திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே மகிழ்ச்சி ஒருபக்கம் வந்தாலும், அதன்பின்னர் வரும் பிரச்சினையை நினைத்து பலரும் தனியாக வாழ முடிவுசெய்கிறார்கள். ஆணும் பெண்ணும் தனித்து வாழ்ந்தால் சமுதாயம் எப்படி தழைக்கும்?
திருமணமான அனைவரும் சந்தோஷ மாக இருக்கவேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். திருமணம் செய்து கொள்பவர்களின் சந்தோஷ நிலையை நமது முன்னோர்கள் பத்துப் பொருத்தத்தின்மூலம் அறிந்து கொண்டனர். ஒருவரின் ராசிக்கேற்ற ராசிக்காரரைத் தேர்ந்தெடுப்பது மிக அவசியம். சரியான உறவின்கீழ் மனிதன் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள ஜோதிட முன்னோடிகள் அளித்த கொடையே திருமணப் பொருத்தம். ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் திருமணப் பொருத்தம் பார்த்தே திருமணம் செய்கிறார்கள். திருமணத்திற்கு ஆண்- பெண் ஜாதகங்களை இணைக்கும்போது பத்துப் பொருத்தம் எனும் தசவிதப் பொருத்த முறையே பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிறது
இதில் நட்சத்திரப் பொருத்தத்தை நமது முன்னோர்கள் 20 பொருத்தங்களுக்கு மேலாகப் பார்த்திருக்கின்றனர் . தற்போது நடைமுறையில் 10 பொருத்தமாகிவிட்டது. தினம், கணம், மகேந்திரம், ஸ்த்ரி தீர்க்கம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜு, வேதை, நாடி என்ற 10 விஷயம் பார்க்கப்படுகிறது.
இந்த கட்டுரையில் பத்துப் பொருத்தம் பற்றி விரிவாகக் காணலாம்.
தினப் பொருத்தம்
தினம் என்றால் நாள் அல்லது நட்சத்திரம் என்று பொருள். எனவே இந்த பொருத்தத்தை நட்சத்திரப் பொருத்தம் அல்லது தாரா பலன் என்று குறிப்பிடுவது வழக்கம். தினசரி பலாபலன்களைத் தெரிந்துகொள்வதற்கு தாரா பலன் பார்ப்பது வழக்கம். ஒரு குறிப்பிட்ட தினம் நமக்கு சாதகமானதா- பாதகமானதா என்பதை தாராபலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விவாகப் பொருத்தங் களில் முதலாவது பொருத் தமான தினப் பொருத்தமே இந்த தாரா பலனாகும். பெண்ணுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆண் அன்றாட வாழ்க்கையில் அந்த பெண்ணுக்கு சாதகமாக நடப்பானா? பாதகமாக நடப்பானா என்பதை அறிந்துகொள்ள தினப்பொருத்தம் பார்க்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அனுகூலமாக நடந்து கொண்டால்தான் அன்றாட வாழ்க்கையை சுமூகமாக நடத்திச்செல்ல முடியும்.
தினப்பொருத்தம் இருந்தால் ஆண்- பெண் இருவருடைய ஆயுள், ஆரோக்கியம் நன்றாக இருக்குமென்று நம்பப்படுகிறது. இந்தப் பொருத்தம் இருந்தால் ஆண்- பெண் இருவரும் ஒருவருக்கொருவர் நட்பாகவும், அன்யோன்யமாகவும், அனுகூலமாகவும் நடந்துகொள்வார்கள். இந்தப் பொருத்தம் இல்லையென்றால் ஆண்- பெண் இருவரும் ஒருவருக்கொருவர் பகைவர் போலும் கருத்து வேறுபாடு உடையவர்களாகவும் பிரதிகூலமாக நடந்துகொள்வார்கள்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி அதை 9-ஆல் வகுக்க மீதி-
1-ஆக வந்தால் சுமார் என்றும்;
2, 8-ஆக வந்தால் சுமாருக்கு மேலானது என்றும்;
3 , 5, 7-ஆக வந்தால் பொருந்தாது என்றும்;
4, 6, 9-ஆக வந்தால் மிகப் பொருத்தம் என்றும் முடிவுசெய்ய வேண்டும்.
