சுழலும் இந்த பூமியைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் வட்ட மிட்டுக்கொண்டே இருக்க, மனிதர்களும் தங்கள் வாழ்க்கைக்காக ஒரு திசையை நோக்கி ஓடுகின்றனர். சிலருக்கு 20 வயதுடன் வாழ்நாள் முடிவடைந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு 120 ஆண்டுகள் வாழ்ந்து பேரன், பேத்திகளோடு பிறந்த நாள் கொண்டாடும் யோகம் கிடைக்கிறது.
ஜனனம் தொடங்கி ஆயுட்காலம்வரை பல தோஷ கர்மங்களில் சிக்கித் தவிக்கிறோம். அவற்றிலிருந்து விடுபட நமக்குரிய வயது கடக்கும்போது சாந்திப் பரிகார கர்மங்களைச் செய்துகொள்ளவேண்டும்.
பரிகார சாந்தி வகைகள் ஒரு மனித ஆன்மாவுக்கு சாஸ்திரப்படி ஆறு சாந்திகள், மூன்று அபிஷேகங்கள், மூன்று மாங்கல்ய தாரணங்கள் நடக்கவேண்டும்.
ஒரு வயதில் அப்த பூர்த்தி என்னும் ஆயுஷ்ய ஹோமம்.
இருபது வயதில் வீர பராக்ரம சாந்தி.
ஐம்பத்து ஒன்பது வயதில் உக்ரரத சாந்தி.
அறுபது வயதில் சஷ்டியப்த பூர்த்தி என்னும் 60-ஆம் கல்யாணம்.
77 வயது, 7 மாதங்கள், 7 நாட்கள் நிறைவடையும்போது விஜயரத சாந்தி.
80 வயதில் சதாபிஷேகம். 100 வயதில் கனகாபிஷேகம். 100 வயதுக்குமேல் ஆகிவிட்டால் பூர்ணாபிஷேகம்.
கணவன்- மனைவியர் ஏற்றுக்கொள்கிற மாங்கல்ய தாரணங்கள் மூன்று உள்ளன.
திருமணம் என்னும் விவாக முகூர்த்த காலம், சஷ்டியப்த பூர்த்தியில் ஒரு திருமாங்கல்ய தாரணம், சதாபிஷேக காலமான 80 வயதில் ஒரு திருமாங்கல்ய தாரணம்.
சாந்திப் பரிகாரத் தத்துவங்கள்
பால பருவத்தில் ஒரு வருடம் நிறைவடையும்போது அப்த பூர்த்தி சாந்தி என்பார்கள். பிரம்மதேவனின் அருளாசியால் தொடங்குகிற வாழ்க்கையில் நல்ல பண்புகள் உள்ளத்தில் உருவாகி, கல்வி, மனோபலம் உருவாகட்டும் என்று வேண்டப்படுகிற நிகழ்வு.
இடையில் பெண்களுக்கான யெனவன பர்வம் என்ற கன்னிப் பருவத்தில் ருது மங்கள சாந்தி செய்வது. அன்பகலாத கணவனையடைந்து அவனிடம் நல்ல புத்திரனை வேண்டி செய்வது ஒருவகை சாந்திப் பரிகார விதி. "விஷ்ணுர் யோநிம் கல்பயது' என்ற கர்ப்பாதான மந்திரம் கூறி. கணவன்- மனைவி யின் அடிவயிற்றில் கர்ப்பப்பை உள்ள இடத்தில் கைவைத்து நல்ல
சுழலும் இந்த பூமியைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் வட்ட மிட்டுக்கொண்டே இருக்க, மனிதர்களும் தங்கள் வாழ்க்கைக்காக ஒரு திசையை நோக்கி ஓடுகின்றனர். சிலருக்கு 20 வயதுடன் வாழ்நாள் முடிவடைந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு 120 ஆண்டுகள் வாழ்ந்து பேரன், பேத்திகளோடு பிறந்த நாள் கொண்டாடும் யோகம் கிடைக்கிறது.
