திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும்- "நீ பாத்தே' என கதாநாயகி கோபிக்க, கதாநாயகன் "நான் பாக்கலை' என்பார். உடனே நாயகி "நீ பாத்ததை நான் பாத்தேன்' என விடாப்பிடியாகக் கூறுவார்.
சிலர், "குரு பார்க்கிறார். நீ ஓஹோன்னு வருவேன்னு ஜோசியர் சொன்னார். வாழ்க்கையில ஒரு மண்ணுமில்ல' என விரக்தியில் விசனப்படுவார்கள்.
ஜோதிடர் கூறியபடி குரு பார்த்திருந்தால் ஜாதகர் ஓஹோவென்று இருந்திருப்பார் தானே! ஆனால் பார்க்கவில்லை போலிருக்கிறதே. ஆக, இந்த இடத்தில் "பாத்தே', "பாக்கலை' கதைதான் வருகிறது.
இதேபோல சிலருக்கு "சூரியன், செவ்வாய் சேர்க்கை உள்ளது. இது ஆகறதற்கில்லை' எனக் கூற, சம்பந்தப்பட்டவர்களோ அவர்கள் பாட்டுக்கு காலத்தை பெரும் பாதிப்பின்றி ஓட்டுவர். வாழ்வு அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும்.
அப்படியாயின் இதுசம்பந்தமாக வேறு ஏதோ இருக்கிறது போலிருக்கிறதே!
பொதுவாக எல்லா கிரகங்களும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து நேராக 7-ஆம் பார்வை பார்க்கும். இதில் குரு 5, 7, 9 என்றும்; சனி 3, 7, 10 என்றும்; செவ்வாய் 4, 7, 8 என்றும் விசேஷப் பார்வைகள் கொண்டவை.
இந்த கிரகங்கள் தங்களின் 7-ஆம் பார்வையால் எதிரிலுள்ள ராசியில் தங்கள் முழுப்பார்வையையும் படரவிடுமா- எதிர் ராசியின் 30 டிகிரியையும் பார்வைக்குள் கொண்டுவந்துவிடுமா எனில் "இல்லை' என்பதுதான் பதில்.
அப்படியாயின், கிரகங்களின் பார்வை வீச்சு எவ்வளவு தூரம்தான் படரும்? 15 டிகிரிக்குள்தான் இருக்கும். அதிலும் 15 டிகிரி எனும்போது, 7 டிகிரி முன்னும், 7 டிகிரி பின்னுமாக இருக்கும். உதாரணமாக குரு துலாத்தில் 2-ஆவது டிகிரியில் இருக் கிறார் என்றால், அவரின் பார்வை மேஷத்தில் 9-ஆவது டிகிரிவரை மட்டுமே விழும். மீதி ஏழு டிகிரிக்குள்ள பார்வை மீனத்தில் விழுந்துவிடும். மீனத்தில் உள்ள கிரகம் குருவின் பார்வையைப் பெற்றுவிடும். அக்கிரகம் மீனத்தில் 25 டிகிரிக்குமேல் இருத்தல் அவசியம்.
குரு பார்வையின் மையப்புள்ளி மீனத் துக்கும் மேஷத்துக்கும் நடுவில் உள்ளது. எனவே மையப்புள்ளியின் முன் 7 டிகிரி பார்வை மீனத்துக்கும், பின் 7 டிகிரி பார்வை மேஷத்துக்கும் கிடைக்கிறது.
இதுவே குரு துலாத்தின் 15 டிகிரியில் இருந்தால், அவர் மேஷத்தில் தனது முழு 15 டிகிரி பார்வையையும் பதிக்க முடியும்.
இது குருவுக்கு மட்டுமல்ல; எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும். கிரகங்கள் எந்தப் பாகையில் உள்ளனர் எனத் தெரிந்துகொண்டு, அதனுடன் 15 டிகிரி சேர்த்து, எதிர் ராசியில் பார்வை உள்ளதா அல்லது இரு ராசிகளில் படர்ந்துள்ளதா என கணிக்கவேண்டும்.
இதனால்தான் ஜோதிடர் "குரு பார்க்கிறார்' எனக்கூற, குரு "நான் பார்க்கலை' என மறுத்து பலனை பலவீனமாக்குகிறார்.
இந்த விதி பார்வைக்கு மட்டுமல்ல; சேர்க்கைக்கும் பொருந்தும்.
