நற்பலனைத் தடுக்கும் கிரக அஸ்தங்கம்!-மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/planetary-asthangam-hinders-goodness-melmaruvathur-s-kalaivani

ஜோதிடத்தில் கிரகங்களின் பலமும், பலவீனமும் சில பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

அப்படி வகைப்படுத்துகையில் கிரகங்கள் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், பரிவர்த்தனை, சுபர் பார்வை, திரிகோணம் ஏறுதல், கேந்திரம் அமர்தல் போன்றவற்றின்மூலம் கிரக பலம் அறியப்படுகிறது.

அதேபோன்று நீசம், மறைவு, பாதகாதிபதி அல்லது மாரகாதிபதியுடன் தொடர்பு, பகை வீட்டில் நிலை கொள்வது, பாவ கிரகங் களுடன் இணைவது, கிரகணத் தொடர்பு பெறுவது, திதி சூனியத் திலும், வைணாசிகம் மற்றும் வதை நட்சத்திரங்களுடன் இணைவது, அஸ்தங்கம் பெறுவது போன்றவை பலவீனங்களாக அறியப் படுகிறது.

இன்றைய சூழலில் சில ஜோதிடர்கள் தசாபுக்தி மற்றும் பிற நிலைகளுக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தை அஸ்தங்கத்திற்கு அளிப்பதில்லை. ஆனால் சூரியனுடன் அஸ்தங்க மாகும் கிரக காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் ஜாதகர்களுக்கு பெரும் பிரச்சினை ஏற்படுவதைக் காணமுடிகிறது. அஸ்தங் கம் சார்ந்த நிலையையும் ஒரு ஜாதகத்தில் ஆய்வு செய்தால் பிரச்சினைகளையும், விளைவுகளையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்குத் தகுந் தாற்போல் ஏதாவது செய்யமுடியும்.

as

அஸ்தங்கம் என்றால் என்ன?

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு மிக அருகில் மற்ற கிரகங்கள் அமையப்பெற்றால் அவை தங்களது சுய வலுவையும், இயல்பையும் இழந்து பலன் தரமுடியாத நிலையில் இருப்பது அஸ்தங்கமாகும்.

சூரிய மண்டலத்தில், அதீத ஒளி பொருந்திய சூரியனுடன் இணையும் கிரகங்களும், நட்சத்திரங்களும் கண்ணுக்குப் புலப்படாத நிலையை அடைவதனால் இதற்கு அஸ்தங்கம் என்று பெயர் வழங்கப்படுகிறது.

மேலும் சுப கிரகங்களாக இருந்தாலும் அஸ்தங் கமாகும்பொழுது அவற்றின் தசாபுக்திக் காலங்களில் அவற்றால் நற்பலனை அளிக்க முடிவதே இல்லை.

புதன், செவ்வாய், குரு, சனி மட்டுமல்லாமல், சந்திரனுக்கும் கிரக அஸ்தங்கம் உண்டு என்கிறது சூரிய சித்தாந்தம் என்னும் ஜோதிட நிகண்டு.

இதில் புதனும் சுக்கிரனும

ஜோதிடத்தில் கிரகங்களின் பலமும், பலவீனமும் சில பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

அப்படி வகைப்படுத்துகையில் கிரகங்கள் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், பரிவர்த்தனை, சுபர் பார்வை, திரிகோணம் ஏறுதல், கேந்திரம் அமர்தல் போன்றவற்றின்மூலம் கிரக பலம் அறியப்படுகிறது.

அதேபோன்று நீசம், மறைவு, பாதகாதிபதி அல்லது மாரகாதிபதியுடன் தொடர்பு, பகை வீட்டில் நிலை கொள்வது, பாவ கிரகங் களுடன் இணைவது, கிரகணத் தொடர்பு பெறுவது, திதி சூனியத் திலும், வைணாசிகம் மற்றும் வதை நட்சத்திரங்களுடன் இணைவது, அஸ்தங்கம் பெறுவது போன்றவை பலவீனங்களாக அறியப் படுகிறது.

