புனர்பூசம் என்பது இந்திய வானிய-லும், ராசி சக்கரத்திலும், ஜோதிடத் திலும் பேசப்படும் 27 நட்சத்திரங்களில் ஏழாவது நட்சத்திரமாகும்.

இது மிதுனத்தில் தனது முதல் மூன்று பாதங்களையும், கடகத்தில் நான்காவது பாதத்தையும் பதித்து அமைந்துள்ளது. இது ஒரு காலற்ற நட்சத்திரமாகவும், உடைபட்ட நட்சத்திரமாகவும் உள்ளது. இந்த நட்சத்திரத்தை மேற்கத்திய உலகத்தினர் ஈஹள்ற்ர்ழ் மற்றும் டர்ப்ப்ன்ஷ் என்று அழைக்கின்றனர். இந்த இரண்டு நட்சத்திரத்தையும் புனர்பூசம் என்று இந்திய மரபில் சொல்லப்படுகிறது.

இந்த நட்சத்திரம் வானில் நம் கண்களுக்கு ஏறக்குறைய ஜனவரி 15 முதலான தேதிகளில் இரவு 11.30 மணிக்கும், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே காலை 3 மணி 30 நிமிடங்கள் அளவுக்கு நம் கண்களுக்குப் புலப்படும்.

ஜோதிடத்தில் புனர் பூசத்தை, மாபெரும் சுப கிரகமாகக் கருதப்படும் குரு ஆள்கிறார். இந்த புனர்பூசம் ஸ்ரீராமபிரான் அவதரித்த நட்சத்திரமாகும்.

Advertisment

புனர்பூச நட்சத்திரத்தின் ராசிநாதர்களாக ஒன்று, இரண்டு, மூன்றாம் பாதங் களுக்கு புதனும், நான்காம் பாதத்திற்கு சந்திரனும் வருகின்றார்கள். இதன் நட்சத்திரநாதன் குருவாகவும், நவாம்ச நாதர்களாக புனர் பூசம் ஒன்றாம் பாதமென்றால் செவ்வாயும், இரண்டென்றால் சுக்கிரனும், மூன்றென்றால் புதனும், புனர்பூசம் நான்காம் பாதமென்றால் சந்திரனும் அமைகிறார்கள்.

27 நட்சத்திரங்களில் அதிபுத்திசா-யான நட்சத்திரம் இந்த புனர்பூசமாகும். ஏனென்றால் இது குருவின் நட்சத்திரம். புதனென்றால் நுட்பமான, கூர்மையான, எளிதில் கிரகிக்கக்கூடிய அறிவு. குரு என்றால் உட-யல் கூறுகளில் மூளையின் முழு செயல்பாட்டிற்கும் காரணமானவர். அதாவது பேரறிவு கொடுக்கக்கூடியவர். இதனால்தான் இந்த புனர்பூசம் அதீத அறிவாற்றலும், செயலாற்றலும்கொண்ட நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. மேலும் கடகத்தில் அமைந்த நான்காம் பாதம் வேகம் குறைந்து, விவேகம் ஏற்படுத்தும். மிதுனம் என்னும் காற்று ராசியி-ருக்கும் வேகத்தைவிட நீர் ராசியில் அமையும்பொழுது வேகம் குறைக்கப்பட்டு விவேகம் மேலோங்கும்.

புனர் என்றால் மறுபடியும்; பூசம் என்றால் ஒ-. எனவே இவர்கள் முயற்சியின் மூலமும், மீண்டும் மீண்டும் முயற்சிப்பதன் மூலமுமே ஒரு பெரிய இடத்தை அடையும் யோக்கியதை பெற்றவர்களாக அமைகின்றனர்.

Advertisment

இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை அதிதி- தேவர்களுக்கெல்லாம் தாயென்று சொல்லக்கூடியவர்.

