கிரக இணைவுகள்
ஜோதிடத்தை பொறுத்தவரை ஒரு தோஷம், குற்றம், குறை ஆகியவற்றை நிர்ணயம் செய்வதில் கிரக இணைவுகளின் பங்கு அளப்பரியது. பூமிக்காரகன், சொத்துக் காரனான செவ்வாயுடன் சம்பந்தம் பெறும் சுப கிரகங்கள் வாஸ்து சுத்தமான சொத்தை வழங்குகிறது. செவ்வாய்க்கு அசுப கிரகங்கள் சம்பந்தம் இருந்தால் பூமி தோஷத்தை, வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. அதன்படி செவ்வாய்+சூரியன்
சுய ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சம்பந்தம் இருந்தால் சொத்தில் சூரிய ஒளிக்கதிர் நன்றாக விழும். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருக்கக்கூடாது. குடியிருக்கும் வீட்டை அல்லது மனையை அசுப சக்திகள் அண்டாது. அசுபசக்திகள் இருந்தாலும் செயல் இழக்கும். இதுபோன்ற கிரக சம்பந்தம் உள்ளவர்கள் சொத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால் எளிதாக சரி செய்ய முடியும். அதனால் பலர் கிழக்கு பார்த்த சொத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து, கவுரவம், அரசியல் ஆதாயம் உண்டு.
செவ்வாய்+சந்திரன்
சந்திரனும், மங்களன் என்று சொல்லப் படும் செவ்வாயும் சேர்ந்து கேந்திர திரி கோணங்களில் இருந்தால் சந்திர மங்கள யோகம் ஏற்பட்டு குபேர சம்பத்து கிடைக்கும். ஒன்றையொன்று பார்த்தாலும் பெரும் பணவரவு உண்டு. இதன் மூலம் சொத்து, புகழ், செல்வம், செல்வாக்கு, உயர் பதவி, போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, மற்றும் அரசு உயர் பதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டிட கட்டுமானத்தொழில், செங்கல் சூளை, நெருப்பு சம்பந்தமான தொழில்கள் தோட்டம், எஸ்டேட், தோப்பு, நிலபுலன்கள் என வசதியாக வாழ்வார்கள். இதற்கு அசுப கிரகம் சம்பந்தம் இருந்தால் வாஸ்து குறைபாடு சொத்து தொடர்பான மன உளைச்சல் இருக்கும்.
செவ்வாய்+புதன்
செவ்வாய் பூமிக்காரகன். புதன் காலி நிலம். சிலருக்கு புதன், செவ்வாய் சம்பந்தம் கடன்பட்டு சொத்து வாங்குவதை ஏற்படுத்தும். அல்லது தவணை முறையில் சொத்து வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்து. பெரும்பாலும் பெரிய தொந்தரவுகளை தருவதில்லை. இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் ஆவணங்கள் தொடர்பான பிரச்னை, எல்லைத் தகராறு, கடன் பிரச்சனைகள் இருக்கும்.
செவ்வாய்+குரு
குரு மங்கள யோகம்: குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் "குரு மங்கள யோகம்'' ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் பெறுவார்கள். இந்த அமைப்பை பெற்றவர்களின் சொத்துக்கள் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு அருகில் இருக்கும். சொத்துக்களின் மதிப்பு விரைவில் உயரும். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் குருச் சண்டாளயோகமாக பலன் தரும்.
செவ்வாய்+சுக்கிரன்
இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு சொகுசான ஆடம்பர அந்தஸ்தான சொத்து அமையும். இந்த அமைப்பு உள்ளவர்களில் கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் நன்மைகள் நடக்கும். தம்பதிகள் ஈருடல், ஓர் உயிராக வாழ்வார்கள். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய பகைமை மறையும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு உடன் பிறந்த உறவுகள் மூலம் செத்து கிடைக்கும்.
செவ்வாய்+ராகு
இந்த இணைவு உள்ள ஜாதகர்களுக்கு எளிதில் சொத்து கிடைப்பதில்லை. சிலருக்கு கிடைத்தாலும் வில்லங்கம், தோஷம் உள்ள சொத்தே கிடைக்கிறது. ஒரு சிலருக்கு வாங்கும் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பயனற்ற சொத்தாகி விடுகிறது. அல்லது வாஸ்து பிரச்சினையுள்ள சொத்தாகத்தான் இருக்கும்.