இன்றைய சூழலில் சில ஜோதிடர்கள் தசாபுக்தி மற்றும் பிற நிலைகளுக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தை அஸ்தங்கத்திற்கு அளிப்பதில்லை. ஆனால் சூரியனுடன் அஸ்தங்க மாகும் கிரக காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் ஜாதகர்களுக்கு பெரும் பிரச்சினை ஏற்படுவதைக் காணமுடிகிறது. அஸ்தங் கம் சார்ந்த நிலையையும் ஒரு ஜாதகத்தில் ஆய்வு செய்தால் பிரச்சினைகளையும், விளைவுகளையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்குத் தகுந் தாற்போல் ஏதாவது செய்யமுடியும்.

as

அஸ்தங்கம் என்றால் என்ன?

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு மிக அருகில் மற்ற கிரகங்கள் அமையப்பெற்றால் அவை தங்களது சுய வலுவையும், இயல்பையும் இழந்து பலன் தரமுடியாத நிலையில் இருப்பது அஸ்தங்கமாகும்.

சூரிய மண்டலத்தில், அதீத ஒளி பொருந்திய சூரியனுடன் இணையும் கிரகங்களும், நட்சத்திரங்களும் கண்ணுக்குப் புலப்படாத நிலையை அடைவதனால் இதற்கு அஸ்தங்கம் என்று பெயர் வழங்கப்படுகிறது.

மேலும் சுப கிரகங்களாக இருந்தாலும் அஸ்தங் கமாகும்பொழுது அவற்றின் தசாபுக்திக் காலங்களில் அவற்றால் நற்பலனை அளிக்க முடிவதே இல்லை.

புதன், செவ்வாய், குரு, சனி மட்டுமல்லாமல், சந்திரனுக்கும் கிரக அஸ்தங்கம் உண்டு என்கிறது சூரிய சித்தாந்தம் என்னும் ஜோதிட நிகண்டு.

இதில் புதனும் சுக்கிரனும் வான்வெளியில் சூரியனுடனேயே பயணிக்கும் கோள்கள் என்பதனால், இவற்றிற்கு அஸ்தங்கத்தைப் பெரிதாக சில ஜோதிடர் கள் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இவையும் குறிப்பிட்ட பாகையில் அஸ்தங்கமாகும்பொழுது தீய பலனையே அளிக்கின்றன.

புதன் 12 பாகை முதல் 14 பாகை வரையிலும்; சுக்கிரன் 8 பாகையிலும்; செவ்வாய் 17 பாகையிலும்; குரு 11 பாகையிலும்; சனி 15 பாகையிலும்; சந்திரன் 12 பாகை என்ற விதத்திலும் அஸ்தங்கத்தைத் தழுவுகின்றன.

அஸ்தங்கம் எல்லாம் அஸ்தங்கமா?

சூரியனுடன் ஒரே ராசியில் அமர்வது அல்லது சில குறிப்பிட்ட பாகைக்குள் மட்டும் அமர்வது என்பதனை மேம்போக்காக அஸ்தங்கமாக எடுத்துக்கொள்வது சிறப்பல்ல.

உதாரணமாக சூரியன் ஒரு ராசியில் 10 டிகிரியில் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். புதன் அதே ராசியில் 4 டிகிரியில் இருந்து கொண்டு சூரியனைத் தொடும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே இது அஸ்தங்கமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மாறாக புதன் 14-ஆவது டிகிரியில் இருந்தால், சூரியனைக் கடந்துவிட்ட சூழலால் இது அஸ்தங்க தோஷத்திற்கு ஆட்படாது.

ஒவ்வொரு கிரகமும் அஸ்தங்கிக்கும் பொழுது ஒரு ஜாதகருக்கு என்ன நிகழும் என்பதைப் பின்வருமாறு காணலாம்.

புதன் அஸ்தங்கம்

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் மற்றும் புதனுடைய இணைவு, புதாதித்ய யோகமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவர்கள் ஆழ்ந்த நுண்ணறிவு படைத்தவர்களாக இருப்பார்கள். எல்லா ஜாதகத்திலும் இந்த புதாதித்ய யோகம் இயங்குகின்றதா என்று ஆராயும்பொழுது, அங்கே இல்லையென்ற பதில் ஓங்கி ஒலிக்கிறது. இங்குதான் இந்த அஸ்தங்கம் வேலை செய்கிறது.

புதன் அஸ்தங்கமடையும்பொழுது வித்தை, கல்வி, நரம்பு, தோல், தாய்மாமன், காதல், ஆவணங் கள் போன்ற அனைத்து காரகங்களிலும் சில நெருடல் கள் ஏற்படுகிறது.

