ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சினை என்று உருவாகும்போதுதான் இறைவன் மீதான நம்பிக்கையும், ஜோதிடத் தின்மீதான தேடலும் உண்டாகிறது.
அதுவரையில் தன் மனம்போன போக்கில் செயல்பட்டு வந்தவர்கள், இறை சக்தியையும் ஜோதிடத்தையும் எள்ளி நகையாடி வந்தவர்கள் நிலை மாற்றம் பெற்றவர்களாக மாறுகிறார்கள்.
ஜோதிடம் என்பது சாஸ்திரம் என்ற உண்மை நிரூபணம் ஆகியுள்ளது.
ஒரு குழந்தை அதன் தாயின் கருவறையிலிருந்து பூமியை தரிசிக்கும் நேரத்தில், பன்னிரண்டு பாவகங்களிலும் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலை யினை வைத்து அந்தக் குழந்தையின் எதிர் காலம் தீர்மானிக்கப் படுகிறது. ஒன்பது கிரகங்களும் சஞ்சரிக்கும் நிலையை வைத்து அந்த ஜாதகத் திலுள்ள யோகங் களை நம்மால் அறியமுடிகிறது.
அந்த ஜாதகத்தை யோக ஜாதகம் என்றும் சொல்வோம். அதேபோல் சிலருடைய ஜாதகத்தில் தோஷமும் இருக்கச் செய்கிறது. அந்த ஜாதகத்தை தோஷ ஜாதக மென்று சொல்வோம்.
யோகமும் தோஷமும் ஜாதகத்திலுள்ள யோகங் கள் பலப்பல உண்டு. அதே போல் தோஷங்களும் வெவ்வேறு உண்டு. நம் பிறப்பென்பது முன்ஜென்ம வினைகளோடு, பாவ- புண்ணியங்களோடுதான் தோன்றுகிறது. அதன்காரணமாக கடந்த ஜென்மத்தில் அதிகபட்சமான புண்ணியங் களை செய்தவர்கள் இந்த ஜென்மத்தில் யோகமான பலன்களை அடைபவர் களாக வும், அதிர்ஷ்ட சாலிகளாகவும் வாழ்கின்றனர்.
அதற்கு நேர் மறையாக, பாவங்களுக்கு மேல் பாவங்களை செய்து அதன் காரணத்தால் சாபங்களை பெற்றவர்கள் இந்த ஜென்மத்தில் தோஷங்களுடன் பிறப்பதுடன் எதிர் பார்ப்புகளில் ஏமாற் றம் அடைவதும், முயற்சிகளில் தோல்வி அடை வதும், வாழ்க்கையில் சொல்லமுடியாத நெருக்கடிகளுக்கு ஆளாகி நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்வதும் விதியாகவே உள்ளது.
இந்த இடத்தில் நாம் கவனித்திடவேண்டிய மிக முக்கியமான ஒரு தகவலும் உண்டு. ஒவ்வொருவரும் அவர்களுக்கு சங்கடமான நிலை வரும்போதுதான், அல்லது திருமணம் போன்ற சுப விசேஷங்களுக்குதான் ஜோதிடர்களை சந்திக்கின்றனர்.
அந்த நேரத்தில் அவர்களின் ஜாதகத் திலுள்ள உண்மையான நிலையை அறிந்து அந்த ஜோதிடர் பலன் கூறும்போது ஒருசிலருக்கு அந்த ஜோதிடரையே பிடிக்காமல் போகும். காரணம், அந்த ஜாதகர் எதிர்பார்த்த, அவர் விரும்பிய சந்தோஷமான வார்த்தைகளை அந்த ஜோதிடர் சொல்லவில்லை என்பதுதான்.
இந்த இடத்தில் ஒரு ஜாதகம் என்று வரும்போது அந்த ஜாதகத்தில் தோஷத்தினால் மட்டும் அல்லாமல் தசாபுக்திகளின் காரணமாகவும், கோட்சாரரீதியாக கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையினாலும் ஒரு ஜாதகருக்கு சங்கடம் ஏற்படுவதற்கு வழிகள் உண்டு. அந்த சங்கடத்தை அவர் தெரிந்துகொள்ளும்போதுதான் அவர் எச்சரிக்கையாக செயல்பட முடியும் அதற்கு மாற்று வழி என்ன என்பதையும் யோசிக்க முடியும். ஆனால், தன் ஜாதகத்தில் கிரக ரீதியாக உண்டான சங்கடத்தையே ஜோதிடர் கள் சொல்லக்கூடாது என்ற மனப் பான்மை பெரும்பான்மையானவர்களிடம் இருந்துவருகிறது.