இரு கிரகங்கள் ஒரே ராசியில் இருப் பார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இருவரும் சேர்ந்துள்ளனர் எனத் தெரியும்.
ஆனால் டிகிரிப்படி பார்த்தால் அதில் வித்தியாசம் புரிபடும். இரு கிரகங்கள் ஒரே டிகிரியில் நின்றால் சேர்ந்திருப்பதாகப் பொருள். அதுபோல 10 டிகிரிக்குள் நின்றால் மட்டுமே இரு கிரகமும் சேர்ந்துள்ளதாகும்.
ஒரே ராசியில் 10 டிகிரிக்குமேல் தள்ளிப் போய் நின்றால் அது கிரகச் சேர்க்கையா காது.
சிலசமயம் இரு கிரகங்கள் பக்கத்து பக்கத்து ராசிகளில் நிற்பர். பொதுவாக இதனை கிரகச் சேர்க்கை எனக் கூறமாட் டோம். ஆனால் இரு கிரகங்களுக்கு இடைப் பட்ட தூரம் 10 டிகிரிக்குள் இருந்தால், அது சேர்க்கை என்றே பொருள்படும்.
உதாரணமாக சூரியனும் செவ்வாயும் முறையே மேஷம், ரிஷபத்தில் இருப்பதாகக் கொள்வோம்.
சூரியன் மேஷ ராசியின் 28-ஆவது டிகிரியிலும், செவ்வாய் ரிஷபத்தின் 5-ஆவது டிகிரியிலும் அமர்ந்திருப்பின், இரு கிரக இடைவெளி 7 டிகிரிக்குள் வருகிறது.
எனவே இங்கு சூரியனும் செவ்வாயும் சேர்ந்துள்ளனர் என்றே ஆகிறது.
சூரியனும் செவ்வாயும் மேஷத்தில் உள்ளதாகக் கொள்வோம். சூரியன் மேஷத்தின் 2-ஆவது டிகிரியிலும், செவ்வாய் மேஷத்தின் 25-ஆவது டிகிரியிலும் இருந்தார்கள் என்றால், இரு கிரக இடை வெளி 23 டிகிரி என்றாகிறது. இரு கிரகங் களும் 10 டிகிரிக்குள் சேரவில்லை.
எனவே இரு கிரகமும் இணையவில்லை; சேரவில்லை என்றாகிறது. இவ்வாறு நிறைய டிகிரி வித்தியாசத்தில் நிற்கும்போது, ஒரே ராசியில் என்றாலும் பலன் பலங்குன்றி விடும்.
சூரியன், செவ்வாய் சேர்க்கை என்றில் லாமல் எல்லா கிரகச் சேர்க்கைக்கும் இது பொருந்தும். ஆயினும் சூரியன், செவ்வாய் சேர்க்கை சற்றே கிலி கொடுக்கக்கூடியது.
அதுவும் பெண்களின் ஜாதகத்தில் இவ்வாறு அமைந்திருப்பின் பலன் கலவர மாகும். அப்படி இருக்கும்பட்சத்தில், இச்சேர்க்கை பலங்குன்றிக் காணப்பட்டால் நல்ல விஷயம்தானே.
இந்த கிரகச் சேர்க்கை, பார்வையின் வீரியத்தை ஒரு உதாரணம்மூலம் கூறலாம். சூரிய ஒளி எங்கும் பரவியுள்ளது. அதனை ஒரு குவிலென்ஸ்மூலம் ஊடுருவச் செய்து, அதன்கீழ் ஒரு காகிதத்தை வைத்தால், காகிதம் பற்றி எரிந்து கருகிவிடும்.
இதுபோலத்தான் கிரகங்களின் பார்வை, சேர்க்கைகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முழுமையாகக் குவியும்போது, அதன் பலன் பன்மடங்காகிவிடுகிறது. சக்தி மிகுந்துவிடுகிறது. பலன்களின் வீரிய வீச்சு விகிதம் அதிகமாகிவிடுகிறது.
இது சுபகிரகச் சேர்க்கையாக இருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் இரு பாவகிரகங்கள் இவ்விதம் அமைந்திருந்தால் சற்று சிரமம்தான்.
