புகழினைக் குவிக்கும் பூரட்டாதி! (25) -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/puratadi-who-accumulates-fame-25-melmaruvathur-s-kalaivani

னித வாழ்வில் அனைத்து நிகழ்வு களுக்கும், காரணமாக அமையும், கிரகங்களுக்கு பயணிக்க பாதையமைத்துத் தரும் 27 நட்சத்திரங்களின் வரிசையில், பூரட்டாதி 25-ஆவது நட்சத்திரமாக விளங்குகிறது. இது குருவின் மூன்றாவது நட்சத்திரமாகும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் புனர்பூசமும், விசாகமும், சற்று அமைதி யான நட்சத்திரங்களாக உருவகப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் இந்த பூரட்டாதி சற்று ஆளுமையும், வைராக்கியமும்கொண்ட நட்சத்திரமாக அறியப்படுகிறது.

அமைதி, சாந்தம், பொறுமை, நிதானம், ஆகியவற்றுக்குக் காரகம் வகிக்கும் குருவின் நட்சத்திரம், ஆளுமை, வன்மை, வைராக்கியம், நிறைந்த சனியின் வீடான கும்பத்தில், அமையப்பெறுவது, முரண்பாடான, சில குணங் களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

மேலும் குருவின் வீட்டில் சனியாகவும், சனியின் வீட்டில் குருவாகவும், பரிவர்த்தனை கொண்ட நட்சத்திரம் இந்தப் பூரட்டாதி நட்சத்திரமாகும். இது கும்ப ராசியில் தனது ஒன்று, இரண்டு, மூன்று பாதங்களையும். மீனத்தில் நான்காவது பாதத்தையும் பதித்து பிரதிபலிக்கிறது.

இதன் ராசிநாதன் பூரட்டாதி ஒன்று, இரண்டு, மூன்றாம் பாதமென்றால் சனியாகவும், பூரட்டாதி நான்காம் பாத மென்றால் குருவாகவும் அமையும். நட்சத்திர நாதன் குருவாகவும், நவாம்ச

னித வாழ்வில் அனைத்து நிகழ்வு களுக்கும், காரணமாக அமையும், கிரகங்களுக்கு பயணிக்க பாதையமைத்துத் தரும் 27 நட்சத்திரங்களின் வரிசையில், பூரட்டாதி 25-ஆவது நட்சத்திரமாக விளங்குகிறது. இது குருவின் மூன்றாவது நட்சத்திரமாகும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் புனர்பூசமும், விசாகமும், சற்று அமைதி யான நட்சத்திரங்களாக உருவகப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் இந்த பூரட்டாதி சற்று ஆளுமையும், வைராக்கியமும்கொண்ட நட்சத்திரமாக அறியப்படுகிறது.

அமைதி, சாந்தம், பொறுமை, நிதானம், ஆகியவற்றுக்குக் காரகம் வகிக்கும் குருவின் நட்சத்திரம், ஆளுமை, வன்மை, வைராக்கியம், நிறைந்த சனியின் வீடான கும்பத்தில், அமையப்பெறுவது, முரண்பாடான, சில குணங் களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

மேலும் குருவின் வீட்டில் சனியாகவும், சனியின் வீட்டில் குருவாகவும், பரிவர்த்தனை கொண்ட நட்சத்திரம் இந்தப் பூரட்டாதி நட்சத்திரமாகும். இது கும்ப ராசியில் தனது ஒன்று, இரண்டு, மூன்று பாதங்களையும். மீனத்தில் நான்காவது பாதத்தையும் பதித்து பிரதிபலிக்கிறது.

இதன் ராசிநாதன் பூரட்டாதி ஒன்று, இரண்டு, மூன்றாம் பாதமென்றால் சனியாகவும், பூரட்டாதி நான்காம் பாத மென்றால் குருவாகவும் அமையும். நட்சத்திர நாதன் குருவாகவும், நவாம்ச நாதர்களாக பூரட்டாதி ஒன்றாம் பாதமென்றால் செவ்வாயாகவும், பூரட்டாதி இரண்டென் றால் சுக்கிரனாகவும், மூன்றென்றால் புதனாக வும், பூரட்டாதி நான் கென்றால் சந்திரனாகவும் அமையும்.

இது தந்தைகாரகன், பித்ருகாரகன் என்று போற்றப்படும் சூரியனின் கர்மப் பதிவைக்கொண்ட நட்சத் திரமாக அறியப்படுகின்றது.

இந்திய பஞ்சாங்க முறையில் பூரட்டாதி நட்சத்திர கோணத்தில் சந்திரன் பயணிக்கும் காலம், பூரட்டாதி நட்சத்திரக் காலமாகும். இதில் பிறந்தவர்கள் முதல் மூன்று பாதமென் றால் கும்ப ராசி என்றும், நான்காவது பாதமென்றால் மீன ராசி என்றும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வார்கள்.

இதுவொரு மனுஷ கண நட்சத்திரம் என்பதால் இது மனிதனுக்குரிய நிலையிலிருந்து மாறி, தேவ குணத்திற்கும், அதிலிருந்து மாற்றமடைந்து ராட்சச குணத்திற்கும், பயணிக்கும் குணமுடைய நட்சத்திரமாகும்.

இது ஒரு ஆண் நட்சத்திரமாகும். ஆளுமை, அதிகாரம், குடும்பத்தை தன் கட்டுக்குள் வைப்பது போன்ற குணம் இருக்கும்.. எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் தந்திரம் படைத்த நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை களின்மூலம் அந்த குடும்பம் செழிக்குமென்று கூறப்படுகிறது.