ஜனனம் தொடங்கி ஆயுட்காலம்வரை பல தோஷ கர்மங்களில் சிக்கித் தவிக்கிறோம். அவற்றிலிருந்து விடுபட நமக்குரிய வயது கடக்கும்போது சாந்திப் பரிகார கர்மங்களைச் செய்துகொள்ளவேண்டும்.
பரிகார சாந்தி வகைகள் ஒரு மனித ஆன்மாவுக்கு சாஸ்திரப்படி ஆறு சாந்திகள், மூன்று அபிஷேகங்கள், மூன்று மாங்கல்ய தாரணங்கள் நடக்கவேண்டும்.
ஒரு வயதில் அப்த பூர்த்தி என்னும் ஆயுஷ்ய ஹோமம்.
இருபது வயதில் வீர பராக்ரம சாந்தி.
ஐம்பத்து ஒன்பது வயதில் உக்ரரத சாந்தி.
அறுபது வயதில் சஷ்டியப்த பூர்த்தி என்னும் 60-ஆம் கல்யாணம்.
77 வயது, 7 மாதங்கள், 7 நாட்கள் நிறைவடையும்போது விஜயரத சாந்தி.
80 வயதில் சதாபிஷேகம். 100 வயதில் கனகாபிஷேகம். 100 வயதுக்குமேல் ஆகிவிட்டால் பூர்ணாபிஷேகம்.
கணவன்- மனைவியர் ஏற்றுக்கொள்கிற மாங்கல்ய தாரணங்கள் மூன்று உள்ளன.
திருமணம் என்னும் விவாக முகூர்த்த காலம், சஷ்டியப்த பூர்த்தியில் ஒரு திருமாங்கல்ய தாரணம், சதாபிஷேக காலமான 80 வயதில் ஒரு திருமாங்கல்ய தாரணம்.
சாந்திப் பரிகாரத் தத்துவங்கள்
பால பருவத்தில் ஒரு வருடம் நிறைவடையும்போது அப்த பூர்த்தி சாந்தி என்பார்கள். பிரம்மதேவனின் அருளாசியால் தொடங்குகிற வாழ்க்கையில் நல்ல பண்புகள் உள்ளத்தில் உருவாகி, கல்வி, மனோபலம் உருவாகட்டும் என்று வேண்டப்படுகிற நிகழ்வு.
இடையில் பெண்களுக்கான யெனவன பர்வம் என்ற கன்னிப் பருவத்தில் ருது மங்கள சாந்தி செய்வது. அன்பகலாத கணவனையடைந்து அவனிடம் நல்ல புத்திரனை வேண்டி செய்வது ஒருவகை சாந்திப் பரிகார விதி. "விஷ்ணுர் யோநிம் கல்பயது' என்ற கர்ப்பாதான மந்திரம் கூறி. கணவன்- மனைவி யின் அடிவயிற்றில் கர்ப்பப்பை உள்ள இடத்தில் கைவைத்து நல்ல பெயர், புகழடைய சத்புரன் உண்டாக வேண்டுமென்று பிரார்த்திப்பது.
அடுத்தபடியாக வருவது விருத்த பர்வம்.
காலச்சக்கரத்திற்கு அறுபது கால்கள் இருக்கின்றன. அவையே அறுபது ஆண்டு களாகக் கணக்கிடப்படுகின்றன. அறுபதாம் வருடம் மிகுந்த உடல் சங்கடங்களைக் கொண்டு தொடங்குவதால் 59-ஆம் வயதிலேயே உக்கிர ரத சாந்தி செய்வது ஆகம சாத்திர விதியாக உள்ளது.
காலனையும், காமனையும் அழித்த சிவபெருமானை அமிர்த மிருத்யுஞ்சய ஈஸ்வரனாக நினைத்து ஜெபம், ஹோமம் செய்து கலசாபிஷேகமும், மாங்கல்ய தாரணமும் செய்வர். ஜோதிட சாஸ்திர கிரந்தங்கள், இதற்கான சாந்தி மந்திரங்கள் மறுபிறவியைத் தருமென்று சொல்கின்றன.
இதுவரை செய்த மூன்று சாந்திகளுக்கு அடுத்தபடியாக அமைவது தெய்வதன்மை வாய்ந்தவர்களுக்குச் செய்யப்படுவதென்று வழக்கத்தில் உள்ளது.
