பொதுவாகவே சனி தசை ஒருவருக்கு வருகின்றது என்றால் அச்சமடைவது வாடிக்கையாக காணப்படுகிறது. அது போன்று ஒருவர் வாழ்வில் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின் றார் என்றால் அவருக்கு சனி தசை நடந்துகொண்டிருக்கின்றது என எண்ணுவோரும் உள்ளனர். ஜாதக அலங்கார நூல் சனி தசையில் சனி புக்தி செவ்வாய், கேது புக்திகள் அது போன்று சூரிய புக்தி ஏன் சந்திர புக்திகூட தீமைகள் தருவதாக கூறுகின்றது. இதுதான் சனியின் தசையில் மற்ற கிரகங்கள் வளங்கும் தீமையில் இருந்து விடுபட்டு நன்மையைப் பெற பராசர முனிவர் தன்னுடைய பராசர ஹோர நூலில் பரிகாரங்களை கூறியிருக்கின்றார். அதனைக் குறித்து நாம் இங்கே காண்போம்.
சனி தசையில் சனி புக்தி காலம் சனிபகவான் ஜாதகத்தில் சொந்த ராசி, உச்ச ராசி மூலத்திரிகோண ராசி அவ்வாறு கேந்திரம் திரிகோணம், 11-ஆம் வீட்டில் அமர்ந்து அவர் தசை புக்தி நடக்கின்றது என்றால் உற்சாகமான வேலை, மனைவி, குழந்தை இவர்களால் மகிழ்ச்சி. வாகனங்கள், வேலைக்காரர்கள் இவை பெருகி மன்னனுக்கு சமமான வாழ்வு, மன்னர்மூலமாக சந்தோஷம் என்பதோடு, எண்ணியவை ஈடேறுதல், நாற்காலி மற்றும் வாகன சேற்கை, கிராமங்கள், நிலபுலன்கள் சேர்கை என்பவை பலனாக அமையும்.
சனிபகவான் லக்னத்திலிருந்து ஆறு, எட்டு, பன்னிரண்டு மற்றும் நீசவீடு இவற்றில் பாவக்கிரகச் செர்கைப்பெற்று இருக்க ஆட்சியாளர்கள் கோபத்திற்கு பாத்திரமாவது, விசம், ஆயுதத்தால் துன்பம், இரக்தம் ஒழுகுதல், குன்ம வியாதி, இடைபகுதியில் திருடரால் தொல்லை, இடம்விட்டுச் செல்லுதல், மனத் துயரம் என்னும் பலன்களும், புத்தியின் கடை பகுதியில் கிராமங்களால் லாபம், நிலச்சேற்கை, நிலத்தால் லாபமும் ஏற்படும் சனிபகவான் இரண்டு ஏழாம் வீட்டின் அதிபதியாக "மாரக ஸ்தான அதிபதியாக இருக்க நோய், துயரங்கள் ஏற்படும். இதற்கு பரிகாரமாக மிர்த்யுஞ்ஜெய மந்திரம் ஜெபம் செய்வதால் தீமைகள் விலகி நன்மை ஏற்படும் எனக் கூறலாம்.
அதுபோன்று சனி தசை புதன் புக்தி காலத்தில் புதன் லக்ன கேந்திரம் திரி கோணத்தில் அமர பரிசு பெறுதல், புகழ், கல்வி, தனம் இவற்றின் லாபமும் சொந்த ஊரில் சுகமும், உற்சாகமும், ஆற்றலும், மங்கலமான அனுபவம் மற்றும், தீர்த்த யாத்திரை, புண்ணிய புனித பயணங்கள், வியாபாரத்தால் செல்வம், புராண கதைகளை கேட்பது, அன்னதானம் செய்வது இவை எல்லாம் பலனாக நிறைவேறும். மாறாக புதன் 6, 8, 12-ல் நீசம் அஸ்தங்கம் பெற்று அமர்ந்திருக்க முற்பகுதி நற்பலனும் இடைப்பகுதியும், கடைப்பகுதியும் எண்ணிய காரியம் ஈடேறாது, உறுதியற்ற நிலை, மிகப்பெரிய அச்சம் இவை பலனாக ஏற்படும். புதன் 2, 7-ஆம் இவற்றின் ஆதிபத்தியம் பெற உடலிற்கு பல துன்பங்கள் ஏற்படும். இதற்கு பரிகாரமாக விஷ்ணு சகஸ்ர நாம ஜெபம் செய்வதும், அன்னதானம் வழங்குவதும் தீமையை விலக்கி நன்மை செய்யும்.
