பூராடம் என்பது ஜோதிடவியலின்படி கிரகங்களுக்குப் பாதையமைத்துத் தரும் 27 நட்சத்திரங்களின் வரிசையில் இருபதாவது நட்சத்திரமாக அமையப்பெற்றுள்ளது.
இது சுகங்களை அடைந்து அதில் திளைக்க விரும்பும் சுக்கிரனின் நட்சத்திரத்தில் மூன்றாவதான இறுதி நட்சத்திரமாக விளங்குகிறது. இந்த நட்சத்திரம் காலபுருஷனுக்கு ஒன்பதாம் பாவகமாக அமையப்பெற்ற தனுசு ராசியில் தனது நான்கு பாதங்களையும் பதித்து முழு நடு நட்சத்திரமாக அமைந்துள்ளது.
நமது இந்திய பஞ்சாங்க முறையிலும், ஜோதிட வியலின்படியும் சந்திரன் புவியைச் சுற்றிவரும் நேரத்தில் பூராட நட்சத்திர கோணத்தில் பயணிக்கும் காலம் பூராட நட்சத்திரத்திற்குரிய காலமாகும். இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்களது ராசி தனுசு என்றும், நட்சத்திரம் பூராடம் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த பூராடம் புதனின் கர்மப் பதிவினைத் தாங்கிய நட்சத்திரமாகும். இது ஒரு பெண் நட்சத்திரம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தத்துவங்களில் வாயு தத்துவ நட்சத்திரமாக பிரதிபலிக்கிறது.
இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை வருணன் என்றும், வாருணி என்னும் ஜல தேவி என்றும், சில நிகண்டுகளில் ஈஸ்வரன் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பூராடம் அமையப்பெற்ற தனுசு ராசி சிவனின் அம்சம்கொண்ட ராசி என்பதனால் இதற்கு அதிதேவதை ஈஸ்வரன் என்பது மிகவும் பொருந்திய வருகிறது.
பூராடம் என்பது தமிழ்ப் பெயர். பல தமிழ் நிகண்டுகளில் நீர் நாள், உடைக்குலம், முதல் குலம் என்ற பெயரிலும் இந்த நட்சத்திரம் குறிப்பிடப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் பூர்வாஷ்ட்டா என்று கூறப் பட்டுள்ளது. பூர்வம் என்றால் துவக்கம், முதல் என்று பொருள். அஷ்ட என்றால் தோற்கடிக்க முடியாத என்று பொருள். இந்த பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்பது இதற்குப் பொருள்.
இந்த நட்சத்திரம் நான்கு நட்சத் திரங்களின் கூட்டமாக அறியப் படுகிறது. இதன் வடிவம் பிறைச் சந்திரன் என்றும் யானையின் தந்தம் போன்று உள்ளதென்றும் கூறுகின்றார் கள். வானில் பார்ப்பதற்கு மாடு பூட்டும் முகத்தடி போன்று காட்சியளிப்பதாகவும், மாட்டின் கொம்பு போன்று இருக்குமென்றும் சில கருத்துகள் உண்டு. மேலும் தேவலோக கோமாதா பூராட நட்சத்திரம் என்ற கருத்தும் நம் ஜோதிடத்தில் உண்டு. இந்த கோமாதாவின் கொம்பில் தான்தேவர்கள் இருப்பதாக ஒரு ஐதீகம். நமது உடலில் தொடைப் பகுதியைக் குறிப்பது இந்த பூராட நட்சத்திரம். அங்க லட்சண சாஸ்திரப்படி தொடைப்பகுதி செல்வ வளத்தைக் குறிக்கும் பகுதி. மேலே சொன்ன தேவலோக கோமாதா என்பது காமதேனு அல்ல.
இதன் ராசிநாதன் குருவாகவும், நட்சத்திர நாதன் சுக்கிரனாகவும், நவாம்ச நாதர்களாக பூராடம் ஒன்று என்றால் சூரியனும், பூராடம் இரண்டென்றால் புதனும், பூராடம் மூன்றென்றால் சுக்கிரனும், பூராடம் நான்கென்றால் செவ்வாயாகவும் அமையப்பெறுகிறார்கள்.
நம் அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் ஜோதிடப் பழமொழிகளைக் கடந்தே வந்திருப்போம். அப்படிப் பார்க்கும் பொழுது இந்த பூராடத்திற்கு என்னென்ன சொலவடைகள் சொல்லப்பட்டுள்ளன? பூராடம் போராடும், போராடும் நூலாடாது, பூராடம் நூலாடும் போன்ற பழமொழிகளின் தாக்கத்தை இந்த நட்சத்திரப் பெண்களின்மீது இறக்கிவைத்துள்ளார்கள்.
அது என்ன பூராடம் நூலாடாது என்றால், அனேக மக்கள் நூல் என்கின்ற மாங்கல்ய நூல் ஆடாது என்று புரிந்து வைத்துள்ளனர். இதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்றால், இந்த பூராட நட்சத்திரம் புதனின் கர்மப் பதிவைத் தாங்கிய நட்சத்திரமாக அமையப்பெறுகிறது புதன் என்றால் கல்வி. கல்விக்கு அடிப்படை புத்தகம் என்கின்ற நூல்தான். இந்த பூராடத்தில் பிறந்தவர்கள் புத்தகம் என்கின்ற நூலை கையில் வைத்திருக்க மாட்டார்கள். அதாவது படிப்பு விஷயத்தில் இவர் களுக்கு நாட்டம் இருக்காது என்பதற் காக சொல்லப்பட்டதுதான் இந்தப் பழமொழி.