தெய்வசக்தி நிறைந்த மனிதர்
எண்பது வயதுவரை இந்த உலகத்தில் நிகழும் இன்ப- துன்பங்களில் உழன்று வாழ்ந்து விட்டவரை தெய்வத்தன்மை மிக்கவர் என்று போற்றிப் பாடுவதே சதாபிஷேக வைபவம்.
வயதுக்கு ஏற்றாற்போல மனிதனது நடத்தை கள் இருந்து தெய்வத்தன்மையை அடைவதே மானுடப் பிறப்பின் இலக்கணம்.
வயதுக்கிரமப்படி ஓரெட்டில் நல்ல பண்பு களையும், ஈரெட்டில் முறையான கல்வியில் தேர்ச்சிபெற்று தொழிலில் உயர்ந்திட பழகவும், மூவெட்டில் நல்ல அன்பான மனைவியைப் பெற்று இன்பமடைந்து, நான்கெட்டில் நல்ல பண்பான ஒழுக்கமுடைய மக்களைப் பெற்று, ஐந்தெட்டில் சிறந்த செல்வ மாகிய மஹதைஸ்வர்யத்தை அடைந்து.
ஆறெட்டாம் வயதில் உலகத்தைச் சுற்றிவந்து பல அனுபவங்களைப்பெற்று, ஏழெட்டில் (56 வயது) மிகுந்த புகழை யடைந்து, எட்டெட்டில் எல்லாராலும் புகழப்படுகிற மனிதராக வாழ்ந்திடல் வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது.
அப்படி வாழ்வாங்கு வாழ்பவரையே தெய்வத்தன்மை மிக்கவராக இந்த உலகம் போற்றுகிறது. முறையாக தர்மத்தின்படி வாழ்ந்து 60 வயதை எட்டுபவர்களுக்கே எண்பதாவது வயதில் சதாபிஷேகம் செய்வது உகந்தது என்று இதற்கான பிரயோக சாஸ்திரம் விவரித்துக் கூறுவதை கவனிக்க.
சந்திர தரிசனக்காட்சி
அறுபதாமாண்டு நிறைவுக்குப்பிறகு குடும்பம் மற்றும் உலகத்தின் பந்த பாசங்களிலிருந்து விலகி, உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு தெய்வ சிந்தனையை அதிகரித்துக்கொண்டு எழுபதாவது வயதில் பீமரத சாந்தியைச் செய்துகொள்வதுமுறை. இதனால் ஆயிரம் பிறைகண்ட மாமனிதர்- "சகஸ்ர சந்திர தர்ஸி' என்று தன் மக்களால் புகழ்ந்து பேசப்படுகிறார். அமாவாசை கழித்த மூன்றாம்பிறைச் சந்திரனைக் காண்பதையே கணக்கிடவேண்டும். விதிப்படி பௌர்ணமியைக் கணக்கிடக்கூடாது என்கிறது சாஸ்திரம். இதன் உட்பொருள், மூன்றாம் பிறைச் சந்திரன்தான் பரமேஸ் வரனின் சிரசை அலங்கரிக்கிறது. ஆயிரம் பிறைகாண்பது என்ற விதிமுறைக்கு சாஸ்திரக் கணக்கு ஒன்றை முற்காலத்திலிருந்தே வைத்திருக்கிறார்கள்.
ஆயிரம் பிறை கணக்கு
விகனஸ ஆச்சார்யாரின் வைகானஸ கிருஹ்ய கணக்கின்படி 80 ஆண்டுகளும், 8 மாதங்களும் நிறைவைக் கண்டவர்தான் சகஸ்ர சந்திர தரிசனம் செய்வதராகக் கருதப் படுவார். காலவிதானம் என்ற ஜோதிட நூலில் சதாபிஷேக காலம் சிறப்பாகக் கணக்கிட்டு சொல்லப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 ஆண்டுகளுக்கு 80ல 12= 960 பௌர்ணமிகள் வரும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் இரண்டு அதிமாதங்கள் ஏற்படும். 80 வருடங்களில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ல2= 32 பௌர்ணமிகள் அதிகமாக வருகின்றன. இதனால் 80 வருடங்கள், எட்டு மாதங்கள் = 80ல12+(16ல2)+8=960+32ல8=1000 பௌர்ணமிகள் குறிப்பிடும்படி, 1000 சந்திர தரிசனங்கள் கணக்கின்படி, 80 வயது 8 மாதங் களில் ஆயிரம் பௌர்ணமி சந்திரனைக் கண்டு 100 வயது வாழ்ந்ததுபோல ஆகின்றன.
