வேதைப் பொருத்தம்

வேதை என்றால் தடை அல்லது இடையூறு என்று பொருளாகும். வேதைப் பொருத்தம் என்பது ஆண்- பெண் இருவரின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அறிந்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் ஆற்றல்கொண்ட பொருத்தமாகும். திருமண வாழ்க்கையில் தேவையில்லாத வேதனையைக் குறைத்து இனிமையான மணவாழ்க்கை அமைய பார்க்கக்கூடிய பொருத்தமாகும். பெண்னை ஆண் தாக்குபவனாக இருக்கக்கூடாது. தாங்கிப் பிடிப்பவனாக இருக்கவேண்டும் என்பதற்காக வேதைப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. இந்தப் பொருத்தம் இருந்தால் தம்பதிகளினின் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி நிலவும்.

ரஜ்ஜுப் பொருத்தம் இல்லையென்றால் குறுகியகால மணவாழ்வாக இருந்தாலும்கூட சந்தோஷமாக இருக்கும். வேதை நட்சத்திரம் சேர்ந்தால் குறுகியகால மணவாழ்வுகூட நிம்மதியில்லாமல் போய்விடும். வேதைப் பொருத்தம் இல்லாத திருமணம் சதாசர்வ காலமும் சண்டைதான்.

Advertisment

ff

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரேயொரு நட்சத்திரம் வேதையாக அமையக் கூடும். ஜாதகத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் அதற்கான வேதை நட்சத்திரங்களும் உள்ளன. குறிப்பிட்ட வேதை நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று இயல்பாகவே பிடித்தம் இருக்காது. (வேதை நட்சத்திர அட்டவணை காண்க.)

செவ்வாயின் நட்சத்திரங்களான அவிட்டம், சதயம், மிருகசீரிஷம் ஒன்றுக்கென்று வேதை நட்சத்திரங்களாகும். அட்டவணையை உற்று நோக்கினால் ஒரு உண்மை புரியும். வேதை நட்சத்திரம் என்பது அந்தந்த நட்சத்திரங்களின் ஆறாவது ராசியிலோ அல்லது எட்டாவது ராசியிலோ இடம்பெறும். இது ராசிப் பொருத்தத்தில் சஷ்டாஷ்டக தோஷமாக அமையும் ஆறாவது, எட்டாவது ராசியாகும்.

அதேபோல் இந்தவித வேதை நட்சத்திரம் ஒரே ரஜ்ஜுவாக, ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாத நட்சத்திராகவ் அமையும். எனவே ஆண்- பெண் இருவருக்கும் வேதை நட்சத்திரங்களாக அமைந்தால் வேதைப் பொருத்தம் இல்லை எனவும், வேதை நட்சத்திரமாக இல்லையென்றால் வேதைப் பொருத்தம் உண்டென்றும் பொருள்.

நாடிப் பொருத்தம்

நாடி என்பது ஒருவரின் கை நாடியை பிடித்து ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதாகும். அந்தக் காலத்தில் ஒருவரது நாடியை வைத்தே எந்த வகையான உடம்பு என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்றவாறு உடலை நோய்நொடி இல்லாமல் பாதுகாத்துவந்தனர்.

நோய்நொடிகள் இல்லா மல் ஆரோக்கியமாக வாழ இந்தப் பொருத்தம் தேவை. உடலிலுள்ள சத்துக்கள், ரத்தம், சூடு, குளிர்ச்சி போன்ற விஷயங்களைக் கொண்ட பொருத்தம் என்பதால் இது அவசியம் பார்க்கவேண்டிய பொருத்தம். ஆண்- பெண் இருவருக்கும் உள்ள ரத்த ஒற்றுமையைக் குறிக்கும் பொருத்த மாகும். இந்தப பொருத்தம் மணமக்களுக்கு அமைந்தால் புத்திர பாக்கியம் உறுதி. தம்பதிகள் தீர்க்காயுளுடன் வாழ்வதற்கும், நோய் ஏற்படாமல் இருப்பதற்கும், உயிருக்கு ஆபத்தான கண்டங்களை சந்திக்காமல் இருப்பதற்கும் இந்தப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

மனித உடல் நாடியை வாதம், பித்தம், சிலேத்துமம் என மூன்றாக வகைப்படுத்தலாம். வாத நாடியை பார்சுவ நாடி என்றும், பித்த நாடியை மத்திய நாடி என்றும், சிலேத்தும நாடியை சமான நாடி என்றும் கூறலாம். (நாடிப் பொருத்த அட்டவணை காண்க.).