புதன் அஸ்தங்கமான ஜாதகத்தில், இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட கல்விக்கூடங்களில் பயிலும் சூழலை உருவாக்குகிறது. அதோடு தாயை விட்டு நெடுந்தொலைவில் தங்கிப் படிக்கும் சூழலும், ஒரு வருட இடைவேளை விட்டு படிப்பைத் தொடரும் சூழலும் ஏற்படும்.

இவர்களின் வம்சாவளியில் நிச்சயமாக ஒரு பத்திரம் சார்ந்த வில்லங்கங்கள் இருப் பதற்கான வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக இவர்கள் குடும்பங்களில் பொய் கையெழுத்து, பொய் பத்திரங்கள் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். மேலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. கணிதத்தின்மீதான ஈர்ப்பு இவர்களுக்கு அறவே இருப்பதில்லை.

அதேபோன்று கடனால் பாதிக்கப்படும் ஜாதகங்களில் பெரும்பங்கு புதன் அஸ்தங்க மான ஜாதகங்களாக உள்ளன.

குரு அஸ்தங்கம்

குரு மற்றும் சூரியனின் இணைவானது, அந்த வம்சத்தில் பரிவட்டம் கட்டிக் கொண்டவர்கள் இருப்பார்கள் என்பதனை உணர்த்துகிறது. மேலும் இவர்களின் மூதாதையர்கள் ஊர்ப் பெரியவர்களாக இருந்து, ஊர் மரியாதையைப் பெற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எந்த ஜாதகத்தில் குரு அஸ்தங்கம் ஆகின்றதோ, அவர்களுக்கு முன்னின்று வழிகாட்டுவதற்கான வழிகாட்டி இருக்க மாட்டார்கள்.

மனித உடலில் குரு முழுக்க முழுக்க மனித மூளையின் காரகமாகும். இதனால் குரு அஸ்தங்கிக்கும்பொழுது சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க முடியாத கட்டத்திற்கு இவர்கள் தள்ளப் படுவார்கள்.

அதேபோன்று குழந்தைகள் சார்ந்த விஷயத்தில் ஒரு சரியான முடிவை எடுக்கமாட்டார்கள். குழந்தைகளைப் பற்றிய பெரும் கவலை இவர்களைப் பற்றிக்கொள்வதில்லை.

தங்க நகைகள்மீதான ஈர்ப்பின்மையும், அடகுவைத்த நகைகளை அவ்வளவு எளிதாக மீட்டுவிட முடியாத சூழலும் அதிகமாகக் காணப்படுகிறது.

குரு அஸ்தங்கமாகி, அந்த ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதியும் பலம் குறைந்திருந்தால், இவர்களுக்கு குழந்தைப் பிறப்பில் தாமதம் ஏற்படுகிறது.

சுக்கிரன் அஸ்தங்கம்

களத்திர காரகனான சுக்கிரனுடன் சூரியன் இணைவானது, திருமணத்தில், குழந்தைப் பிறப்பில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மனித உடலில் சுக்கிரன் குறிப்பிடும் பாகங்கள் பாலுறுப்புகள் மற்றும் ஆண்களுக்கு உயிரணுவையும், பெண்களுக்கு கருமுட்டையையும் குறிக்கும். அதனால் கருமுட்டை மற்றும் உயிரணு சார்ந்த பிரச்சினைகள் இருப்பதைக் காண முடிகிறது.

அதேபோன்று அந்த வம்சத்தில் ஒரு பெண் குழந்தை வழிபாட்டுக்குரியதாக மாறியிருப்பதைக் காணமுடிகிறது.

அஸ்தங்கிக்கப்பட்ட சுக்கிரனின் தசாபுக்திக் காலங்களில், இல்லற வாழ்க்கையில் சில ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சினைகளைத் திணிக்கிறது. மேலும் பால்வினை நோய்களால் பாதிக்கப்படும் சூழலை உருவாக்குகிறது.

பெண்களால் பிரச்சினையை அனுபவிக்கும் ஜாதகங்களை ஆராய்ந்தால் இதில் சுக்கிரனின் அஸ்தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது.

சனி அஸ்தங்கம்

சூரியன் மற்றும் சனியின் இணைவு, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மரணம் நிகழ்ந்திருப்பதை உணர்த்தும். மேலும் தந்தையின் வளர்ச்சி தாமதமாக இருப்பதைக் காணமுடியும்.

