சொத்துக்களுக்கும் தோஷம் உண்டா? -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/property-also-bad-prasanna-astrologer-i-anandi

குருச் சண்டாள யோகம்

குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகுமென்று பொதுவாக கூறப்படுகிறது. இந்த கிரக கூட்டணி சுபமாகவோ அல்லது பலமாகவோ அமைந்துவிட்டால் அங்கு யோகம்தான் அதிகமாக வேலை செய்யும். மாறாக ஜனன ஜாதகத்தில் பலவீனமாகவோ அல்லது அசுபமாகவோ அமைந்துவிட்டால் அங்கு தோஷமே அதிகமாக வேலை செய்யும் என்பது பொதுவான விதி. அதாவது தன்னுடன் தொடர்புகொண்ட கிரகங்களை கிரகணப் படுத்தி அதன் வலிமையை தன்னுள் ஈர்த்துக் கொண்டு செயல்படுவது ராகுவின் குணம். இதை மேலும் விவரித் துக் கூறினால் பாம்புகள் புற்றில் வசித்தா லும் அந்த புற்றுகள் பாம்பினால் உருவாக் கப்படுவதில்லை. கறையான் புற்று மற்றும் பொந்துகளில் வசிக்கும். அடுத்தவர் சொத்தை அபகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களை அழிப்பதுவே ராகுவின் வேலை.

பொதுவாக ராகு தனக்கு சொந்த வீடு இல்லாத காரணத்தால் தான் நின்ற வீட்டின் பலனையும் தன்னுடன் இணைந்த கிரகத்தின் காரகத்துவத்தையும் கலந்து வெளிப்படுத்தும். அதாவது, குருவுடன் இணைந்த ராகு தனக்கு சொந்த வீடு இல்லாத காரணத்தால் ராகு தசையில் குருவின் காரகத்துவங்களை தன்னுள் இழுத்துக்கொண்டு குருவாக செயல்பட்டு தாராள பொருள் வரவு, குழந்தை பேறு, வீடு, வாகன யோகம் என அபரிமிதமான யோகங்களை வழங்கு வார்.

குரு ராகுவோடு 8 டிகிரிக்குள் இணைந் தால் குரு தன்னுடைய பார்வை பலத்தையும், காரக, ஆதிபத்திய பலனையும் இழந்து, தன்னுடைய பார்வையால், பார்க்கும் இடத்தை புனிதப்படுத்தும் தகுதியை இழந்துவிடுவார். அதனால்தான் ராகு தசையில் சம்பாதித்த அனைத்தும் குரு தசையில் இழக்க நேருகிறது.

அதேபோல் குரு, ராகு இணைவு 8 டிகிரிக்குள் இருந்தால் ராகு, குரு தசை புக்தி காலங்களில் மட்டுமே யோகத்தையோ அவ யோகத்தையோ மிகைப்படுத்துகிறது. மற்ற காலங்களில் பெரிய தோஷத்தை தருவது இல்லை. நல்ல வசதியான வாழ்க்கையை குருட்டு அதிர்ஷ்டத் தில் அனுபவிக்கி றார்கள். ஆனால் தங்கள் வாழ்நாளில் மிகவும் நேசித்த உறவு களிடம் சண்டாளா,

குருச் சண்டாள யோகம்

குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகுமென்று பொதுவாக கூறப்படுகிறது. இந்த கிரக கூட்டணி சுபமாகவோ அல்லது பலமாகவோ அமைந்துவிட்டால் அங்கு யோகம்தான் அதிகமாக வேலை செய்யும். மாறாக ஜனன ஜாதகத்தில் பலவீனமாகவோ அல்லது அசுபமாகவோ அமைந்துவிட்டால் அங்கு தோஷமே அதிகமாக வேலை செய்யும் என்பது பொதுவான விதி. அதாவது தன்னுடன் தொடர்புகொண்ட கிரகங்களை கிரகணப் படுத்தி அதன் வலிமையை தன்னுள் ஈர்த்துக் கொண்டு செயல்படுவது ராகுவின் குணம். இதை மேலும் விவரித் துக் கூறினால் பாம்புகள் புற்றில் வசித்தா லும் அந்த புற்றுகள் பாம்பினால் உருவாக் கப்படுவதில்லை. கறையான் புற்று மற்றும் பொந்துகளில் வசிக்கும். அடுத்தவர் சொத்தை அபகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களை அழிப்பதுவே ராகுவின் வேலை.

