பஞ்சபட்சி சாஸ்திரம்! -திருக்கோவிலூர் பரணிதரன்

/idhalgal/balajothidam/panchapatsi-shastra-thirukovilur-paranidharan-0

ஜோதிடத்திற்குள் பல் வேறு பிரிவுகள் உள்ளது... நமது பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில், லக்னம், ராசி, நட்சத்திரம், தசாபுக்தி, கிரகங்களின் சஞ்சாரம் என்பதையெல் லாம் கண்டறிந்து நமக்குரிய பலன் களை நாம் தெரிந்துகொள்கிறோம் என்றாலும்... ஒவ்வொரு நாளும் நாம் செய்கின்ற பணிகளுக்காக நல்ல நேரத்தையும் பார்க்கிறோம்... அதில் ஹோரைப் பலன், சந்திர பலன், அம்ருதாதி யோகம், கௌரி பஞ்சாங்கம், ராகுகாலம், எமகண்டம், குளிகை என்பதையெல்லாம் பார்த்த பிறகே ஒரு செயலில் நாம் ஈடுபடுகிறோம். நட்சத்திர சஞ்சாரங்களின் அடிப்படையில் தாரா பலன்களும் உண்டு... இவற்றில் எல்லாம் முதன்மையானதாக பஞ்ச பட்சி சாஸ்திரத்தை நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது என்ன..?

பஞ்ச என்ற வார்த்தைக்கு ஐந்து என்று பொருள்... பட்சி என்பது பறவைகள்...

நமக்கு பஞ்ச பட்சியாக வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகி

ஜோதிடத்திற்குள் பல் வேறு பிரிவுகள் உள்ளது... நமது பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில், லக்னம், ராசி, நட்சத்திரம், தசாபுக்தி, கிரகங்களின் சஞ்சாரம் என்பதையெல் லாம் கண்டறிந்து நமக்குரிய பலன் களை நாம் தெரிந்துகொள்கிறோம் என்றாலும்... ஒவ்வொரு நாளும் நாம் செய்கின்ற பணிகளுக்காக நல்ல நேரத்தையும் பார்க்கிறோம்... அதில் ஹோரைப் பலன், சந்திர பலன், அம்ருதாதி யோகம், கௌரி பஞ்சாங்கம், ராகுகாலம், எமகண்டம், குளிகை என்பதையெல்லாம் பார்த்த பிறகே ஒரு செயலில் நாம் ஈடுபடுகிறோம். நட்சத்திர சஞ்சாரங்களின் அடிப்படையில் தாரா பலன்களும் உண்டு... இவற்றில் எல்லாம் முதன்மையானதாக பஞ்ச பட்சி சாஸ்திரத்தை நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது என்ன..?

பஞ்ச என்ற வார்த்தைக்கு ஐந்து என்று பொருள்... பட்சி என்பது பறவைகள்...

நமக்கு பஞ்ச பட்சியாக வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியவற்றை நமது முன்னோர்கள் கூறி இருப்பதுடன், நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கு உரியதாய் இந்த ஐந்து பட்சிகளையும் கூறியுள்ளனர்.

எந்த எந்த நட்சத்திரங்களுக்கு எந்தப் பட்சிகள்.... இதை நாம் தெரிந்து கொண்டால்தான் நமக்குரிய பலன்களை நம்மால் தெரிந்து கொள்ளமுடியும்...

அஸ்வினி.. பரணி.. கிருத்திகை.. ரோகிணி.. மிருகசீரிட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடைய பட்சி வல்லூறு.

திருவாதிரை... புனர்பூசம்... பூசம்... ஆயில்யம்... மகம்... பூரம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடைய பட்சி ஆந்தை.

உத்திரம்... அஸ்தம்... சித்திரை... சுவாதி... விசாகம் நட்சத்திரங்களில் பிறந்த வர்களுடைய பட்சி காகம்.

அனுஷம்... கேட்டை... மூலம்... பூராடம்... உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடைய பட்சி கோழி.

திருவோணம்... அவிட்டம்... சதயம்... பூரட்டாதி... உத்திரட்டாதி... ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடைய பட்சி மயில்.