எண்பத்தொரு வயதில் விஞ்ஞானக் கணக்கீடு
இரண்டு பௌர்ணமிகளுக்கு இடை யிலுள்ள காலம் 29.536 நாட்கள். ஆயிரம் பௌர்ணமிக்கு 29,536 நாட்கள். ஒரு வருடத்திற்கு 365.256 நாட்கள்.
80 ஆண்டிற்கு 80ல356.256 =29,220.48 தினங்கள். ஆயிரம் பௌர்ணமிகளுக்கு 80 வருடத்தைவிட அதிகப்படியான நாட்கள் வருகின்றன. ஆகவே 29.536-29220.48 310.12 நாட்கள். இம்முறை கணக்கீட்டில் 1000 பௌர்ணமிக்கான 86 வருடங்களும் 310 நாட்களும்- அதாவது 80 வருடம் 10 மாதமும் ஆகிறது. 81 -ஆம் வயதில் அல்லது அதற்குப் பிறகு சதாபிஷேகம் செய்துகொள்ளலாம். இதற்கு முன்னதாகச் செய்தல்கூடாது. இவ்வாறு செய்துவிட்டால் அவர் சகஸ்ர சந்திர தர்ஸி என்னும் ஆயிரம் பிறை கண்டவராக மாட்டார்.
இந்தக் கணக்கீட்டை ஏற்றுக்கொள்ளாத வர்கள் பழைய பஞ்சாங்களைப் புரட்டிப் பார்த்து, தான் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக எண்ணி ஆயிரம் பிறைகளைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
உலகைச் சுற்றிவருகிற சந்திரனின் அழகை ரசிக்கும் அனைவருமே ஆயிரம் பிறை கண்டவர் என்ற தகுதியுடையவரே!
சதாபிஷேகம் செய்வதன் மகிமை
ஒருசமயம் துவாரகாபுரியில் ருக்மணி தேவி, "தங்களை எல்லாரும் மதிப்போடு வணங்கு கிறார்கள். தாங்கள் யாரை வணங்குவீர்கள்?' என்று கிருஷ்ணரைப் பார்த்துக் கேட்டாள்.
"தினந்தோறும் ஆறு நபர்களை வணங்குவேன்' என்று பதில் சொன்னார்.
அவர்களே-
நித்யான்னதாதா: தினமும் காயத்ரீ ஜெபம், தெய்வபூஜை, நித்யகர்மங்களைச் செய்து அன்னமிடுபவன்.
தருண அக்னிஹோத்ரி: உரிய வயதில் திருமணம் செய்துகொண்டு அக்னிஹோத் திரம் போன்ற இல்ல கர்மங்களைச் செய்து வருபவன்.
வேதாந்த வித்து: வேத சாத்திரங்களைக் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவன்.
சந்திர சகஸ்ர தர்ஸி: ஆயிரம் பூர்ண சந்திரனைப் பார்த்தவன்.
மாசோ உபவாசி: ஒரு மாதத்தின் நியமங் களின்படி விரதம் இருப்பவன். ஞாயிறு, அமாவாசை, பௌர்ணமிகளின் இரவிலும் இரண்டு பட்சங்களிலும் ஏதாதசி, சதுர்த்தசி அஷ்டமி விரதம் காப்பவன்.
பதிவ்தா: தனது சிரமங்களையும் பாராமல் கணவனுக்குப் பணிவிடை செய்யும் உத்தமப் பெண்மணி. இவர்கள் யாவரும் ஆயிரம் பிறை கண்டவர் என்று சமமாகப் போற்றப்படுகிறார்கள்.
