சியம் என் றால் ஈர்ப்பு, கவர்தல், அடக்குதல், பழக்கு தல், பணிதல் எனப் பொருள்படும். வசியம் என்றால் சக மனிதர்கள் மேல் ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பு. ஒருவர்மேல் யாருக்கு வசியம் ஏற்படுகிறதோ அவர்களிடம் தங்கள் பாசத்தையும், உள்ளன்பையும் வெளிப்படுத்துவார்கள். ஒருவர்மேல் யாருக்காவது இனம்புரியாத ஈர்ப்பு, வசியம் இருந்தால் எந்த சூழ்நிலை யிலும் பிரியமாட்டார்கள்.

இதை வேறுவிதமாகச் சொன்னால் வசியம் என்றால் ஒருவருக்கு துன்பம், தொந்தரவு தராமல் பகையை வெல்வது. அதாவது நம்முடன் நட்பை உண்டாக்கிக்கொள்வது, நம்முடைய சொல்பேச்சை கேட்கவைப்பது.

ஜனவசியத் தன்மை நிறைந்த ஒருவர் வாழ்வில் அடையமுடியாத வெற்றிகளே கிடையாது. ஜனவசியம் என்றால் ஒருவரின் தோற்றம், நடை, உடை, பாவனை, செயல்பாடு போன்ற காரணிகளால் ஈர்க்கப்பட்டு பலர் அவருடன் நட்பாக பழகுவது அல்லது அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதாகும்.

மனிதனாக பிறந்த அனைவரும் பிறரின் உதவியின்றி இந்த உலகத்தில் வாழ்வதென்பது சாத்தியமில்லை. நம்முடைய உறவினர்கள், நமக்கு தெரிந்தவர்கள் தாண்டி மற்ற அனைவரும் நமக்கு உதவுவார்கள் என கூறி விட முடியாது.

Advertisment

win

இப்படி நமக்கு முன்பின் தெரியாதவர்கள் நமக்கு வேண்டிய செயல்களைச் செய்ய வைக்க ஜனவசியம் அவசியம். முன் பின் பழகாதவர்களால் ஒருவர் நற்பலன்களைப் பெறுவதற்கு ஜனவசியம் அவசியம். தொழில், வியாபாரம், உத்தியோகம், அரசியல், கலைத்துறை போன்ற அனைத்துத் துறையிலும் வெற்றிபெற ஜனவசியம் மிக முக்கியம்.

உலகமக்கள் மத்தியில் புகழப்படுவதற்கு, தங்கள்பால் மக்களை வசியம் செய்வதற்கும் ஜனவசியம் மிக அவசியம். மிக எளிமையாக ஒருவருடைய திறமைகள் சிறப்பான முறையில் உலகில் பேசப்பட்டால் ஜனவசியம் நிறைந்தவர் எனக் கூறலாம்.

ஜனவசியம் நிறைந்தவர்கள் அறிவாளி கள். இனிமையான பேச்சுக்களை உடையவர் கள். கவர்ச்சியான முகமும், கண்களும் உடைய வர்கள். எப்போதும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் புன்னகையும், கண்களில் ஒரு விதமான காந்த சக்தியையும் கொண்டவர்கள். நிமிர்ந்த நேர்க்கொண்ட பார்வையும், வேகமான நடையும் கொண்டவர்கள். குழந்தையைப்போல் எவரிடமும் சுலபமாக பழகுபவர்கள்.

தன்னம்பிக்கையால் முடியாததையும் முடியும் என்பவர்கள். யாராலும் செய்ய முடியாத காரியத்தைகூட செய்துகாட்டும் வல்லமை உடையவர்கள். எப்போதும் உற்சாகமாக காணக்கூடியவர்கள். மனோ திடம் உடையவர்கள். மனதில் நினைப்பதை அப்படியே செய்பவர்கள். வருமானத்திற்காக கஷ்டப்பட மாட்டார்கள். எந்தத் தொழில் செய்தாலும் பல மடங்கு லாபம் உண்டு. வசீகரத்தால் லாபத்தையும் திடீர் தன லாபத்தையும் பெறக்கூடியவர்கள்.

பின்னால் நடக்கபோவதை முன்கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். தங்களின் துன்பங்களையும், துயரங்களையும் நினைத்து கண் கலங்காமல் அதை சவாலாக எடுத்துக்கொள்வார்கள். தோல்வியைக் கண்டு ஒருபோதும் மனம் தளராமல் வெற்றியை நோக்கி ஓடக்கூடியவர்கள்.