இப்போது உங்களுக்கெல்லாம் உங்கள் நட்சத்திரங்களின் அடிப்படை யில் உங்களுக்குரிய பட்சி என்னவென்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.

உங்கள் நட்சத்திரம்...

ff

அதற்குரிய பட்சி என்னவென்று தெரிந்தால் மட்டும் போதுமா... அந்தப் பட்சியின் நிலை என்ன... உங்கள் வாழ்க்கையில் அந்தப் பட்சி நாள்தோறும் என்ன வகையான பலன் களை வழங்கும் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் அல்லவா?

நமது முன்னோர்கள்... ஒரு நாளைக்கு 60 நாழிகைகளை வகுத்ததுபோல்... ஒரு நாளைக்கு 10 சாமத்தை வகுத்துள்ளனர்... இதில் பகலில் 5 சாமம்... இரவில் 5 சாமம் ஆகும்...

அப்போதெல்லாம் சாமத்தின் அடிப் படையில்தான் அனைத்தையும் மேற்கொள் வார்கள்... சரி சாமம் என்றால் என்ன....

ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். இரண்டரை நாழிகை என்பது 1 மணிநேரம்... 6 நாழிகை என்பது 1 சாமம்... அதாவது 2 மணி 24 நிமிடம் 1 சாமம் ஆகும்.

1 சாமம் என்பது என்ன... அதற்குரிய கால நேரம் என்ன என்பதை இப்போது நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள்...

இங்கே ஒரு விளக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்... வாஸ்துப் புருஷனைப்பற்றி உங்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும்... நித்திரை விட்டு எழுதல்.. குளித்தல்.. உணவருந்துதல்... தாம்பூலம் தரித்தல் என்று அவருக்கு காலம் பிரிக்கப்பட்டிருக்கும்... அதே போல் பட்சிகளுக்கும் ஐந்து வகை காலம் பிரிக்கப்பட்டிருக்கிறது...

ஒவ்வொரு பட்சியும்... ஒவ்வொரு சாமம் தோறும் ஒரு பணியை மேற்கொள்ளும்... அந்தப் பணிகளின் பெயர்... ஊண் (உண்டி)... நடை.. அரசு... துயில்... சாவு... என்று பகல் பொழுதில் உள்ள 5 சாமங்களில் 5 விதமான பணிகளையும்... இரவுப் பொழுதில் உள்ள 5 சாமங்களில் 5 விதமான பணிகளையும் மேற்கொள்ளும்.

அது என்ன... 5 வகையான பணிகள்... இக்காலத்தில் என்ன வகையான பலன் உண்டாகும் என்றுதானே கேட்கிறீர்கள்...

அதற்கெல்லாம் நட்சத்திர வாரியாகவும் நேர வாரியாகவும் சொல்ல இருக்கிறேன்....

அதற்குமுன்பு... உங்கள் நட்சத்திரத்திற்கென்று ஒரு பட்சி இருக்குமல்லவா.... உதாரணத்திற்கு, உத்திரட்டாதி நட்சத்திரம் என்றால் அதற்குரிய பட்சி மயில்.

உங்கள் நட்சத்திரத்திற்குரிய பட்சி அரசு... ஊண் (உண்டி) ஆகிய தொழில்களைச் செய்யும்போது நீங்கள் ஈடுபடும் சுப காரியங்களில் உங்களுக்கு நன்மை களுக்கு மேல் நன்மை உண்டாகும்... நடை தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது நீங்கள் ஈடுபடும் காரியங்கள் எல்லாவற்றிலும் உங்களுக்கு மத்திம மான பலன்களே உண்டாகும்... துயில்.. சாவு தொழில்களைச் செய்யும் காலங்களில் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் எல்லாம் நீங்கள் நினைத்த தற்கு எதிர்மறையாக அசுப பலன்களே உண்டாகும்.... இதிலும் உங்கள் பட்சி வலிய தொழிலை செய்யும் காலங்களில் பலன்கள் இரட்டிப்பாகும்.. வலியதென்பது... மரணத்திற்கு துயில் வலியது... ஊணுக்கு அரசு வலியதாகும்.

செல்: 94443 93717

bala040823
இதையும் படியுங்கள்
Subscribe