பொதுவாக ராகு தனக்கு சொந்த வீடு இல்லாத காரணத்தால் தான் நின்ற வீட்டின் பலனையும் தன்னுடன் இணைந்த கிரகத்தின் காரகத்துவத்தையும் கலந்து வெளிப்படுத்தும். அதாவது, குருவுடன் இணைந்த ராகு தனக்கு சொந்த வீடு இல்லாத காரணத்தால் ராகு தசையில் குருவின் காரகத்துவங்களை தன்னுள் இழுத்துக்கொண்டு குருவாக செயல்பட்டு தாராள பொருள் வரவு, குழந்தை பேறு, வீடு, வாகன யோகம் என அபரிமிதமான யோகங்களை வழங்கு வார்.

குரு ராகுவோடு 8 டிகிரிக்குள் இணைந் தால் குரு தன்னுடைய பார்வை பலத்தையும், காரக, ஆதிபத்திய பலனையும் இழந்து, தன்னுடைய பார்வையால், பார்க்கும் இடத்தை புனிதப்படுத்தும் தகுதியை இழந்துவிடுவார். அதனால்தான் ராகு தசையில் சம்பாதித்த அனைத்தும் குரு தசையில் இழக்க நேருகிறது.

அதேபோல் குரு, ராகு இணைவு 8 டிகிரிக்குள் இருந்தால் ராகு, குரு தசை புக்தி காலங்களில் மட்டுமே யோகத்தையோ அவ யோகத்தையோ மிகைப்படுத்துகிறது. மற்ற காலங்களில் பெரிய தோஷத்தை தருவது இல்லை. நல்ல வசதியான வாழ்க்கையை குருட்டு அதிர்ஷ்டத் தில் அனுபவிக்கி றார்கள். ஆனால் தங்கள் வாழ்நாளில் மிகவும் நேசித்த உறவு களிடம் சண்டாளா, சண்டாளி என்ற அவப்பெயரை பெறவைத்துவிடுகிறது. இந்த கிரகச் சேர்க்கை பலருக்கு கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்புமூலம் குழந்தை பிறக்கச் செய்கிறது.

பெற்றோர்களும் பிள்ளைகளும் மனம் ஒன்றாமல் தனித் தீவாகவே வாழ்கிறார் கள். ஜோதிடத்தில் ஒரு விதியை வைத்து மட்டும் பலன் சொல்லமுடியாது என்ற அமைப்பில், எந்த லக்னத்திற்கு, என்ன ஆதிபத்திய அமைப்பில், குரு, ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளது என்பதை டிகிரிப்படி கணித்து, ஜாதகத்தின் மற்ற நிலைகளையும் அறிந்து, பலன் எடுப்பதே சரியான பலனாக அமையும்.