அடுத்ததாக சனி தசையில் கேதுவின் புக்தி காலம் கேது லக்னத்திற்கு கேந்திரத் திரிகோணங்களில் ஆறு, எட்டு, பன்னிரண்டு என்னும் வீடுகளில் அமர்ந்திருக்க திறமையும் தர்மத்தை செய்வதற்கான நற்சிந்தனையும், சுகமும், ஆளும் வர்க்கத்தாரோடு தொடர்பு என்னும் பலன்கள் ஏற்படும். தசைநாதன் சனியின் 6, 8, 12 -ல் கேது அமர மரணத்திற்கு சமமான துன்பம், வறுமை, வலது காலில் நோய், பித்த வியாதி, விசத்தால் அச்சம், தீய உணவுகளை உண்ணும் சூழல், திருடர்கள்மூலம் நஷ்டமடைவது மற்றும் மனைவி குடும்பத்தை பிரிவது, நோய், துயரங்களும் ஏற்படுமாம். கேது இரண்டாம் வீடு ஏழாம் வீட்டில் அமர்ந் திருக்க பரிகாரமாக ஆடு தானம் செய்வது சிறப்பு என்பது கூறப்பட்டுள்ளது.
சனி தசையில் உச்சம் மற்றும் சொந்த ராசியில், கேந்திரம் திரிகோணம் மற்றும் பதினொன்றாம் வீட்டில் அமர்ந்த சுக்கிரனின் புக்தி காலத்தில் மனைவி, குழந்தைகள் இவர்மூலம் மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம், வீட்டில் விழாவிற்கு சமமான நிகழ்வுகள் ஐஸ்வரியம், சுகம் ஆழ்வாரின் அன்பால் எண்ணியவை ஈடேறுதல், நல்லவர்களாலும் செல்வந்தராலும் பரிசு பெறுதல், விசேசமான ஆடை, அணி சேர்கை, வெண்குதிரை, எருமை இவற்றின் சேர்கை குரு கோட்சாரப்படி சனி இஷ்ட பாவத்தில் அமர சௌக்கியமும், சனி கோட்சாரப்படி சுபஸ்தானத்தில அமர பாக்கிய யோகமும் பலனாகும்.
சனி தசையில் நீச ராசி, பகை ராசி 6, 8, 12-ஆம் வீடுகளில் அமர்ந்த சுக்கிர புக்தி காலம் மனைவிக்கு தீங்கு, இடம்விட்டு போகுதல், துக்கம், உறவினரால் மனக் கவலை, மக்கள் கூட்டத்தால் கலகம், அல்லலும் ஏற்படும் சனி தசை சுக்கிர புக்தி பரிகாரமாக துர்க்காதேவி பூஜை, வெள்ளை பசுதானம் எருமை தானம் இவை ஆயுள் ஆரோக் கியத்தை வழங்கும்.
