2024 ஜூன் மாதம் ஆரம்பித்தவுடன் வைகாசி 19 முதல் உள்ள கிரக நிலை சற்று வித்தியாசமாக உள்ளது.
இந்தக் கூட்டணியில் ஜூன் 5 முதல் 7 வரை சந்திரனும் சேர்ந்துகொள்வார்.
இங்கு சூரியன்+புதன் சேர்வதால் புதாத்ய யோகம் வருகிறது.
செவ்வாய் சொந்த வீட்டில் இருப்பதால் ருசக யோகம் உண்டாகிறது. சுக்கிரன் சொந்த வீட்டில் அமர்வதால் மாளவ்ய யோகம் பெறுகிறார். சனி சொந்த வீட்டில் அமர்வதால் சச யோகம் கொடுக்கிறார்.
ராகு மீனத்திலும், கேது- கன்னியிலும் உள்ளனர்.
இப்போது, ரிஷப ராசியில், சூரியன், சுக்கிரன், குரு, புதன் என அனைத்து கிரகங்களும் சேர்ந்து நிற்பதை கவனியுங்கள்.
இதில் ஜூன் 5 முதல் 2 1/4 நாட்களுக்கு சந்திரனும் சேர்ந்துகொள்வார். எனவே ஒரு ஆகப் பெரிய கூட்டணி உண்டாகிறது.
இதனை கிரக யுத்தம் எனக் கூறினாலும்கூட, அனைத்து கிரகங்களும் சுபராக் இருப்பது மிகப் பெரிய ஆறுதல்.
சனி தனது 3-ஆம் பார்வையால் செவ்வாயை அவதானிக்கிறார். இது சண்டாள யோகம்போல தீமையான யோகம் ஆகும்.
கிரக பார்வை எனும்போது, விருச்சிக ராசியை, செவ்வாய் தனது 8-ஆம் பார்வையாலும், குரு தனது ஏழாம் பார்வையாலும், சனி தனது 10-ஆம் பார்வையாலும் தொடர்புகொள்கின்றன.
எனில் பொதுபலன் என எவ்விதம் அமையும்.
இந்த ஜூன் 4-ஆம் தேதியை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று சந்திரன் ரிஷப ராசியில் தன் உச்ச வீட்டில் அனைத்து கிரகங்களுடனும் அருமையாக நிற்கிறார்.
காலபுருஷ தத்துவப்படி முதல் வீட்டை ஆளும் கட்சியாகவும், 6-ஆம் வீட்டை எதிர்க்கட்சியாகவும் பாவிப்பது வழக்கம்.
இம்முறை ஆளுங்கட்சி அதிபரான செவ்வாய் ஆட்சியாக அமர்ந்துள்ளார். எனினும் அவர் கேது சாரம் பெறுகிறார். செவ்வாய், சாரம் பெற்ற கேது ஒரு பிரிவுக்குரிய கிரகம்.
எதிர்க் கட்சியை குறிக்கும் புதன், இந்நாட்களில், ரிஷபத்தில் குரு, சூரியன், சுக்கிரன், சந்திரனோடு அமர்ந்துள்ளார். நிறைய சுபர்களோடு கை குலுக்கிறார். இது ஒரு நல்ல அமைப்புத்தான். ஆனால் முழுமையான பலன் தரும் கிரக நிலையாக இருக்கமுடியாது. ஏனெனில் கிரக யுத்தத்தில் எதிர்க்கட்சி கிரகம் மாட்டிக்கொண்டுள்ளது.
இந்த கிரக நிலைகள், ஒன்றை தெளிவாக கூறுகிறது. எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் சம பலத்தில் வெற்றிபெறுவார்கள். இதனால் ஆட்சி அமைப்பதில் வெகு குஸ்தி வரும்.
ஆளும் கட்சியின் சாரநாதர் கேது, ஆளும் கட்சியிலிருந்து நிறைய ஆட்களை பிரிக்க முற்படுவார்.
எதிர்க்கட்சி, கிரக யுத்தத்தில் மாட்டிக்கொண்டுள்ளதால், அங்குள்ள அரசியல்வாதிகளே, அவர்களுக்குள் ஒருத்தரையொருத்தர் பின்னுக்கு இழுப்பர்.
ஆக, இந்த தேர்தல் முடிவுகள் என்ன பலன், யார் வெற்றிபெற்றார்கள் என்று எதையும் உறுதியாக, இறுதியாக, அருதியாக கூற இயலாது.
ஆக, கடைசியில் நீதிமன்றம் அல்லது ஏதாவது பழையகால முறைப்படி ஒரு முடிவுக்கு வருவார்கள்.
வரும் ஜூன் மாதம் இந்திய மக்கள் தலைசுற்றி அமருவார்கள். அல்லது தலையில் அடித்துக்கொண்டு வெறுப்பை வெளிப்படுத்துவர்.
அட, சும்மா சொல்லக்கூடாது பாராளுமன்றத்தில் நிலை நிறுத்திய செங்கோல், அனைவரையும், பின்னாடியே அடித்து, சுற்ற வைக்கப்போகிறது.
ஆர். மகாலட்சுமி