கிரக நிலைகளும் உடல்நலமும்! -பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

/idhalgal/balajothidam/planetary-positions-and-health-pandit-map-child

சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன் இப்போது இருப்பதைப் போல் மருத்துவத் துறையில் கருவிகள் இருந்தனவா? மருந்துகள் இருந்தனவா? அறுவை சிகிச்சைகள் நடந்தனவா? கருத்தரிப்பு மையங்கள் இருந்தனவா? எதுவுமே இல்லை எனலாம். அவ்வாறிருக்க, அக்காலத்தில் மக்களுக்கு நோய்கள் வரவில்லையா- வைத்தியங்கள் செய்யவில்லையா என்றால், எல்லாமே மெய்ஞ்ஞானம் எனும் கருவியால், அக்கால சித்த வைத்தியர்கள் நோய்களுக்கான கிரங்களை அறிந்து, அதற்கேற்றாற்போல் மருந்துகளைத் தந்து குணப்படுத்தி வந்தனர்.

நட்சத்திர ஆதிக்கம்

ஒவ்வொரு நட்சத்திரமும் மனிதனின் உடலில் எங்கெங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை அறிவோம். அஸ்வினி- புறங்கால். பரணி- உள்ளங்கால். கிருத்திகை- தலை. ரோகிணி- நெற்றி. விருச்சிகம்- புருவம். திருவாதிரை- கண். புனர்பூசம்- மூக்கு. பூசம்- முகம். ஆயில்யம்- காது. மகம்- உதடு (மேல்வாய்). பூரம்- வலக்கை. உத்திரம்- இடக்கை.

ss

அஸ்தம்- கைவிரல். சித்திரை- கழுத்து. சுவாதி- மார்பு. விசாகம்- மூளை.

அனுஷம்- வயிறு. கேட்டை- வலப்பக்கம். மூலம்- இடப்பக்கம். பூராடம்- முதுகு. உத்திராடம்- இடை. திருவோணம்- குய்யம். அவிட்டம்- குதம். சதயம்- வலது தொடை. பூரட்டாதி- இடது தொடை. உத்திரட்டாதி- முழுங்கால். ரேவதி- கணைக்கால்.

ராசிகளும் உடலும்

மேஷம்- தலை. ரிஷபம்- கழுத்து, முகம். மிதுனம்- மார்பு. கடகம்- இதயம், தோள்பட்டை. சிம்மம்- வயிறு. கன்னி- அடிவயிறு, இடை. துலாம்- முதுகு. விருச்சிகம்- ஆண்குறி, பெண்குறி. தனுசு- தொடை. மகரம்- முழங்கால். கும்பம்- கணுக்கால். மீனம்- பாதம்.

மேற்படி ராசிகளில் ரோகாதிபதியான 6-க்குரியவர், பாதகாதிபதி கள், மாரகாதிபதிகள் அவ

சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன் இப்போது இருப்பதைப் போல் மருத்துவத் துறையில் கருவிகள் இருந்தனவா? மருந்துகள் இருந்தனவா? அறுவை சிகிச்சைகள் நடந்தனவா? கருத்தரிப்பு மையங்கள் இருந்தனவா? எதுவுமே இல்லை எனலாம். அவ்வாறிருக்க, அக்காலத்தில் மக்களுக்கு நோய்கள் வரவில்லையா- வைத்தியங்கள் செய்யவில்லையா என்றால், எல்லாமே மெய்ஞ்ஞானம் எனும் கருவியால், அக்கால சித்த வைத்தியர்கள் நோய்களுக்கான கிரங்களை அறிந்து, அதற்கேற்றாற்போல் மருந்துகளைத் தந்து குணப்படுத்தி வந்தனர்.

நட்சத்திர ஆதிக்கம்

ஒவ்வொரு நட்சத்திரமும் மனிதனின் உடலில் எங்கெங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை அறிவோம். அஸ்வினி- புறங்கால். பரணி- உள்ளங்கால். கிருத்திகை- தலை. ரோகிணி- நெற்றி. விருச்சிகம்- புருவம். திருவாதிரை- கண். புனர்பூசம்- மூக்கு. பூசம்- முகம். ஆயில்யம்- காது. மகம்- உதடு (மேல்வாய்). பூரம்- வலக்கை. உத்திரம்- இடக்கை.

ss

அஸ்தம்- கைவிரல். சித்திரை- கழுத்து. சுவாதி- மார்பு. விசாகம்- மூளை.

