சுமார் 60 வயதுடைய ஒரு பெண்மணி நாடியில் பலன்கேட்க வந்தார். அவரை அமரவைத்தேன். அவரின் தோற்றம் கணவனை இழந்த நிலையைக் கூறியது. "என்ன காரியமாகப் பலன்கேட்க வந்தீர்கள்' என்றேன்.

"ஐயா, "பால ஜோதிடம்' வாசகி நான். ஜீவநாடி யில், அகத்தியர், மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் குடும்ப உறவுகளுக்கு செய்த பாவ- புண்ணிய செயல் கள்தான், அடுத்த பிறவி வாழ்வில் பலன்களை அனுபவிக்கச் செய்யும் என்று கூறுகின்றார்.

என் வாழ்வில் நான் அனுபவித்த, அனுபவிக்கும் பலன்களுக்கு காரணத்தை அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடிவந்துள்ளேன்'' என்றாரே தவிர, தான் நாடியில் எதற்காகப் பலன்கேட்க வந்தேன் என்று கூறவில்லை.

ss

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

இந்த மகள் மேற்படிப்பு படித்து பட்டம் பெற்றவள். அந்தப் படிப்பி னால் எந்த நன்மையையும் அடையாதவள். எல்லா பெண்களுக்கும்போல, இவளுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து, சிறிது காலம் இல்லறம் இனிமை யாக சென்றது. கணவன்- மனைவி உறவில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அதன் பிறகு கணவன்- மனைவி இணக் கம் குறைந்தது.

Advertisment

கணவன் வேறு ஒரு பெண்ணு டன் நட்பு கொண் டான். இவள் மீது பாசம் குறைந் தது.

ஒரே வீட்டில் இருவரும் வசித்தாலும், தம்பதியாக வாழாமல், அவர வர் விருப்பம் போல் தனித்தனி யாகவே வாழ்ந் தார்கள். கொஞ்சகாலம்தான் இல்லற வாழ்வு. அதன்பிறகு துறவிபோல், விரக்தியுடன் தான் வாழ்ந்தாள். இப்போது கணவனும் இறந்து போனான். கணவன் அரசுப்பணியில் இருந்ததால், அவனுக்கு அரசு தரும் ஓய்யூதியப் பணத்தைக்கொண்டு வாழ்கின் றாள்.

இல்லற வாழ்வு இந்த நிலையை அடைய காரணம் அறிந்துகொள்ளவே அகத்தியனை நாடிவந்துள்ளாள். யான் கூறியதுபோல்தான் அவளது வாழ்வின் நிலையா என்று கேள்?

Advertisment

"அகத்தியர் கூறியது, அனைத்தும் உண்மை தான். இதற்கு காரணம் அறிந்துகொள்ளவும், இனி நடைமுறை வாழ்வில் எப்படி? வாழவேண்டும் என்பதைக் கேட்டு அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.

இந்த பிறவியில், இவளுக்கு இல்லற வாழ்க்கை இனிமையில்லாமல், போனதற்கு, இவள் முற்பிறவி குடும்ப வாழ்வில் செய்த பாவம்தான் காரணம். இவர்கள் இருவரும் முற்பிறவியிலும் கணவன்- மனைவியாக வாழ்ந்தவர்கள். முற்பிறவியில் இவள் ஒரு செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தாள். பணத்திமிர், அகங்காரம், ஆணவ குணத்துடன் வாழ்ந்தாள். இவள் குணத்தை அறிந்த பெற்றோர், தங்களுக்கு சமமான குடும்பத்தில் மாப்பிள்ளை பார்த்து, திருமணம் செய்துவைத்தாள் கணவனுக்கு அடங்கி வாழமாட்டாள். வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும் என்றுணர்ந்து, தங்கள் உறவில் வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு திருமணம் செய்துவைத்தார்கள்.

கணவனும் வீட்டிற்கு மாப்பிள்ளையாக இவள் வீட்டிலேயே தங்கி, தனக்கு சொல்லும் வேலைகளைச் செய்து அடிமைபோல் வாழ்ந்துவந்தான். மணம்புரிந்த கணவனை இவள் மதிக்கமாட்டாள். தரக்குறைவாகப் பேசுவாள். இவர்களின் உறவில் ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. அதன்பிறகு இருவருக்கும் தாம்பத்திய வாழ்க்கை தடைபட்டுப் போனது. இவள் விருப்பப்படியே வாழ்ந்து, வாழ்வை முடித்தாள்.

முற்பிறவியில் இவள் தன் கணவனுக்கு என்னவெல்லாம் செய்தாளோ, அவற்றுக்குப் பரிகாரமாக, இந்தப் பிறவியில் கணவன் இவளை மதிக்காமல், இவளுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தந்து, சமைத்துப்போடும் ஒரு வேலைக்காரியைப் போல் நடத்தி, தன் வாழ்வை முடித்து சென்றுவிட்டான். முற்பிறவியில் இவள், கட்டிய கணவனுக்கு செய்த பாவத்தை, விதி இப்பிறவியில் இவளையே திருமணம் செய்துவைத்து, கணவனால் அனுபவிக்க வைத்து, நிவர்த்தி செய்துவிட்டது.

இந்தப் பிறவியில் இவள் அனுபவிக்கப் பிறந்தவள் இல்லை. முற்பிறவி ஊழ்வினை பாவப் பதிவுகளை அனுபவித்து தீர்க்கப் பிறந்தவள். இதற்கும் ஒரு விதிக்கணக்கு, காரணம் உண்டு. இவளுக்கும் இறந்துபோன கணவனுக்கும் இதுவே கடைசிப் பிறவி. இனி பூமியில் பிறவியில்லாதவர்கள். இவர்களின் வம்சம் வளர ஆண் குழந்தை இல்லை. ஒரேயொரு பெண் குழந்தைதான். சென்ற பிறவியில் ஒரு ஆண் குழந்தை இருந்ததால் இந்தப் பிறவி அமைந்தது. இந்தப் பூமியில் கணவன்- மனைவி இருவரும் பிறந்த பிறவிகள் அனைத்திலும், செய்த பாவ- சாப- புண்ணியப் பதிவுகள் அனைத்தையும் தீர்த்துமுடித்து, பிறவியை முடிக்கவே இந்த பிறவி அமைந்தது.

இந்தப் பிறவி அனுபவித்து தீர்க்கப் பிறவியாதலால், இவள் வாழ்வில் உண்டாகும் சிரமங்களுக்கு பரிகாரம் பலன் தராது. கடவுள் பக்தி காப்பாற்றாது. இவள் யாரையும் சார்ந்து, பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது. இவளை இவள் மட்டுமே காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் கூறியபடியே இனி வாழ்வில் செயல்படுவேன். எனக்கு இதுவே கடைசிப் பிறவி என்பதைக் கூறிய அகத்தியர் பாதங்களுக்கு வணக்கம் என்று கூறி விட்டு என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.

மனித வாழ்வில் அவரவர் செய்த வினையை, அவரவரே, அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவித்து தீர்க்கவேண்டும் என்ற விதியை யாரும் மாற்றமுடியாது என்பதை உணர்ந்தேன்.