இந்த ஜாதகருக்கு திருமணம் எப்பொழுது நடக்கும்? தோஷம் ஏதாவது இருக்கிறதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள்? -சண்முகம், ஒரத்தநாடு.
உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த இந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி குரு 12-ல் மறைந்திருப்பதால் திருமணம் தாமதம் ஆகியுள்ளது. அது மட்டுமில்லாமல் களத்திரகாரகன் சுக்கிரன்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதும் நல்ல அமைப்பு என கூறமுடியாது. சுக்கிரன்- கேது சேர்க்கைப் பெற்றால் குடும்ப வாழ்வில் ஒற்றுமை குறைவு, தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுகிறது. 8-ல் செவ்வாய் இருப்பதால் வரக்கூடிய பெண்ணின் ஜாதகத்திலும் 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருப்பதுபோல் வரன் பார்ப்பது நல்லது. சுக்கிரன்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதால் சம வயதுள்ள பெண்ணை வரனாக பார்ப்பது, உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. ராகு தசையில் தற்போது சூரிய புக்தி 1-8-2025 முடிய நடப்பதால் அடுத்து வர இருக்கக்கூடிய சந்திர புக்தியில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்கும்.
இந்த ஜாதகருக்கு திருமணம் எப்பொழுது நடக்கும்? தோஷம் ஏதாவது இருக்கிறதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள்? -சண்முகம், ஒரத்தநாடு.
உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த இந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி குரு 12-ல் மறைந்திருப்பதால் திருமணம் தாமதம் ஆகியுள்ளது. அது மட்டுமில்லாமல் களத்திரகாரகன் சுக்கிரன்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதும் நல்ல அமைப்பு என கூறமுடியாது. சுக்கிரன்- கேது சேர்க்கைப் பெற்றால் குடும்ப வாழ்வில் ஒற்றுமை குறைவு, தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுகிறது. 8-ல் செவ்வாய் இருப்பதால் வரக்கூடிய பெண்ணின் ஜாதகத்திலும் 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருப்பதுபோல் வரன் பார்ப்பது நல்லது. சுக்கிரன்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதால் சம வயதுள்ள பெண்ணை வரனாக பார்ப்பது, உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. ராகு தசையில் தற்போது சூரிய புக்தி 1-8-2025 முடிய நடப்பதால் அடுத்து வர இருக்கக்கூடிய சந்திர புக்தியில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்கும். நடப்பது ராகு தசை என்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.
அரசு வேலை எப்பொழுது கிடைக்கும்? அழகான மனைவி அமையுமா? -ஜெயபிரகாஷ், பொள்ளாச்சி.
சுவாதி நட்சத்திரம், துலா ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் வீட்டில் சூரியன், புதன் இருப்பதால் அரசு, அரசு சார்ந்த துறை களில் நல்ல வேலை வாய்ப்பு அமையக் கூடிய யோகம் உண்டு. சூரியன், புதன் உடன் கேது இருப்ப தால் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுகிறது. குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். 7-ஆம் அதிபதி குரு உச்சம் பெற்று சுக்கிரன் சேர்க்கைப் பெற்றிருப்பதால் அழகான பெண் மனைவியாக வரக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடப்பதால் திருமணம் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டால் குரு மாற்றத்துக்குபிறகு அதாவது 14-5-2025-க்கு பிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. சனி வக்ரகதியில் இருப்பதால் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அனுகூலங்கள் கிடைக்கும்.
எனக்கு திருமணம் எப்பொழுது நடக்கும்? நடப்பு தசையில் திருமணம் நடைபெற வாய்ப்பிருக்கிறதா? ஏதாவது தோஷம் இருக்கிறதா என்று கூறுங்கள்? பொன்னுசாமி, அரியலூர்.
பூச நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதி பதி செவ் வாய் 8-ல் மறைந்து தற்போது கேது தசை யில் ராகு புக்தி 17-4-2025 முடிய நடக்கி றது. 8-ல் செவ்வாய் இருப்பதால் வரக்கூடிய வரன் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருக்கும்படி ஜாதகம் பார்ப்பது நல்லது. தற்போது கேது தசை நடப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் இருக்கக்கூடிய கேது என்பதால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. 2025 ஏப்ரலுக்கு பிறகு கேது தசையில் குரு புக்தி நடக்கும் தருவாயில் நல்ல வரன் அமைய வாய்ப்பு உண்டு. திருமணம் அமைந்தாலும் 2028 சுக்கிர தசை தொடங்குகின்றபோதுதான் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும். அடுத்து மூன்று வருடத்திற்கு கேது தசை நடப்பதால் வாழ்க்கை அமைந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது, விநாயகர் வழிபாடு மேற் கொள்வது நல்லது. சனி- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
எனக்கு வேலையில் பணி மாறுதல் எப்பொழுது கிடைக்கும்? குடும்பத்தோடு சேர்ந்து எப்பொழுது வாழ்வேன் என்று கூறுங்கள்? -முருகையன், புதுச்சேரி.
பதில்: மூல நட்சத்திரம் தனுசு ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 28-10-2025 முடிய 8-ல் கேது சேர்க்கைப்பெற்ற கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற சந்திர தசை நடப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு அல்ல. கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற சந்திர தசை நடப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, குடும்பத்தை விட்டு வெளியே வாழக்கூடிய நிலை தற்போது இருக்கிறது. வரும் அக்டோ பருக்கு பிறகு செவ்வாய் தசை தொடங்குகின்றபொழுது பணியில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டு உங்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய அள விற்கு ஒரு மாறுதல் உண்டாகி குடும்பத்து டன் இணை யக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சந்திரன்- கேது சேர்க்கைபெற்று தற்போது சந்திர தசை நடப்பதால் மனக்கவலை, உடல் உபாதைகள், குடும்பத் தில் ஒற்றுமைக் குறைவு இருக்கும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
அடிக்கடி பல் வலியில் அவதிபடுகிறேன். இந்த வலி தீருமா? அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்படுமா? சொந்த வீடு அமையுமா என்று கூறுங்கள்? -விசுவநாதன், உடுமலைப்பேட்டை.
பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சனி வக்ரகதியில் இருப்பதால் பற்கள் பலவீனமாக இருக்கிறது. தற்போது புதன் தசையில் பாவகரீதியாக 8-ல் உள்ள ராகு புக்தி 3-4-2027 முடிய நடப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. ராகு புக்தி நடந்தால் கண்டுபிடிக்க முடியாத சில உடல் உபாதைகள் இருக்கும். தற்போது ராகு புக்தி நடப்பதால் மருத்துவச் சிகிச்சைகள்கூட சரியான முறையில் எடுக்க முடியாது. இயற்கை உணவுகளை உட்கொள்வது, மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொண்டால் அதில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு ராகு புக்தி முடிந்தால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் என்றாலும் 14-5-2025-க்கு பிறகு குரு 2-ல் செல்கின்றபொழுது ஆரோக்கியத்தில் ஒருசில முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ராகு புக்தி நடப்பதால் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.