சனி தசை சூரிய புக்திகாலம் உச்ச ராசியில் தனது சொந்த ராசியில் அமர்ந்த சூரியன், ஒன்பதாம் வீட்டானோடு திரி கோண கேந்திரங்களில் அமர்ந்த சூரியனின் புக்திகாலம் தனது தலைவனிடமிருந்து சுகமும் வீட்டில் ஐஸ்வரியமும் தனது புதல்வர்கள் முதலிய விரும்பிய நபர்கள் மூலமாக சுகம் பெறுதலும், வாகனங்கள், பசுக்கள் இவைகளின் சேர்கை மற்றும் ஆடை, அணிகள், பசுவின்பால் இவை வீட்டில் அலங்காரமாக அமையும் என கூறலாம். மாறாக தசாநாதன் ஆகிய சனிபகவானின் ஆறு, எட்டு, பன்னிரண்டில், லக்னத்திலிருந்து ஆறு, எட்டு, பன்னிரண்டில் அமர்ந்த சூரியன் புக்தியில் இதய வியாதி, அவமானம், நிலை இழத்தல், மனத்துயர், உறவினர், நண்பர்களை பிரிதல், வேலை இழப்பு, காய்ச்சல், மனத்துயரம் மிகவும் நெருங்கிய அன்பரின் மரணம் இவை பலனாக அமையும். இதற்கு பரிகாரமாக சூரிய பகவானை பூஜைசெய்வது நற்பலன் வழங்கும்.
சனி தசை சந்திர புக்தி காலம் குருவின் சேற்கை பார்வையோடு, உச்சம் சொந்த ராசி, கேந்திர திரி கோணங்களில் அமர்ந் திருக்கும் சந்திரன் எனில் அரசு கௌரவம், வாகனம், ஆடை, அணி சேர்கை, எல்லாவித சுகம், வேலைக்காரர்களால் பாதுகாக்கபடுதல், தாய்- தந்தையர் அவர்கள் உறவினர்களால் நன்மையும் ஏற்படும் எனக் கூறவேண்டும். இங்கு சந்திரன் பூரண வலுவோடு இருக்கவேண்டும் என்பது இன்றியமையாததாகும்.
தசை நாதனாகிய சனிக்கு 6, 8, 12-ல் அமர்ந்த சந்திரபுத்தி காலம் சந்திரன் வலுவற்றிருக்க நோயால் படுக்கையில் இருப்பது, இடம் மாறுதல், நண்பர், உறவினர் பிரிவு, இவை பலனாக அமையும். சந்திரன் இரண்டு ஏழாம் வீட்டின் அதிபதியாக அமைய கடுமையான விழைவுகளைத் தரும். பரிகாரமாக தில ஹோமம், வெல்லம், நெய், தயிர், அரிசி, பசு, எருமை இவற்றின் தானம் விதிப்படிச் செய்யவேண்டியதாகும்.
சனி தசையில் கேந்திரம் மற்றும் திரிகோணம் 11 இவற்றிலும் மற்றும் உச்சம் சொந்தராசி இவற்றில் இருக்கும் செவ்வாயின் புக்தி காலம் ஆட்சியாளர்கள் மூலமாக மகிழ்ச்சி, வாகனம், ஆடை, அணி சேர்கை விவசாயம், பசு, தானியம் இவற்றால் லாபம், புதிய வீடு கட்டுதல், சகோதரர்களாய் நன்மை இவை பலனாக அமையும் நீசம், அஸ்தங்கம் பெற்ற செவ்வாயின் புக்தி 6, 8, 12 இந்த வீடுகளில் பாவகிரக சேர்கை பார்வைப்பெற்ற செவ்வாய் புக்தி காலம் திருடர்கள் மூலமாக, பாம்புகள் மூலமாக வும், ஆயுதங்கள் மூலமாக வும் காயம் ஏற்படுதல், சகோதரர்கள், தந்தை வர்க்கத்தினர், புதல்வர் கள் இவர்கள்மூலமாக தொல்லைகள், நாற்கால் விளங்கின நாசம், வாகனங் களுக்கு தீமை, தீமையான உணவுகளை உண்ண நேரிடுதல், பலவகையில் பண நஷ்டம் இவை பலனாக அமையும், இரண்டு ஏழாம் வீட்டின் அதிபதியாக செவ்வாய் அமைய மரணத் திற்கு ஒப்பான நிகழ்வுகள் ஏற்படும் எனக் கூறலாம். பரிகாரமாக செவ்வாய் சாந்தி, செவ்வாய் பூஜை இவை பரிகாரமாகும்.
