லகில் மனிதனாகப் பிறந்தவர்களில் சிலருக்கு மணவாழ்க்கை என்பது மணம்வீசும் மலர்வனத்தில் பூத்துக்குலுங்கும் அழகிய மலர்போல் இனிதாக மகிழ்ச்சியுடன் கழிகிறது. ஆனால் மற்றும் சிலருக்கு "ஏன் பிறந் தோம்!' என்று வேதனைப்படும் அளவுக்கு மண்ணில் மலர்ந்த நாள்முதல் கடைசியில் உதிரும் நாள்வரை துன்பமே வாழ்க்கை யானால் எங்ஙனம் வாழ்வர்? இதற்குக் காரணமென்ன? பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ- புண்ணியங்களுக்கேற்ப நாம் அனு பவிக்கவேண்டிய கர்ம வினையன்றோ! இவ்வாறு கஷ்டங்களையே அனுபவித்த ஒரு ஜாதகியின் ஜாதகத்தை ஆய்வுசெய்வோமா?

இந்த ஜாதகத்தில் லக்னத்தில் உச்ச செவ்வாயும், சூரியனும், அஸ்தமனமடைந்த வக்ர புதனும், ராசி சந்தியில் சுக்கிரனும் இருக் கின்றன. சூரியனும் சனியும் பரிவர்த்தனையில் உள்ளனர். சனி 8-ஆம் வீட்டிலும், குரு விரய வீடான தனது சுயவீட்டிலும் அமர்ந்துள்ள னர். குருவுக்குக் கேந்திரத்தில் 3-ஆம் வீட்டில் சந்திரனும், லக்னத்துக்குச் சதுர்த்த கேந்திரத் தில் ராகு, மாந்தியுடனும் அமர்வு.

நவாம்சத்தில் லக்னத்தில் சந்திரனும், கடகத்தில் புதன், சனியும், மிதுனத்தில் ராகு, சூரியனும், கன்னியில் செவ்வாயும், செவ்வாய் நவாம்சத்தில் குருவும், மாந்தியும் உள்ளனர்.

பாவக மாற்றங்களாக, சுக்கிரன் 12-ஆம் வீட்டிலும், சந்திரன் 2-ஆம் வீட்டிலும், ராகு 4-ஆம் வீட்டிலும், கேது 9-ஆம் வீட்டிலுமாக உள்ளனர்.

Advertisment

ff

இந்த ஜாதகத்தில் லக்னாதிபன் பரிவர்த் தனை பெற்றாலும், லக்னாதிபதி 8-ஆம் வீட்டிலும் 8-ஆமதிபதி லக்னத்திலும் இருக்கின்றனர். பஞ்சமாதிபதி சுக்கிரன் லக்ன பாவத்தில் பலமுடன் இருந்தாலும், புதன் அஸ்தமனமாகி உள்ளார். களத்திர பாவாதிபதி ராசியில் சகோதர பாவத்தில் இருந்தாலும், பாவகத்தில் குடும்ப பாவத்தில் இருப்பதால், சனியால் பார்க்கப்படுகிறார்.

ஒரு ஜாதகத்தில் யோகக்காரகனும், லக்னாதி பதியும் பாதிப்படைந்தால் அந்த ஜாதகிக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையாது. அதேபோல் சந்திரனும், சனியும்- சுக்கிரனும் சனியும் 6/8-ஆக அமைந்தால் அவளுக்கு நல்ல குடும்பம் அமையாது. மேலும் லக்னத் தில் செவ்வாய் உச்சத்திலும், சுக்கிரன், புதன் மற்றும் நவாம்சத்தில் 12-ஆம் வீட்டில் சனியும் உள்ளதால் இவளுக்குப் புனர்பூ யோகமும், அனுசித விவாக யோகமும் அமைந்தது. நவாம்ச லக்னத்துக்கு 2-ஆமிடத் தில் செவ்வாய் இருப்பதாலும், 7-ஆமதிபதி சனி அந்த வீட்டுக்கு சஷ்டாஷ்டமத்தில் இருப்பதாலும் சூழ்நிலை காரணமாக இவள் அனுசித விவாகம் புரிவாள் என்பதைக் காட்டுகிறது. மேலும், பண்டைய நூல்களில் மகரத்திலுள்ள கிரகங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதும் இந்த ஜாதகிக்குப் பொருந்திவருவதைக் காணலாம்.

