பத்திரை
இக்கரணம் விஷ்டி தோஷம் என்று அழைக்கப் படும். இவர்களுக்கு கோபம் அதிகமாக வரும்.
வளர்பிறையில் பிறந்தவர்கள் சிறப்பு ஆய்வாளராக பதவியில் இருந்து கொண்டு குற்றங்களைச் சரி செய்கிறார்கள்.
தேய்பிறையில் பிறந்தவர்கள் பிறரின் குற்றங் களை தேடிப்பிடித்து குற்றம்சாட்டி சண்டை இடுகின் றனர். குற்றங்களை சரி செய்வதில்லை.
அதிதேவதை- திருச்செந்தூர் முருகன்
மிருகம்- கோழி
கிரகம்- கேது
மலர்- குன்றிமணிப்பூ
ஆகாரம்- சித்தர அன்னம்
பூசுவது- கற்பூரம்
ஆபரணம்- புஷ்பராகம்
தூபம்- நல்லதண்ணீர்
வஸ்திரம்- தோல்
பாத்திரம்- வெண்கலம்
அதிபதி- எமன்
வழிபாடு- பைரவர்.
இந்தக் கரணத்தில் பிறந்தவர்களுக்கு வேலை தேடிக்கொண்டே இருக்கும் நிலை ஏற்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேவை இருந்து கொண்டே இருக்கும். வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். சோர்வில்லாமல் வேலை செய்பவர்கள் இவர்கள். விஷத்தை முறிக்கும் சக்தி இவர்களுக்கு உண்டு. இக்கரணத்தில் பிறந்த பலர் விஷ கடிகளுக்கு மந்திரிக்கிறார்கள். புதையல் யோகம் உண்டு. குழந்தை பிறப்பதற்கு உரிய மருத்துவத்திற்கு சிறப்பான கரணமாகும்.
முகூர்த்தம் பார்த்து குழந்தை எடுப்பதற்கு இக்கரணம் ஏற்றதில்லை. இக்கரணம் பிரசன்னம் பார்ப்பதற்கு சிறப்பானதல்ல. வாழ்வில் இவர்களுக்கு ஏற்பட்ட தீமைகளை நினைவில் வைத்துக்கொண்டே இருப்பார்கள். தீமைகளை எளிதில் மறக்கமாட்டார்கள். இவர்களுக்கு கால்வலியும் கண்நோயும் ஏற்படும். இக்கரணம் மாந்திக்கு அடுத்த ஒரு பெரிய துக்கத்தை தரக்கூடியது. ஒருவரை அழித்து மற்றவர் வெற்றிபெற பத்திரை கரணம் பயன்படுகிறது.
விவசாயிகளாக இருந்தால் இவர்கள் தோட்டத்தில், நிலத்தில் ஒரு கிருமி வந்தாலும் உடனே கிருமி நாசினி மூலம் அழித்துவிடுவார்கள். இந்த கரணத்தில் பிறந்தவர்கள் எதையும் தேடி ஆராய்ந்து பார்ப்பதில் மிகவும் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். ஆராய்ச்சி செய்வது இவர்களின் குணமாகும். திருமணத்திற்குப் பிறகு பொருளாதார நஷ்டத்தைத் தருகிறது. பெரும் செல்வம் அழிகிறது. இவர்களுக்கு திடீர் திடீரென பொருள் இழப்பு ஏற்படும். இவர்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் சிறப்பாக வாழ்கிறார்கள்.
பலருக்கு நிலபுலன்களை இழக்கும் நிலை ஏற்படும். இவர்கள் விவசாயம் செய்தால் விவசாயத்தினால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. விவசாயத்துக்கு பொருந்தாத கரணமாக இருக்கிறது. நன்றாக விளையும் நிலத்தில்கூட இவர்கள் விவசாயம் செய்தால் லாபம் எடுக்க முடியாது. இவர்கள் வசதியான வாழ்க்கைக்காக பொருளாதாரத்திற்காக பல காலம் குடும்பத்தை பிரிய நேரிடுகிறது. தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் குடும்பத்தை சிறப் பாக பராமரிப்பார்கள். இவர்கள் மிகுந்த சிக்கனமாகவும் மிகுந்த கருமியாகவும் சஞ்சல மனம் படைத்தவராகவும் இருக்கிறார்கள். தேய்பிறையில் பிறந்தவர்கள் மட்டும் தீய செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள். இவர் கள் சற்று மந்தமான குணத்துடன் இருக்கின்றனர்.
இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் எக்காரணத் தையும் சற்று தாமதமாகவே செய்து முடிப்பார்கள்.
ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் அறிந்து கொள்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கி றார்கள். மனிதாபிமான குணம் அதிகமாக இருக்கும். இவர்கள் எளிதில் சோர்ந்துவிடுவதால் இவர்களை யாராவது தொடர்ந்து ஊக்கப் படுத்திக் கொண்டே இருந்தால் இவர்களும் வெற்றியாளர்கள் ஆகலாம். பத்திரை என்றாலே விஷம் என்று பொருள்.
இவர்கள் விபூதி மந்திரித்துக் கொடுத்தால் உடலில் ஏறிய விஷம் குறையும். அந்த அளவுக்கு மந்திரித்துக் கொடுக்கும் தன்மை இவர்களிடம் இருக்கும். இவர்கள் சிற்பம் செதுக்குவதிலும் சிற்பத்தை அழகுப்படுத்தி வர்ணம் பூசுவதிலும், புதுவித வர்ணம் தீட்டுவதிலும் வல்லவர்கள். இக்கரணத்தில் பிறந்தவருக்கு எளிதில் ஆண்மை மற்றும் பெண்மை குறைவு ஏற்படுகின்றது. இக்கரணத்தில் பிறந்தவர்கள் பலவிதமாக தன்னை தயார்படுத்திக்கொள்வதில் தனி கவனம் எடுத்துகொள்கிறார்கள். இவர்கள் பலவிதமான மருந்துகளை கையாளுவதில் தலை சிறந்த மருத்துவர்கள் ஆகவும் உள்ளனர். தன் குடும்பத்திற்காக, தன் நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.
இக்கரணத்தில் பிறந்தவர்கள் வழிபடும் தெய்வத்திற்கு கற்பூரம் சாத்தி, பன்னீரால் நீராட்டி, புஷ்பராக மாலை அணிவித்து, கலவை அன்னம் படையல் வைத்து, குன்றின்மணி பூக்களால் அர்ச்சனை செய்து, மரவுரி அணிவித்து வழிபட்டுவர கரண தெய்வம் மனம் குளிர்ந்து கரணநாதன் பூரண பலம் அடைகிறார். ஜாதகருக்கு நடக்கவேண்டிய சிரமமான பலவிதமான காரியங்கள்கூட சாதாரண மாக நடக்கின்றன.
திருச்செந்தூர் முருகப் பெருமானை அடிக்கடி சென்று வழிபாடு செய்துவருவது சிறப்பு. செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை அல்லது வளர்பிறை சஷ்டி திதியில் சென்று வழிபாடு செய்துவந்தால் தடைகள் எல்லாவற்றையும் விலக்கி கரண நாதன் வெற்றிகளைத் தருவார்.
கட்டுரை மற்றும் ஜோதிடம் தொடர்பாக பேச: 90802 73877