சனி தசையில் ராகு புக்தி காலத்தில் கலகம், பண துயரம், நோய் புத்திர, விரோதம், தன நாசம், அரசின்மூலம் விளக்கம் கேட்டு மனு, உறவினர் கலகம், குடும்பத்தினருக்கு பலவித தொல்லை இவை பலனாக அமையும். மேலும் உடலில் வியாதி, விஷத்தால் தொல்லை, அலைச்சல் இவை பலனாகும். தசை நாதன் ஆகிய சனிபகவானுக்கு கேந்திரம் 11-ஆம் வீடு இவற்றிலோ, உச்ச ராசி, சொந்த ராசியில் அமர்ந்த ராகு புக்தி காலம் ஆரம்பகாலம் சுகமும், தனலாபம், வீடு மற்றும் விவசாய மேன்மையடைதல், தீர்த்தயாத்திரை, பலவித ஐஸ்வர்யம் பலனாகும். நடுப்பகுதி அரசால் அச்சம், புதல்வர், உறவினர்களிடம் பகையும் ஏற்படும்.
ராகு மேஷம் கன்னி கற்கடகம் ரிஷபம் மீனம் தனுசு, சிம்மம் ராசிகளில் அமர அவரின் புக்தி காலம் யானைபோன்ற வாகன லாபம், மேன்மை இவை பலனா கும். ராகு 2, 7-ஆம் வீட்டின் அதிபதியோடு அமர நோய், துயரங்கள் ஏற்படும். பரிகாரமாக மிர்த்யுஞ்ஜெய ஜெபம் நடத்தவேண்டியதாகும்.
சனி தசை குரு புக்தி காலம் குரு குரு ஆறு, எட்டு, பன்னிரண்டு என்னும் வீடுகள் நீச வீடு, பாவக்கிரகத்தோடு இணைந்து இருப்பது என்னும் நிலையில் அமர்ந்த குரு, தனக்கு மிக்க வேண்டிய நபரின் மரணம், தனம், தானிய நாசம் ஆள்பவரின் கோபம் பலவித பகை, காரியம் கைகூடாது தடைபடுதல் தோல் வியாதி முதலியவை பலனாக நிறைவேறும்.
தசை நாதனாகிய ஆகிய சனி பகவானின் கேந்திர திரிகோணங்களில், இரண்டு, பதினொன்றில் புக்திநாதன் ஆகிய குருபகவான் அமர்ந்திருக்க ஐஸ்வரியம், மனைவியால் நன்மை, ஆடை சுகம், மகிழ்வான உணவு, காலம் தவறாது கடனை நிறை வேற்றுதல், தானம், யாகம், அன்னதானம், வேதாந்த உரைகளை கேட்கும் பாக்கியம் இவை பலனாக ஏற்படும்.
சனிபகவானின் 6, 8, 12-ல் வலுவற்று அமர்ந்த குருவின் புக்திகாலம் உறவினர் பகை. மனத்துயரம், தீய உணவுகளை உண்ண நேர்தல், காரியத்தடை, அரசின் கோபத்தால் பண நாசம், சிறை, மனைவி, புத்திரரால் துக்கம் இவை பலனாக நிகழும். குரு இரண்டு மற்றும் ஏழாம் வீட்டின் அதிபதியாக அமர கடுமையான மன துயரம், குடும்ப உறவினர்கள், நண்பர்களுக்கு மரணமும் ஏற்படும். தசை புக்தி பரிகாரமாக சிவ சகஸ்ர நாமம் சொல்வதும் ஸ்வர்ண தானம் இவை நன்மையை வழங்கி தீமையை விலக்கும். இவ்விதமாக பராசர முனிவர் சனி தசை ஒன்பது கோள்களின் புக்திகளுக்குரிய பலனைக் கூறுகிறார். பரிகாரங்களைச் செய்து நலன்பெறுவோம்; வாழ்க வளமுடன்.
செல்: 94438 08596