மேலும் மிதுன வீட்டில் குருவின் நட்சத்திரம். மிதுனம் குருவுக்கு ஆகாத வீடு. புனர் பூசம் அங்கே வகுக்கப்பட்டிருக்கிறது. எனவே இவர்கள் முரண்பாட்டின் மொத்த உருவமாகத் திகழ்வார்கள். எல்லாவற்றிலும் மாற்றத்தை சந்திக்கும் நட்சத்திரம் இதுவென்றால் மிகையாகாது. வேலையில் மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் போன்றவை இவர்களின் வாழ்வில் அடிக்கடி நிகழும்.

dd

மேலும் உச்சத்திலும், தாழ்விலும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் நட்சத்திரமிது. அதீத செலவையும் செய்யும்; கஞ்சத்தனத் தையும், காட்டும். அன்பாகவும் பேசும்; அதிகாரத் தையும் நிலைநிறுத்தும் நட்சத்திரம்.

புனர்பூசம் சனியின் சாபம்பெற்ற நட்சத்திரமாகும்.

இவர்கள் மற்றவரின் பேச்சைக் கேட்பதென்பது சற்று கடினமே. மிதுனத் தில் அமையப்பெற்ற மூன்று பாதங்களும் செவ்வாய், ராகு, குரு, புதன், சந்திரன் என்று கூட்டு சக்தியில் இருப்பதனால், எதையும் மறுக்கும் குணம் இவர்களுக்கு இருக்கும். பிடிவாதம், முரட்டுகுணம் போன்றவையும், மிக சாதுரியமாக நினைத் ததை நிறைவேற்றிக்கொள்ளும் குணமும் இவர்களிடம் இருக்கும். எதையும் கற்கும் திறனும், உருவாக்கும் திறனும் கொண்ட நட்சத்திரமென்றாலும், அதை அனுபவிக்கும் திறன் என்னவோ கடகத்தில் அமையப்பெற்ற புனர்பூசத்திற்கே இருக்கும். இவர்கள் பெரும்பாலும் 25--ருந்து 30 வயதிற்குள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள்.

புனர்பூசம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் இவர்களுக்கு சந்திரன் நவாம்சத்தில் மேஷ வீட்டில் அமையப்பெறுவார். இவர்கள் கல்வி, கேள்விகளிலும், அரசு வேலை, அதிகாரம்மிக்க வேலை, இராணுவம், சீருடைப் பணி, கல்வியின்மூலம் சிறப்பை அடைவார்கள். இந்த வீட்டில் செவ்வாய், சந்திரன், குரு, புதன் போன்றவற்றின் கூட்டு நிகழ்வதனால், புத்திசா-த்தனத்தின்மூலமும், அறிவின் மூலமும், கல்வியின்மூலமும், தன்னை நிலை நிறுத்தி முன்னேறிவருவார்கள்.

புனர்பூசம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

நவாம்சத்தில் சந்திரன் ரிஷபத்தில் அமையப் பெறும்பொழுது வெளிநாட்டுப் பயணம், கான்ட்ராக்ட், உணவகம், கதை, கட்டுரை, கலைத்துறை போன்றவற்றின்மூலமும், கல்வி மற்றும் கேளிக்கைகளின்மூலமும், முன்னேற் றத்தை அனுபவிப்பார்கள்.

புனர்பூசம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

சந்திரன், புதன், வீடான மிதுனத்தில் அமையப்பெறும்பொழுது வழக்கறிஞர், ஆசிரியர், பேச்சைத் தொழிலாகக்கொண்ட அனைத்துத் தொழில்களும், ஏஜென்ட், கான்ட்ராக்ட், ஒப்பந்தம் போன்றவற்றின் மூலமும், அதீத கூர்மையான அறிவுத்திறனின் மூலமும் தன்னை முன்னேற்றத்தின் வழியில் பயணிக்க வைப்பார்கள்.

புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

நவாம்சத்தில் சந்திரன் கடகத்தில் அமையப் பெறும். இது வர்க்கோத்தமம் அடையும் பொழுது சந்திரனின் காரகத்துவங்களான உணவகம், விவசாயம், வாகனம் சம்பந்தப்பட்ட தொழில் போன்றவை அமையப்பெற்று சிறப் படைவார்கள்.

வணங்கவேண்டிய தெய்வம்: இராம பிரான். அணியவேண்டிய ரத்தினம். கனக புஷ்பராகம்.

வணங்கவேண்டிய தலம்: ஆலங்குடி.

வணங்கவேண்டிய விருட்சம்: கொய்யா மரம்.

(அடுத்த இதழில் பூசம்)

செல்: 80563 79988