திருமணம் நிகழும் காலத்தைப் பொருத்த வரை, பண்டைய நூல் களில் பல வழிமுறைகள் குறிப்பிடப்பட் டுள்ளன.
7-ஆமதிபதி நிற்கும் ராசியாதிபதி அல்லது நவாம்சத்தில் நிற்கும் அதிபதியின் தசாகாலத்தில் திருமணம் நடக்க வழி ஏற்படும். களத்திரகாரகன் சுக்கிரன், சந்திரன் தசா காலத்திலும் திருமணம் நடக்கலாம். இவற்றில் பலம் மிக்க கிரக தசா காலங்களில் திருமண பந்தம் ஏற்படும். 7-ஆமதிபதி, சுக்கிரனோடு இணைந்திருக்க, அந்த தசா காலங்களில் திருமணம் நிகழலாம். குடும்பாதிபதி அல்லது அவருக்கு நவாம்சத் தில் இடங்கொடுத்தவன் ஆகியோரின் தசா காலங்களலும் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். முந்தைய தசா காலங்களில் திருமணக் கனி கனியாவிட்டாலும், பாக்கியாதிபதி, கர்மாதிபதி தசா காலங்களில் கனிந்துவிடும். 7-ல் உள்ள கிரகம் மற்றும் 7-ஆமதிபதி தசா காலங் களில் திருமணம் நடக்க வழியுண்டு.
லக்னாதிபதி மற்றும் 7-ஆமதிபதி நிற்கும் பாகை அளவுகளைக் கூட்டி வரும் ராசியையோ அல்லது திரிகோணத்தையோ கோட்சார குரு கடக்கும் காலத்தில் திருமணக் காலம் கனிந்துவரும். அதேபோல் சந்திரன் மற்றும் 7-ஆமதிபதி நிற்கும் பாகை அளவு களைக் கூட்டி வரும் ராசியையோ அல்லது திரிகோணத்தையோ கோட்சார குரு கடக்கும் காலத்தில் திருமணக் காலம் கனிந்து வரும்.
திருமணக் காலம் கனிய பல கிரகங்கள் காரணமானபோதும், திருமண தாமதத்தைத் தரும் கிரக நிலைகளையும் இதர காரணி களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றி-ருந்து, 7-ஆமதிபதி மற்றும் 7 ஆமிடம் சனியால் பார்க்கப்படும்போது, சம்பந்தப்பட்ட தசாதிபதி வலுவிழந்து காணப்பட்டால் திருமண தாமதத்திற்கு வழிவகுக்கும். 7-ஆமதிபதி அல்லது 7-ஆம் வீடு, களத்திர காரகன் ஆகியோர் 6, 8, 12-ஆம் அதிபதிகளுடன் தொடர்பு திருமண தாமதத்திற்குக் காரணமாகிறது. இவ் விஷயங்களில் கோட்சார நிலைகளைவிட, ஜாதக நிலைகளுக்கும், தசாபுக்திக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
களத்திர பாவமும், தசாகாலப் பலன்களும் நல்லநிலையில் இருக்கும் 7-ஆமதிபதியின் தசாபுக்திக் காலத்தில் ஜாதகருக்கு மனைவி யின் அண்மையும், நெருக்கமான உறவில் மகிழ்ச்சியும் நிரம்பிவழியும். வண்ணமயமான வாழ்க்கையும், ஆடை, அணிகலன்களும், உயர்வகை ஆசனங்களும், படுக்கை வசதி களும் சேரும். இனிய சுற்றுலாப் பயணங்கள், தேன்நிலவு, வெளிநாட்டுப் பயணங்கள் என மனைவியுடனான பொழுது இனிதே கழியும். இக்காலத்தில் திருமணம், சுபகாரியங்கள், விழாக்கள் போன்றவற்றில் கலந்துகொண்டு இன்புறும் வாய்ப்புகள் ஏற்படும்.
அதுவே, பாதிப்படைந்த, பலமிழந்த 7-ஆமதிபதியின் தசையில், ஜாதகருக்குப் பிரிவினை, ஒற்றுமையின்மை போன்ற கஷ்டங்கள் ஏற்படும். மாப்பிள்ளைக்கும் இடையூறுமிக்க காலமாக, கஷ்டகாலமாக அமையும். ஜாதகர் இழிவான பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளுதல், குறிக் கோளற்று அலைதல் போன்றவற்றாலும், மர்ம உறுப்புகளில் வியாதி ஏற்படுதல் போன்ற வற்றாலும், கஷ்டங்களுக்கும் இடையூறு களுக்கும் ஆளாவார்.
