ம்பிக்கை வைத்து எந்தவொரு செயலையும் செய்தால் அதற்கான நற்பலன்கள் நமக்குக் கிடைத்தே தீரும். அது போன்றுதான் இறை நம்பிக்கையும்.

நம் அனைவரின் வீட்டிலுள்ள பூஜையறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கேற்றுவதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

மாலை வேளைகளில் வாசற்படிக்கு அருகில் ஒரு சிறு அகல் விளக்கில் தீபமேற்றவேண்டும். தினமும் ஏற்ற முடியவில்லை என்றாலும்கூட செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் மற்றும் விசேஷ தினங்களில் விளக்கேற்றுங்கள்.

Advertisment

dd

பஞ்சபாத்திரத்தை தினமும் அல்லது வாரத்தில் ஒருமுறையாவது கழுவி சுத்தம்செய்ய வேண்டும். அதில் நல்ல தண்ணீர் எடுத்துக்கொண்டு ஏலக்காய், சிறிய அளவு பச்சைக் கற்பூரம் மற்றும் துளசியிலை ஆகியவற்றை அத்துடன் சேர்க்கவேண்டும். நம் உள்ளங்கைகளை அதன்மீது வைத்து மனதார நாம் நினைத்ததை வேண்டிக்கொள்ளவேண்டும்.

பூஜையறையில் சிறிய பாத்திரத்தில் ஏலக்காய்- 3, கிரம்பு- 5, சோம்பு சிறிதளவு மற்றும் பச்சைக் கற்புரம் சிறிதளவு ஆகிய நான்கு பொருட்களை வைக்கவேண்டும். இவை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களாகும். இது பூஜையறையில் நன்கு வாசனை தரும். அன்னபூரணி விக்ரகம் அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும். உணவை வழங்கு தெய்வ மென்பதால் வீட்டில் வைத்துக் கொள்வது நல்லது. அன்னபூரணி சிலையின் அகலத்திற்கேற்றவாறு ஒரு தட்டை வைத்து, அதில் அந்த சிலையின் அடிப்பகுதிவரை பச்சரிசி போடவேண்டும். இந்த பச்சரிசியை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும். அந்த அரிசியை நாம் தினமும் சமையிலில் சேர்க்கலாம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்தும் சாப்பிடலாம். அல்லது குருவிகளுக்கு உணவாக வைக்கலாம். ஆனால் அந்த அரிசியை குப்பையில் போடக்கூடாது.

நம் பூஜையறையிலுள்ள விளக்கு களை ஒரு தட்டின் கீழ்தான் வைக்க வேண்டும். வெறும் விளக்கைமட்டும் வைப்பது தவறு. அந்தத் தட்டில் சிறிதளவு பச்சரிசி அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைத்து விளக்கை வைக்கவேண்டும்.

விளக்கேற்றுவதற்குமுன் திரிகளிலுள்ள எண்ணெய்யைக் கைகளால் பிழிந்துவிட்டு, அந்த எண்ணெய்ப் பிசுக்குடன்கூடிய கையைத் துடைக்க அதற்கென்று ஒரு துணி வைத்துக்கொள்ளவேண்டும். அல்லது கைகழுவி விட்டுதான் விளக்கேற்றவேண்டும்.

விளக்கைக் குளிர்விக்கும்போது, தூண்டு கோலைக்கொண்டு விளக்கின் திரியை உட்புறமாகத் தள்ளவேண்டும். தள்ளும்போது லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி சங்கமம் என்று கூறுவது அவசியம். இதைச் சொல்வதற்குக் காரணம் நம் வீட்டிலேயே மகாலட்சுமி வாசம் செய்யவேண்டும் என்பதற்காகவே.

திருநீறு மற்றும் குங்குமத்தில் சூடம் ஒன்றை வைத்தால் பூச்சிகள் மற்றும் வண்டுகள் வராமல் பாதுகாக்கும்.

ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்லும் முன் விநாயகர் படம் அல்லது சிலைமுன்பு நின்று சுவாமியின் பாதத்தில் 1 ரூபாய் நாணயம் வைத்து வழிபட்டுவிட்டுச் சென்றால் அந்த காரியத்தில் தடை ஏற்படாது.

பூஜையறையில் எப்பொழுதும் வாசனை தரக்கூடிய பூக்கள், ஊத்துபத்தி, சாம்பிராணி போன்றவை பயன்படுத்த வேண்டும். வாசனை நிறைந்த இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சூடம் உள்ள டப்பாவில் நான்கு மிளகு போட்டுவைப்பதால் சூடம் கரையாமல் இருக்கும்.

பூஜையறையில் பஞ்சபாத்திரம், தூபக்கால், மணி, காமாட்சியம்மன் விளக்கு, தாம்பாளத் தட்டு, திருநீறு, குங்குமம், தூண்டுகோல், அன்னபூரணி, சூடம், ஊதுபத்தி, சாம்பிராணி, கோமாதாவுடன்கூடிய கன்று மற்றும் பல பொருட்கள் இருக்கவேண்டும்.

முக்கிய குறிப்பு: பால், தயிர், அரிசி, கல் உப்பு, கடுகு, பூ நம் வீட்டில் எப்பொழுதும் நிறைந்திருக்கவேண்டும். ஒரு குடத்தில் தண்ணீர் எப்பொழுதும் நிறைந்திருக்கும்படி வைத்துக் கொள்ளவேண்டும். இவை நிறைந்திருந்தால் நம் வீட்டில் மகாலட்சுமி வாசம்செய்கிறாள் என்று நாம் அறிந்துகொள்ளலாம்.

பணப்பெட்டியிலுள்ள பணத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எடுக்கக்கூடாது.

அதற்கு முதல்நாளே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வங்கியில்தானே பணம் உள்ளதென்று ஏடிஎம்-ல்கூட பணம் எடுப் பதை இதுபோன்ற தினங்களில் தவிர்க்கலாம்.

மாத சம்பளம் பெற்றவுடன் அந்தப் பணத்தில் முதலில் இனிப்பு வகைகள், ஐந்து ரூபாய்க்கு சாக்லேட் மற்றும் வாசனை நிறைந்த பூக்கள் என இவற்றில் ஏதாவது ஒன்றையாவது வீட்டிற்கு வாங்கிச்செல்லுங்கள். இதனால் நாம் உழைத்த பணம் விரயமாகாமல் இருக்கும்.

செல்: 98425 50844