சூரியன், சந்திரன், செவ்வாய், குரு - எங்கு இருந்தால், என்ன நடக்கும்?

/idhalgal/balajothidam/planet-positions

planets

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பலசாலியாக இருப்பார். அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பணக்காரராக இருப்பார். நேர்மையானவராக இருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். அனைத்து வசதிகளும் இருக்கும். பெயர், புகழ் இருக்கும். அரசரைப் போல வாழ்வார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், சிறந்த பேச்சாற்றல் இருக்கும். தைரிய குணம் இருக்கும். சொந்தத்தில் வாகனம் இருக்கும். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் பண்டிதர்களாக இருப்பார்கள். அவ்வப்போது அவர்கள் பிறரிடம் வாதம் செய்வார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியமானவராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார்.

சுய சிந்தனை இருக்கும்.

planets

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பலசாலியாக இருப்பார். அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பணக்காரராக இருப்பார். நேர்மையானவராக இருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். அனைத்து வசதிகளும் இருக்கும். பெயர், புகழ் இருக்கும். அரசரைப் போல வாழ்வார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், சிறந்த பேச்சாற்றல் இருக்கும். தைரிய குணம் இருக்கும். சொந்தத்தில் வாகனம் இருக்கும். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் பண்டிதர்களாக இருப்பார்கள். அவ்வப்போது அவர்கள் பிறரிடம் வாதம் செய்வார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியமானவராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார்.

சுய சிந்தனை இருக்கும். சிலர் அதிகமாக பயணம் செய்வார்கள். சிலர் கமிஷன் ஏஜென்ட்களாக இருப்பார்கள். சிலர் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். சிலர் பெரிய அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 4-ஆம் பாவத்தில் இருந்தால், சொந்தத்தில் வீடு, வாகனம் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். சிலருக்கு திருமணத்தில் பிரச்சினைகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் நேர்மையானவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பலசாலியாக இருப்பார். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். அரசியலில் பெயர், புகழ் இருக்கும். சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளில் இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். ஜாதகர் பணம் சம்பாதிப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோபக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். பலசாலியாக இருப்பார். காலில் அடிபடும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் வெளியூருக்குப் பயணம்செய்து சென்று பணம் சம்பாதிப்பார். கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். நல்ல அரசியல்வாதியாக இருப்பார். சொந்தத்தில் வீடு, வாகனம்இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். கோப குணம் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் நேர்மையானவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். சிலர் மற்றவர்களிடம் வாதம் செய்வார்கள். சிலரின் மனைவிக்கு நோய் இருக்கும். சிலருக்கு தொழிலில் பார்ட்டனாரால் பாதிப்பு உண்டாகும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தர்மச் செயல்களில் ஈடுபடுவார். அரசியலில் பெயர், புகழ் இருக்கும். சிலர் அரசியல்வாதிகளின் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள். ஜாதகர் பலசாலியாக இருப்பார். நல்ல பண வசதி இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சொந்தத்தில் வீடு, வாகனம் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 10-ஆம் பாவத்தில் இருந்தால்,ஜாதகர் புகழ்பெற்ற அரசியல்வாதியாக இருப்பார். மன்னரைப்போல வாழ்வார். நல்ல மனைவிஅமைவாள். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். சிலர் நீதிபதிகளாக இருப்பார்கள். ஜாதகர் அனைவரிடமும் நன்றாக பழகுவார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். ஆடம்பரமாக செலவழிப்பார். தைரியசாலியாக இருப்பார். சிறந்த பேச்சாற்றல் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் கஷ்டங்கள் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். வெளியே சென்று, நிறைய சம்பாதிப்பார். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் பிறரைப் பார்த்து பொறாமைகொள்வார். அதற்காக வீண்செலவுகளைச்செய்து, எதிரிகளை உண்டாக்கிக் கொள்வார்.

மகேஷ் வர்மா

செல்: 98401 11534

bala jothidam 12-07-2024
இதையும் படியுங்கள்
Subscribe