யோனிப் பொருத்தம்

யோனிப் பொருத்தம் என்பது ஆண்- பெண் அங்க அமைப்பு களின் உடன்பாடு பற்றிய விளக்கம் தருவதாகும். மன ஒருமைப் பாடென்பது மண வாழ்க்கைக்கு மிக அவசியம். மன ஒற்றுமையென்பது இல்லற இன்பத்திற்கு மிக அவசியம். இந்தப் பெண்ணும் இந்த ஆணும் சேர்ந்துவாழ தகுதியுண்டு என்பதை இந்தப் பொருத்தம்தான் நிர்ணயிக்கும்.

இல்வாழ்க்கையில் ஈடுபடும் தம்பதிகளிடம் மன, உடல் ஒற்றுமை எந்த அளவுக்கு இருக்குமென்பதைக் கண்டறிய இந்தப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

இந்தப் பொருத்தம் தம்பதிகளிடையே ஏற்படும் அன்யோன்ய உறவு நிலையை வெளிப்படுத்தும். இல்லற இன்பத்தில் ஈடுபடும் மனிதர் களின் எண்ணம் மற்றும் செயல்பாடுகள் அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மிருகங்களின் செயல்பாடுகளை ஒத்திருக்கு மென்பது முன்னோர்களின் கருத்தாகும். (அட்டவணை காண்க.)

Advertisment

11

பொதுவாக பெண்ணின் நட்சத்திரம் பெண் யோனியாகவும், ஆணின் நட்சத்திரம் ஆண் யோனியாகவும் இருப்பது நல்லது. ஆணின் நட்சத்திரம் பெண் யோனியாகவும், பெண்ணின் நட்சத்திரம் ஆண் யோனியாகவும் இருப்பது சிறப்பல்ல. ஆண்- பெண் இருவரின் நட்சத் திரங்கள் பகை மிருகங்களாக இருந்தால் பொருந்தாது. (அட்டவணை காண்க.)

Advertisment

11

ஆண்- பெண் இருவருக்கும் யோனிப் பொருத்தம் மிக அவசிய மானது. யோனிப் பொருத்தம் இருந்தாலும் சுய ஜாதகத்தில் ஆண் ஜாதகத்தில் ஏழாம் பாவக அதிபதி, ஏழில் நின்ற கிரகம், செவ்வாய், சுக்கிரன் அதுபோல் பெண் ஜாதகத்தில் ஏழாம் பாவக அதிபதி, ஏழில் நின்ற கிரகம் குரு, சுக்கிரன் நிலையைப் பார்க்கவேண்டும். பொதுவாக ஏழாமிடத்தில் அசுப கிரகங்கள் இல்லாமல் இருப்பது சிறப்பு.

மேலும் ஏழாம் பாவகமாக வரும் ராசி அதிலுள்ள நட்சத்திரங்கள் நிற்கும் கிரகங்களின் தன்மை இவற்றின் பலம், பலவீனத்திற்கேற்ப இல்லற இன்பம் அமையும். எனவே யோனிப் பொருத்தத்துடன் சுய ஜாதக ஏழாமிடமும் பலம்பெறுவது நல்லது.

ராசிப் பொருத்தம்

ராசி என்பது ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடமாகும். ஆணின் ராசிக்கும், பெண்ணின் ராசிக்கும். பொருத்தம் எப்படியுள்ளது என்பதைக் கூறுவது ராசிப் பொருத்தமாகும்.

தம்பதிகளின் வம்ச விருத்தியை அறிய இந்தப் பொருத்தம் மிக அவசியமாகிறது. பெண்ணின் ராசி முதல் ஆணின் ராசிவரை எண்ணும்போது ஆண் ராசி 1, 7, 9, 10, 11, 12 ஆகிய ராசியாக வந்தால் ராசிப் பொருத்தம் உண்டு.

பெண் ராசி முதல் ஆணின் ராசிவரை எண்ணும்போது ஆண் ராசி 2, 3, 4, 5, 6, 8-ஆவதாக வந்தால். ராசிப் பொருத்தம் இல்லையெனலாம்.

பெண்ணின் ராசியிலிருந்து ஆணின் ராசி 1 எனில் ஏகராசி எல்லா நிலையிலும் சுபிட்சம் உண்டாகும்.

2 எனில் ஆயுள் குறைவு.

22

3 எனில் வியாதி, கஷ்டம்.

4 எனில் வறுமை.