Advertisment

ff

ஆண்- பெண் இருவருக்கும் பார்சுவ நாடியானால் மனைவிக்கு தோஷம். ஆண்- பெண் இருவரும் மத்திய நாடியானால் கணவனுக்கு தோஷம். ஆண்- பெண் இருவரும் சமான நாடியானாலும் அல்லது வெவ்வேறு நாடியானாலும் பொருத்தம் உண்டு. ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே நாடியாக இருந்தால் பொருத்தம் கிடையாது, வெவ்வேறு நாடியாக இருப்பின் பொருத்தம் உண்டு.

கடந்த நூற்றாண்டுவரை இந்திய பெண்களுக்கு எந்தச் சுதந்திரமும் கிடையாது. பெண்ணானவள் முழுக்க முழுக்க ஆண் மகனைச் சார்ந்து வாழும் சூழ்நிலை இருந்தது. ஒரு ஆண்- தன் மனைவியை எளிதில் உதறிவிட்டு வேறு பெண்ணை சேர்த்துக்கொள்ளும் வழக்கம் சாதாரணமாக இருந்துவந்தது. இதனால் பெண்ணின் வாழ்க்கைக்கு ஒரு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை நிலவியது. இதனால் பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் மகளைக் கைபிடிப்பவன் தன் மகளுடன் எல்லாவிதத்திலும் இணக்க முடன் நடந்துகொள்வானா?

தன் பெண்ணுக்கு உறுதுணையாக இருப்பானா? எந்த சூழ்நிலையிலும் மகளைக் கைவிடாமல் இருப்பானா? மகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வானா என்பது போன்ற வினாக்களுக்கு விடைகாண வழிமுறைகளைத் தேடினார்கள். அதற்கான முன்னோர்கள் கண்டுபிடித்த வழிமுறைதான் திருமணப் பொருத்தமாகும். எனவே முறையான திருமணப் பொருத்தம் பல சூழ்நிலைகளில் தம்பதிகளுக்குத் தேவை. அதேநேரத்தில் ஆணோ பெண்ணோ- பூமியில் பிறந்தவுடனேயே அவர்களின் ஜாதகம் நிர்ணயம் செய்யபட்டுவிடும்.

அதேபோல அவர்களின் ஏழாமிடமும் நிர்ணயம் செய்யப்பட்டுவிடும். ஏழாமிடத்திற் கேற்பவே அவர்களின் திருமண வாழ்க்கை அமைகிறது.

நம் முன்னோர்கள் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு ஆண் மற்றும் பெண்ணின் குணநலன்களை ஆராய்ந்து பத்துப் பொருத்தங்கள் கணக்கிட்டனர். இந்த பத்துப் பொருத்தங்களில் தினம், கணம், ராசி, யோனி, ரஜ்ஜு, வேதை ஆகிய ஆறு பொருத்தங்கள் மிகவும் முக்கியம். சிலர், தினம், கணம் ஆகியவற்றில் ஒன்றும், மகேந்திரம், ராசி, நாடி ஆகியவற்றில் ஒன்றும், ரஜ்ஜு, வேதை, யோனி ஆகிய மூன்றும் இருந்தால் மட்டும் போதும் என்று திருமணம் செய்கின்றனர். அனைத்து பொருத்தங்களைக் காட்டிலும் ரஜ்ஜுப் பொருத்தம் என்பதே மிகவும் முக்கியமானது.

ஆண் மற்றும் பெண் இருவரின் லக்னத்தை வைத்து அவர்களுக்கு லக்னப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. 4, 6, 8, 12-ஆம் லக்னமாக இருவருக்கும் வந்தால் பொருத்தம் இல்லை. இந்த பத்து பொருத்தம் என்பது அடிப்படைப் பொருத்தம் மட்டும்தான். இதுபோல் பத்து பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணம் பல தோல்வியைத் தழுவுவதை நடைமுறையில் பார்க்கிறோம். எத்தனை முறை பொருத்தம் பார்த்தாலும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்துச் செய்யும் விவாகத்திற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. கட்டப் பொருத்தம் பார்த்து செய்யும் திருமணத்திற்கு 100 சதவிகித உத்தரவாதம் உண்டு. அதேபோல் ஆண், பெண் இருவரின் முழு ஜாதகம், குறிப்பாக ஏழாம் வீடு, களத்திரக்காரகன், தசா புக்திகள் ஆகிய அனைத்தும் பார்த்துத் திருமணம் செய்வதுதான் சிறப்பு.

முற்றும்

செல்: 98652 20406