மகர ராசியில் சூரியன் இருக்கப் பிறந்த வர்களின் குடும்பத்தில் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். எந்தக் காரியத்திலும் அவர்களுக்குப் அதிக உற்சாகம் இருக்காது. எதிலும், எது கிடைத்தாலும் திருப்தி இருக் காது. குடும்பப் பற்று அதிகம் இருக்காது. பெயரும் புகழும் உண்டாகாது.

மகரம் லக்னமாகிப் பிறந்தவர்கள் கிடைத்ததைக்கொண்டு சந்தோஷப் படுபவராகவும், கெட்டிக்காரத்தனம் உடைய வராகவும், பயந்த குணம் உடையவராகவும், எப்போதும் துணிந்து பல பாவ காரியங்களைச் செய்பவராகவும், வாதம், கபம் இவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவராகவும் இருப்பர்.

மகரத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்த வர்கள், எப்போதும் தன் இஷ்டப்படி நடக்கக் கூடியவர்களாக இருப்பர். உறவுகளின்மீது அன்பில்லாதவர்களாகவும், உறவுகளால் அவமதிக்கப்படுபவர்களாகவும் இருப்பர். வழக்குகளில் எதிர்பாராத வெற்றியை அடை பவர்களாகவும், பயந்த சுபாவம் உடையவர் களாகவும், எல்லாவித சுகங்களையும், எந்த விதத்திலாவது அனுபவிப்பவர்களாகவும், பிறரால் எளிதில் ஏமாற்றப்படுபவராகவும் இருப்பார்கள்.

மகரத்தில் புதன் இருக்கப் பிறந்தவர்கள் கெட்ட பழக்கங்கள் உடையவர்களாகவும், எப்போதும் மனதில் துக்கம், சந்தேகம், அவநம்பிக்கை உள்ளவர்களாகவும், குசும்பான மற்றும் எதிர்மறையான புத்தி உள்ளவர்களாகவும், எதிரிகளிடமிருந்து அதிக இன்னல்களை அனுபவிப்பவர்களாக வும் இருப்பார்கள்.

மகரத்தில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள் சற்று வயதான பெண் களை மணக்க விரும்ப மாட்டார்கள். கெட்ட வாழ்க்கை வாழ விரும்பு வார்கள். வீணாகப் பணத்தை செலவு செய்வார்கள். அதிகக் கடன் வாங்குவார்கள். கவிதை, காவியங்களில் ஆர்வமுடையவர்கள். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும்.

இந்த கிரக நிலைகள் காரணமாக வாழ்க்கையில் இவள் பட்ட கஷ்டங்களைக் காண்போமா?

இவளது பெற்றோர் கலப்புத் திருமணம் செய்தவர்கள். தந்தை இந்து; தாய் கிறிஸ்தவர் ஆவார். வளமான குடும்பத்தில் பிறந்த இந்த வனிதை ஒரு பேரழகி. நன்கு படித்துப் பட்டம் பெற்றாள். கல்லூரியில் இவள் அழகில் மயங்கிய மாணவன், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தி னான். அவள் சம்மதிக்காது போகவே சுற்றுலா சென்ற இடத்தில், இவள் அறைக்கு வந்தவன் பலாத்காரம் செய்தான். புலியின் கையில் மான் சிக்கிச் சீரழிந்தது. கர்ப்பமானதால் வேறுவழியின்றி அவனையே மணந்தாள். ஓர் ஆண் மகவும் பிறந்தது. கணவனின் கொடுமை தாங்காது தற்கொலைக்கு முயன்று தப்பித்தாள்.

பின்னர் ஒரு ஆன்மிக இயக்கத்தில் மன அமைதிக்காக சேர்ந்தபோது, அந்த இயக் கத்திலிருந்த வயது குறைவான இளைஞன் மீது மையல்கொண்டு, அவனையே திருமணம் செய்துகொள்ள நினைத்தாள். இதை யறிந்த கணவன் வீட்டைவிட்டு அவளை வெளியேற்றினான். அவளும் தான் பெற்ற மகனையும் விட்டுவிட்டு, அந்த ஆடவனுடன் கணவன்- மனைவியாக வாழ்ந்துவந்தாள்.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா? கிரகங்களால் ஆட்டிப் படைக்கப் படும் மனிதர்களின் ஜாதகத்தில், கிரகங்கள் நடத்தும் விளையாட்டை இந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்தோமல்லவா?

செல்: 63836 25384