பூராடம் போராடும் என்பார்கள். எதையும் விட்டுக்கொடுக்க முடியாத அளவிற்கு ஒரு விஷயத்தில் போராட்ட குலத்தை செலுத்தி அதில் வெற்றிபெறும் குணம் இந்த பூராட நட்சத்திரத்திற்கு இயல்பிலேயே அமைந்திருக்கும். என்பதைதான் இவ்வண்ணம் கூறியுள்ளார்கள்.
நிதர்சன வாழ்வில் இந்த பூராட நட்சத்திரத்திற்கு மேற்கூறிய பழமொழிகள் ஒத்துவருவதில்லை என்பதே நிறைய ஜோதிடர் களின் கருத்தாகக் கொள்ளப்படுகிறது.
இந்த நட்சத்திரத்தில் ஜனித்தவர்கள் தங்களின் வம்சாவளியில் நரம்பு, தோல் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் இருப்பார்கள். மேலும் பத்திரம் சம்பந்தப்பட்ட நெருடல்களும், தாய்மாமன் இடையிலான உறவில் பிரச்சினைகளும் இருக்கப்பெற்றவர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறப்பெடுத்திருப்பார்கள்.
இவர்களில் குடும்ப சுற்றுவட்டாரத்தில் கணக்காளர்கள், கல்வி சம்பந்தப்பட்டவர்கள், அச்சகத் தொழிலில் இருப்பவர்கள், ஜெராக்ஸ் சம்பந்தப்பட்ட தொழில், ஆடிட்டர், ஜோதிடர், தரகர், ஆசிரியர், பேச்சாளர்கள், தபால் துறை சம்பந்தப்பட்டவர்கள் இருப்பார்கள்.
பூராட நட்சத்திரத்தில் பிறப்பெடுத்த வர்கள் கலைகளில் தங்களை சிறப்புற வளர்த்துக்கொள்வார்கள். ஏதேனும் ஒரு சாஸ்திரம் அறிந்து வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் முன் நடந்த தவறிலிருந்து பாடம் கற்றுத் தெளிந்து வழிநடப்பவர்களாக ஒருபொழுதும் இருக்கமாட்டார்கள்.
இவர்களின் பலமும் பேச்சுதான்; பலவீனமும் பேச்சுதான்.
பேச்சின்மூலம் பல உயர்வுகளை யும் இன்னல்களையும் ஒருங்கே அடைவார் கள்.
குடும்பத்தில் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
பூராடம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்தில் அமையப்பெறும். இந்த நிலையானது அரசு, அரசு சம்பந்தப்பட்ட தொழில் களில் உயர்வடைதல், அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பரிமாற் றத்தின்மூலம் லாபமடைதல், ஆடிட்டர்ஸ், ஆசிரியர் போன்ற தொழிலின்மூலம் சிறப் படைய வாய்ப்புகள் அதிகம்.
பூராடம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் புதனின் வீடான கன்னி வீட்டில் அமையப்பெறும். இவர்கள் ஆடிட்டர், ஜோதிடர், தரகர், அச்சகம், ஷேர் மார்க்கெட், பத்திரப்பதிவு போன்ற தொழிலின்மூலம் தங்களை சிறப்படைய வைத்துக் கொள்வார்கள்.
பூராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சுக்கிரனின் வீடான துலாத்தில் அமையப் பெறும். இங்கு அழகு, அழகியல் சம்பந்தப் பட்ட தொழில் என்று மக்களால் அறியப் பட்ட பியூட்டி பார்லர், ஜுவல் மேக்கிங், அலங்காரம் நிறைந்த துணிமணிகள், வாசனை திரவியங்கள், ஆர்க்கிடெக்ட், இன்டீரியர் டிசைனிங் போன்ற துறைகளில் தங்களை மெருகேற்றிக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பூராடம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் அமையப் பெற்றிருக்கும். இங்கே சந்திரன் நீசம் என்கின்ற நிலையை அடைவதனால் இவர்கள் எந்த முடிவையும் சரிவர எடுத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவராதவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஷேர் மார்க்கெட், பத்திரப்பதிவு, பேச்சாளர்கள், ஆசிரியர்கள், தபால் துறை சம்பந்தப்பட்ட வேலை, ஜோதிடர்கள், மேனேஜர் போன்ற பணியிடங்களைத் தங்களுக்கு உரித்தாக்கிக்கொண்டு பிரதிபலிப் பார்கள்.
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இதன் சின்னமான பனையோலை விசிறி யினை பணியிடங்களிலும் தொழில் கூடங் களிலும் அதிர்ஷ்ட சின்னமாகப் பயன்படுத்து வதன்மூலம் தொழில் மற்றும் பணியில் சிறந்து நல்ல செல்வநிலையை அடைய உதவி கரமாக இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பத்திரம், காசோலை, அக்ரிமெண்ட் போன்ற சூழ்நிலையில் பயணிக்கும்பொழுது ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுப்பதனால் பல இன்னல்களையும் சேதாரத்தையும் தவிர்த்துக்கொள்ளமுடியும்.
வழிபடவேண்டிய தெய்வம்: கடுவெளி யில் அமைந்துள்ள ஆகாசபுரீஸ்வரர்.
வணங்கவேண்டிய விருட்சம்: வஞ்சி மரம்.
அணியவேண்டிய ரத்தினம்: கனக புஷ்பராகம்.
(அடுத்த இதழில் உத்திராடம்)