அனுஷம்- வயிறு. கேட்டை- வலப்பக்கம். மூலம்- இடப்பக்கம். பூராடம்- முதுகு. உத்திராடம்- இடை. திருவோணம்- குய்யம். அவிட்டம்- குதம். சதயம்- வலது தொடை. பூரட்டாதி- இடது தொடை. உத்திரட்டாதி- முழுங்கால். ரேவதி- கணைக்கால்.

ராசிகளும் உடலும்

மேஷம்- தலை. ரிஷபம்- கழுத்து, முகம். மிதுனம்- மார்பு. கடகம்- இதயம், தோள்பட்டை. சிம்மம்- வயிறு. கன்னி- அடிவயிறு, இடை. துலாம்- முதுகு. விருச்சிகம்- ஆண்குறி, பெண்குறி. தனுசு- தொடை. மகரம்- முழங்கால். கும்பம்- கணுக்கால். மீனம்- பாதம்.

மேற்படி ராசிகளில் ரோகாதிபதியான 6-க்குரியவர், பாதகாதிபதி கள், மாரகாதிபதிகள் அவரவர் தசாபுக்திகளைப் பொருத்து சஞ்சாரிக்கும்போது, அந்த ராசிக்குக் குறிப்பிட்ட இடங்களில் பாதிப்பு ஏற்படும்.

பித்த நோய் கோள் நிலை: லக்னாதிபதியும் சூரியனும் கூடி 1, 9-ல் இருந்தால் பித்த நோய் உண்டாகும்.

கண்பாதிப்பு: 2-க்குடையவர் தொடர்புபெற்றிருப்பினும், 2-ல் சூரியன், சனி இருந்து செவ்வாயின் தொடர்பை ஏற்றிருப்பினும், 2-ல் சுக்கிரன், சூரியன், ராகு இருந்து பாவர் தொடர்பைப் பெற்றிருப்பினும், 2-ல் பாவ கிரகங்களுடைய ஆதிக்கம் இருப்பினும் கண்பார்வை பாதிக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.

இடக்கண் பாதிப்பு: லக்னாதி பதி சூரியனாகி, இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் சந்திரன் நின்றால் தாய்வழி ஒற்றுமை குறையும். இடக்கண்ணில் கோளாறு ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.

முதுகுவலி: லக்னாதிபதி செவ்வாயாகி, இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் சனி இருந்தால் முதுகில் உபாதை தெரியவரும். அதுமட்டுமல்ல; எந்த செயலிலும் லாபம் வருவது கடினம்.

பயணங்களில் கவனம் வேண்டும். ஆற்றைக் கடக்கும்போது, சிறு துண்டு இரும்பை நீரில் போடுவது சனி தோஷத்தைப் போக்கும்.

கிரகங்களும் நோயும்

சூரியன்: கண் பார்வை மங்கலாகும். தலைவலி, ரத்த ஓட்டக்குறைபாடுகள், எலும்புகளில் பலமின்மை, இதயத் துடிப்பு, ஜுரம் முதலியன.

ஞாயிறன்று ஒருபொழுது. உபவாசமிருப்பது நல்ல பரிகாரம். கோதுமை இனிப்பு, செம்பு உலோகம் தானம் செய்யலாம். பார்வை யில்லாத எட்டு நபர்களுக்கு இயன்ற தானம் செய்வதும் போதுமானது.

சந்திரன்: கர்ப்பப்பைக் கோளாறு, நீர்க்கோவை, தோல் சார்ந்த உபாதைகள், மாதவிடாய்க் கோளாறுகள் வரலாம். மனவளர்ச்சியின்மை காணப்படும்.