பொதுவாக இந்திரன், சந்திரன் என்ற தேவர்களாகட்டும், மனிதர்களாகட்டும் யாருமே தொடர்ந்து ஒரே நேர்கோட்டிலேயே பயணிப்பதில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல், எந்த ஒரு ஜாதகரும் தொடர்ந்து வெற்றியினையே அடைந்து கொண்டிருப்பார் என்றும் சொல்லமுடியாது. ஒருகாலத்தில் யோகமான நிலையும், அதே ஜாதகருக்கு அடுத்தொரு காலத்தில் சங்கடமான நிலையும் தோன்றும் என்பது வரலாறு. அதற்கு காரணமானவர்கள் கிரகங்கள். அவர்களின் சஞ்சார நிலைக்கேற்ப ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் மாறிப் போகிறது. எங்கோ ஒரு இடத்தில் இருந்தவர் உச்சத்தை எட்டுவதும், உச்சத்தில் இருந்தவர்கள் அடையாளம் காணாமல் போவதற்கும் காரணம் கிரகங்களின் சஞ்சார நிலை என்றுதான் சொல்லவேண்டும்.
தோஷங்களால் தடைப்படும் யோகங்கள்
அதேநேரத்தில், கிரகங்களின் காரணமாக நம் வாழ்க்கையில் மாறுதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் ஜாதகத்திலுள்ள தோஷத்தின் காரணமாக நமக்குக் கிடைத்திட வேண்டிய நற்பலன்களிலும் தடை உண்டாகிப் போகிறது. நம் வாழ்க்கை சோதனைக்கும் வேதனைக்கும் ஆளாகிப் போகிறது.
நாம் அடையவேண்டிய பலன்களை அடைய முடியாமல் தடுத்திடக்கூடிய தோஷங்கள் என்ன? அந்த தோஷத்தை நம்முடைய ஜாதகத் தின் வழியாக எப்படி தெரிந்துகொள்வது என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும். பொதுவாக ஜாதகத்திலுள்ள தோஷங்கள் பற்றி வெளிப்படையாக சொல்லி வழிகாட்டிடக் கூடியவர்களாக ஒருசிலர் மட்டுமே உள்ளனர்.
ஜாதகத்தில் என்ன தோஷம் இருக்கிறது? அது எப்படி ஏற்பட்டது? அதற்கு எத்தகைய பரிகாரம் செய்வது என்பதையெல்லாம் கிரக இணைவு மற்றும் கிரகங்கள் அமர்ந்த நிலையை வைத்தே கண்டறிந்து விளக்கமாக கூறக்கூடியவர்கள் ஜோதிட உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர்.
ஜாதகங்களில் வெவ்வேறான யோகங்கள் இருப்பதுபோல் தோஷங்களும் பலவாய் இருக்கிறது. அந்த தோஷங்களில் ஏதோ ஒன்று ஒருவருக்கு ஏற்படுவதற்கு கடந்த ஜென்மத்தில் அவர் செய்த பாவங்களே காரணமாக அமைகிறது. அந்த ஜாதகர் மட்டுமல்ல அவருடைய மூதாதையினர் செய்த பாவங்களும் அந்த ஜாதகருக்கு தோஷங்களாக மாறுகிறது. தந்தை பெற்ற சாபம் பிள்ளைகளையும் சேரும் என்பது விதி. ஒருவர் தேடிவைத்த சொத்து அவருடைய சந்ததியினருக்கு சென்றடைவதுபோல் அவர் செய்த கர்ம வினைகளும் அவருடைய சந்ததியினருக்கு சென்று சேரும். அதுதான் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் தோஷமாகிறது.
அத்தகைய தோஷங்களில் மிகவும் கடுமையான தோஷமாக அமைவது பித்ரு தோஷமாகும்.
பித்ரு தோஷம்
முற்பிறவியில் நாமும், நமது மூதாதையரும் செய்யும் பாவங்களின் காரணமாகவும், நாமும் நமது மூதாதையரும் பெற்ற சாபங்களின் காரணமாகவும் அவர்களின் மூதாதையர் செய்த பாவ செயல்களின் காரணமாகவும கர்மவினையாக இந்த பித்ரு தோஷம் உண்டாகிறது. இந்த தோஷம் உடையவர்களின் வாழ்க்கை என்பது சோதனையும் வேதனையு மாகவுமே இருக்கும்.
ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது என்றுதானே கேட்கிறீர்கள்? இதற்காக நீங்கள் ஜோதிடரிடம்தான் போக வேண்டும் என்பதில்லை. உங்களுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதை நீங்களே பார்க்கலாம்.
உங்கள் ஜாதகத்தில் உங்களுடைய லக்னம் எதுவோ அந்த வீட்டில் ல/ என்று போட்டிருக்கும். யார் எந்த லக்னமாக இருந்தாலும் ல/ என்று குறிப்பிட்டுள்ள வீட்டையே ஒவ்வொருவரும் தங்களுடைய முதலாவது வீடாக, ஜென்ம லக்னமாக எடுத்துக்கொள்ளவேண்டும். லக்ன வீட்டை முதல் வீடாக வைத்து அடுத்தடுத்த வீடுகளை எண்ணி வரும்போது கடைசி வீடாக பனிரெண்டாவது வீடு வரும். இதில் லக்னம் என்ற ஒன்றாவது வீட்டில் ராகு இருந்தால் ஏழாவது வீட்டில் கேது இருப்பார். ஒன்றா வது வீட்டில் கேது இருந்தால் ஏழாவது வீட்டில் ராகு இருப்பார். இப்படி கிரகங்கள் அமைந்துள்ள ஜாதகம் என்றால் அந்த ஜாதகம் பித்ரு தோஷமுள்ள ஜாதகமாகும்.
இதேபோல் மூன்று மற்றும் ஒன்பதாவது வீடுகளில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தாலும், ஐந்து மற்றும் பதினொன்றாம் வீடுகளில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தாலும் இந்த வகையான ஜாதகங்கள் எல்லாமும் பித்ரு தோஷம் உடைய ஜாதகங்களாகும்.
அடுத்து, உங்கள் ராசி கட்டத்தில் சூரியன் அமர்ந்துள்ள வீட்டில் சூரியனுடன் ராகுவோ கேதுவோ இணைந்திருந்தாலும் அது பித்ரு தோஷம் உடைய ஜாதகமாகும். அதேபோல் உங்கள் ராசி கட்டத்தில் சந்திரன் அமர்ந்துள்ள வீட்டில் சந்திரனுடன் ராகுவோ கேதுவோ இணைந்திருந்தாலும் அதுவும் பித்ரு தோஷம் உடைய ஜாதகம்தான்.
இவற்றுடன், ராகு தனித்து பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிலோ அல்லது பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிலோ இருந்தாலும் அந்த ஜாதகமும் பித்ரு தோஷமுடைய ஜாதகம்தான்.
ஐந்தாம் பாவத்திற்குரிய அதிபதி நீசம் அடைந்தோ அல்லது பாவியுடன் இணைந்தோ, பாவியின் வீட்டில் இருந்தாலும் அந்த ஜாதக மும் பித்ரு தோஷமுடைய ஜாதகம்தான்.
பித்ரு தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு
பித்ரு தோஷமுடைய ஜாதகருக்கு திருமணத்தில் தடை உண்டாகும். திருமணம் நடந்தாலும் அது விவாகரத்துவரை செல்லும். தம்பதியர் இடையே ஒற்றுமை இருக்காது. குடும்ப வாழ்க்கை எப்போதும் பிரச்சினையாகவே இருக்கும். ஒருசிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், ரகசிய உறவு, கலப்புத் திருமணம், பெற்றோர்களுக்கு தெரியாமல் ரகசிய வாழ்க்கை என்ற நிலை உண்டாகும். ஜாதகருக்கு கிடைக்கவேண்டிய நன்மைகள், முன்னேற்றம், வெற்றி, இறையருள் என்று எல்லாவற்றையும் இந்த தோஷமானது தடுத்துவிடும். இந்த தோஷமுடையவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் திருமணம் தள்ளிக்கொண்டே போகும். குழந்தை பேறில் தாமதம் உண்டாகும். கர்ப்பமடைந்த நிலையில் கருச்சிதைவு உண்டாகலாம், உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ சங்கடத்திற்கு ஆட்படலாம். எதிர்பாராத துர் மரணங்கள் ஏற்படலாம். கிடைக்கவேண்டிய ஒன்று கடைசி நிமிடத்தில் கிடைக்காமல் போகலாம்.