இதற்கு சில விதிவிலக்குகளும் உள்ளன.
பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் 27-ஆக (9) வந்தால் அதற்கு ஒரு விதிமுறை உண்டு.
பரணி நட்சத்திரத்திலிருந்து அஸ்வினி 27-ஆவது நட்சத்திரமாகும். இரண்டு நட்சத்திர மும் ஒரே ராசியாக மேஷத்தில் வருகிறது. இப்படி ஆண்- பெண் நட்சத்திரங்கள் ஒரே ராசியானால் அது சிறப்பான பொருத்தமாகும்.
அதேசமயம் மக நட்சத்திரப் பெண்ணுக்கு 27-ஆவது நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் சிறப்பான பொருத்தமாகாது. ஏனெனில் மகம் சிம்ம ராசியாகவும், ஆயில்யம் கடக ராசியாகவும் வரும். இரண்டு நட்சத்திரங்களும் வெவ்வேறு ராசியானால் பொருந்தாது.
அவற்றை சேர்க்கக்கூடாது.
ஏக நட்சத்திரப் பொருத்தம்
ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி இந்த 8 நட்சத்திரங்களும் ஆண்- பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக வருமானால் பொருந்தும்.
அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் இந்த 11 நட்சத்திரங்களுக்கும் மத்திமமான பொருத்தம் உண்டு.
பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி இந்த 8-ம் ஒரே நட்சத்திரமானால் பொருந் தாது.
இருவருக்கும் ஒரே நட்சத்திரமாகி ராசி மட்டும் வேறுபடலாம். உதாரணமாக புனர்பூச நட்சத்திரத்தின் 1, 2, 3 பாதங்கள் மிதுன ராசியிலும், 4-ஆம் பாதம் கடக ராசியிலும் வரும். புனர்பூசம் மிதுன ராசியில் பிறந்த ஆண்- பெண்களை இணைக்கக் கூடாது. ஆனால் புனர்பூசம் மிதுனத்தில் பிறந்த ஆணிற்கு கடக ராசி புனர்பூசப் பெண்ணை இணைப்பது சிறப் பான பொருத்தமாகும். அதாவது ஆண் நட்சத்திரம் முந்தைய ராசியிலும், பெண் நட்சத்திரம் பிந்தைய ராசியிலும் இருப்பது நல்லது.
ஏக நட்சத்திரங்களை இணைப்பதால் இருவருக்கும் ஒரே தசையாக வருவதுடன் ரஜ்ஜுப் பொருத்தம் அமையாது. ஏக நட்சத்திரத்தில் திருமணம் சிறப்பான மண வாழ்வைத் தரும் வாய்ப்பு குறைவு. ஏக ராசியினர் திருமணம் செய்யும்போது கருத்தொற்றுமை அதிகமாக இருக்கும். இதைப்போல் ஒரு வரன் அமைவது பெரிய கொடுப் பினை என்றாலும், வருட கிரகங்கள் கோட்சாரத்தில் ஒரே ராசியில் சஞ்சரிக்கும்போது சுபமும், அசுபமும் 200 சதவிகிதம் உறுதி என்ற கருத்தை மறக்கக்கூடாது. மேலும் ஆணின் நட்சத்திரத்திற்குப்பின் பெண்ணின் நட்சத்திரம் இருத்தல் மிக முக்கியம்.இத்தகைய பொருத் தத்தை விவாகத்திற்கு மட்டுமல்ல; நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளைத் தேர்வு செய்ய வும் பயன்படுத்தலாம்.
தொடரும்.....
செல்: 98652 20406