உத்தியோகத்தில் உயர்வடையும் நிலை!

/idhalgal/balajothidam/promotion-work

ருவர் தனது வருமானத்துக்காக ஏதாவதொரு செயலைச் செய்தால்தான் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். ஒருவருக்கு விதிக்கப்பட்ட விதிப்படி என்ன யோகமிருக்கிறதோ அதைத்தான் ஒருவர் செய்யமுடியும். ஒருசிலருக்குதான் சொந்தமாகத் தொழில் செய்யக்கூடிய யோகமும், அதில் லாபத்தை ஈட்டக் கூடிய அமைப்பும் உண்டாகும். பெரும்பாலும் பலருக்கு மற்றவரிடம் வேலைசெய்யும் அமைப்பு ஏற்படுகிறது. உத்தியோகத்துக்குச் செல்லும்பொழுதுகூட அதற்கும் எந்தவித இடையூறுமின்றி, தொடர்ந்து ஒரு பணியில் சிறப்பாக சம்பாதிக்கும் யோகமானது சிலருக்குதான் ஏற்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் பத்தாமதிபதி மிகவும் பலமாக இருந்து, நடக்கக்கூடிய தசைகளும் சிறப்பான தசைகளாக இருந்தால் சொந்தத் தொழில் யோகம் உண்டாகிறது. 10-ஆமதிபதி கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று, ஒருவருக்கு சம்பாதிக்கவேண்டிய வயதில் நடக்கும் தசை நல்ல தசையாக இல்லாமல், மறைவு ஸ்தானாதிபதி தசையாகவோ லக்னாதிபதிக்கு பகை கிரகங்களுடைய தசையாகவோ இருந்தால் அவர்கள் சொந்தத் தொழில் செய்யாமல் வேலைக்குச் செல்லக் கூடிய யோகம் உண்டாகிறது.

ஒருவர் ஜாதகத்தில் உத்தியோக காரகன் செவ்வாயாகும். செவ்வாய் ஜென்ம லக்னத் திற்கு பத்தாம் வீட்டில் அமையப்பெற்றால்

ருவர் தனது வருமானத்துக்காக ஏதாவதொரு செயலைச் செய்தால்தான் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். ஒருவருக்கு விதிக்கப்பட்ட விதிப்படி என்ன யோகமிருக்கிறதோ அதைத்தான் ஒருவர் செய்யமுடியும். ஒருசிலருக்குதான் சொந்தமாகத் தொழில் செய்யக்கூடிய யோகமும், அதில் லாபத்தை ஈட்டக் கூடிய அமைப்பும் உண்டாகும். பெரும்பாலும் பலருக்கு மற்றவரிடம் வேலைசெய்யும் அமைப்பு ஏற்படுகிறது. உத்தியோகத்துக்குச் செல்லும்பொழுதுகூட அதற்கும் எந்தவித இடையூறுமின்றி, தொடர்ந்து ஒரு பணியில் சிறப்பாக சம்பாதிக்கும் யோகமானது சிலருக்குதான் ஏற்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் பத்தாமதிபதி மிகவும் பலமாக இருந்து, நடக்கக்கூடிய தசைகளும் சிறப்பான தசைகளாக இருந்தால் சொந்தத் தொழில் யோகம் உண்டாகிறது. 10-ஆமதிபதி கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று, ஒருவருக்கு சம்பாதிக்கவேண்டிய வயதில் நடக்கும் தசை நல்ல தசையாக இல்லாமல், மறைவு ஸ்தானாதிபதி தசையாகவோ லக்னாதிபதிக்கு பகை கிரகங்களுடைய தசையாகவோ இருந்தால் அவர்கள் சொந்தத் தொழில் செய்யாமல் வேலைக்குச் செல்லக் கூடிய யோகம் உண்டாகிறது.

ஒருவர் ஜாதகத்தில் உத்தியோக காரகன் செவ்வாயாகும். செவ்வாய் ஜென்ம லக்னத் திற்கு பத்தாம் வீட்டில் அமையப்பெற்றால் நல்ல நிர்வாகத் திறன், உயர்பதவி வகிக்கக்கூடிய யோகம், பலருக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடிய அமைப்பு ஏற்படும். பத்தில் செவ்வாய் இருப்பது திக்பலமாகும். 10-ல் செவ்வாய் ஆட்சியோ உச்சமோ பெற்றால், அக்கிரகம் பலம்பெறுவது மட்டுமல்லாமல் திக்பலமும் பெறுவதால், சமுதாயத்தில் உயர்வான நிலையை எட்டக்கூடிய யோகம் ஏற்படுகிறது.

10-ல் அமையும் செவ்வாய், குரு போன்ற சுபகிரகப் பார்வையோடு இருப்பது மிகச்சிறப் பான அமைப்பாகும். ஒரு துறையில் வாழ்க்கை யைத் தொடங்கி அந்தத் துறையில் மிக உயரிய பதவியை அடையும் யோகம் 10-ல் செவ்வாய் அமையப்பெற்றவர்களுக்கு உண்டாகிறது.

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் 10-ல் இருந்தாலும், பத்தாமதிபதி சேர்க்கை பெற்றா லும், உபஜெய ஸ்தானங்களான 3, 6, 10, 11-ல் நட்புகிரகத் தொடர்போடு இருந்தாலும் மிகச்சிறப்பான நிலையை அடையும் வாய்ப்புண்டாகும்.