இவர்கள் வெளித்தோற்றத்திற்கு வெகுளி யாகக் காட்சியளித்தாலும் தங்கள் வேலைகள் மற்றும் செயல்களில் மிகுந்த காரியவாதிகள். சமூகத்தில் இவர்களுக்கென தனிப்பட்ட மதிப்பு, மரியாதை இருக்கும்.

வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதனை நேர்மறையாக எடுத்துக்கொள்ள கூடியவர் கள். மனதில் தன்னம்பிக்கையும், தளராத லட்சியமும், செயல்களில் கண்ணும், கருத்துமாகவும் இருக்கக் கூடியவர்கள். தன் பிரச்சினைகள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் தங்களின் மதிநுட்பத்தால் தீர்த்து வைப்பார்கள். ஒரேசமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்தும் திறமை உடையவர்கள். இவர்கள் சுக, போகமான வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்புவார்கள். மனதிற்கு பிடித்தவாறு விரும்பிய வாழ்க்கையை அமைத்து கொள்ளக் கூடியவர்கள். நண்பர் கள் வட்டாரம் அதிக மிருக்கும்.

பல திறமைகளை தன்னுள் கொண்ட வர்கள் என்பதால் தான் மட்டும் அறிவாளி என்று நினைக்கக் கூடியவர்கள். ரகசியத்தை வாழ்நாள் முழுவதும் காப்பவர்கள். பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்கள். ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் பிரஞ்சத்திடமிருந்து இவர்களுக்குத் வந்துகொண்டே இருக்கும். மக்களைக் கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை அவர் களுக்குச் சீக்கிரம் உணர்த்தி பல வருட காலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், பலமும் உண்டு. இவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமை யின்மூலம் விரைந்து உச்சியை அடைந்து விடவேண்டும் என்று துடிப்பார்கள். கடும் உழைப்பால் புகழையும், பெருஞ் செல்வத் தையும் மிக சிறப்பாக தேடிக் கொள்வார்கள்.

மனிதர்களாய் பிறந்தவர்கள் அனைவரும் ஜனவசியத்துடன் வாழ்வதை விரும்புவார்கள். ஜனவசியத்துடன் வாழ்க்கையில் வெற்றி நடை போடுபவர்கள் பலர் இருத்தாலும் பிறரை வசீகரிக்கும் தன்மையின்றி பலர் இருக்கி றார்கள். ஜோதிடரீதியாக ஜனவசியத்தை அதிகரித்து வாழ்க்கையில் வெற்றிநடை போடுவது எப்படி என்பதை இந்தக் கட்டுரை யில் காணலாம்.

ஜோதிடரீதியாக மனிதர்களுக்கு ஜனவசியத்தை வழங்குவதில் காலபுருஷ 5-ஆம் அதிபதியான சூரியனும், காலபுருஷ 9-ஆம் அதிபதியான குருவும் முன்னிலை வகிக்கிறார் கள்.

சூரியன்

காலபுருஷ 5-ஆம் அதிபதியான சூரியன் நவகிரகங்களில் முதன்மையான கிரகம்.

மனிதர்களுக்கு ஆன்மபலம் வழங்குபவர். சுய ஜாதகத்தில் சூரியன் சுப பலத்துடன் வலுவாக இருந்தால் ஆன்மபலம் பெருகும். உடல் தேஜஸ் பெறும். ஜனவசியம் அதிகரித்து கவுரவம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, சொல்வாக்கு, குலதெய்வ அருள்கடாட்சம், நல்ல புத்திரர்கள், முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். சூரியன் கிழக்கு திசை அதிபதி என்பதால் சூரியன் பலம்பெற்றால் வீட்டில் நற்சக்திகள் நிரம்பி இருக்கும். சூரியன் பலம் குறைந்தால் ஆன்மா பலமிழந்து மன அமைதிக் குறையும். கடவுள் நம்பிக்கை இருக்காது. சித்து வேலைகள், ஏமாற்று வேலைகள்செய்து பிழைப்பு நடத்துவர். அரச தண்டனை, தண்டம் கட்ட நேரும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை குறையும். பொறுப்பற்றவராக இருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து ஜனவசியம் குறையும். ஒருவருக்கு சமுதாய அங்கீகாரம், அரசின் ஆதரவு, முக்கிய பிரமுகர்களின் நட்பு, நல்ல பொருளாதாரம் ஆகியவற்றை ஜனவசியத்தின்மூலம் வழங்குபவர் சூரியபகவான்.