5 எனில் மாங்கல்ய பலம் குறைவு

6 எனில் புத்திர பிராப்தம் குறையும்.

7 எனில் தீர்க்கமான ஆயுளும், சுகமும் உண்டு.

8 எனில் பிள்ளைப் பேறு இல்லை.

9 எனில் ஆயுள் பலம், மாங்கல்ய பலம்.

10 எனில் பொருள் லாபம்.

11 எனில் மகிழ்ச்சி, இன்பம்.

12 எனில் நீண்ட ஆயுள், ஆரோக்கியம்.

இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன. பெண்ணின் ராசியிலிருந்து எண்ணும்போது ஆணுக்கு 2-ஆம் ராசியாக மேஷம், சிம்மம், தனுசு, மிதுனம், துலாம், கும்ப ராசிகளாக வருமானால் பொருந்தும்.

மேஷ ராசிக்கு 5-ஆம் ராசியான சிம்மமும், கடக ராசிக்கு 5-ஆம் ராசியான விருச்சகத்தையும் இணைப்பது குற்றமில்லை.

பெண்ணின் ராசியும், ஆணின் ராசியும் சம சப்தம ராசியாக வருவது சிறப்பான பொருத்தம் என்றாலும், கடகம், மகர ராசிகளையும், சிம்மம், கும்ப ராசிகளையும் இணைப்பது தோஷமாகும்.

சஷ்டாஷ்டக தோஷம்

நம் அன்றாட வாழ்வில் பல்வேறுவிதமான மனிதர்களை சந்திக்கிறோம். ஒருசிலரிடம் இனம்புரியாத அன்பு ஏற்படும், ஒருசிலரிடம் காரணமில்லாத கோபம், எரிச்சல் ஏற்படும். இதற்குக் காரணம் சஷ்டாஷ்டக தோஷமாகும்.

ஒருவரின் ராசி மற்றொருவரின் ராசிக்கு 6, 8-ஆவது ராசியாக வந்தால் சஷ்டாஷ்டக தோஷமாகும். மிக முக்கிய மாக திருமணப் பொருத்தம் பார்க்கும் போது ஆண் ராசியும் பெண் ராசியும் 6-ஆவது, 8-ஆவது ராசியாக வந்தால் சஷ்டாஷ்டக தோஷமாகும். ஜோதிடம் வளர்ந்துவரும் இந்த காலத்தில் படித்தவர்முதல் பாமரர்வரை ஜாதகம் வாங்கியவுடன் ஆணின் ராசியும் பெண் ணின் ராசியும் பொருந்துகிறதா என்றே முதலில் பார்க்கிறார்கள். திருமணத்திற் குப் பொருத்தம் பார்க்கும்போது பெண்ணின் ராசிமுதல் ஆணின் ராசிவரை எண்ணும்போது ஆணின் ராசி ஆறாவதாகவும், ஆணின் ராசியிலிருந்து பெண்ணின் ராசி எட்டாவதாகவும் வந்தால் அதனை "சஷ்டாஷ்டகம்' தோஷமாகும். இதற்கு விதிவிலக்கும் உண்டு. இதில் சில அனுகூல சஷ்டாஷ்டகம் என்றும், சில பிரதிகூல சஷ்டாஷ்டகம் என்றும் கூறப்படுகிறது.

அனுகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசி- ஆண் ராசி

மேஷம்- கன்னி

தனுசு- ரிஷபம்

துலாம்- மீனம்

கும்பம்- கடகம்

சிம்மம்- மகரம்

மிதுனம்- விருச்சகம்

பிரதிகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசி- ஆண் ராசி

ரிஷபம்- துலாம்

கடகம்- தனுசு

கன்னி- கும்பம்

விருச்சகம்- மேஷம்

மகரம்-: மிதுனம்

மீனம்- சிம்மம்

ஆண்- பெண் இருவரு டைய ராசியும் 6, 8 ஆக இருந்தாலும் அனுகூல சஷ்டாஷ் டகமாக இருந்தால் திருமணம் செய்யலாம் என்றும் பிரதிகூல சஷ்டாஷ்டகமாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது என்ற கருத்தும் உள்ளது.

ஆண் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய பெண் ராசிகளில் பிறந்து, பெண் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஆண் ராசிகளில் பிறந்திருந்தால் இதனை "அனுகூல சஷ்டாஷ்டகம்' என்றும் சஷ்டாஷ்டக தோஷநிவர்த்தி; திருமணம் செய்யலாம் என்றும் கூறுகி றார்கள்.