7 -ஆமதிபதி, லக்னாதிபதியுடன் இணைந்து நல்ல நிலையில் 7-ஆமிடத்தில் இருக்க, வெளிநாட்டுப் பயணங்கள் அதிர்ஷ்டங் களை அள்ளித் தரும். அங்கேயே ஜாதகர் வாழ்க்கையில் முன்னேற்றங்கண்டு, சுகமாக வாழ்வார். ஜாதகர் ஓர் அதிர்ஷ்டம்மிக்க, மிகவும் உதவிகரமான பெண்ணை மணந்து கொள்வார். 7-ஆமதிபதி சுபரோடு இருக்க, ஜாதகர் உல்லாசக் கப்பலில் பயணம் செய்வார் அல்லது கப்பலில் கேப்டனா கப் பணிபுரிவார். பலமிழந்த 7-ஆமதிபதி ஜாதகரை பிச்சையெடுக்க வைத்துவிடுவார்.
லக்னாதிபதியும் பலமிழந்து காணப்பட்டால் 7-ஆமதிபதியின் தசை மாரகம் தரலாம். லக்னாதிபதி நவாம்ச லக்னத்தில் இருந்து 6, 8, 12-ஆம் இடங்களில் இருக்க, லாபகரமற்ற, அலைச்சல், கஷ்டம் மிக்கப் பயணங்களை ஜாதகர் மேற்கொள்ள நேரும்.
7-ஆமதிபதி, 2 ஆமதிபதியோடு இணைந்து 2-ல் இருக்க, அவரின் தசை, ஜாதகருக்கு மனைவிமூலமான பணவரவுகளையும், சொத்துகளையும் கொடுக்கும் அல்லது பணி புரியும் பெண்ணுடன் இனிதே திருமணம் நடக்கும். கூட்டு வியாபாரமோ அல்லது இருக்கும் இடத்தைவிட்டு வெகுதூரத்தி லுள்ள ஏஜென்சிகள் மூலமாகவோ ஜாத கருக்கு சம்பாத்தியம் ஏற்படலாம். பாதிக்கப் பட்டால் இந்த தசையில் ஜாதகருக்கோ அல்லது அவரின் மனைவிக்கோ மாரகம் நிகழலாம். ஆனால், ஜாதகருக்கு ஆயுள் பலமாக இருந்தால், 2, 7-ஆமிடங்கள் மாரக ஸ்தானங்கள் ஆவதால், ஜாதகர் தன் மனைவி யைப் பிரிந்து வாழ்தலோ அல்லது மனக் கஷ்டங்களோ, குழப்பங்களோ ஏற்பட லாம். 7-ஆமதிபதி நவாம்ச லக்னத்தில் இருந்து 8-ஆம் வீட்டில் இருந்தால் மனைவி இறக்கமாட்டாள். ஆனால், ஜாதகர் வெகு தூரத்தில் வேறொருத்தியை இரண்டாவதாக மணம்முடிப்பார்.
7 ஆமதிபதி, 3-ஆமதிபதியோடு இணைந்து 3-ல் இருக்க, மனைவி உயர்குடிப் பிறப்பாக இருப்பாள். மாமனார் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். 3-ஆமதிபதியின் புக்திக் காலத்தில் சகோதரன் அல்லது சகோதரிக்கு கண்டமோ, மாரகமோ ஏற்படலாம். அப்போது இரண்டாம் திருமணமும் ஏற்படலாம். அசுபத் தாக்கம் இல்லையெனில் அஞ்சவேண்டாம். பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
7-ஆமதிபதி, 4-ஆமதிபதியோடு இணைந்து 4-ல் நல்ல நிலையில் இருக்க, ஜாத கர் அதிக பயணங் களை மேற்கொள்வார். ஜாதகர் வாழ்க்கையில் சுக போகங்கள் நிலைப்ப தோடு, நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற நற்காரியங்கள் ஏற்படும். பாதிப்படைந்த நிலையில் இருந்தால் ஜாதகரின் தாயாருக்கு மரணம் நிகழலாம் அல்லது கண்டம் ஏற்படலாம். அவரது கல்வி நிலைக்குரிய சம்பாத்தியம் ஏற்படலாம். அதுவும் அநேகமாக அயல்நாட்டில் ஏற்படலாம். 4-ஆமதிபதி தசையில் ஜாதகர் கார் போன்ற வாகனங்கள் வாங்குவார்.