பெண் குழந்தையாகப் பிறந்தால் அந்தக் குழந்தை மணம் முடித்துச் செல்லும் வீடும் செல்வச்செழிப்பாக விளங்கும் என்றும் கூறுவார்கள்.

இது மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பு, கட்டில் முன்னங்கால், முக்காலி, மலர்ந்த தாமரை, விரிந்த கை, இரட்டை வால், இரட்டை மனித முகம், போன்ற உருவங்கள் இருப்பதாகக் கூறினாலும், வலம்புரி சங்கு போன்ற அமைந்துள்ளதாக நட்சத்திர தொகுப்பு நூல்கள் விரிவிக்கின்றன.

ff

பூரட்டாதி நட்சத்திரத்தை தமிழில் பூரட்டாதி என்றே அறியப்படுகிறது. மேலும் பல தமிழ் நிகண்டுகளில் நாழி, முக்கொழுங்கோல், புறக்கை, என்று கூறப்படுகிறது. சமஸ்கிருதத்தில் பூர்வ பத்திர பாத என்று பெயர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பூர்வ பத்திர பாத என்றால் என்னவென்று பார்த்தோமானால், பூர்வம் என்றால் கடந்த காலம், பத்திர என்றால் இலைகளைக் குறிக்கும். பாத என்றால் கால் பாதங்களைக் குறிக்கும். பசு மாட்டின் முன்னிரண்டு கால்கள் என்ற பெயர் இந்த நட்சத்திரத்திற்குப் பொருத்தமாக அமைந் திருக்கும்.

சுபிக்சத்தை சொல்லும் நட்சத்திர மாக இருந்தாலும் உடைபட்ட நட்சத்தி ரம் என்பதனால் இந்த நட்சத்திரத்தினை முகூர்த்தத்திற்கு ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.

இதன் அதிதேவதை குபேரன் என்றும் அறியப்படுகின்றது.

மகாபாரதத்தில் பலருடைய மனதில் இடம்பிடித்த வள்ளல் கர்ணன், ஜனித்த நட்சத்திரம் பூரட்டாதியாகும்.

இவர்கள் உணர்ச்சிப் பிழம்பு மிக்கவர் கள். சரியான கருத்தை உரிய நேரத்தில் பேசுபவர்கள், பிடிவாத குணமும், வைராக்கிய மும் நிறைந்தவர்கள்.

தங்களுக்கு இணக்கமானவர்களை தங்களுடனே சேர்த்து அவர்களுக்காக எதையும் செய்யும் குணமும் மனமும் படைத்தவர்கள்.

பூரட்டாதி ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் செவ்வாயின் வீடான மேஷத்தில் அமையப்பெறும். இந்த நிலையானது, தொழில் மற்றும் பணியில் சற்று முரண்பாடான சில விஷயங்களை அணுக வைக்கும். கல்வி நிலையில் குரு மற்றும் சனியின் பலம் பொருத்து இவர்களுக்கு மருத்துவம், விளையாட்டுத்துறை, அரசியல் அரசாங்க வேலைகள் போன்றவை அமையப்பெறும்.

பூரட்டாதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் உச்சம்பெறும் ரிஷபத்தில் அமையப் பெறும். இவர்கள் கல்விநிலை, அழகியல் சார்ந்த கல்வி, அழகியல் சார்ந்த தொழில், எஞ்சினியரிங், ட்ராவல்ஸ், புத்தகம், கவிதை, ஆன்மிக உரையாடல்போன்ற துறையில் தங்களை சிறப்புர செய்துகொள்வார்கள்.

பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் புதனின் வீடான மிதுனத்தை சென்றடையும். இந்த நிலையானது கமிஷன், தரகு, தொடர்புரீதியான செயல்கள், ரிஜிஸ்டர், பத்திரப்பதிவு போன்ற துறைகளிலும், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், போன்ற துறைகளிலும் தங்களை முன்னிருத்திக்கொள்வார்கள்.

பூரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சந்திரனின் வீடான கடகத்தைச் சென்றடையும். இவர்களின் தொழிலானது உணவு, டிராவல்ஸ், கனரக வாகனங்கள் இயக்குவது, வெளிநாட்டு வேலைகள்மூலம் சிறப்பினை அடைவார்கள்.

பொதுவாகவே பூரட்டாதி, சூரியனின் கர்மப் பதிவைக்கொண்ட நட்சத்திரம் என்பத னால் அரசு, அரசியல்வாதி, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவர்களுக்கு இருக்கும். மேலும் தந்தை, மகனுக்கிடையே உள்ள உறவு களில், விரிசலும் அமையும். அரசு வேலைக் காகப் பணம் செலுத்தி கிடைக்காமல் மனவருத்தப்படும் சூழ்நிலைகள் இவர் களுக்கு இருக்கும். இவர்களின் வம்சா வளியில் அரசாங்க தண்டனை பெற்றவர் கண்டிப்பாக ஒருவர் இருக்கவே செய்வார்.

இந்தப் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் தங்களது தொழிற் கூடங்களில் வலம்புரிச் சங்கின் சின்னத்தை வைத்தோ அல்லது வலம்புரிச் சங்கினை வைத்துப் பூஜிப்பதாலோ தொழில் மற்றும் பணி சிறக்க பெரும் உதவிசெய்யும்.

வணங்கவேண்டிய தெய்வம்: எல்லை காவல் தெய்வங்கள் மற்றும் தக்ஷிணாமூர்த்தி.

அணியவேண்டிய ரத்தினம்: மஞ்சள் புஷ்பராகம்.

வணங்கவேண்டிய விருட்சம்: தேமா மரம்.

(அடுத்த இதழில் உத்திரட்டாதி)

செல்: 80563 79988

bala260523
இதையும் படியுங்கள்
Subscribe