ஜாதகத்தில் ஐந்து மற்றும் பதினோரா மிடத்தில் சூரியனுடன் சனி அஸ்தங்க மாகும்பொழுது ஜாதகர்கள் உத்தியோகத்திலும், தொழிலிலும் கடுமையான நஷ்டம் மற்றும் பாதிப்புகளை அடைகிறார்கள். அதேபோன்று தொழில் புரியுமிடங்களில் சக ஊழியர்கள் இவர்களுக்கு ஒத்துழைப்பு தருவது கிடையாது.

மேலும் உடல் பலவீனமாகும் சூழலும், எலும்புகள், மூட்டுகள் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்கிறார்கள்.

சந்திரன் அஸ்தங்கம்

சூரியன் மற்றும் சந்திரனின் இணைவு அமாவாசை யோகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சந்திரன் 12 பாகையில் அஸ்தங்கம் அடைவதாக ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. இப்படி அஸ்தங்கம் அடைந்த சந்திரன் ஒரு ஜாதகத்தில் அமையும்பொழுது நீர் சம்பந்தமான நோய் அவர்களை ஆட்கொள்கிறது.

அதேபோன்று ரத்த ஓட்டத்தில் தடைகளையும், தசாபுக்திக் காலங் களில் அவப்பெயர்களையும், அலைந்து கொண்டேயிருக்கும் மனோநிலையையும், கணவன்- மனைவியிடையே தற்காலிகமான பிரிவையும் ஏற்படுத்துகிறது.

கருப்பை சார்ந்த பிரச்சினைகளை சந்திரனின் அஸ்தங்கம் தருகிறது.

செவ்வாய் அஸ்தங்கம்

செவ்வாய் மற்றும் சூரியனின் இணை வானது ஆளுமைபெற்ற தந்தையைக் குறித்தாலும், இந்த இணைவு பெண்களின் ஜாதகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சூரியன், செவ்வாயின் இணைவு ஏழாமிடத்தில் அமையும்பொழுது இது இளம் விதவை தோஷமாகக் கையாளப்படுகிறது. இந்த விதி எல்லா ஜாதகத் திலும் பொருந்தாது. சில ஜோதிடர்கள் இதற்கு முக்கியத்துவம் அளிப்பது வருந்தத் தக்கதுதான்.

செவ்வாய் அஸ்தங்கிக்கும் சூழல் உருவாகும் ஜாதகர்களுக்கு, ரத்தம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். பெண்களாக இருந்தால் மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சகோதரர்களுடனான ஒற்றுமையிலும் சின்ன விரிசல் ஏற்படுகிறது. மேலும் சிறுசிறு வெட்டுக் காயங்கள் இவர்களுக்கு காணப்படுகிறது.

குறிப்பாக செவ்வாய் எந்த பாவகத்திற்குப் பொறுப்பேற்கின்றதோ, அந்த பாவகத்தின் உயிர்க் காரகம் பாதிக்கப்படுவதை கண்கூடாகக் காணமுடிகின்றது. உதாரண மாக எட்டாமிடத்திற்கு செவ்வாய் பொறுப் பேற்று அஸ்தங்கிக்கும்பொழுது, ஆயுள் சார்ந்த குறைபாடுகள் ஏற்படுவதை பல ஜாதகங்களில் காணமுடிகிறது.

விதிகள் ஆயிரம் இருந்தாலும், விதிவிலக்குகள் என்பது ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அஸ்தங்க தோஷம் நிவர்த்திக்கான விதிவிலக்குகள்

அஸ்தங்கம் பெறும் கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது; லக்னாதிபதி சூரியனாக இருப்பது; சூரியன் அல்லது சந்திரன் ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவது; அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் திரிகோணம் அல்லது கேந்திரங்களில் இடம் பிடிப்பது போன்றவை அஸ்தங்க தோஷத்திற்கான கெடுபலனைக் குறைக் கின்றன.

மேலும் சூரியனுடன் ராகு- கேதுக்கள் அமையும்பொழுது, இந்த அஸ்தங்க தோஷம் பெரிதாக செயல்படுவது கிடையாது. ஏனென் றால் சூரியனே ராகு- கேதுவின் பிடியில் சிக்கி பலமிழந்த நிலையில் அஸ்தங்க தோஷத்தைத் தருவதில்லை.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது; ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமை தானம் செய்வது நன்மை தரும்.

செல்: 80563 79988

bala130924
இதையும் படியுங்கள்
Subscribe