7-ஆமதிபதி, 5-ஆமதிபதியோடு இணைந்து 5-ல் நல்ல நிலையிலிருக்க, மனைவி, மக்கள் சந்தோஷமாகவும், செல்வ நிலையில் விருத்தியுடனும் திகழ்வர். பாதிப் படைந்திருந்தால் குழந்தைகளுக்கு ஏதேனும் அபாயம் நிகழலாம் அல்லது மாரகத்தை சந்திக்கலாம். மணவாழ்க்கை பாதிப்போ அல்லது மனைவியின் பிரிவோ, இறப்போ ஏற்படலாம். இது முக்கியமாக எப்போது ஏற்படுமெனில், நவாம்ச லக்னத்துக்கு 6, 8, 12-ல் 7-ஆமதிபதி இருக்கும் காலத்திலே ஏற்படும்.
நவாம்ச லக்னத்திற்கு 6-ல் 5-ஆமதிபதி இருக்க, நோய் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படலாம். 12-ல் இருக்க திருடர்களாலோ, எதிரிகளாலோ ஜாதகரின் குழந்தைகளுக்குத் துன்பங்கள் ஏற்படலாம். 7-ஆமதிபதி, 5 ஆமதிபதியோடு இணைந்து 5-ல் மிக்க பாதிப்புடன் இருக்க, குழந்தைகள் கொல்லப்படலாம்.
7-ஆமதிபதி, 6-ஆமதிபதியோடு இணைந்து 6-ல் இருக்கும் நிலை மிகவும் மோசமான நிலையாகும். இதன் காரணமாக மனைவிக்கு அவமானங்களோ அல்லது நீண்டகால நோய்களோ ஏற்படலாம். ஜாதகரின் தாய்மாமனுக்குக் கண்டமோ மரணமோ ஏற்படலாம். ஏனெனில் 7-ஆம் வீடு மாரக ஸ்தானமன்றோ? கடன் தொல்லை கள், வழக்கு விவகாரங்கள் ஆகியவையும் ஏற்படலாம். ஜாதகருக்கு ஒரு பெருந்தொகை இழப்பு ஏற்படலாம். சுபக்கோள் இணைவிருக்க ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தற்காலிகமாக இத்துன்பங்கள், துயரங்கள் இருக்கும். பாதிப்புகளும் ஓரளவு குறையும்.
7-ஆமதிபதி, சுபரோடு இணைந்து 7-ல் நல்லநிலையில் இருக்க, அந்த தசை, புக்தி சிறப் பானதாக இருக்கும். ஜாதகரின் வாழ்க்கை கொண்டாட்டங்கள், கும்மாளங்கள் என மகிழ்ச்சி நிறைந்ததாகவே இருக்கும். காலா காலத்தில் திருமணம் நடக்கும். சமூகப் பின்புலத்துடன் கூடிய அழகிய மனைவி அமைவாள். இக்காலத்தில் வெளிநாடு செல்வதன்மூலமாக ஜாதகர் அபரிமிதமான செல்வங்களைச் சேர்ப்பார். மதிப்புமிக்க பல பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். அவர் களின் தொடர்பு ஜாதகரின் முன்னேற்றத் துக்கு மிகவும் சாதகமாக அமையும்.
பாதிப்படைந்தால் ஜாதகர் நோய்வாய்ப் படுவார் அல்லது ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார். 7-ஆமதிபதி 8-ல் இருக்கும்போது தசை நடந்தால் மோசமான பலன்களைத் தருவார். ஜாதகரின் துணைக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம் அல்லது மரணமும் ஏற்படலாம். ஆயினும் அவருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம் ஏற்படலாம். ஆனால், அதன்மூலமாகவே அவருக்குப் பல இன்னல்களும், பிரச்சினைகளும் எழலாம். விபத்தைக்கூட சந்திக்க நேரலாம்.
