பெற்றோர் சாபமும் பிள்ளையின் சோகமும்! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/parents-curse-and-childs-sadness-siddhardasan-sunderji-jeevanadi-corruption

சுமார் 55 வயதுடைய ஒருவர், 27 வயதுடைய தன் மகள், அவளின் ஒரு வயது மகனுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.

"இவள் எனது மகள். இவள் விருப்பப்படி மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு, எங்களைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். அவனுடன் கொஞ்ச காலம் வாழ்ந்ததில் இந்தக் குழந்தையும் பிறந்தான். இவளுக்கு நாங்கள் போட்டிருந்த நகைகளையும், இவள் பெயரில் வங்கியில் நாங்கள் போட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயையும் ஏமாற்றி வாங்கிக்கொண்டு, இவளை விட்டுப் பிரிந்துவிட்டான். என் மகளும், பேரனும் இப்போது, என்னுடன் தான் வசிக்கிறார்கள்.

என் மகள், என் பேரனின் வருங்கால வாழ்க்கை பற்றியும், என் மகள் அடுத்து ஒருவனை மணம்புரிந்து, அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையவும் நாங்கள் என்ன செய்யவேண்டும்

சுமார் 55 வயதுடைய ஒருவர், 27 வயதுடைய தன் மகள், அவளின் ஒரு வயது மகனுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.

"இவள் எனது மகள். இவள் விருப்பப்படி மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு, எங்களைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். அவனுடன் கொஞ்ச காலம் வாழ்ந்ததில் இந்தக் குழந்தையும் பிறந்தான். இவளுக்கு நாங்கள் போட்டிருந்த நகைகளையும், இவள் பெயரில் வங்கியில் நாங்கள் போட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயையும் ஏமாற்றி வாங்கிக்கொண்டு, இவளை விட்டுப் பிரிந்துவிட்டான். என் மகளும், பேரனும் இப்போது, என்னுடன் தான் வசிக்கிறார்கள்.

என் மகள், என் பேரனின் வருங்கால வாழ்க்கை பற்றியும், என் மகள் அடுத்து ஒருவனை மணம்புரிந்து, அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையவும் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று அகத்தியரிடம் வழிகேட்டு வந்துள்ளோம்'' என்றார்.

ss

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

"இந்த மகள் ஒருவனை விரும்பித் திருமணம் செய்து வாழ்ந்தாலும், இவள் என்று கர்ப்பமடைந்தாளோ அன்றே கணவன்- மனைவி இருவருக்கும் பாசம் குறைந்து, கருத்து வேறுபாடு உண்டாகத் தொடங்கிவிட்டது. கணவன்- மனைவி பிரிவிற்கு, பல காரணங்களை மனிதர்கள் கூறினாலும், விதியின் சூட்சும ரகசியம் இவள் பெற்ற பிள்ளைதான் காரணம்.

இந்த குழந்தையின் முற்பிறவியில் ஒரு பெண்ணுடன் நட்பு வைத்துக்கொண்டு, அவளின் பேச்சைக்கேட்டுத் தன்னைப் பெற்ற வயது முதிர்ந்த தாய், தந்தையை கவனியாமல், அவர்கள் சம்பாதித்து வைத்த வீடு, சொத்துகளைப் பறித்துக்கொண்டு, அவர்களை வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட்டான். தாயும், தந்தையும் பசியும் பட்டினியுமாய் அலைந்து திரிந்து மரணமடைந்தார்கள்.

மரணமடையும்போது அவர்கள், "பெற்று வளர்த்து ஆளாக்கிய எங்களைத் தெருவில் அனாதைபோல் அலையவிட்ட பாவத்தால், இவன் எத்தனைப் பிறவிகள் இந்த பூமியில் பிறந்தாலும், பெற்றவர்கள் பாசமும் ஆதரவுமில்லாமல், அவர்கள் சம்பாதித்த சொத்துகளை அனுபவிக்க முடியாமல், தாய்- தந்தையைப் பிரிந்து அனாதைபோல் வாழவேண்டும்' என்று சாபமிட்டனர்.

முற்பிறவியில் பெற்றவர்களின் சாபத்தால், இவன் கருவில் உருவானவுடனே தந்தை பிரிந்தான். இவன் தன் மகளுக்கு மற்றொரு திருமணம் செய்துவைக்க எண்ணுகிறான்.

அடுத்து ஒருவனுடன் திருமணம் செய்துவைத்து, அவனையும் இந்தக் குழந்தை "அப்பா' என்று கூப்பிட்டால், அடுத்து வரும் கணவனும் பிரிந்துபோய்விடுவான். முற்பிறவி சாபப்படி, இந்தக் குழந்தை, தாய்- தந்தை ஆதரவில்லாமல், மூன்றாம் மனிதர் ஆதரவில் அனாதைபோல் வாழவேண்டும் என்பதே, இப்பிறவி விதி நிர்ணயம்.

பூஜை, யாகம், விரதம், பணத்தால் செய்யும் தான, தர்மம் போன்றவற்றால் ஒருவருக்குண்டான, பாவ- சாப, கர்மவினையைத் தீர்க்க முடியாது; தடுக்கமுடியாது. இந்தப் பெண்ணிற்கு இன்னொரு வாழ்க்கை அமைந்து, நல்லபடியாக வாழவேண்டுமென்றால், அவள் பெற்ற மகன் அவளுடன் சேர்ந்து வசிக்கக்கூடாது. தாயும் மகனும் தனித்தனியே பிரிந்துதான் வசிக்க வேண்டும்.

இந்தக் குழந்தை, தன் தாத்தா, பாட்டியுடன் வசிக்கட்டும். அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவனைத் திருமணம் செய்துவைக்கச் சொல்'' என்று கூறியவர், அடுத்து அவளுக்குக் கணவனாக வரப்போகிறவனைப் பற்றிய விவரங்களைக் கூறி விட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.

மகளின் வாழ்க்கைக்கு, வழிகேட்டு வந்தவர், "அகத்தியர் கூறியபடியே, என் பேரனை நானே வளர்க்கிறேன். அவர் கூறியபடி அமையும் ஆணிற்கு என் மகளைத் திருமணம் செய்துவைக்கின்றேன்'' என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.

(இராமனும் சீதையும் பாசத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். ஆனால் சீதை கர்ப்பமடைந்தவுடன், தன் நாட்டுக் குடிமகன் ஒருவன் கூறிய சொல்லைக்கேட்டு, சீதையை காட்டிற்கு அனுப்பிவிட்டான். சீதையும், இராமனும் பிரிவதற்கு, அவர்கள் குழந்தைகளே காரணம். லவன்- குசன் இருவரும் தந்தையைப் பிரிந்து மூன்றாம் மனிதரான, வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் தன் தாயுடன் வசித்தார்கள். லவனுக்கும், குசனுக்கும் உண்டான முற்பிறவி சாபமே இதற்குக் காரணம்.)

செல்: 99441 13267

bala060924
இதையும் படியுங்கள்
Subscribe