"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே கண்ணா, ஆசையெனும் தொட்டிலிலே' என்பதுபோல, கிரக நாதர்கள் நம்மை ஆட்டுவிப்பதுபோல் ஆடத்தான் வேண்டும்.
"குறிப்பிட்ட ஒரு கிரகம் சரியாக இல்லை; பிரீதி செய்யவேண்டும்' என ஜோதிடர்கள் கூறுவார்கள்.
குறிப்பிட்ட கிரகத்திற்குக் குறிப்பிட்ட வகையில் பிரீதி செய்யவேண்டும் என வேதவிற்பன்னர்களும் சொல்வதுண்டு.
"கொள்கைகளும், சடங்குகளும், நூல்களும், கோவில்களும் நம்முள் இருக்கும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்த உதவும் கருவிகளே ஆகும்; இதற்கு வழிசெய்வதே மதமாகும்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
ஜோதிடர்களும், ஆச்சாரியர்களும் கூறுவது நூற்றுக்கு நூறு சாத்தியமானவையே என்பதில் சந்தே கமில்லை.
"நான் ஒன்ன நெனைச் சேன்- நீ என்ன நெனைச்சே.
தன்னாலே நெஞ்சம் ஒண்ணாச்சு. நம்மை யாரு பிரிச்சா, ஒரு கோடு கிழிச்சா, ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு...' இது திரைப்படப் பாடல் தான் என்றாலும், இவர் களுடைய ஜாதகத்தில் கிரகநாதர்களின் தன்மையறிந்து பிரீதி செய்துகொண்டால், உறவுகளில் ஏற்படும் வேதனைகளை கிரக நாதர்கள் சீர்செய்வார்கள்.
ஜோதிடத்திலும் கிரகப் பிரீதியிலும் நம்பிக்கை கொண்ட வர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் சில உண்டு.
முதலிலில் எந்த கிரகத் திற்குப் பிரீதி செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு செய்ய வேண்டும். ஜாதகத்தில் எல்லா வகையிலும் பலம் குறைந்து நலம்தர முடியாத நிலையிலுள்ள கிரகத்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.
இரண்டு, ஏழு ஆகிய இடங்களுக்கு அதிபதிகள் மாரகாதிபதிகள் ஆவர்.
இவர்களால் மாரகம் விளையக்கூடும். இவர்கள் சுபபலம் பெறாமல் பாவர் மத்தி யிலிலிருந்து, நீசம்போன்று கெட்ட பலம் பெற்றிருந்தால் நலம்தரும் சக்தியை இழந்தவர்கள் ஆவார்கள்.
ஒரு கிரகம் 6, 8, 12-ஆம் வீடுகளுள் ஒன்றுக்கு அதிபதியாகி, பாவர்களுடன் சேர்ந்து 1, 2, 4, 5, 7, 9, 10-ஆம் இடங் களில் இருக்கும்போது, அந்த பாவங்களின் பலன்களை பெரிதும் கெடுக்க முயல் வார்கள்.
கடக லக்னத்திற்கு 12-ஆம் வீட்டோ னான புதன் 9-ஆம் வீடாகிய மீனத்தில் நீசம்பெற்று, 12-ல் உள்ள சனியால் பார்க்கப்பட்டு, சுபகிரகப் பார்வை பெறா மலிலிருந்தால் கடுமையான தோஷத்தை உண்டாக்கக்கூடும்.
இவ்வாறு ஒவ்வொரு கோணத்திலும் பார்க்கவேண்டும். நவாம்சத்தில் நல்ல நிலை பெற்றிருந்தால் தோஷம் விலகும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இப்படி தோஷம் விலகும்நிலை ஏற்படுமா இல்லையா என்பதைக் கண்டு கொண்டு கிரகத்திற்குப் பிரீதி செய்தல் நன்று.
ராசி, அம்சம் இரண்டிலுமே பலம் குறைந்த கிரகம், பிரீதி செய்யப்படுவதற் குரிய கிரகங்களில் முதலிலிடத்தை வகிக்கும்.
ஆட்சிமன்றத்திலுள்ள அமைச்சர்களைப் போலவே ஜாதகத்திலுள்ள கிரக நாதர்கள் இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட அமைச்சரிடம் நமக்கு ஒரு சலுகை பெறவேண்டுமெனில் அவருக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள முயல பல வழிகளை நாடுவோம். அதுபோன்றதே பிரீதியென்பது. அதனைப்போலவே கிரகங்களுக்குரிய செயல்களைச் செய்யவேண்டும்.
ஆட்சி மன்றத்து அமைச்சர்கள் ஒருபுறம் இருக்கட்டும்; நாம் பணி செய்யும் அலுவலகத்தில் நமக்கு மேலேயுள்ள அதிகாரியின் அனுகூலம் நமக்குத் தேவை. அவர் நம்மிடம் மாறுபட்டவராக இருந்தால் நாம் அவரைப் பிரீதி செய்து தானே ஆகவேண்டும். இவ்வாறாக அனுகூலமில்லாத கிரகத்திற்குப் பிரீதி செய்தல் வேண்டும்.
