்டம் ஏற்படும். சிந்தனைகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் எப்போதும் பணத்தைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். பணம் சம்பாதிப்பதற்கு கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும்.
3-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைக்கக்கூடியவர். ரகசியமாக செயல்பட்டு வெற்றி பெறுவார். உடன்பிறந்தோர் அவருக்கு எப்போதும் பிரச்சினைகளைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் மனதில் கவலை உண்டாகும்.
4-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தால் தாய்க்கு மனக்கஷ்டம் இருக்கும். பகைவர்களால் சொத்துகளுக்கு பிரச்சினை உண்டாகும். குடும்ப உறவில் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். அலைச்சல் கள் அதிகமாக இருக்கும்.
5 ஆம் பாவத்தில், திரிகோணத்தில், குருவின் மீன ராசியில் ராகு பகவான் இருந்தால் படிப்பில் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்கியத்தில் பிரச் சினை இருக்கும். ஜாதகர் கடுமை யாக உழைப்பார். சிலருக்கு அவர்கள் படித்த படிப்பால் நன்மை கிடைக்காது.
6-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் ராகு பகவான் இருந்தால் உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். பல ரகசிய செயல்களைச் செய்து ஜாதகர் பகைவர்களை வெல்வார். பல தடை களைத் தாண்டி வெற்றி பெறுவார். ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார்.
7-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் ராகு பகவான் இருந்தால் பல கஷ்டங்கள் இருக்கும். ஜாதகருக்குத் தன் மனைவியுடன் சில பிரச்சினைகள் இருக்கும். சில நேரங்களில் பெரிய பிரச்சினையில் அவர் அகப்பட்டுக்கொள்வார். எனினும், பல கில்லாடித்தனமான காரியங்களைச் செய்து அவர் அதிலிருந்து வெளியே வந்துவிடுவார்.
8-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் ராகு பகவான் உச்சமடைகிறார். அதனால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். தைரிய சாலியாக இருப்பார். சில நேரங்களில் தேவை யற்றதைப் பேசுவார். அதனால் பிரச்சினை உண்டாகும். பெயர், புகழ் இருக்கும்.
9-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். அதிர்ஷ்டத்தில் தடைகள் ஏற்படும். தர்மச் செயல்களில் தடங்கல்கள் வரும். மனதில் அதிக கவலைகள் இருக்கும். இளம்வயதில் பல கஷ்டங்கள் உண்டாகும்.
10-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாத கருக்கு தந்தையுடனான உறவில் சில பிரச்சினைகள் இருக்கும். அரசாங்க வேலைகளில் சில சிக்கல்கள் இருக்கும். அதன் காரணமாக மனதில் கவலை உண்டாகும். வியாபாரத்தில் பல போட்டிகள் இருக்கும். நிறைய தடங்கல்கள் ஏற்படும். அனைத் தையும் கடந்து ஜாதகர் இறுதியில் வெற்றி பெறுவார்.
11-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு பல வெற்றிகள் கிடைக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு அவர் பணத்தை சம்பாதிப்பார். பல ரகசிய காரியங்களில் ஈடுபடுவார். அதில் அவருக்கு ஆதாயம் கிடைக்கும். சுயநலவாதியாக இருப்பார். சில நேரங்களில் எதிர்பாராத வழிகளின்மூலம் பணம் வரும்.
12-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் ராகு பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். மனதில் அதிகமான சிந்தனைகள் தோன்றும். சில நேரங்களில் அவசியமற்ற சிந்தனைகள்கூட இருக்கும். வெளித் தொடர்புகள் அதிகமிருக்கும். அதன் மூலம் ஜாதகர் பணத்தை சம்பாதிப்பார்.
செல்: 98401 11534