செவ்வாய்+கேது
இந்த கிரக இணை வால் பூர்வீகச் சொத்து பயனற்றதாகவே இருக்கும். சொத்து பிரச்சினை காரணமாக சகோதரர் களிடையே மனக்கசப்பு ஏற்படும்.சொத்தில் வில்லங்கம், முறையற்ற பாகப்பிரிவினை, கடனுக்காக சொத்தை இழப்பது, சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் இருக்கும்.
புதன்+ராகு
புதன் காலி நிலங்களை குறிக்கும் கிரகம். ராகு வில்லங்கத்திற்கான காரக கிரகம். பத்திரப்பதிவு முறைகேடு இருக்கும். பட்டா இல்லாத நிலங்கள், முறைப்படுத்தப்படாத நிலங்கள் பாகம் பிரிக்க முடியாத நிலங்கள், பத்திரப் பதிவில் தடை இருக்கும் ஒரிஜினல், மூலப்பத்திரம் ரசீதுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்
சனி+செவ்வாய்
இந்த கிரக இணைவு பற்றி வாசகர்களுக்கு எதுவும் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் நன்கு பரிட்சயமான கிரக சம்பந்தம். சனி பூர்வீகம், பழமை, கர்மா. செவ்வாய் சொத்து. கர்மாரீதியான சொத்துப் பிரச்சினைகள் உருவாகும். சிலருக்கு தனது சொத்து எங்கே உள்ளது என கண்டறிய முடியாத இடத்தில் சொத்து இருக்கும்.
இது போல் சொத்து சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும் பரிகாரமும், வழிபாட்டு முறைகளும் ஜாதகரை நிம்மதியடையச் செய்ய முடியும். ஒருவருக்கு அமையும் சொத்து பூர்வ புண்ணிய பலத்தின் படியே உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத் தில் பதிவாகாத ஒரு செயல் இந்த பிறவியில் நடக்கும் வாய்ப்பே இல்லை எனலாம். இதைத் தான் நமது ஜோதிட முன்னோடி கள்
"ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்தநீ குலஸம்பதாம்
பதவி பூர்வ புண்யாணாம் லிக்ய தே ஜன்ம பத்திரிகா''
என்று கூறி வைத்தார்கள்.
ஒருவரின் சொத்தில் உள்ள தோஷத் திற்கும் ஜாதகரின் ஜாதகத்திற்கும் நெருங் கிய சம்பந்தம் உண்டு என்பது எனது ஆணித் தரமான கருத்து. இதை காப்பியடித்து ஹ்ர்ன்ற்ன்க்ஷங்-ல் தனது கண்டுபிடிப்பு போல் சிலர் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். முன்னோர் வழிச்சொத்தை பத்திரம் மாற்றி எழுதும்போதும் வீடு மற்றும் புதிய கட்டிடங்கள், நிலங்களை வாங்கும் பொழுதும் சில குறிப்பிட்ட விதிகளை கடைபிடித்தால் சொத்துகளின் மேல் உள்ள தோஷம் வீரியம் குறையும்.
ஒருவருக்கு அமையும் சொத்துக்களில் ங்ஹழ்ற்ட் ங்ய்ங்ழ்ஞ்ஹ்-ல் சுபிட்சம் குறைந்தால் தெய்வ பலம் குறைந்து தீய சக்திகளின் ஆதிக்கம் நிறைந்த சொத்தாக இருக்கும்.
சொத்து அமைந்த பிறகு கடன், மருத்துவச் செலவு, அறுவை சிகிச்சை, கணவன் மனைவி சண்டை, பிரிவினை, விபத்து, தொழிலில் மிகப்பெரிய பாதிப்பு, வேலையில் மாற்றம் அல்லது வேலை இழப்பு. சொத்து தகராறு என அவரவரின் தசா புக்திக்கு ஏற்ற பாதிப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு உடனே பாதிப்புகள் தெரியும். ஒரு சிலருக்கு ஓரிரு ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும்.
பூமி, நிலம் முதலானவை வாங்க, முன்னோர்களின் சொத்தை மாற்றி எழுத சில குறிப்பிட்ட திதிகள் நட்சத்திரங்கள் உகந்ததாக இருக்கும்.