புனித கிரகமான குரு சண்டாள கிரகமான ராகுவுடன் சேரும்போது குருச் சண்டாள யோகமாக செயல்படும். பெரும்பான்மையாக குரு- ராகு சேர்க்கை உள்ளவர்களுக்கு அதிர்ஷ்ட பணம், உழைக்காத வருமானம், வட்டித் தொழில் மூலம் வருமானம், அதிர்ஷ்ட சொத்து, பினாமி சொத்து என பொருள் வரவு இருந்துகொண்டே இருக்கும். என் அனுபவத்தில் 50% குரு- ராகு சம்பந்தம் உள்ளவர்கள் வட்டித்தொழில் நடத்துகிறார் கள். சொத்துகள், நகை அல்லது வெற்று காசோலை போன்றவற்றை பெற்றுக் கொண்டு வட்டிக்கு பணம் வழங்குகிறார். குரு- ராகுவிற்கு அஷ்டம பாதக ஸ்தானம் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு அசலும், வட்டியும் முழுமையாக வசூலாகி விடும். குரு, ராகுவிற்கு அஷ்டம பாதக ஸ்தான சம்பந்தம் உள்ளவர்களுக்கும், புதன் ராகு சம்பந்தம் இருப்பவர்களுக் கும் முறையான ஆவணங்கள் இருந்தா லும் கொடுக்கல்- வாங்கலில் சிக்கல் நிலவுகிறது. இதுபோன்ற கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு அடமானமாக பெறப் பட்ட சொத்தை விற்கமுடியாமல் அசல் வட்டியை இழக்க நேருகிறது அல்லது பணத்திற்காக சட்ட உதவியை நாடி அசல், வட்டிக்குமேல் அதிகமான பணத்தை இழக்கிறார்கள்.

சிலர் வட்டி, அசலுக்காக வாடிக்கையாளர் சொத்தை கையப்படுத்திக் கொள்கிறார். நியாயமாக வரவேண்டிய பணத்திற்காக பெறப்பட்ட சொத்தாக இருந்தாலும் அந்த சொத்தின் உரிமையாளர்களின் கோபமும், சாபமும் உள்ளதால் அந்த சொத்தை எளிதாக விற்கமுடிவதில்லை. சிலர் அசலை மட்டும் செலுத்தி வட்டியை செலுத்தாமல் சட்ட உதவியை நாடுகிறார் கள்.பல வருடங்களாக சொத்துகள் வழக்கிற்காக யாருக்கும் பயன்படாமல் நீதி மன்றத்திற்கு அலைந்தபாடாக உள்ளது. விற்கமுடியாத சொத்து பல வட்டிக் கடை உரிமையாளர்களின் மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது.

இது கொடுக்கல்- வாங்கல் தொழிலை கொண்ட பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்திற்கும் நடக்கும் இயல்பான சம்பவங்கள். கார்ப்ரேட் போன்ற மிகப்பெரிய நிதி நிறுவனங்களுக்கு இழப்பை ஈடுசெய்யக்கூடிய வலிமை உண்டு. சிறிய நிதி நிறுவனங்களுக்கு இது தாங்கமுடியாத இழப்பாகும்.

ss

தன காரகரான குருவே ஒரு ஜாதகரின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்பவர். பொதுவாக குரு- ராகு, குரு- கேது சம்பந்தம் இல்லாத வட்டித் தொழில் கிடையாது. ஒருவரின் ஜாதகத்தில் குரு ராகுவை நோக்கிச் சென்றால் அசலை பெரிய அளவில் இழக்கிறார்கள். ராகுவை கடந்து குரு நின்றால் பெரும் பணம் சம்பாதிக் கிறார்கள். குரு- கேதுவை நோக்கிச் சென்றால் முதலில் வட்டி வாங்கி வாழ்கிறார் கள். குறுகிய காலத்திற்குப் பிறகு வட்டிக்கு பணம் வாங்கி வாழ்க்கையை நடத்துகி றார்கள். சுய ஜாதகத்தில் குரு, ராகு- கேதுவின் பிடியில் இருப்பவர்களின் பணம் பாம்பு வாயில் சென்ற தவளை கதைதான். அதே நேரத்தில் தன, லாப பாவகங்களான 2, 10, 11-ஆம் அதிபதிகள் சுப வலுப் பெற்றவர்கள் பணம் கடலில் கரைத்தாலும் விருட்சமாக வளரும். 2, 10, 11-ஆம் அதிபதிகள் 6, 8, 12-ஆம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறாதவரை வட்டித் தொழில் நல்ல வருமானம் தரும். அதேபோல் 2, 10, 11-ஆம் அதிபதிக்கும், குருவிற்கும் வலுப்பெற்ற செவ்வாய் சம்பந்தம் இருந்தால் வட்டித்தொழிலில் நிலையான- நிரந்தரமான வருமானம் உண்டு. சுருக்கமாக குரு வலுத்து ராகு- கேது பலம் குறைந்தவர்களுக்கு வட்டித் தொழில்மூலம் வருமானம் பெருகும்.

இதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம்.

14-11-1972 காலை 5.30 மணிக்கு பிறந்த இந்த ஜாதகர் பிறவி கோடீஸ்வரர். . பரம்பரை பரம்பரையாக வட்டித் தொழில் நடத்துபவர்கள். துலாம் லக்னம். அவிட்டம் நட்சத்திரம். மகர ராசி. லக்னத்தில் நீச சூரியன்.

தனாதிபதி செவ்வாய். சூரியன் பாதகாதிபதியாக இருந்தாலும் நீசம்பெற்றதால் பாதக தோஷம் பெரிய பாதிப்பை தரவில்லை. சந்திரனுக்கு கேந்திரத்தில் நீச சூரியன் நிற்பதால் நீசம் பங்கமாகியது. ராசியிலுள்ள செவ்வாய் 4-ஆம் பார்வையாக சந்திரனைப் பார்ப்பது சந்திர மங்கள யோகம். செவ்வாயின் 4-ஆம் பார்வை சந்திரனின்மேல் பதிவது விசேஷமான சுபப்பலனை வழங்கும் அமைப்பு. சந்திர மங்கள யோகத்தால் அதிக அடமானச் சொத்து சேர்க்கை.

சூரியனுக்கு வீடுகொடுத்த சுக்கிரனும் லக்னத்திற்கு 12-ல் நீசம். லக்னத்தில் நீச கிரகம் நின்றாலும் அவர் லாபாதிபதி என்பதால் வட்டித் தொழிலில் பெரும் லாபம் கிடைத்தது. குரு ராகு சம்பந்தம் வட்டித் தொழில். தன ஸ்தானத்தில் நின்ற புதன் 9, 12-ஆம் அதிபதி. 2, 9 சம்பந்தம் இருந்ததால் குலத்தொழில்.

ஜாதகர் தந்தையின் தொழிலில் நுழைந்தது முதல் லாபம் ஒரு புறம் இருந்தது. தனது 20 வயதில் தந்தையுடன் இணைந்து குலத் தொழிலில் ஈடுபட்டார். 3, 6-ஆம் அதிபதி யான குருவின் தசை ஆரம்பித்தவுடன் (3 டாக்குமென்ட், 6 வட்டி வருமானம்) அடமானத்தின்மேல் அதிகமாக பணப் பரிவர்த்தனை செய்தார். அடமானச் சொத்து கள் அதிகமாக சேர்ந்தது. தொழிலுக்கு தேவையான பணப் புழக்கமும் இருந்தது.

அடுத்தது சனி தசை. சனி 4, 5-ஆம் அதிபதி என்பதால் தொழில் முன்னேற் றம் கூடியது. சனி நின்ற இடம் அஷ்டம ஸ்தானமானதால் அவச்சொல், வழக்கு, அவமானம் கூடியது. 4, 5, 8 சம்பந்தம் சொத்துகள்மீதான வழக்கு 50-க்குமேல் பதிவாகிவிட்டது. 39 வயதில் சனி தசை ஆரம்பித்தவுடன் வருமானத்துடன் வழக்கும் கூடியது. திருமணமாகி குழந்தையும் இல்லை என்ற மன வருத்தத்தில் "பாலஜோதிடம்' படித்து 46 வயதில் சனி தசை, கேது புக்தியில் நம்மை சந்தித்தார். சில விசேஷ பூஜை பரிகாரங்கள்மூலம் செயற்கை கருத்தரிப்புமூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. தற்போது 20 வழக்குகளே ஜாதகருக்கு உள்ளது.