பித்ரு தோஷம் உண்டாக காரணம்?
கடந்த பிறவியில் நீங்கள் செய்த பாவங்கள் மட்டுமல்ல உங்கள் தாய்- தந்தையர் செய்த பாவங்களும், அவர்களின் தாய்- தந்தையர் செய்த பாவங்களும் வம்சாவழியாக வருவதாக கூறப்படும் இந்த தோஷம், உங்கள் பித்ருக்களுடைய ஆன்மா சாந்தி அடையாமல் போனதாலும், முற்பிறவியில் உங்கள் முன்னோர் களோ அல்லது நீங்களோ கருச்சிதைவு செய்கின்ற செயலில் உடன்பட்டிருந்தாலும், உடன்பிறந்த சகோதர- சகோதரிகளுக்கு துரோகம் இழைத்திருந்தாலும், கொடூரச் செயல்கள் செய்திருந்தாலும், ஒருவரை ஏமாற்றி யிருந்தாலும், அடுத்தரை வதைத்திருந்தாலும், கொலை செய்ததில் தாமாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டிருந்தாலும், தமக்கு சொந்தமில்லாத எந்தவொன்றையும் தன் வசப்படுத்திக்கொண்டதாலும், கட்டாயப்படுத்தி அவற்றை அடைந்ததாலும், கொள்ளையடித்ததாலும், அடுத்தவரை ஏமாற்றியதாலும், உண்மைக்கு புறம்பானவற்றை புரளியாக பேசியதாலும், ஒற்றுமையாக இருந்த ஒரு குடும்பத்திற்குள் நுழைந்து அந்தக் குடும்பத்தை பிரித்து சீர்குலைத்ததாலும், உடல்ரீதியாகவோ மனரீதியாக ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லைகள் செய்து அப்பெண்ணை சீரழித்து ஏமாற்றியதாலோ, பெற்ற தாய்- தந்தையரைப் பாதுகாக்காமல் போனதாலோ, அவர்களுக்கு செய்யவேண்டிய காரியங்களை செய்யாமல் போனதாலோ பித்ரு தோஷம் உண்டாகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
பரிகாரம்
பித்ரு தோஷத்திற்கு என்னதான் பரிகாரம்? எப்படி அந்த தோஷத்தின் பாதிப்பிலிருந்து வெளிவருவது? அதற்காக என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.
பித்ரு தோஷத்திற்கு முதன்மையான பரிகாரம் என்று பார்க்கின்றபோது, புண்ணிய ஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று, ஆலயத்திற்கு எதிரில் உள்ள அக்னி தீர்த்தத்தில் மூழ்கி நீராடியபின் ஆலயத்திலுள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி விட்டு, அங்குள்ள பண்டிதர்களை வைத்து தில ஹோமம் செய்து, அந்த ஹோமத்தில் உருவாக்கப்பட்ட பிண்டங்களை தனுஷ்கோடிக்கு எடுத்துச் சென்று கரைத்துவிட்டு வந்து, இராமநாத ஸ்வாமியையும் அம்பாளையும் அர்ச்சித்து விட்டு வந்தால் பித்ரு தோஷம் அகலும் என்றும் அதன்பிறகு நீங்கள் அடைந்து வந்த சங்கடங்கள் விலகுவதுடன் உங்கள் வாழ்க்கையில் தடைபட்டிருந்த நன்மைகள் நடைபெறுவதுடன் உங்கள் குடும்பத்தில் நிலவிவந்த சங்கடங்களும் குறைய ஆரம்பிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ராக- கேதுக்கள் என்னும் பாப கிரகங் களே பித்ரு தோஷத்திற்குக் காரணமாக உள்ளதால் காளகஸ்திக்கு சென்று ராகு- கேதுக் களுக்கு பரிகார பூஜை செய்வதாலும் அல்லது திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்வதா லும் தோஷம் நிவர்த்தியாகும் என்றும் கூறப் படுகிறது.
இருப்பினும், பித்ரு தோஷ பரிகாரத்திற்கு இராமேஸ்வரமே முதன்மையானதும் சிறப்பு மிக்கதாகவும் கூறப்படுகிறது.
செல்: 94443 93717