சிவாலயம் சென்று சிவனை வணங்கலாம். அரிசி, வெள்ளி உலோகம் தானம் செய்யலாம். பெண்கள் வளர்பிறைச் சந்திரனை- அதாவது 3, 6, 9, 12-ஆம் நாட்களில் மேற்குநோக்கி நினறு, பார்வதிதேவியையும் நினைத்து வணங்குதல் நற்பலன் தரும். பெற்றதாய், பாட்டியின் ஆசீர்வாதம் பெறுதல் நன்று.

செவ்வாய்: ரத்தம் சார்ந்த குறைகள், ஆறாத தீப்புண், ஆண்மைக் குறைவு, சுவாசம் சம்பந்தமான குறைகள் வேதனை தரும்.

சிவப்புநிற- முகமுடைய ஆஞ்சனேயரை வணங்கலாம். வெள்ளி உலோகப் பாத்திரத்தில் தண்ணீர், பால் அருந்துதல் நன்று. திருச்செந்தூர் முருகனுக்கு சங்கல்பம் செய்தல் நல்லது.

புதன்: மனச்சோர்வு, காது கேளாமை, நரம்புத் தளர்ச்சி, வெண் புள்ளி, ஆண்மைக்குறைவு, கனவில் சுக்கிலம் வெளிப்படுதல் போன்றவை உண்டாகும்.

லகனத்திற்கு 3-ல் புதன் இருந்தால் துர்க்கையை வணங்கவேண்டும். ஆஸ்துமா நோய்வாய்ப்பட்டவர்க்கு மருந்து தானம் நன்று. வெள்ளிக் காப்பு அணிதல் நன்று. புதன்கிழமை ஆற்றங்கரை சென்று, மேற்குநோக்கி நின்று, சிறு மண்குடுவையை திருஷ்டிசுற்றி நீரில் போடலாம். பச்சைப் பயறை ஊறவைத்து பசுவுக்குத் தருதல் நன்று.

குரு: வயிறு சார்ந்த நோய்கள், மஞ்சள்காமாலை, சோகை, புற்றுநோய்த் தாக்கம், தேவைக்கு அதிகமான உடல் பருமன்.

ஆலயம் சென்று மஞ்சள்நிறப் பூவால் குருபகவானை வணங்குதல் வேண்டும். குரு 7-ல் இருந்தால் வீட்டினுள் கோவில் கூடாது. பெண்கள் துறவிகளை வணங்குவது கூடாது. குரு 10-ல் இருந்தால் நான்கு கிலோ பச்சரிசியை தம் கையால் நீரில் தூவவேண்டும். குரு 6-ல் இருந்தால் தந்தையோடு வாழவேண்டும்.

சுக்கிரன்: சர்க்கரை வியாதி, சிற்றின்பக் கோளாறு, கேளிக்கை நோய்கள், சிறுநீர்ப்பைக் கோளாறு, டான்சில்ஸ், கண்நோய், ஆண்- பெண் அந்தரங்க உறுப்புகள் வேதனை போன்றவை.

நெய், தயிர், கற்பூரம் ஆகியவற்றை ஆலயத்திற்குக் கொடுக்கவேண்டும். வெள்ளிக்கிழமை ஒருபொழுது உபவாசம் நன்று. 9-ல் சுக்கிரன் இருந்தால் பசுவுக்குப் புல் கொடுப்பது கூடாது. கருப்பு- சிவப்புநிறப் பசுவுக்கு கொடுக்கலாம்.

சனி: வாதநோய், மூட்டுவலி, எலும்பு சார்ந்த பின்னடைவுகள், பல் உபாதை, ஜலதோஷம், ஆனைக்கால் வியாதி போன்றவை வரலாம்.

நல்லெண்ணெய், வாசனைப் பொருள் தானம், கருப்புநிற ஆடைதானம் நன்று.

4-ல் சனி இருந்தால் கிணற்றில் பச்சைப் பால் ஊற்றல் நன்று. ஆலம் விழுதை மூன்று அங்குலம் அளவில் எட்டுத் துண்டுகள் வெட்டி, மேற்குநோக்கி நின்று திருஷ்டிசுற்றி ஓடும் நீரில் போடல் நன்று.