சூரியனை பலப்படுத்த சூரிய பகவானின் அருளைப்பெற ஞாயிறுதோறும் விரதமிருந்து சூரியனையும், சிவபெருமானையும் வழிபடவேண்டும். சூரிய விரதமிருந்து சிவனை வழிபட, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் நீடிக்கும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். முக வசீகரம் ஜனவசியத்தை அதிகரித்து சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

தன்னை எதிர்க்கும் எதிராளி அரசனா கவே இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை விரத மிருந்து சூரிய பகவானை வழிபட்டால், எதிரிகள் வீழ்ந்து போவார்கள்.

குரு பகவான்

சுப கிரகங்களில் தலைமை கிரகமான குருபகவான் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உன்னதமான சுபப் பலன்களை வழங்குபவர். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தெளிந்த ஞானம், நல்ல கல்வி, பெற்றோர், குலதெய்வ அருள், நல்ல பொருளா தாரம், சிறப்பான பழக்க வழக்கம், அரசியல் மற்றும் நிர்வாகத்தில் தலைமை பதவியில் அமரவைத்து பல மக்களை வழிநடத்தும் பொறுப்பு தருவார். சமூகத்தில் பெரிய‌ மனித தோரணை ஏற்படுத்தக்கூடியவர்‌. குரு என்றால் குழந்தை, பொருளாதாரம், அளவில்லாத பணம். அதனால்தான் அளவிற்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்களுக்கு குழந்தைகள்மூலம் மன வேதனையைத் தருவார் அல்லது குழந்தை பிறக்காது.நல்ல பண்பான பிள்ளைகளைத் தரும் குரு பகவான் அவர்களை நல்ல முறையில் வளர்க்கத் தேவையான பொருளாதாரத்தை வழங்கு வதில்லை. குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி.

குரு எந்த ஒரு ஜாதகத்திலும் கெட்டு போகக் கூடாது. இத்தகைய சுபப் பலன்களை வழங்கும் குருபகவான் சுய ஜாதகத்தில் சுபப் பலம் பெற்றால் ஜனவசியம் அதிகரிக்கும். சென்ற இடமெல்லாம் பாராட்டும், பட்டங்களும், பதக்கங்களும் தேடிவரும். உட்கார்ந்த இடத் தி-ருந்து உலகை வளைத்து சட்டைப் பையில் வைத்துக்கொள்ள முடியும். அரசியல், பொது வாழ்க்கை, தொழில், உத்தியோகத்தில் சமுதாய அந்தஸ்துடன் வாழ்பவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் சூரியன், குருபகவான் சுப வலுப்பெற்று ஜனவசியம் நிரம்பி இருக்கும்.

குரு பலத்தை அதிகரிக்க வியாழக்கிழமை ஒருவேளை மட்டும் உணவு அருந்தி சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவேண்டும்.

அந்தணர்களுக்கு தான, தர்மம் வழங்க முத்தாய்ப்பான ஜனவசியம் வந்து சேரும்.

பலர் பரிகாரம் எவ்வளவு காலம் செய்ய வேண்டுமென்று போன் பண்ணுகிறார்கள். நமது எண்ணங்களும், லட்சியங்களும் நிறைவேறும்வரை நம்பிக்கையோடு வழிபாட்டு முறைகளைக் கடைபிடிக்க நிச்சயம் நல்ல காலம் பிறக்கும். வாழ்வில் வெற்றிபெற, தொட்டது துலங்க பிரபஞ்ச சக்தியைப்பெற ஜனவசியம் தேவைப்படுகிறது. உடலுக்கு ஓரளவிற்குத்தான் சக்தியுள்ளது. ஆனால், மனம் என்பது இயற்கையை மீறி காலம் கடந்து நிற்கக்கூடியது. மனம் என்றால் ஆன்மா. அந்த ஆன்மாவின் ஆற்றலால் பலவிதமான சாதனைகளை புரியமுடியும். சுய ஜாதகத்தில் சூரியனும் குருவும் பலம் பெற்றால் ஜனவசியம் பெற்றவர்களாக உலகப்புகழ் பெற்று வலம் வரமுடியும் என்பது தெளிவாகிவிட்டது. ஜனவசியம் இல்லாதவர்கள் சுய ஜாதகத்தில் சூரியன், குருவை பலப்படுத்தி ஜனவசியம் நிரம்ப பெற்று சாதனையாளர்களாக மாறலாம்.

எனவே ஜனவசியத்தை அதிகரிக்க யந்திரம், தந்திரம், மாந்தரீகம், தாயத்து போன்றவற்றைநாடி நேரத்தையும், பணத் தையும் வீண்செய்து மன உளைச்சலை அதிகரிக்காமல் கூறப்பட்ட பரிகாரங்களைப் பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துகள்.