துலாம் லக்னத்தில், சுக்கிரனின் துலாம் ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் மெலிந்த தோற்றத்தைக் கொண்டிருப்பார். உடலில் சிறிய சிறிய பிரச்சினைகள் இருக்கும். தன் வளர்ச்சிக்காக பல தகிடுதத்தங்களையும் செய்வார். தன்னால் முடியாதது எதுவுமே இல்லை என்பதைப்போல மற்றவர்களிடம் தன்னைக் காட்டிக்கொள்வார்.

2-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் ராகு பகவான் இருந்தால் பணம் சம்பாதிப்பதற்காக ஜாதகர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.பணத்தைச் சேமிப்பதென்பது கஷ்டமான விஷயமாக இருக்கும். வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் பல பிரச்சினைகளை உண்டாக்குவார்கள்.

rr

Advertisment

3-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் ராகு பகவான் இருந்தால், ஜாதகரின் தைரியத்தில் குறைவிருக்கும். உடன்பிறப்பு களால் பிரச்சினைகள் இருக்கும்தான் வளர வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல ஜாதகர் தயாராக இருப்பார். தவறான பாதைகளிலும் அவர் பயணிப்பார்.

4-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகரின் அன்னையின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். பூமி, வாகனம் வாங்குவதில் பிரச்சினை ஏற்படும். சனியின் ராசியில் ராகு இருப்பதால், பல குறுக்குவழிகளில் ஜாதகர் பயணிப்பார். கஷ்டங்களைக் கடந்து வெற்றிபெறுவார்.

5-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு பிள்ளைகளால் மனக்கஷ்டம் இருக்கும். எப்போதும் அவர் எதைப் பற்றியாவது சிந்தித்துக்கொண்டேயிருப்பார். குறைவாகவே பேசுவார். எனினும், பேச்சில் காரம் அதிகமாக இருக்கும். சரியான பாதையில் ஜாதகர் எப்போதும் பயணிக்கவே மாட்டார்.

6-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் ராகு பகவான் இருந்தால் வாழ்க்கையில் சிறிய சிறிய தடங்கல்களும் கஷ்டங்களும் இருக்கும். ஆனால் ஜாதகர் அனைத்தையும் கடந்து வெற்றிபெறுவார். துணிச்சலுடன் செயல்பட்டு தன் பெயரை நிலைநிறுத்துவார்.

7-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் ராகு பகவான் இருந்தால் கணவன்- மனைவிக்கிடையே சில பிரச்சினைகள் இருக்கும். வியாபாரத்தில் தடங்கல்கள் இருக்கும். ஜாதகர் பல ரகசிய செயல்களைச் செய்து, அவற்றின்மூலம் ஆதாயமடைவார்.

8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் ராகு பகவான் இருந்தால், ஜாதகருக்கு அவ்வப்போது நோயின் பாதிப்பிருக்கும். சில நேரங்களில் தாங்கிக்கொள்ளமுடியாத அளவிற்கு கஷ்டங்கள் இருக்கும். எனினும் ஜாதகர் அனைத்தையும் துணிச்சலாக சந்தித்து வெற்றிபெறுவார். எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் வாழ்வார்.

9-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் ராகு பகவான் உச்சமடைகிறார். அதனால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். இளம்வயதில் பல கஷ்டங்களை அனுபவிப்பார். தர்மச் செயல்களில் ஜாதகர் ஈடுபடுவார். பல பயணங்களை மேற்கொள்வார். அதன்மூலம் அவருக்கு பெயர், புகழ் கிடைக்கும்.

10-ஆம் பாவத்தில் சந்திர னின் கடக ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாத கருக்கு தன் தந்தையுடன் கொண்டிருக்கும் உறவில் குறையிருக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சினைகள் ஏற்படும். சிலர் அரசியல் உலகில் பெரிய பதவிகளை வகிப்பார்கள்.

11-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் பணம் சம்பாதிப்பதற்காக நிறைய உழைக்க வேண்டிய திருக்கும். அவர் பல ரகசிய காரியங்களில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிப்பார்.

12-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு நிறைய செலவுகள் உண்டாகும். சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். பலருக்கு பணப் பிரச்சினை இருக்கும். சிலர் வெளியூர் அல்லது வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதிப்பார்கள்.

செல்: 98401 11534