ராகு: இருமல் (கக்குவான்), குடல் சார்ந்த நோய்கள், குடல் புண், கட்டிகள், வயிற்றுப்புண், மண்ணீரல் பாதிப்புகள் வரலாம்.

7-ல் ராகு இருந்தால் நாய் வளர்ப்பது கூடாது. பொது விநியோகப் பொருட்கள் வாங்குவது கூடாது. பூஜையறையில் ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் தேனை நிரப்பி வைக்கவும்.

கேது: வாய்பேச இயலாமை, காது கேளாமை, குடலில் பூச்சிகள், அடிக்கடி வயிற்றுப் போக்கு, நீர்க்கடுப்பு போன்றவை வரலாம்.

விநாயகரை, ஐந்து செந்தாமரைப் பூவால் தொடர்ந்து வணங்கவேண்டும். 7-ல் கேது இருந்தால், நான்கு வாழைப்பழத்தை மேற்குநோக்கி நின்று திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடலாம். வைடூரிய மோதிரம் அணியலாம். வயதுக்கு வராத பெண் குழந்தைகளுக்கு உதவிபுரிவதும் போதுமானது.

மருத்துவமனையில் சேர, மருந்துண்ண, அறுவை சிகிச்சை செய்ய உகந்த நாள் ஒருவரின் பிறந்த நட்சத்திரநாள் மேலே குறிப்பிட்ட எதற்கும் ஏற்றதல்ல. அந்த நேரத்தில் ஏற்படும் லக்னத்தில் சுபகிரகங்களான சுக்கிரன், புதன், குரு, பூரண சந்திரன் இருக்கவேண்டும். லக்னத் திற்கு 7, 8, 12-ல் எந்த கிரகங்களும் இருப்பது கூடாது. ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகள் ஏற்ற கிழமைகளாகும். அமாவாசை, பௌர்ணமி திதிகளைத் தவிர்க்கவும். மற்ற திதிகள் ஏற்றவையாகும்.

விசாகம், மூலம், சதயம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் தகுந்தவை.

முன்னோர்கள் கண்ட நோயின் ரகசியம்

அஸ்வினியில் நோய் ஏற்பட்டால் ஒன்பது நாளில் நோய் தீருமாம். பரணியில் ஐந்து நாளில் தீரும். கிருத்திகை- ஏழு நாளில் தீரும். ரோகிணி, 21 நாளில் தீரும். மிருகசீரிடம்- ஐந்து அல்லது ஒன்பது நாளில் தீரும். திருவாதிரை- ஐந்து நாளில் தீரவேண்டும். அமரபட்சத்தில் வந்தால் மரணபயமாம்; உஷார். (மருத்துவரை நாடவேண்டும்.) புனர்பூசம்- ஏழு நாளில் தீரும்.

ஆயில்யம்- ஒன்பது நாளில் தீராவிடில் நாள்பட்ட வேதனை வருமாம். மகம்- பத்து நாளில் தீரும். இல்லையெனில் ஒரு மாதம் தொடருமாம். பூரம்- 21 நாளில் தீரும். உத்திரம்- ஒன்பது நாளில்; அஸ்தம்- ஏழு நாளில்; சித்திரை- 27 நாளில்; சுவாதி- பத்து நாளில்; விசாகம் 25 நாளில்; அனுஷம்- பத்து நாளில்; கேட்டை- 12 நாளில்; குணமுடையவேண்டும்.

மூலம்- பத்து நாளில் முன்னேற்றம் தெரிதல் அவசியம். பூராடம்- ஐந்து நாளில்; உத்திராடம்- ஒரு மாதத்தில்; திருவோணம்- ஐந்தே நாட்களில்; அவிட்டம்- பத்து நாட்களில்; சதயம்- ஆறு நாட்களில் நோய் வீரியமாகுமாம். பூரட்டாதி- 12 நாட்களில் குணமடைய வேண்டும். ரேவதி- ஐந்து நாட்களில் குணமாகும் என்கிறது சாஸ்திரம்.

செல்: 93801 73464

bala221124
இதையும் படியுங்கள்
Subscribe