பிரீதி செய்துவிடுவதால் குறிப்பிட்ட அதிகாரி சட்டத்தைமீறி அனுகூலம் செய்வாரென்று எதிர்பார்க்க இயலாது. அதுபோலவே பிரீதி செய்யப்படும் கிரகநாதர்களிடமிருந்து விதியைமீறி நலன்களைப்பெற இயலாது. பிரீதி என்பதை இப்போது பரிகாரம் என்ற உருவில் சுலபப் பரிகாரம், எளிமைப் பரிகாரம், யாகம், ஹோமம் என பல உருவில் நாம் தப்பிக்க வழிகள் கூறப்படு கின்றன.
சட்டத்துக்கு உட்பட்டு நமக்கு வேண்டியவரிடத்தில் நலம்பெற முடிவதுபோல், விதியின் கட்டுப்பாட்டை மீறாமல்- அதே நேரத்தில் நம்மால் பிரீதி செய்யப்படுகிற வழிமூலம் கருணை நோக்கால் நமக்கு நன்மை செய்விக்க முடியும். அதாவது தேசிய நல்லவர்கள் (தியாகிகள்) பிறந்த நாட்களில் கைதிகளை விடுதலை செய்வது போன்றது. கீழ்கோர்ட்டில் தூக்குத்தண்டனை பெற்ற கைதி மேல்நீதிமன்றத்தில், "தண்டனைக் குரிய சாட்சியம் இல்லை; சந்தர்ப்ப சாட்சியமும் நிரூபிக்கப்படவில்லை' என்று, "ஹாயாக' விடுதலையாவது போன்றது.
அப்படி நன்மைசெய்ய முடியாதென்றால் கிரகப் பிரீதி என்ற கருத்துக்கே இடமில்லை. கிரக ஆராதனை என்றும், கிரக வழிபாடு என்றும், கிரக சாந்தி என்றும் பழம்பெரும் நூல்களில் வழிமுறைகள் சொல்லப் பட்டுள்ளன. ஆகவே கிரக அனுகூலம்பெற சாத்தியம் உண்டென்பது உறுதியாகிறது.
ஒவ்வொரு கிரகத்திற்கும் நாமாவளி உண்டு. குறிப்பிட்ட கிரகத்தின் நாமா வளியைப் பாராயணம் செய்யலாம். அப்படி செய்யும்போது சித்தத்தைச் செலுத்தி அதிலேயே ஆழ்ந்து ஈடுபாடு வைத்திருக்க வேண்டும். ஏனோதானோவென்று உச்சரித்தால் முழுப்பலன் இராது. எதிலும் முழுமையான ஈடுபாடு உண்டாகும்போதுதான் முழுப்பலன் பெறமுடியும் என்பது ஊரறிந்த உண்மை.
மேலும் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை, பிரத்யதி தேவதை என்று உண்டு. அவர்களை ஆராதிப்பதிலும் கிரகப்பிரீதி செய்த பலனைப்பெற இயலும்.
மேலும் ஒவ்வொரு கிரகத்திற்கும் நிறமுண்டு; வஸ்திரம், புஷ்பம், சமித்து, தானியம், வாகனம், பூதம் என பல அம்சங்கள் உண்டு.
அதாவது திருப்பதியில் லட்டு, திருச் செந்தூரில் புட்டு, பழனியில் பஞ்சாமிர்தம், குருவாயூரில் பால் பாயசம், சில இடங்களில் அரவணை, பொங்கல், ஆஞ்சனேயருக்கு வெண்ணை- வடைமாலை என இப்படியாக தெய்வங்களுக்குரியவைதான் பிரசாதமாகத் தரப்படும். எனவே எந்த கிரகத்திற்கு எது விருப்பமோ அதன்மூலம் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். அர்ச்சனை, அபிஷேகங்களிலும் இவை முக்கியத்துவம் பெறும்.
எந்த கிரகத்தை எதற்குப் பிரீதியாகக் கொள்வது?
"காதல்கோட்டை' திரைப்படத்தில் அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி., பாடிய பாடல் இது.
"நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா...
ஆண்: கோவிலிலே நான் தொழுதேன்
கோலமயில் உனை சேர்ந்திடவே
பெண்: கோடி முறை நான் தொழுதேன்
காலமெலாம் நீ வாழ்ந்திடவே
ஆண்: நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே
பெண்: நிஜமின்றி வேறில்லை என்னிடமே'
இத்தகைய ஜோடிகளுக்கு குரு, சுக்கிரனை பிரீதி செய்தால் காரியம் நிறைவேறும். கோடிமுறை தொழுதாலும் அசுபகிரகங்கள் அல்லலைத் தரத்தான் செய்வார்கள்.
நல்ல இல்லறம் அமைய 21 வயது ஆண்களும், பெண்களும் செய்யவேண்டிய ஹோமம்:
ஆண்கள்: கந்தர்வராஜ ஹோமம்.
பெண்கள்: பார்வதி சுயம்வரகலா ஹோமம்.
இதனால் நன்மையடைந்தவர்கள் பலர் என்பது அனுபவம்.
செல்: 93801 73464