களத்திர பாவாதிபதி, பாக்கியாதிபதியுடன் இணைந்து பாக்கியத்தில் நல்லநிலையில் அமர்ந்தால், இந்த தசா காலத்தில் திருமணத்தின்மூலமாக அதிர்ஷ்டம் ஏற்படும். ஜாதகர் புண்ணியத் தல யாத்திரைகள் மேற் கொள்வார். தர்ம வழிகளுக்காக அதிகம் பணத்தை செலவழிப்பார். இரக்ககுணமும், பிறருக்கு உதவுகின்ற மனநிலையும் அதிகரிக்கும். நேர்மையின் காரணமாகவே அவருக்குப் பல அதிர்ஷ்ட நிலைகள் உருவாகும். அதன்காரணமாக சொத்துகள் பல சேரும். அனைத்து சுக சௌகரியங்களையும் அனுபவிப்பார். இவரது மனைவியும் நற் குணவதியாக அமைந்து, இவரையும் நியாய மான, நேர்மையான, சரியான பாதைக்கு அழைத்துச் செல்வாள். இவரது வேலைகள் வெளிநாட்டில் நல்ல முன்னேற்றகரமாக அமையும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும்.
பாக்கியத்திலுள்ள 7-ஆமதிபதி பாதிப் படைந்தால், மனைவியானவள் இவரை நேர்மையற்ற- தவறான வழிகளில் இட்டுச் சென்று, கடமைதவறச் செய்வாள். இதன் காரணமாக, தீய எண்ணங்களும், பிறர்மீது வெறுப்பும் ஏற்படுவதோடு, கொடுரமான செயல்களிலும் ஜாதகர் ஈடுபடுவார். 7-ஆமதிபதி நவாம்சத்தில் 6, 8, 12-ஆம் இடங்களில் இடம்பெற்றால் இத்தீய குணங்கள் மேலும் அதிகரிக்கும்.
பலம்மிக்க 7-ஆமதிபதி, கர்ம பாவாதிபதி யுடன் கர்ம பாவத்தில் இணைந்தால், ஜாதகருக்கு வெளிநாட்டில் நல்ல புகழும் கௌரவமும் ஏற்படும். அவரது நல்ல குணத்துக்கும், தர்ம சிந்தனைக்கும் அனைவராலும் அறியப்பட்டு, அதிகமாகப் போற்றவும்படுவார். 7-ஆமதிபதியின் தசா காலத்தில் ஜாதகரின் தொழில்வளம் பெருகுவதோடு, அவரது தொழிலில் பெருமையும் புகழும் அடைவார். அவரது மனைவி யும் மதிப்பு மிக்கவராகவும், பெருமைக்கு உடையவராகவும் மதிக்கப்படுவாள். கர்மாதிபதி பலமற்று இருந்தால் இந்நிலை களுக்கு எதிர்மாறான நிலையே ஏற்படும்.
லாபாதிபதி பலமுடன் இருந்தால், வர்த்தகத்தில் சிறப்புநிலை அடைவார். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் லாபமும் முன்னேற்றமும் இருக்கும். தொழிலில் வியத்தகு விரிவாக்கங்களும், வெளிநாடுகளில் கிளை பரப்புமளவுக்கு முன்னேற்றங்களும் இருக்கும். லாபாதிபதி பாதிப்படைந்தால் மூத்த சகோதரனுக்கு இழப்புகள் ஏற்படும்.
7-ஆமதிபதி 12-ல் இருக்க, பாவகாரகரும் பலமிழந்து காணப்பட, மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை அமைவதோடு, பிரிவு அல்லது மரணம் காரணமாக பிரிவினை ஏற்படும். களத்திர காரகனும், களத்திர பாவாதிபதியும் பலம்மிக்கவராக இருப்பின் "வைஃப் மே ப்ரீடிஸீஸ்; ஹஸ்பண்ட் ஒன்- இன் லேட் லைப்'. ஜாதகர் வெளி நாடு செல்லலாம். ஆனால் அங்கு நிம்மதி யிருக்காது. பலவகைகளிலும் துன்பத்தை அனுபவிப்பார்.
லக்னாதிபதி, களத்திர பாவாதிபதி, விரயாதிபதி ஆகியோர் விரய பாவத்தில் இடம்பெற, இவற்றில் ஏதேனும் ஒரு தசா காலத்தில், கணவனும் மனைவியும் வெளிநாட்டில் குடியிருப்பர். முக்கியமாக 7-ஆமதிபதியின் தசையில் வாழ்வர். இந்த இணைவு அசுப பாதிப்புடன் இருப்பின், ஜாதகர் தன் மனைவியுடன் இணைந்து தீய நடவடிக்கைகளில் ஈடுபடுவார். சுபத் தாக்கம் இருப்பின் இந்தக் காலத்தில் ஜாதகர் தீவிர ஆன்மிக வழிகளில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்.
செல்: 63836 25384