சூரியன் + செவ்வாய்
இந்த இரு கிரகங்களும் மிக உஷ்ண கிரகங்கள். இவை சாதாரணமாக சேர்ந் திருந்தாலும் பார்த்தாலுமே, ஜாதகருக்கு அதிக கோபம், மூர்க்கத்தனம், வெகுண் டெழுதல் போன்ற குணங்களைக் கொடுப்பர். மேலும் காலபுருஷனின் 7-ஆம் வீட்டில்- களத்திர வீட்டில்- சூரியன் நீசமடைவார். செவ்வாய் காலபுருஷனின் 8-ஆம் அதிபதி. எனவே இவ்விரு கிரகங்களும் ஒரு மையத்தில் சேரும்போதோ அல்லது தனது கூர்மிகு பார்வை டிகிரியில் பார்க்கும் போதோ, அங்கு களத்திர தோஷம் ஏற்படுகிறது. இவர்களை குரு பார்த்தால், தோஷம் விலகிவிடும் என கூறப்பட்டுள்ளது. வரப்போகும் மணமகனின் ஆயுள் ஸ்தானம்,
ஆயுள் அதிபதி, ஆயுள் காரகன் சனி இவை நல்ல முறையில் உள்ளதா என கவனித்தல் வேண்டும். இவ்விதம் அமைப்புள்ள பெண்களோ ஆண்களோ தாலிதானம் செய்துவிட்டுத் திருமணம் செய்யவேண்டும். திருமணப் பரிகாரத் தலங்களான திருமணஞ்சேரி அல்லது மகாபலிபுரம் செல்லும் சாலையிலுள்ள திருவிடந்தை ஆகிய தலங்களில் பரிகாரம் செய்யவும்.
சனி + செவ்வாய்
இவ்விரு கிரகங்களுமே இயற்கை பாவர்கள்தாம். செவ்வாய் காலபுருஷனின் எட்டாம் அதிபதி. சனி காலபுருஷனின் பாதகாதிபதி. இவ்விரு பாவர்களும் பார்த்தாலோ சேர்ந்தாலோ பலன் கெடுதலாக நடக்கும். எப்போதும் எவ்விஷயத்திலும் ஒரு நெருடல், இடையூறு, தொல்லை, துன்பம், பிடிவாதம், வார்த்தைகளில் வம்புத்தனம் என ஒரு மனிதருக்கு எவையெல்லாம் கூடாதென்று கூறப்பட்டுள்ளதோ, அவையெல்லாம் நடக்கும். இதனால் இரு கிரகக் கூர்பார்வை அல்லது 10 டிகிரிக்குள் உள்ள சேர்க்கை இருப்பின் ஜாதகர்கள் "நான் ஏன் பிறந்தேன்' என்ற லெவலுக்கு நொந்து போய்விடுவர்.
இவ்வித அமைப்பு, பெரும்பாலும் பூர்வஜென்ம பாவத்தின்படியே அமையும். எனவே இவ்வித தோஷமுள்ளவர்கள்,
"பரம்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாஸக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்'
எனத் தொடங்கும் மகாலிங்க ஸ்தோத் திரம் கூறவும்.
ராகு- கேது எந்த கிரகத்துடன் இவ்விதம் 10 டிகிரிக்குள் இருப்பினும், 15 டிகிரியில் பார்வை இருப்பினும் அதுவும் பெரிய கஷ்டம்தான். எந்த கிரகத்துடன் சேர்க்கை, பார்வை உள்ளதோ, அவை சம்பந்தமான பரிகாரம் செய்தல் அவசியம்.
இதன் அடுத்த பக்கமாக சுபகிரகங்கள் இவ்விதம் கூர்பார்வை, சேர்க்கை பெற்று சுப ஸ்தானத்தில் இருப்பின், பலன்கள் அபரிதமாக அமையும். அதுவும் பிறப்பு ஜாதகத்தில் இவ்வாறு சுபச் சேர்க்கை, சுபப் பார்வை இருப்பின், அதன் தசாபுக்திக் காலங்கள் மட்டுமல்லாது, அவர்கள் சம்பந்தமான பாவ, ஸ்தான பலன்களும் சிறப்பாக நடக்கும்.
மேற்கூறிய பார்வை, சேர்க்கை கணக்கீட்டுக்கு எப்போது முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?
திருமணம், குழந்தைப்பேறு, ஆயுள் போன்ற அதிமுக்கியமான விஷயங் களுக்கும்; சில ஜாதகர்கள் ஜோதிடர்களை, "நீங்க சொன்னது ஒண்ணுமே நடக்கலையே' என்று பிராண்டி எடுக்கும்போதும் இதனை சற்று உள்ளார்ந்து கவனித்தல் நலம். முக்கியமாக ஜோதிடருக்கு!
செல்: 94449 61845