சதாபிஷேகம் எப்படிச் செய்யவேண்டும்?
இன்றைய காலகட்டத்தில் சதாபிஷேக வைபவத்தை சாஸ்திர விதிகளை மீறி செய்து கொள்ளும் கர்த்தாவைத் தூக்கிக்கொண்டு ஆடுகின்றனர். அந்த வைபவத்தில் சாஸ்திர முறைப்படி நடக்கும் வேள்வி பூஜைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். முதல் நாள் ரட்சாபந்தனம் என்ற காப்புக் கட்டுதல் தம்பதிகளுக்குச் செய்து, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, விசேட சங்கல்ப புண்யாக வாசனம் என்ற வருண பூஜை, பூர்வாங்க பூஜைகளைச் செய்யவேண்டும்.
சதாபிஷேகத்திற்குப் பிரதான தேவதை பிரம்மதேவன். உபதேவதைகளாக பிரஜாபதி, பரமேஸ்வரன், சதுர்முகர், இரண்யகர்ப்பர். இவர்கள் தவிர அஷ்டதிக் பாலகர்களையும் சேர்த்து 13 கலசங்கள் வைக்கவேண்டும்.
ஐந்து வகை சுக்தங்களைப் பாராயணம் செய்து, தூபதீப நிவேதனம் செய்த வுடன் பூரண ஆகுதி நிறைவானதும், செய்துகொள்பவர் களுக்கு சல்லடையை தலைமேல் பிடித்தபடி சகஸ்ர தாரை அபிஷேகம் செய்வது முக்கியம்.
இந்த நேரத்தில் உறவினர்கள் கையில் கலசங் களைக் கொடுத்து புனித நீர் ஊற்றச் செய்வ தைத் தவிர்த்து, இந்த வைபவத்தை நடத்தி வைக்க வந்திருக்கும் ஆச்சார்யர்களையே செய்யச் சொல்லவேண்டியது அவசியம்.
சகஸ்ர தாராபிஷேகச் சிறப்பு
சதாபிஷேக கர்மாவில் சகஸ்ரதாரா அபிஷேகமே முக்கிய நிகழ்வாகச் சொல்லப் படுகிறது. வெள்ளியன்று தாமிர தாம்பாளத் தில் ஆயிரம் வட்டத்துளைகள் போடப்பட்ட தட்டை சகஸ்ர தாரை என்று சொல்வர். மனைவியுடன் மூன்று வஸ்திரங்களைக் கட்டிக்கொண்டு இதைச் செய்துகொள்வது முறை.
தானங்கள் ஏன் செய்யவேண்டும்?
சதாபிஷேகம் செய்துமுடிந்ததும் மீண்டும் பஞ்சகச்சம், அங்கவஸ்திரம், திருதியா வஸ்திரம என்ற மூன்று துணிகளைக் கட்டிக் கொண்டு, மனைவி நீர்விட தாம்பூலத்தில் காசுகள் சில வைத்து, பதினாறுவகை தானங் களை- கோதானம், வஸ்திரம், கைமணி, தட்டு, எண்ணெய் உட்பட செய்தல் முறை.
தொடர்ந்து மாங்கல்ய தாரணம் நடத்த வேண்டும். தானங்கள் செய்வதால் அறியாமல் செய்த பாவங்கள், தோஷகர்மாக்கள் அகன்று ஆன்மா சுத்தியடைகிறது.
மாலை நேரத்தில் ஆயிரம் சந்திரபிம்பம் வரைந்து, கலச கும்பத்தில் சந்திரனை ஆவாக னம் செய்து, அவரது சகஸ்ர நாமாவளி சொல்லி மலர்களால் அர்ச்சனைசெய்து, சகஸ்ர சந்திர தரிசன பூஜையைக் கண்டு வணங்குதல்வேண்டும். தொடர்ந்து தெய்வத் தன்மைபெற்ற தம்பதியரான இவர்கள் வந்திருக்கும் உறவினருக்கு ஆசிவழங்கலாம்; சுபம்!
செல்: 95511 84326