புத்திர ஸ்தானாதிபதி, புத்திர காரகன் தேவகுரு, குடும்பாதிபதி ஆகிய மூன்று காரணிகளால் புத்திர பாவத்தை அறிய முற்படவேண்டும். இவற்றுக்கு 5-ல் சுப கிரகங்கள் இருந்தால் சுகத்தைக் கொடுப்பார்கள். கிரக பாகத்தில் ஆண்-
பெண் ராசிகளில் ஒன்று பாதிக்கப்பட்டி ருந்தால், புத்திர ஸ்தானாதிபதி ஆண் கிரகமா அல்லது பெண் கிரகமா- அவர் கள் இடம்பெற்ற ராசி ஆண் ராசியா அல்லது பெண் ராசியா என கண்டறிந்து புத்திர சந்தானத்தைத் தீர்மானிக்க வேண்டும்.
தந்திரம், புத்தி குரூரம், காவியமறிதல், கௌரவத்துடன் இருத்தல், சேனாதி பதி ஆகுதல், முடவனுக்கு சமமானவர் களாக இருத்தல், நிதானம் போன்றவற்றை 5-ஆம் பாவத்தாலும், சூரியன் முதலானவர்களாலும் அறிந்து பலன் கூறவேண்டும்.
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் பாவம் சுப கிரகங்கள், சுபர் பார்வைபெற்றாலும், சுபரின் இணைவுபெற்றாலும், காரகனின் பார்வைபெற்றாலும் ஜாதகருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும். இதுவே, 5-ல் பாவகிரகம் இருந்தாலும், பாவாதிபதி அசுபருடன் இணைந்தாலும், குரு அல்லது புத்திர ஸ்தானாதிபதி ஆகியோர் பார்க்காவிட்டாலும் ஜாதகருக்கு புத்திரன் இல்லை எனலாம்.
லக்னாதிபதியும், 5-ஆமதிபதியும் சேர்ந்தாலும், பார்த்தாலும், பரிவர்த்தனையானாலும் பெருமைப் படுமளவுக்கு நல்ல பிள்ளைகள் பிறப் பார்கள். அப்படிப் பிறப்பவர்கள் "நமனுக்கும் அஞ்சார்' எனலாம்.
"அஞ்சாமிடத்தி லமருவராற் தோஷம்
அனுகும் வகைச் சனி குழவிக் கருகன் தந்தைக்கே
துஞ்சுகா தமதிக்கன்னை புதனால் அன்னை
சுற்றமதற் கரசனால் தந்தை சுற்றமாகும்
நஞ்சாருங் கரியகோள் சுதற்குச் செவ்வாய்
தண் ணிலடிலம்மானுக்குத் தோஷமாகும்
மஞ்சாறுங்குழன் மடவாய் யரசனைத் தின்மேவ
வந்திடில் சந்தானமத்திய முதித்தறானே'
என "ஜாதக அலங்கார'த்தில் கூறப்பட்டுள் ளது. இந்தப் பாடலுக்கான பொருள்: 5-ஆமி டத்தில் இடம்பெறும் கிரகத்தால் யாருக்கு தோஷம் ஏற்படும்? சனி இருக்க குழந்தைக் கும், சூரியன் இருக்க தந்தைக்கும், சந்திரன் இருந்தால் தாய்க்கும், புதன் இருந்தால் தாய்வழி சொந்தங்களுக்கும், குரு இருந்தால் சந்தான உற்பத்தியே குறைவாகும் என அறியவும்.
லக்னத்திற்கு 5-ஆம் பாவமான சுய க்ஷேத்திரத்தில் புத்திர ஸ்தானத்தில் இரு பாவகிரகங்கள் இருந்தால் ஜாதகருக்கு அனேக குழந்தைகள் பிறக்கும். மேற்கூறிய கிரகங்கள் பலமற்றவர்களாக இருப்பின் புத்திர நாசமா கும்.
லக்னத்திற்கு 8-ஆம் பாவாதிபதி தவிர மற்ற சுபகிரகங்கள் 5-ஆம் பாவத்தில் இருந் தால், சுபப் பலன்கள் உண்டாகும். சுப கிரக மாய் இருந்தாலும் 8-ஆம் பாவாதிபதி 5-ஆம் பாவத்தில் இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும்.