அதேபோல் ராசியாதிபதி ஒருவராக இருந்தாலும் தோஷம் கிடையாது என்ற விதியும் உள்ளது. இந்த விதியின்படி மேஷம்- விருச்சிகம், ரிஷபம்- துலாம் ஆகிய இந்த இரண்டு ராசிகளுக்கும் சஷ்டாஷ்டக தோஷம் இல்லையென்ற கருத்தும் உள்ளது. ராசியாதிபதிகள் நட்புடன் இருந்தாலும் இந்த தோஷம் பாதிக்காது என்ற கருத்தும் உண்டு.

ஆண்கள் அதிகமாகவும் பெண்கள் குறைவாகவும் உள்ள கலியுகத்தில் திருமணத்திற்கு வது, வரன் கிடைப்பதே குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாக இருக்கிறது. அத்துடன் ஒரு ஜாதகத்தை இணைக்கும்முன் பத்து ஜோதிடரை சந்தித்து 5 ஜோதிடர் சரி என்று கூறியபிறகு திருமணத்தை முடிவுசெய்யும் நிலையும் இருக்கிறது. வரன் தேடி அலுத்து திருமணத்திற்கு நல்ல வரன் கிடைத்தால் போதும்; ஜாதகமே வேண்டாமென்று ஜோதிடத்தை புறக்கணிப்பவர்களும் இருக்கிறார்கள்.

சஷ்டாஷ்டக ஜாதகத்தை இணைக்கலாமா? இணைத்தால் என்ன நடக்கும்? என்ற கேள்வியும் பலரிடம் இருந்து வருகிறது.

சஷ்டாஷ்டக ஜாதகத்தை இணைத்தால் கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு மிகுதியாகிக்கொண்டே இருப்பதுடன், நிம்மதியின்மை குழந்தை பாக்கியத்திலும் பிரச்சினை இருந்து விவாகரத்து நடக்கும் என்பது ஜோதிடரீதியான, அனுபவரீதியான விளக்கம்.

உளவியல்ரீதியாக, 20 ஆண்டுக்கு முன்வரை பெண்கள் திருமணத்திற்குமுன் பெற்றோருக்கும், பின் கணவருக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தனர்.

ஆண்கள் பெற்றோருக்குக் கட்டுப்பட்டனர். பெற்றோரின் பேச்சுக்கு எதிர்பேச்சே இல்லாது இருந்த காலத்தில் பல திருமணங்கள் பொருத்தம் பார்க்காமலே நடந்தது. இன்றைய காலகட்டத்தில் காரணமே இல்லாத பிரச்சினைக்குக்கூட நீதி மன்றத்தை நாடி திருமணத்தை ரத்துசெய்து மறு விவாகத்திற்கு ஜோதிடரை அணுகும் கலாச்சாரம் வெகுவாக பரவிவருகிறது. அதனால் இந்த கலியுகத்தில் இதற்கு தீர்வு சஷ்டாஷ்ட ஜாதகத்தைத் தவிர்க்கவேண்டும். மேலும் சஷ்டாஷ்டக ஜாத கத்தை இணைக்கவேண்டிய நிர்பந்தம் இருந்தால் ஆண் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் திரிகோண சம்பந்தம் பெறுவதுடன் பெண் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரனுக்கும் திரிகோண சம்பந்தம் இருந்தால் கருத்து வேறுபாடு பிரிவினையாக மாறாது.

ராசிக்கு 6, 8-ஆக இல்லாமல் இருப்பதுடன் லக்னத்திற்கும் 6, 8-ஆக இல்லாமல் இருப்பது மிகச் சிறப்பு.

இந்த விதியை திருமணப் பொருத்தத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் தொழில் கூட்டாளி, நண்பர்கள், அண்டை அயலாருடனும் சஷ்டாஷ் டக தோஷமறிந்து பழகினால் பெரும் சங்கடங் கள் தவிர்க்கப்படும். ஒரு புதிய நபரை சந்திக்கும் போது உருவாகும் ஈர்ப்பும் , உள் உணர்வையும் கொண்டும் சஷ்டாக தோஷம் உள்ளதா இல்லையா என்பதை அறியமுடியும். ஆகவே சஷ்டாஷ்டக தோஷமறிந்து வாழ்க்கைத் துணையையும் நண்பர் களையும் தேர்வு செய்தால் நலம் பல பெருகும்.

தொடரும்.....

செல்: 98652 20406