அடுத்து நவகிரகங்களில் சூரியன் அரசு, அரசு சார்ந்த விஷயத்திற்குக் காரகனாவார். ஒருவர் ஜாதகத்தில் சூரியன் பத்தாம் வீட்டில் அமைவது சிறப்பான அமைப்பாகும். 10-ல் சூரியன் இருப்பது திக்பலமாகும். லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் சூரியன் இருந்தாலும், சந்திரனுக்கு பத்தாம் வீட்டில் சூரியன் இருந்தா லும் அரசு, அரசு சார்ந்த துறையில் நல்ல பதவியை அடையும் யோகம், அரசுமூலம் அணுகூலங்களை அடையும் வாய்ப்புண்டா கும். சூரியன், செவ்வாய் 10-ல் அமைந்து, குரு போன்ற சுபகிரகப் பார்வையோடு இருந்தால் அவர்களுக்கு ஒரு உயர்வான நிலையை எட்டும் வாய்ப்புண்டாகும்.

sivan

ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்களுடைய ஆதிக்கம் இருக்குமானால் அவர்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக் கும் வாய்ப்பே ஏற்படும். அடுத்து, 10-ஆமதிபதியுடன் மறைவு ஸ்தானங்களான 3, 6, 8, 12-க்கு அதிபதிகளுடன் இணைந்திருந் தாலும், பத்தாமதிபதி 3, 6, 8, 12-ல் மறைந்திருந் தாலும், பாதக ஸ்தானத்தில் இருந்தாலும், பாதகாதிபதி நட்சத்திரத்தில் இருந்தாலும் அவர்கள் சொந்தத் தொழில் செய்யாமல் பிறரைச் சார்ந்து உத்தியோகம் செய்து, அதன்மூலம் சம்பாதிக்கக்கூடிய அமைப்புதான் ஏற்படும்.

ஒருவர் ஜாதகத்தில் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம் இருந்தாலும், சம்பாதிக்கவேண்டிய வயதில் நடக்கும் தசையானது மறைவு ஸ்தானங்களில் அமையப்பெற்ற கிரகங்களின் தசை நடைபெற் றாலும், பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசை நடைபெற்றா லும் மறைவு ஸ்தானாதிபதி தசை நடைபெற்றா லும் அவர்கள் முதலீடு செய்து தொழில் செய்வதைவிட உத்தியோகத்திற்குச் செல்வதே நற்பலனைத் தரும்.

அனுபவரீதியாகப் பார்க்கும்பொழுது, நடக்கக்கூடிய தசையானது சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, கேது ஆகிய தசையாக இருந்தால் அவர்கள் பெரும்பாலும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய அமைப்புதான் உண்டாகிறது. அடுத்து ஒருவருக்கு நடக்கக்கூடிய தசையானது மூன்றாவது தசையாக இருந்தால் அவர்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்லக்கூடிய அமைப்புதான் ஏற்படுகிறது, உதாரணமாக, செவ்வாய் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாவது தசையாக குருதசை வரும்.

அதுபோல குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மூன்றாவது தசையாக புதன் தசை வரும். மேற்குறிப்பிட்டதுபோல 3-ஆவது தசை நடக்கும்பொழுது பெரும்பாலும் வேலைக்குச் செல்லக்கூடிய அமைப்புதான் உண்டாகிறது.

அடுத்து, நவகிரகங்களில் சனி பார்வை யென்பது சிறப்பான பார்வையென கூறமுடியாது. ஒருவர் ஜாதகத்தில் பத்தாம் வீட்டுக்கு அல்லது பத்தாம் அதிபதிக்கு சனியின் பார்வை இருந்தால் அவர்கள் எவ்வளவுதான் திறமையாகத் தொழில் செய்தாலும் லாபமடைய எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். இப்படிப்பட்ட அமைப்பிருப்பவர்கள் சொந்தத் தொழில் செய்வதைவிட வேலைக்குச் செல்வதே சிறப் பான அமைப்பாகும்.

ஒருவருக்கு தொழில் செய்யக்கூடிய யோகமிருந்தாலும், பத்தாமதிபதி லக்னாதி பதிக்கு பகையாக இருந்தாலும் நடக்கும் தசைகள் லக்னாதிபதிக்கு பகை கிரகமாக இருந்தாலும் தொழி-ல் பெரிய அளவில் முன்னேற்றத்தை அடையமுடியாத நிலை உண்டாகிறது.

பத்தாமதிபதி கேந்திர திரிகோணங்களில் அமையப்பெற்றிருந்தாலும், அமைந்த வீடு பகைவீடாக இருந்தாலும், அமைந்த நட்சத்திரம் பகை நட்சத்திரமாக இருந்தாலும் அவர்கள் சொந்தத் தொழில் செய்வதை விட வேலைக்குச் செல்வதே மிகச்சிறப்பு.

ஒருவருக்கு கெடுதியான தசை, புக்தி நடைபெறும்பொழுது, வேலைக்குச் செல்பவர்களுக்கு ஒன்று வேலை இல்லாத நிலையோ, சம்பளமில்லை என்ற நிலையோ அல்லது சம்பளம் குறைவு என்ற நிலையோ மட்டும்தான் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு கெடுதியான நேரத்தில் தொழி-ல் நஷ்டம், சேமிப்பை இழக்கும் நிலை ஏற்படும்.

ஆகவே ஒருவர் ஜாதகத்தில் பத்தாமதிபதி மிகமிக பலமாக இருப்பது மட்டுமல்லாமல், நடக்கும் தசாபுக்தியும் சிறப்பாக இருக்கும் நபர் மட்டுமே சொந்தத் தொழில் செய்யலாம். அப்படிப்பட்ட அமைப்பில்லாதவர்கள் பிறரைச் சார்ந்து வேலைக்குச் செல்வது, சொந்தப் பணத்தைப் போடாமல் ஏதாவதொரு செயல் செய்வது நல்லது.

bala120822
இதையும் படியுங்கள்
Subscribe