ஜென்ம லக்னம் துலாமாகி, 5-ஆமிடம் கும்ப ராசியில் சூரியன் இருந்தால், ஜாதகர் புத்திர பாக்கியம் இல்லாதவராவார். புத்திர பாவத்தில் சூரியன் இருந்தால் ஒரு புத்திரனும், செவ்வாய் இருந்தால் இரண்டு புத்திரர்களும், குரு இருந்தால் நற்குணமுள்ள ஒரு புதல்வ னும், சுப கிரகங்கள் பார்வையில் குரு பல மானால் நான்கு புதல்வர்களும் பிறப்பர்.
1, 2, 5-ஆமதிபதிகள், 6, 8, 12-ஆமிடங்களில் இருந்து, அதற்கு இருபுறங்களிலும் சத்ரு கிரகங் கள் இருந்து, புத்திர பாவாதிபதி குருவுக்கு விரய பாவத்துக்கு சத்ரு ஸ்தானத்தில் ஏற, பகை வீட்டிலோ, நீசமடைந்தோ இருந்தால் புத்திர சந்தானம் உண்டாகாது என்று பலன் உரைக்கவேண்டும்.
புத்திர ஸ்தானத்தில் சனி இருந்தால் பெற்ற பிள்ளைகள் நிலைக்காது என்றும், புத்திர ஸ்தானாதிபதி சனியுடன் கூடி பாத சாரத்திற்கு முந்தியிருந்தால் தத்துப் புத்திரன் உண்டு என்றும் சொல்லவேண்டும்.
குஜன் (செவ்வாய்) லக்ன குருவுக்கு 5-ல் இருந்தால், குரு மகாதசை, செவ்வாய் புக்தியில் புத்திரசோகம் உண்டாகும். அற்ப புத்திர யோகம்.
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் பாவமானது சனி, புதன் இவர்களின் வீடாகி அங்கு சனி மட்டும் இருந்தாலும், சனி, மாந்தி இவர் களால் மேற்படி புத்திரர்கள் நாசமடைவர். புத்திர பாவத்திலிருந்து பார்க்கப்பட்டாலும், ஜாதகருக்கு தத்து புத்திர பாக்கியம் உண்டா கும் என்பதை அறியவேண்டும்.
விருச்சிக லக்னமாகி 5-ஆமிடமான மீனத் தில் சனி, மாந்தி இருந்தால் ஜாதகருக்கு அற்ப சந்தானம் உண்டாகும். குரு கும்ப ராசியிலிருந்தால் ஜாதகர் சந்தான விருத்தி இல்லாதவர். லக்னத்திற்கு 5-ஆம் பாவாதிபதி 7-ல் இருந்தாலும், மாறியிருந்தாலும் (7-ஆமதிபதி 5-ல்), இந்த பாவங்களில் இவர்களுடன் பாவிகள் இருந்தாலும், பார்த்தாலும் ஜாதகர் புத்திர சந்தானம் இல்லாதவராகவே இருப்பார்.
செவ்வாய், சூரியன், சனி இவர்கள் ஜென்ம லக்னத்தின் முடிவில் அல்லது 7-ல் இருந்தா லும், பலமற்ற சந்திரன், சூரியன் 5-ல் இருந்தாலும் ஜாதகருக்கு புத்திரர்கள் அற்பமாகும்.
புத்திர பாவத்தில் ராகு அல்லது புத்திர ஸ்தானாதிபதியுடன் சேர்ந்து சுபகிரகப் பார்வை உண்டானாலும் புத்திர நாசம் உண்டாகும். 5-க்குடையோன் 3-ல் இருந்தால் புத்திரர்கள் அற்பமாகும். சந்திரனிலிருந்து லக்னத்துக்கு மத்தியிலிருக்கும் ஐந்து இடங்களையும் பாவ கிரகங்கள் பார்த்தால் புத்திரர் அற்பமாகும். சனி முதலிய பாவிகள் பார்த்தால் இல்லை. 5-ல் ராகு- கேது இருந்தால் குழந்தைகள் பிறந்து மரிப்பார்கள்.
பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள புத்திர பாவத்துக் கான இணைவுகள் வாசகர்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும் என நம்புகிறேன்.
செல்: 97891 01742