அஸ்வினி, கிருத்திகை ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், பூரம், விசாகம், அனுஷம், மூலம், பூராடம், திருவோணம், அவிட்டம் ,பூரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்களிலும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி துவாதசி மற்றும் திரியோதசி ஆகிய திதிகளிலும், சிம்மம், தனுசு மற்றும் மகர லக்னங்களிலும், சுய ஜாதகத்தில் 4-ஆமிடம் பலன் பெறும் காலங்களிலும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளை தவிர மற்ற நாட்களிலும் நிலம் மற்றும் பூமி வாங்கலாம்.
பரிகாரம்
சொத்துக்களால் இன்னல்களை அனுபவிப்பவர்கள் சனிக்கிழமை காலை 8-9 மணி வரையான செவ்வாய் ஓரையில் சிவனுக்கு புண்ணிய நதிகளின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து வழிபட இன்னல்கள் நீங்கும். இதுவரை பல கட்டுரைகளுக்கு ஆதரவு வழங்கிய பால ஜோதிட வாசகர் கள் கடந்த ஆறு வாரங்களாக சொத்துக் களுக்கும் தோஷம் உண்டா? என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைக்கு கொடுத்த வரவேற்பில் அகம் மகிழ்ந்தேன். பாலஜோதிடம் வாசகர்கள் வழங்கிய நல் ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். என்னுள் உந்து சக்தியாக இருந்து எழுதத் தூண்டிய பிரபஞ்ச சக்தியை மண்டியிட்டு நமஸ்கரிக்கிறேன். இந்தப் பாராட்டுகளுக்கு ஜோதிடம் மற்றும் பிரபஞ்சத்தின் பொற்பாதங்களையும் நமஸ்கரிக்கிறேன்.
இந்த பத்திரிகையில் தொடர்ந்து எழுத வாய்ப்பு வழங்கிக்கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி பத்திரிகையாளர்களில் முடி சூடா மன்னன் அண்ணன் திரு. நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றிகள். ஒருவர் தன் திறமையை வெளிப்படுத்த நல்ல சிந்தனை எழுத்து திறமை இருந்தால் மட்டும் போதாது. அதை வெளிப்படுத்த களமும் எழுத்துச் சுதந்திரமும் அவசியம்.
ஒருவருக்கு எழுத்து சுதந்திரம் வழங்குவதில் திரு. நக்கீரன் கோபால் அவர்களே முன்னிலை வகிக்கிறார் என்பது எனது அனுபவ உண்மை. மேலும் நமது இதழின் பொறுப்பாசிரியரும் எனது முதல் வாசகருமான திரு. மலரோன் அய்யா அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு எழுத்தாளரின் வெற்றியே வாசகர் களின் ஆதரவு. தினமும் பல வாசகர்கள் தொலைபேசியில் என்னுடன் பேசுவார்கள். கடந்த வாரம் திண்டுக்கல்லை சேர்ந்த 75 வயது பராம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர் அய்யா ஒருவர் என்னிடம் பேசினார். தனது 50 வருட ஜோதிட அனுபவத்தில் பித்ரு தோஷத்திற்கு இப்படி ஒரு விளக்கம் யாரும் தரவில்லை.
தனக்கும் இது போன்ற ஆழ்ந்த சிந்தனை வரவில்லை என்று 20 நிமிடம் நெஞ்சம் உருக பேசினார். வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போன்று உணர்வு எழும்பியது. அவருடைய அனுபவ வயது கூட எனக்கு கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை. அதே போல் நான், எனது என்ற கர்வம் ஒரு ஜோதிடருக்கு அழகல்ல. அன்றும், இன்றும் என்றும் நான் ஜோதிட அடிமையாக, ஜோதிட மாணவியாகவே வலம் வர விரும்புகிறேன். ஜோதிடம் எனும் கரையை கடப்பது சாமானியமான செயலல்ல. தினம் தினம் ஒரு புதுமையை, அனுபவ பாடத்தை கற்றுக் கொடுப்பது ஜோதிடம். வாழ்க ஜோதிடம். வளர்க ஜோதிடம்.
செல்: 98652 20406