பரிகாரம்

மீளமுடியாத வறுமையால் கடனால் ஒருவர் சொத்துக்களை இழப்பது மிகக் கொடுரமான தண்டனை. அதேபோல் நியாயமாக விதியை மீறாத வட்டித்தொழில் நடத்தும் ஒருவர் தனது தொழில் முதலீட்டை யும் வட்டியையும் இழப்பதும் வேதனையைத் தரும் சமாச்சாரம். கடன்பெற்றவர்களின் அவஸ்தையும், கடன் கொடுத்த வர்கள் படும்பாடும் மன உளைச்சலை அதிகப்படுத்தும் பிரச்சினைதான். இது போன்ற மீளமுடியாத பிரச்சினையால் பலர் தங்களை மாய்த்துக்கொள்ளவும் தயங்குவதில்லை. இதுபோன்ற இரண்டு பிரச்சினையும் குரு, ராகுவால் இணைவால் உருவாகும் குருச் சண்டாள யோகத்தால் மட்டுமே ஏற்படுகிறது.

ஜாதகரை இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிவிலுக்கு குறிப்பாக அங்கு ஜீவசமாதியாக உள்ள பதஞ்சலி முனிவர் வழிபாடு பரிந்துரைக் கப்பட்டது. சனி தசை முடியும்வரை செல்ல வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. சில விசேஷ திதிகளும் கூறப்பட்டது. உலகப் புகழ்பெற்ற ஆலயமான இராமேஸ்வரம் இராமநாதஸ்வாமி ஆலயத்தில் பதஞ்சலி முனிவர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. பிரமிக்கவைக்கும் வகையில் லட்சக் கணக் கான உத்திராட்சங்களாலான கோட்டை போல் ஆலயம் முழுவதும் உத்திராட்சம் நிறைந்திருக்கும். அமைதியான வகையில் தியானம்செய்ய ஏற்ற இடமாகவும் இந்த ஆலய ஜீவசமாதி அமைந்துள்ளது. இவர் மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் என்ற பாம்பின் மறு பிறப்பாக கருதப்படுபவர்.

இங்குசென்று வழிபாடு செய்ததால் தற்போது ஜாதகர் வழக்குகள் குறைந்து நிம்மதியாக உள்ளார். லக்னப்புள்ளி சுவாதி 4 எனும் புஷ்கர நவாம்ச பாதத்தில் நின்றதால் வழிபாடு பலன் கொடுத்தது.

வட்டித் தொழில் செய்யலாமா?

இயலாதவர்களை பணத்திற்காக துன் புறுத்தி நோகடிப்பதை எந்த மதமும் அங்கீகரிக்கவில்லை. அதேபோல் அடாவடித்தனமாக வட்டித் தொழில் செய்து சொத்துகள் பறிமுதல் செய்பவர்களின் வாரிசுகள் கிரகண தோஷத்தால், குருச் சண்டாள யோகத்தால் பாதித்து முன்னேற்ற மில்லாமல் வாழ்கிறார்கள் அல்லது குழந்தை பேறு இல்லாமல் வம்சம் முடிவடைகிறது. எனவே சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

மனிதன் பொன்னைத் தேடுவதிலும், பொருளைத் தேடுவதிலும், மண்ணைத் தேடுவதிலுமுள்ள அவனது நாட்டம் மனிதம் காக்கும் மனித நேயத்தை தேடுவதில்லை. சக மனிதனின் வேதனை கண்டு ரசிக்கிறான்.

புகழ், போதை மயக்கத்தில் அவன் ஆட்டம் போடுகின்றான். பண வெறி, பதவி வெறி, மத வெறி, இனவெறிகொண்டு சக மனிதர்களை துன்புறுத்துகிறான்.

bala240524
இதையும் படியுங்கள்
Subscribe